Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
ஆடித் தள்ளுபடியில் தரமான பொருட்கள் விற்கப்படுகிறதா?
Page 1 of 1 • Share
ஆடித் தள்ளுபடியில் தரமான பொருட்கள் விற்கப்படுகிறதா?
ஆரம்பமாகிவிட்டது ஆடித் தள்ளுபடி சீசன். வருஷா வருஷம் வரு கிற திருவிழாக்களைபோ ல ஆடித் தள்ளுபடியும் ஒரு கொண்டாட்டமாக வே மாறிவிட்டது. பண்டி கை காலத்தில் விலை யைப் பார்க்காமல் வாங் கும் அதே துணிமணிகள் குறைந்த விலையில் கிடைக்கும்போது வாங் கலாமே என்கிற ஆசையி ல் பல ஆயிரம் ரூபாய்க்கு வாங்கித் தள்ளி விடுகிறா ர்கள் மக்கள்.
துணிமணிகள் மட்டுமல்ல, மொபைல்கள், எலெக்ட்ரானிக்ஸ் சாத னங்கள், அவ்வளவு ஏன், செருப்புகள்கூட இப்போது ஆடித் தள்ளுப டியில் விற்கப்படுகிறது.
இந்த ஆடித் தள்ளுபடியில் தரமான பொருட்கள் விற்கப்படுகிறதா? தள்ளுபடி என்று அறிவித்து விட் டு, விலையை ஏற்றி, இறக்கி விற்கிறார்களா?
துணிக் கடைகள்!
முன்பெல்லாம் விற்க முடியாம ல் இருக்கும் துணிமணிகளை தள்ளுபடி தந்து விற்றார்கள். ஆனால், இன்று ஆடி தள்ளுபடிக்காகவே பல துணிக் கடைகள் துணி மணிகளை வாங்கி, விற்கின்றன. புதுத் துணிக்கு இவ்வளவு தள்ளுபடியா என்று நீங்கள் ஆச்சரியப் படலாம். ஆனால், இங்குதான் இருக்கிறது வியாபாரத் தந்திரம். புதிய துணிமணிகளோடு, விற்க முடியாமல் தேங்கிக் கிடக்கும் பழை ய துணிமணிகளையும் கலந்து விடு வது, சிறிய அளவில் டேமேஜ்-ஆன துணிமணிகளை புதிய துணிகளோ டு கலந்துவிடுவது போன்ற வேலை கள் சூப்பராக நடக் கும்.
தள்ளுபடி உண்மைதானா?
விலையில் தள்ளுபடி என்பது வாடி க்கையாளர்களைக் கவர்வதற்கு மட் டும்தான். 10 முதல் 20 சதவிகித தள் ளுபடியைத்தான் பெரும் பாலான கடைகள் தள்ளுபடி தருகின்றன. இது ஓரளவு நியாயமான தள்ளுபடி. ஆனால், 50 சதவிகித தள்ளுபடி என்பது விளம்பரத்துக் காகச் சொல்லப்படும் வாசகம் மட்டுமே. அதை நம்பி உள்ளே போ னால், ஒப்புக்கு ஒன்றிரண்டு பொருட்களை மட்டுமே 50 சதவிகித தள் ளுபடி விலையில் வைத்தி ருப்பார்கள். மற்ற வற்றுக்கு 10-20 சதவிகித தள்ளுபடி தான் இருக்கும்.
துணிகளின் மீது விலைப் பட்டியல் ஒட்டுவதில்தான் பலே தந்திரங்க ளை கடை ப்பிடிக்கிறார்கள் சில கடை க்காரர்கள். பொதுவாக, இரண்டு வகை விலைப்பட்டை உண்டு. ஒன் று, துணியின் உண்மையான விலை, மற்றொன்று தள்ளுபடிக்காக வே ஒட்டப்பட்ட விலை. 350 ரூபாய் கொண்ட ஒரு புடவையின் விலை ஆடித் தள்ளுபடி யில் 600 ரூபாயாக உய ர்ந்து மீண்டும் 350 ரூபாயாக குறையும். இம்முறையில் ஆடியி ல் வாங்கினாலும் சரி, ஆவணியில் வாங்கி னாலும் துணியின் வி லை மாறாது.
கடைக்காரர்கள் பயன்படுத்தும் அடுத்த டெக்னிக், ஒன்று வாங்கினா ல் ஒன்று இலவசம் என்பது. யாருமே வாங்க விரும்பாத மோசமான துணியை ஒரு நல்ல துணியோடு சேர்த்து விற்பது இந்த டெக்னிக். ஒரு நல்ல துணி 300 ரூபாய், ஒரு மோசமான துணி 150 ரூபாய் என இந்த இரண்டையும் சேர்த்து, 450 ரூபாய் விற்பார்கள். கா சைக் கொடுத்து நல்ல துணி யை மட்டும் வாங்குவது புத்தி சாலித்தனம்.
ஏமாறாமல் துணி வாங்க..!
ஆடித் தள்ளுபடியில் துணி வாங்கும்போது நன்றாக பிரித் துப்பார்த்து வாங்க வேண்டும். அப்போதுதான் இழை இல்லாமல் இருப்பது, சாயம் ஒட்டி இருப்பது போன்றவற்றை எளிதில் கண்டுபிடி க்க முடி யும்.
மொத்தமாக கூடைகளில் கொட்டிக் கிட க்கும் துணிகளை வாங்காமல் தவிர்ப்ப து நல்லது. ஏனெனில், அவை மிக பழை ய ஸ்டாக்-ஆக இருக்கும். அதிக டேமே ஜும் இருக்கும்.
நீங்கள் வாங்கிய பொருட்களில் ஏதாவ து பிரச்னை இருந்தால் அத னை ஓரிரு நாட்களில் மாற்றிக்கொள்வது நல்லது. பத்து, இருபது நாட்கள் கழித்து சென்றா ல் கடைக்காரர்கள் நம்மை இழுத்தடிப்ப தற்கு நிறைய வாய்ப்புண்டு. சில கடைக ளில் தள்ளுபடி விற்பனையில் வாங்கிய பொருளை மாற்றித்தரமாட்டார்கள்.
எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள்!
முன்பெல்லாம் ஆடித் தள்ளுபடியில் துணிமணிகளே விற்பனையா கும். இப்போது எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள்கூட ஆடித் தள்ளுபடி யில் அமோகமாக விற்பனை ஆகின் றன.
ரைஸ் குக்கர், பிரட் டோஸ்டர், அய ர்ன் பாக்ஸ், டேபிள் ஃபேன், இன் டெக்ஷன் ஸ்டவ் போன்ற பொருட்க ளும், டி.வி.டி. பிளேயர், ஹோம் தியேட்டர் சாதனங்களுக்கும் 50 சதவிகிதம் வரை தள்ளுபடி கிடை க்கிறது. இவை அனைத்துமே சை னா பிராண்டுகள் எனப்படும் ரகத்தி னை சேர்ந்தவை. இவற்றை உடனடி யாக விற்றுவிடுவது நல்லது என்பதால் ஆடித் தள்ளுபடியில் தள்ளி விட்டுவிடுகிறார்கள்.
தவிர, எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களில் புதுப்புது மாடல்கள் அடிக் கடி வருவதால், ஏற்கெனவே தேங்கிக் கிடக்கும் பொருட்களை தள்ளிவிடவும் ஒரு அருமையான வாய்ப்பாக கருதுகிறார்கள். ஆடித் தள்ளுபடியில் எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களை வாங்கும்போது குறைந்தபட்சம் ஒன்றுக்கு இர ண்டு முறையாவது பொருட்க ளை செக் செய்து வாங்குவது நல்லது.
எம்.ஆர்.பி. ரேட்!
ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின், எல். சி.டி. டிவி போன்ற பொருட்களுக்கு எத்தனை சதவிகிதம் தந்தாலும் தங்களது லாபத்தைக் கடைக்காரர் கள் தக்க வைத்துக்கொள்ளவே விரும்புவார்கள். எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு எம்.ஆர்.பி. விலை குறிப்பிடப்பட்டாலும் உள்ளூர் விற்பனை விலை சற்று குறை வாகவே இருக்கும். இது பொதுவாக 10,000 ரூபாய்க்கு 600 ரூபாய் வரை குறைந்து இருக்கும். எனவே, நமக்கு தரப்படும் தள்ளு படி எம்.ஆர்.பி. விலையிலிருந்து குறைக் கப்படுகிறதா, விற்பனை விலையிலிருந்து குறைக்கப்படு கிறதா என்பதைப் பொறுத்தே லாப மா, இல்லையா என்பதைச் சொல் ல முடியும்.
தயாரிப்பு தேதி!
எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களை தள்ளுபடியில் வாங்குவதற்கு முன்னர் தயாரிப்பு தேதி மற்றும் மாடலை கவனிக்க வேண்டியது முக்கியமானது. பொதுவாக, தயாரிக்கப்பட்ட தேதியிலிருந்து இரண் டரை வருடங்களுக்கு மட்டுமே அந்தந்த மாடல்களுக்கான உதிரிப் பாகங்கள் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கும். மேலும், நிறுவன ங்கள் தரும் கியாரண்டி இந்த இரண்டரை வருடங்களுக்கு உத்தர வாதமாக நம்பலாம். இடைப்பட்ட காலத்தில் புதிய மாடல்களும் வந்துவிடும் என்பதால் பழைய மாடல்களுக்கு அதிக தள்ளுபடி தந்து விற்கவேண்டிய நிலை ஏற்படுகிறது. எனவே, பழைய மாடலாக இருந்தாலும் பரவாயில்லை என்று நி னைப்பவர்கள் மட்டுமே இதை வாங்க லாம். எனினும், உதிரிப்பாகங்கள் மற்று ம் சர்வீஸ் தொடர்ந்து கிடைப்பதை உறு திப்படுத்திக்கொள்வது நல்லது.
வாரண்டி!
சின்ன சின்ன குறைபாடுடைய பொருட் கள் மற்றும் வாரண்டி இல்லாதப் பொரு ட்களையும் ஆடித் தள்ளுபடியில் நம் தலையில் கட்ட முயற்சி நடக்கும். ஃபிரி ட்ஜ் எனில், பக்கவாட்டுகளில் கீறல், ஏற் றி இறக்கும்போது ஏற்படும் பெண்ட், கால்பகுதி உடைந்து இருப்பது, உள்பகுதியில் ட்ரேக்கள் உடைந்தி ருப்பது போன்ற குறைபாடுகளுடன் கிடைக்கும். இந்த குறைபாடுக ளைப் பொறுத்து தள்ளுபடி தரப்படும். இவற்றை வாங்கும்போது கியாரண்டி, வாரண்டி கிடைக்காது. அதிக தள்ளுபடி கிடைத்தாலு ம், அதிக ரிஸ்க் என்பதை மறக்க வேண்டாம்.
செல்போன்!
பழைய மாடல் செல்போன்களு க்கு ஒன்று வாங்கினால் ஒன்று இல வசம் என்கிற வகையில் ஆடித் தள்ளுபடியில் அமர்க்கள விற்பனை நடக்கிறது. இந்த இரண்டு போன்களில் ஒன்று மட்டுமே நமக்கு நீண்ட காலம் பயன்படும். ஓசியாக கிடைக்கும் மற் றொன்று ஏறக் குறைய உதவாததாகவே இருக்கும். பொதுவாக, அதி க விலை கொண்ட புதிய மாடல்களுக்கு 10-15% தள்ளுபடி எம்.ஆர். பி. விலையிலிருந்துதான் தரப்படுகிறது என்பதால் ஆடித் தள்ளுப டியில் செல்போன் வாங்குவது நமக்கு லாபமுமில்லை, நஷ்டமுமி ல்லை. ஆனால், தள்ளுபடியில் கிடைக்கும் செல்போன் விலை யை ஆன்லைனிலோ அல்லது பிற செல்போன் விற்பனைக் க டைகளிலோ விசாரித்து தெரிந் துகொண்டு வாங்கலாமா, வேண் டாமா என்று முடிவெடுக்கலாம்.
காலணி!
ஷூ மற்றும் செருப்பு கடைகளும் தற்போது 50% வரை தள்ளுபடி தந்து அசத்துகிறார்கள். பிராண்ட ட் காலணிகளில் அதிகம் விற்ப னையாகும் மாடல்கள் அல்லது நெடுநாளாக விற்பனையாகாத மாடல்களுக்கு அதிக தள்ளுபடி தரப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட மாடல் காலணி அதிக அளவில் தேக்கமாக கிடந்து, அதை கழித் துகட்ட வேண்டும் என்றாலும் அதிக தள்ளுபடி தருகிறார்கள். ஆனால், புதிதாக வந்திருக்கும் காலணிகளுக்கு எந்த தள்ளுபடியும் தரப்படுவ தில்லை என்பதைக் கட்டாயம் கவனிக்க வேண்டும்.
நமது கண்ணே நம்மை ஏமாற்றிவிடும் என்கிற அளவுக்கு தள்ளுபடி கொண்டாட்டம் நடக்கிறது. தள்ளுபடியில் பொருட்கள் வாங்குவது என்பது நமக்கு லாபமானது என்று கொண்டாடவும் வேண்டாம்; ஏமாற்றம் என்று தள்ளவும் வேண்டாம். இடம், பொருள் பார்த்து, தரம் பிரித்து வாங்கினால் தள்ளுபடியிலும் நல்ல வரும்படியைப் பார்க்க லாம்.
- நாணயம் விகடன்
Re: ஆடித் தள்ளுபடியில் தரமான பொருட்கள் விற்கப்படுகிறதா?
ஆடி தள்ளுபடில வாங்குற பலபொருட்கள் தரம் குறைந்தபழைய ஸ்டாக்காகவே உள்ளது
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» மனநிறைவே தரமான வாழ்க்கை
» மனநிறைவே தரமான வாழ்க்கை
» இயக்குநர் ஆறுமுகம்: இது தரமான படைப்பு
» தரமான காட்டன் புடவைகளை எப்படித் தேர்ந்தெடுப்பது?
» பந்துமுனை பேனாவால் வரையப்பட்ட தரமான விலங்குகளின் உருவங்கள்
» மனநிறைவே தரமான வாழ்க்கை
» இயக்குநர் ஆறுமுகம்: இது தரமான படைப்பு
» தரமான காட்டன் புடவைகளை எப்படித் தேர்ந்தெடுப்பது?
» பந்துமுனை பேனாவால் வரையப்பட்ட தரமான விலங்குகளின் உருவங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|