தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஒரே நாளில் பிறந்த 20 சோதனைக் குழாய் குழந்தைகள்!:

View previous topic View next topic Go down

ஒரே நாளில் பிறந்த 20 சோதனைக் குழாய் குழந்தைகள்!: Empty ஒரே நாளில் பிறந்த 20 சோதனைக் குழாய் குழந்தைகள்!:

Post by tamilselvi Sun May 16, 2010 12:37 pm

ஒரே நாளில் பிறந்த 20 சோதனைக் குழாய் குழந்தைகள்!:
ஈரோடு தனியார் மருத்துவமனையில் அதிசயம்

குழந்தை வேணுமா?
ஆசைப்பட்ட அனைவருக்கும் அனைத்துமே கிடைத்துவிடுவதில்லையே!. குழந்தை இல்லாதவர்களுக்கும் இது பொருந்தும். அவர்களின் ஆசை பலிக்காததற்குக் காரணங்கள் பலவாகலாம்.

உலகெங்கும் குழந்தை இல்லாதவர்கள தொகை அதிகரித்துக் கொண்டே போகிறது. இங்கிலாந்தில் ஆறு தம்பதிகளில் ஒருவர் என்ற விகிதத்தில் குழந்தையின்மை இருக்கிறது என்பது கவனிக்கத்தக்கது. இருந்தபோதும் வைத்தியத் துறையின் அளப்பரிய முன்னேற்றம் காரணமாக டெஸ்ட் ரியூப்பில் குழந்தையை உருவாக்கக் கூடிய முறை அறிமுகமானதால் குழந்தை இல்லாதவர்களிடையே பெரும் நம்பிக்கை ஏற்பட்டது. டெஸ்ட் ரியூப் குழந்தை என்பது உண்மையில் ஒரு வகை செயற்கைச் சினையூட்டல் முறையாகும்.

அதாவது உடலுக்கு வெளியே ஆய்வு கூடத்தில் பெண்ணின் முட்டையானது சினையூட்டப்படும். அதனால் உண்டாகும் கருவை பின் கருப்பையில் பதித்து, இயற்கையாக வளரச் செய்வர். செயற்கை என்பது முகமறியா வேறொருவரின் விந்தைக் கொண்டு சினையூட்டல் எனப் பொருள்படாது. கணவனின் விந்தைக் கொண்டே பெரும்பாலும் சினைப்படுத்தப்படுகிறது. அவரின் லிகிதத்தில் விந்தணுக்கள் இல்லாவிட்டாலும் கூட அவரின் விதையிலிருந்தே விந்தணுக்களை வெளியே பிரித்து எடுத்து சினையூட்டப்படும் வைத்திய வசதி இப்பொழுது உண்டு. அதுவும் முடியாத கட்டத்தில் மட்டுமே வேறு ஒருவரின் விந்தைத் தானமாகப் பெறவேண்டிய தேவை ஏற்படலாம்.

இருந்தபோதும் In Vitro Fertilisation- IVF எனப்படும் டெஸ்ட் ரியூப் குழந்தையானது வேண்டுவோர் எல்லோருக்கும் சுலபமாகக் கிட்டிவிடுவதில்லை. இதற்கும் காரணங்கள் பல.

முதலாவதாக பெண் போதிய அளவு முட்டையைத் தனது சூலகத்திலிருந்து உற்பத்தி செய்வதைத் தூண்டுவதற்கான மருந்துகள் கொடுக்க வேண்டும். இம் மருந்துகள் மிக விலை உயர்ந்தவை. இங்கிலாந்தில் மருந்துகளுக்கு கிட்டத்தட்ட 1500 ஸ்டேர்லிங் பவுண்ட்ஸ் வரை செலவாகும். அத்துடன் தொடர்ந்து 5 வாரங்கள் வரை மருந்து உட்கொள்ள வேண்டி நேரிடும். எனவே பணத்துடன் காலமும் செலவாகும்.

இச்சிகிச்சை முறையின் போது மருந்து கொடுத்த பின் உற்பத்தியாகும் முட்டைகளை அல்ரா சவுண்ட் துணையுடன் வெளியே எடுத்து கணவரின் அல்லது கொடையாளியின் விந்துவவைக் கொண்டு கருவூட்டுவர்.

இப்பொழுது In Vitro Maturation- IVM என்ற புதிய முறையை அறிமுகப்படுத்தியுள்ளனர். இந்த முறை விரைவானது மலிவானது. இந்த முறை மூலம் ஆணும் பெண்ணுமான இரட்டைக் குழந்தைகள் ஒக்டோபர் மாதம் 18ம் திகதி Radcliffe Infirmary in Oxford ல் பிறந்திருக்கினறன.

இது எப்படியான முறை என்று கேட்கிறீர்களா?
கடுமையான விலை கூடிய மருந்துகள் உபயோகிக்கப்படவில்லை. மருந்துகள் உபயோகித்து பெண்ணின் சூலகத்திலிருந்து முட்டைகள் வெளிவர நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டியிருக்கவில்லை.

இது எப்படி என்கிறீர்களா?
வளர்ச்சி பூர்த்தியடையாத முட்டைகளை சூலகத்திலிருந்து எடுத்து மருத்துவ ஆய்வுகூடத்தில் செயற்கை ஊடகத்தில் 24 முதல் 48 மணி நேரம் வரை வளர்ச்சியுறச் செய்தபின் ஆணின் விந்துடன் சினையூட்டி இறுதியாக கருப்பையில் இடுவதுதான் இம்முறையாகும். ஆயினும், தற்பொழுது இம்முறை பொலிசிஸ்டிக் ஓவறி (Polycystic ovaries) என்ற பிரச்சனை உள்ள பெண்களுக்கே செய்யப்படுகிறது. காரணம் என்னவென்றால் அத்தகைய பெண்களின் சூலகத்தில் மாதாந்தம் 16 முட்டைகள் வரை உண்டாகின்றன. ஆனால், ஏனைய சாதாரண பெண்களில் மாதாந்தம் 4 முட்டைகள் வரையே உண்டாகின்றன.

ஆயினும், இம்முறையில் கூடிய அனுபவம் பெற்றதும் ஏனைய பெண்களுக்கும் விஸ்தரிக்க உள்ளார்கள். ஏற்கனவே, 400க்கும் மேற்பட்ட குழந்தைகள் இந்த முறை மூலம் உலகளாவிய ரீதியில் பிறந்துள்ளார்கள் என்பது நம்பிக்கை ஊட்டுகிறது.

செயற்கைச் சினையூட்டல் துறை வேகமாக வளர்ந்து வருகிறது. எதிர்காலத்தில் ஆண் குழந்தையா பெண் குழந்தையா வேண்டும் என்பதையும் நீங்களே தீர்மானிக்கக் கூடியதாக இருக்கும். அதுமட்டுமல்ல குழந்தையின் நிறம், அதன் முடி சுருட்டையாக இருக்க வேண்டுமா வேண்டாமா போன்ற தேர்வுகளும் கூட உங்களுக்கே இருக்கும்.

நன்றி: டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
tamilselvi
tamilselvi
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 118

Back to top Go down

ஒரே நாளில் பிறந்த 20 சோதனைக் குழாய் குழந்தைகள்!: Empty Re: ஒரே நாளில் பிறந்த 20 சோதனைக் குழாய் குழந்தைகள்!:

Post by இனியவளே Mon May 17, 2010 12:53 pm

நல்ல தகவல்
இனியவளே
இனியவளே
தள நிர்வாகி
தள நிர்வாகி

பதிவுகள் : 476

Back to top Go down

ஒரே நாளில் பிறந்த 20 சோதனைக் குழாய் குழந்தைகள்!: Empty Re: ஒரே நாளில் பிறந்த 20 சோதனைக் குழாய் குழந்தைகள்!:

Post by Guest Mon May 17, 2010 1:16 pm

வணக்கம் இனியவள்
நல்ல இருக்கீங்களா
Anonymous
Guest
Guest


Back to top Go down

ஒரே நாளில் பிறந்த 20 சோதனைக் குழாய் குழந்தைகள்!: Empty Re: ஒரே நாளில் பிறந்த 20 சோதனைக் குழாய் குழந்தைகள்!:

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum