தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


மன நலத்தைப் புதுப்பிக்கும் பச்சைப்பட்டாணி. . .

View previous topic View next topic Go down

மன நலத்தைப் புதுப்பிக்கும் பச்சைப்பட்டாணி. . . Empty மன நலத்தைப் புதுப்பிக்கும் பச்சைப்பட்டாணி. . .

Post by பூ.சசிகுமார் Tue Feb 19, 2013 7:18 pm

எல்லாக் காய்கறிகளையும்விட ஊட்டச் சத்து மிகுந்த காய்கறி, பச்சைப்பட்டாணி ஆகும். அவரைக்காய், பச்சைப்பட்டாணிக் குடும்பத்தைச் சேர்ந்ததுதான்.

100 கிராம் பச்சைப்பட்டாணி மூலம்103 கலோரி வெப்பமும், உலர்ந்த பட்டாணி மூலம் 365 கலோரி வெப்பமும் நம் உடலுக்குக் கிடைக்கிறது.

மேற்கண்ட அளவு சக்தியைத் தரும் பச்சைப்பட்டாணியில் புரதமும், மாவுச்சத்தும் எல்லாவிதமான இறைச்சிகளுக்கும் இணையாக இருக்கிறது.

சுறுசுறுப்பாய் வாழ. . .

இறைச்சி உணவு சாப்பிட்டால் விரைவில் முதுமைத் தோற்றம் ஏற்படும். அதற்கு மாற்றாகப் பச்சைப் பட்டாணியைச் சாப்பிட்டால் தேவையான சக்தி கிடைக்கும். மேலும், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, பொட்டாசியம், வைட்டமின் ‘ஏ’, வைட்டமின் ‘பி’, வைட்டமின் ‘சி’, நார்ப்பொருள்கள் முதலியவற்றால் மாரடைப்பு, உயர் இரத்த அழுத்தம் போன்ற அபாயங்கள் இன்றி இளமைத் துடிப்புடனும் இளமையான தோற்றத்துடனும் நீண்ட நாள் ஆரோக்கியமாய் வாழலாம்.

பச்சைப்பட்டாணியைச் சமைத்துத்தான் சாப்பிடவேண்டும். சுண்டலாகவோ முட்டைக்கோஸுடன் சேர்த்துப் பொரியல், கூட்டு என்று சமைத்தோ சாப்பிட்டால் உடலுக்கும் நல்லது, ஆரோக்கியமும் விருத்தியாகும்.

இதயம் பலம் பெறும்!
நுரையீரலுக்கும் இதயத்திற்கும் பலத்தைக் கொடுக்கக்கூடியது பச்சைப்பட்டாணி. எனவே, அதைத் தினமும் மருந்து போல் ஒருகைப்பிடி அளவு பிற காய்கறிகளுடன் சேர்த்து சமைத்துச் சாப்பிடுங்கள்.

கடலைப்பருப்புடன் பச்சைப்பட்டாணியைச் சமைத்தால் சிலருக்கு ஒத்துக்கொள்ளாது. எனவே, துவரம்பருப்புடன் சேர்த்தே சமையுங்கள்.

சீசன் சமயம் தவிர மற்ற நேரங்களில் உலர்ந்த பட்டாணியை இரவு முழுவதும் தண்ணீரில் ஊறப்போடடு, சமையலில் பயன்படுத்த வேண்டும். இதனால் உலர்ந்த பட்டாணியால் ஏற்படக்கூடிய வாயுக்கோளாறு ஏற்படாமல் தடுக்கப்படும். பச்சை பட்டாணியில் உள்ள சத்தில் உலர்ந்த பட்டாணியில் மூன்றில் ஒரு பங்குச் சத்தே கிடைக்கிறது. தோல் நீக்கிய வறுத்த பட்டாணியில் பச்சைப் பட்டாணியின் சத்தில் அரைப்பங்கே கிடைக்கிறது. எனவே, பச்சைப் பட்டாணியையே அதிகம் பயன்படுத்துங்கள்.
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

மன நலத்தைப் புதுப்பிக்கும் பச்சைப்பட்டாணி. . . Empty Re: மன நலத்தைப் புதுப்பிக்கும் பச்சைப்பட்டாணி. . .

Post by பூ.சசிகுமார் Tue Feb 19, 2013 7:18 pm

சிறு குழந்தைகள் பச்சைப்பட்டாணியைக் குறைவாகப் பயன்படுத்த வேண்டும். வளரும் குழந்தைகள் மருந்து போல் தினமும் மூன்று தேக்கரண்டி பச்சைப் பட்டாணியை உணவில் சேர்த்து வந்தால் மூளை பலம் பெறும்! ஞாபகச்தி அதிகரிக்கும். வெண்டைக்காயில் உள்ளதைவிட மூன்றுமடங்கு அதிகமான பாஸ்பரஸ் பச்சைப்பட்டாணியில் இருப்பதால், குழந்தைகளின் புத்திக் கூர்மையும் பலமடங்கு அதிகரிக்கும்.

மன நலம் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் 100 கிராம் பச்சைப் பட்டாணி சுண்டல் சாப்பிட்டால் அவர்கள் வரைவில் குணமடைவார்கள். காரணம், இதில் உள்ள பாஸ்பரஸ்தான்.

100 கிராம் பச்சைப்ட்டாணியில் 14.4 கிராம் மாவுச்சத்தும், 6.3 கிராம் புரதமும், 0.4 கிராம் கொழுப்பும், 2.0 கிராம் நார்ச்சத்தும், 27 மில்லி கிராம் வைட்டமின் ‘சி’யும், 2.9 மில்லிகிராம் நியாஸினும் 140 மைக்ரோ மில்லி கிராம் ரிபோபிலவினும், 350 மைக்ரோ மில்லி கிராம் தயாமினும், 640 சர்வதேச அலகு வைட்டமின் ‘ஏ’யும் உள்ளன.

கண்பார்வைத் திறனுக்கு வைட்டமின் ‘ஏ’ இன்றியமையாதது.

உடல்வலி, தலைவலி ஆகியன ஏற்படாமலிருக்கவும் பல், எலும்பு முதலியவை உறுதியுடன் இருக்கவும் இதில் உள்ள வைட்டமின் ‘சி’ பயன்படுகிறது, வாய் நாற்றமும் அகன்றுவிடுகிறது.

நியாஸின், ரிபோபிலவின், தயாமின் போன்ற ‘பி’ குரூப் வைட்டமின்கள் உள் உறுப்புகள் அனைத்தையும் வலிமைப்படுத்துகின்றன. இந்த வைட்டமின் குறைந்தால் இதயத்துடிப்பு, நரம்புத் தளர்ச்சி, தூக்கமின்மை, உடல் பலவீனம், பசியின்மை ஆகியவை உண்டாகும். இவை குணமாகவும் வாய், நாக்கு முதலியவற்றில் உள்ள புண்கள் குணமாகவும், செரிமான உறுப்புகள் நன்கு செயல்படவும் இதில் உள்ள வைட்டமின் ‘பி’ நன்கு பயன்படுகிறது.

எனவே, ஒல்லியாய் இருப்பவர்கள் நாளடைவில் சதைப்பிடிப்புடனும் உடல் வலிவுடனும் வளரப் பச்சைப் பட்டாணியை நன்கு உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

மன நலத்தைப் புதுப்பிக்கும் பச்சைப்பட்டாணி. . . Empty Re: மன நலத்தைப் புதுப்பிக்கும் பச்சைப்பட்டாணி. . .

Post by பூ.சசிகுமார் Tue Feb 19, 2013 7:18 pm

ஓட்டல்காரர்கள் தங்கள் சாப்பாட்டில் பரிமாறப்படும் காய்கறி வகைகளுள் சிறிதளவு பச்சைப்பட்டாணியையும் சேர்த்துத் சமைத்தால் வியாபாரம் பெருகும். மிகவும் ருசியான பச்சைப் பட்டாணியைச் சாப்பிடத் தொடர்ந்து வாடிக்கையாளர்கள் வருவார்கள்.

வீட்டிலும் தினசரி பச்சைப் பட்டாணியை மற்ற காய்கறிகளுடன் சிறிதளவு சேர்த்துச் சமைத்தால், மற்ற காய்கறிகளையும குறைவாகப் பயன்படுத்தலாம். பச்சைப்பட்டாணியால் உடலுக்குச் சக்தியும் நன்கு கிடைக்கும்.

இவ்வளவு சிறப்புகள் கொண்ட பச்சை பட்டாணியின் தாயகம் தென்மேற்கு ஆசியாவும் தெற்கு ஐரோப்பாவும் ஆகும். காடுகளில் தானாகவே வளர ஆரம்பித்த இத்தாவரம் குளிர்காலத்தில் மட்டுமே வளரும். கி.மு. 2000ஆம் ஆண்டிலேயே சீனர்கள் பச்சைப் பட்டாணியைப் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். பைபிளில் பச்சைப் பட்டாணியைப் பற்றிய குறிப்புகள் உள்ளன.

இங்கிலாந்தில் கி.பி.1600 ஆம் ஆண்டு இறுதியில்தான் பச்சைப் பட்டாணி அறிமுகமானது.

இன்று 1300 இனங்கள் இதில் உள்ளன. வீடுகளில் வளர்த்துச் சமைக்கப்படும் வகையே புகழ்பேற்றது. இதுவே பச்சைப் பட்டாணி! தோட்டப் பட்டாணி என்றும் இதற்குப் பெயர் உண்டு. இதன் தாவர விஞ்ஞானப் பெயர், பிஸும் ஸாடிவம் என்பதாகும்.

500 ஆண்டுகளுக்கு முன் மனிதன் நன்கு பயன்படுத்திய பச்சைப் பட்டாணி இன்று உலகம் முழுவதும் பயிராகிறது. இதன் கொடிகள் ஆடுமாடுகளுக்கு நல்ல உணவு.

இதயம், நுரையீரல்கள் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படாமல் இருக்கவும், குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தைப் பின்பற்றும் பெண்களுக்குக் குழந்தை பிறக்காமலிருக்கவும், ஆண்களுக்கு மலட்டுத் தன்மை ஏற்படாமலிருக்கவும் பச்சைப் பட்டாணியை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

நன்றி: பேஸ்புக்
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

மன நலத்தைப் புதுப்பிக்கும் பச்சைப்பட்டாணி. . . Empty Re: மன நலத்தைப் புதுப்பிக்கும் பச்சைப்பட்டாணி. . .

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum