தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


பாவோபாப் மரம்

View previous topic View next topic Go down

பாவோபாப் மரம் Empty பாவோபாப் மரம்

Post by முழுமுதலோன் Wed Feb 13, 2013 3:35 pm

பாவோபாப் மரம்

எர்ன்ஸ்ட் ஹெக்கல் என்ற நூலாசிரியர் பாவோபாப் மரம் 5,000 ஆண்டுகளுக்கு மேலும் வாழக்கூடியது என்கிறார்.

உயரம் என்று எடுத்துக் கொண்டால் 16 முதல் 98 அடி வரை தான் இருக்கும். செக்வோவியா - ஆஸ்திரேலிய நாட்டு யூக்கலிப்டஸ் மரங்கள் 400 அடிவரை உயரமானவை. மரத்தின் குறுக்களவைக் (விட்டம்) கணக்கிட்டால் 23முதல் 36 அடிவரை உள்ளது. பாவோபாப் மரத்தின் சுற்றளவு 154 அடி வரை உள்ளது. இந்தப் பார்வையில் பார்க்கும்போது பாவோபாப் மரங்கள்தான் உலகின் மிகப் பெரிய மரங்கள்.

பேரதிசயம்

அடிமரத்தின் உட்பகுதி மூங்கில்போல் வெற்றிடம் கொண்ட தாகவும் நீர் நிறைந்தும் இருக்கும். பெரியதோர் பாவோபாப் மரத்தின் கொள்ளளவு 1,20,000 லிட்டர்கள்! மேலும் கடும் கோடைக் காலத்தில் ஒரு சொட்டு நீர் கூட ஆவியாக வெளியேறாதவாறு பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும். தண்ணீரில் பயனுள்ள சத்துக்களும் உண்டு. வறட்சிக் காலங் களில் மடகாஸ்கர் - ஆப்பிரிக்க நாட்டு ஏழை மக்கள் இதன் நீரைப் பருகிப் பயன்பெறுவர். மேல்மரம் காய்ந்துவிட்ட நிலையில் பல கிராமங்களில் அடிமரத்தை நீர்த்தேக்கத் தொட்டியாகப் பயன்படுத்துகின்றனர்.

குளிர் காலத்தில் இம்மரத்தின் இலைகள் அனைத்தும் உதிர்ந்துவிடும். காற்றில் நீட்டிக் கொண்டிருக்கும் இதன் இலைகள் இல்லாத ஒல்லியான கிளைகள், வேர்கள் நீட்டிக் கொண்டிருப்பதைப் போன்ற தோற்றத்தைத் தருகின்றன.‘பாவோபாப்’ மரம் மே, ஜூன் மாதங்களில் பூ பூக்கிறது. இரவிலேயே மலரும் பூக்கள், அதிகாலையில் உதிர்ந்து விடுகின்றன

பாவோபாப்பில் ஏழுவகை (ஸ்பீஷிஸ்) மரங்கள் உண்டு. இவற்றில் ஆறுவகை மரங்கள் மடகாஸ்கர் நாட்டிற்குரியவை. இந்த ஆறில் ஒரு வகை மட்டும் ஆப்பிரிக்க நாடுகளிலும் காணப் படுகிறது. ஏழாவது வகை ஆஸ்திரேலியா நாட்டிற்குரியது.

பாவோபாப் என்பது இந்த வகை மரங்களின் பொதுவான பெயர். தென் ஆப்பிரிக்காவின் சன்லாண்ட் பகுதியில் அமைந் துள்ள பாவோபாப் மரம் இப்போது உலகின் மிகப்பெரிய மரமாகக் கருதப்படுகிறது. இதன் குறுக்களவு 10.64 மீட்டர், சுற்றளவு 33.4 மீட்டர் (130 அடி).

ஏனைய மரங்களில் அவற்றின் வயதைக் குறிக்கும் வளர்ச்சி வட்டங்கள் (க்ரோத் ரிங்ஸ்) போல பாவோபாபில் கிடையாது. ஆனால் கார்பன் டேட்டிங் முறையில் இவற்றின் வயதைக் கணிக்க இயலும்.

பாவோபாப் மரத்தின் உபயோகங்கள்

இதன் பழம் ஆரஞ்சுப் பழத்தைக் காட்டிலும் கூடுதலான அளவில் ‘சி’ வைட்டமின் நிறைந்தது. கால்ஷியம் சத்து பசும்பாலைக் காட்டிலும் கூடுதல்

இதன் இலைகளை சூப் போல சாப்பிடலாம். இந்த இலைகளைக் கீரையாகவும் சாப்பிடலாம்

இந்த இலைகளை காயவைத்தும் பயன்படுத்துகிறார்கள்

இந்த மரத்தின் நடுவில் இருக்கும் சோற்றை, கூழ் போல சாப்பிடுகிறார்கள் ஆப்பிரிக்கர்கள்.

இந்த மரத்தின் விதைகளுக்குள் வெள்ளையாக இருக்கும் சோற்றை தண்ணீரோடு கலந்து புத்துணர்வு பானமாக அருந்தலாம்.

விவசாயிகள் இந்த சோற்றை தண்ணீரோடு கலந்து மலேரியாவுக்கு மருந்தாகப்பயன்படுத்துகிறார்கள்

இதன் விதைகளை வறுத்து, நிலக்கடலை போல உபயோகப்படுத்துகிறார்கள்
இதன் பட்டையை உரித்து உடைத்து, ஊறவைத்து, கயிறுதிரிக்கவும், மீன் வலை பின்னவும், துணி நெய்யவும் பயன்படுத்தலாம்

பழத்தில் சர்க்கரை தூவி வண்ணம் (பெரும்பாலும் சிவப்பு) கொடுத்து இனிப்பு அல்லது புளிப்பு மிட்டாயாகவும் விற்கப்படுகிறது. இந்த மிட்டாய்க்கு உபுயு என்று பெயர்.

டான்சானியா நாட்டில் கரும்புச் சாறுடன் பாவோபாப் பழச்சாறைக் கலந்து பீர் தயாரிக் கிறார்கள்.

காற்றுப்புகாத டப்பாக்களில் அடைத்து வைத்தால் பழத்தின் கூழ் வெகு காலம் கெடாமல் இருக்கும். இதிலிருந்து குளிர் பானங்கள் தயாரிக்கலாம். சோடியம் மெட்டா சல்பைட் தூளைப் பயன்படுத்தி கூழைக் கெடாமல் பாதுகாக்க இயலும். கூழைத்தூள் பக்குவத்தில் குளிர்சாதனப் பெட்டியில் கெட்டுப் போகாதவாறு பாது காப்பாக வைக்கலாம்.

ஆஸ்திரேலியாவில் பாவோபாப்: ஆஸ்திரேலியா நாட்டில் பாவோபாப் பழங்குடி மக்களால் உணவுக்கும் தண்ணீருக்கும் பயன்படுத்தப் பட்டு வந்தது. இலைகள் மருந்தாகப் பயன்படுத்தப் பட்டன. சுரைக்காய் போல் கெட்டியான தோல் கொண்ட பழத்தின் மீது சாயம் பூசி அலங்காரத்திற்கும் பயன்படுத்தினர். சிறிய துண்டுகளை ஆபரணமாகவும் அணிந்து வந்தனர்.

வேறு சில தகவல்கள்:

தண்ணீர்த் தொட்டி, வீடு, சிறைசாலை , மதுபான கடையாவும் பயன்படுகிறது !!!!!!?

பாவோபாபின் அடிமரம் சூடான் நாட்டில் தண்ணீர்த் தொட்டியாக (வாட்டர் டாங்க்) பயன் படுத்தப்படுகிறது. பாவோபாப் மரத்தைச் சிலர் வசிப்பிடமாகப் பயன்படுத்துகின்றனர். தென் ஆப்பிரிக்காவின் லிம்போப்போ பகுதியில் உள்ள ஸன்லாண்ட் பண்ணையில் பெரியதோர் பாவோபாப் மரத் தைக் குடைந்து 72 அடி உயரம் 155 அடி சுற்றளவு கொண்ட இடத்தில் மதுபானக் கடை வைக்கப் பட்டுள்ளது. கார்பன்டேட்டிங்படி இம்மரம் 6,000 ஆண்டு தொன்மையானது என்று கணிக்கப் பட்டுள்ளது.

மேற்கு ஆஸ்திரேலியாவின் டெர்பி நகரருகே இருந்த பெரியதோர் பாவோபாபின் அடிமரத் தைச் செதுக்கிச் சிறைச்சாலையே உருவாக்கப் பட்டிருந்தது. இது நிகழ்ந்தது 1890களில். இன்றும் அந்த மரம் ஒரு அரும் பொருட்காட்சியாக (மியூசியம்) மாறி மக்களைக் கவர்ந்து வருகிறது.

அமெரிக்க நாட்டிலும் ப்ளோரிடா போன்று சற்று வெப்பமான பகுதிகளில் பாவோபாப் மரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சௌதி அரேபியாவின் மலைப் பகுதிகளில் இம்மரம் காணப்படுகிறது.

இந்தியாவில் பாவோபாப்: இந்தியாவில் கர் நாடகா மாநிலத்தில் சாவனூரில் 50 முதல் 60 அடி வரை சுற்றளவு (14-18மீட்டர்) கொண்ட மூன்று மரங்கள் உள்ளன. இந்த மரங்களும் 5,000 ஆண்டு தொன்மையானவை.

பெங்களூரில் உள்ள பிரசித்தி பெற்ற லால் பாக் தோட்டத்தில் பாவோபாப் மரத்தைக் காண முடியும். இந்தியாவின் வேறு பகுதிகளிலும் இம் மரம் இருப்பதற்கான வாய்ப்பு உண்டு.

தமிழகத்தில் ராஜபாளையத்தில் ஒரு மரம் உள்ளது என்று சொல்கின்றனர். வைகை அணை அருகே அமைந்துள்ள வனத்துறைப் பயிற்சிக் கல்லூரியின் தோட்டத்தில் 7 வயதுள்ள பாவோபாப் மரங்கள் இரண்டு உள்ளன. ராமநாதபுரம் மாவட்டத்தில் தங்கச்சி மடத்தில் பழைய மரம் ஒன்று உள்ளது. சென்னை நகரைப் பொருத்தவரை அடையாறில் உள்ள பிரசித்தி பெற்ற தியோசாபிக்கல் சொசைட் டியில் இரண்டு மரங்கள் உள்ளன. ஆந்திர மஹிளாசபா மற்றும் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் தலா ஒரு மரம் உள்ளது. நந்தனம் ஹவுசிங் போர்ட் அலுவலகத்திற்குப் பின்புறம் ஒரு மரம் உள்ளது.



வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum