தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


நான் யார்........

View previous topic View next topic Go down

நான் யார்........ Empty நான் யார்........

Post by muthuaiyer Thu Jul 15, 2010 7:44 pm

நான் நாத்திகனல்ல. ஆனால் மூடநம்பிக்கைகளை வெறுப்பவன். சோம்பேறிகளுக்குத் துணைபோக மாட்டேன். கடவுளை நம்புங்கள். ஆனால் கடவுளையே நம்பி அமர்ந்து விடக்கூடாது. எனக்கென்று பல கடமைகள் இவ்வுலகில் இருக்கிறது என்று எண்ணி வாழுங்கள், மேலும் அதற்கேற்றாற்போல் செயல்பட வேண்டும். மனிதர்களைக்காட்டிலும் கடவுளை மிகவும் நம்பும் நாடு இந்தியாதான். இது தமிழர்களை மட்டும் குறித்து எழுதப்பட்டதல்ல. இமயம் முதல் குமரிவரை உதிர்ந்து கிடக்கும் கோடானுகோடி மக்களைக் குறித்த வண்ணம் எழுதியது. இந்தியர்கள் மற்ற பிற நாடுகளுக்குச் சென்றாலும் உடனே அங்கு ஒரு கோயிலையோ, குருத்வாராவையோ கட்ட முழுமூச்சுடன் இறங்கி இன்று பல அயல் நாடுகளில் சாதித்தும் இருக்கிறார்கள். இது நம் கலாச்சாரத்தைப் பரப்ப ஏதுவாக இருந்தாலும், கடவுளை நாம் எவ்வளவு அதிகம் நம்புகிறோம் என்பதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு. இப்படி தீவிர பக்தர்களாகிய நாம் இரான், இராக், குவைத், போன்ற நாடுகளில் முழு மூச்சுடன் செயல்படுகிறோமா என்றால், விடையை நாம் எல்லோருமே நன்கு அறிவோம். ஆகவே, கடவுளை நம்புங்கள், வெறியாகி நம்பாதீர்கள். கடவுள் நம்முடன் துணைபோகவும், வழிகாட்டவும்தான் இருக்கிறாரேயன்றி, நம் தேவைகள் எல்லாவற்றையும் மட்டும் பூர்த்தி செய்வதற்காக அல்ல என்பதை நான் நன்கு உணர்ந்தவன்.
நட்டகல்லைச் சுற்றிவந்து, நாலு குட்டுகுட்டியே, ப்ரார்த்தனை செய்யும் மனிதரைப் பார்த்து ஒரு சித்தர் கேட்கிறார், நட்ட கல்லும் பேசுமோ, நாதன் உள்ளிருக்கையில் என்று. நம்முள்ளேயே கடவுள் இருக்கிறான். அஹம் ப்ரஹ்ம்மாசி. அன்புடனும், பண்புடனும் நடந்துகொண்டால் நாமே கடவுள். நம்புங்கள் - நண்பனை நம்புங்கள். எதிரியையும் நண்பனாகக் கொள்ளலாம், ஆனால் நண்பன் எதிரியாக ஒருபோதும் ஆகக் கூடாது. இது தான் என் அறிமுகம்.
நன்றி,
வணக்கம்,
முத்து ஐயர்
muthuaiyer
muthuaiyer
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 63

Back to top Go down

நான் யார்........ Empty Re: நான் யார்........

Post by Rikaz (Amarkkalam) Thu Jul 15, 2010 8:49 pm

வணக்கம் முத்து ஐயரே அமர்க்களத்துக்கு வந்தமைக்கு மிக்க நன்றி உங்களின் மேலான பதிவுகள் இங்கு வரவேற்கப்படுகின்றன.
Rikaz (Amarkkalam)
Rikaz (Amarkkalam)
தள நிர்வாகி
தள நிர்வாகி

பதிவுகள் : 108

Back to top Go down

நான் யார்........ Empty Re: நான் யார்........

Post by muthuaiyer Fri Jul 16, 2010 12:11 pm

நன்றி ஐயா, தங்கள் எல்லோருடைய வரவேற்புக்கும் மிக்க நன்றி.
நான் ஆன்மீகத்திலும், வேதாந்தத்திலும் மிக்க நாட்டமுடையவன். அவ்வப்போது என் மனதில் படுவதை என் வாழ்க்கை அனுபவத்தோடு இணைத்து எழுதுகிறேன்.

எனக்கு சரி என்றுபடுவது, பலபேருக்குத் தவறாகத்தோணலாம். இருந்தாலும் பதிவுகளை வெளிக்கொணர்வது என் கடமை. பிரசுரிப்பதும், மறுப்பதும் உங்கள் சித்தம்.

நந்தவனத்தில் ஒரு ரோசாப்பூ பூத்துக் குலுங்கி, தென்றலில் அசைந்து அசைந்து, அந்தத் தோட்டத்தின் மதிலுக்கு வெளியே தன்னை நீட்டிக்கொண்டு அவ்வழியே வருவோர் போவோரையெல்லாம் பார்த்துக் களித்துக் கொண்டிருந்தது.

அப்போது அவ்வழியே ஓர் இளைஞன் சென்றபோது அந்த ரோஜா மலர் அவன் கண்ணில் பட்டது. அதைப் பார்த்தவுடன் அவன் உடனே தன் மனதில் எண்ணியது, ஆஹா இந்தப் பூ என் காதலியின் தலையில் சூடப்பட்டால் எவ்வளவு அழகாயிருக்கும்.

சற்று நேரத்தில் கோயில் அர்ச்சகர் ஒருவர் அவ்வழியே கடந்து சென்றபோது அப்பூவைப் பார்த்து அவர் எண்ணியது, அடடா, இந்த மலர் என் ஈசனின் பாதத்தில் சமர்ப்பிக்கப் பட்டால் என்ன ஆனந்தமாக இருக்கும்.

பிறகு சுடுகாட்டில் பிணங்களை எரிக்கும்போது வெப்பத்தில் எலும்புக்கூடுகள் சில நேரங்களில் மீண்டும் உயிர்த்தெழுவதுபோல் எழும், அதை உடனே தன் கையில் இருக்கும் நீண்ட கம்பு ஒன்றைக் கொண்டு அதை அடித்து வீழ்த்துவான். அவனை மசானத்தின் வெட்டியான் என்றழைக்கப்படுவது வழக்கம். அவன் அப்போது அவ்வழியே சென்றபோது, ஆஹா, இந்த அழகான மலர் நேற்று என் கண்ணில் பட்டிருந்தால் அனாதையாய் எரிக்கப்பட்ட அந்த பரதேசியின் பிணத்தின் மீது போட்டு அதற்கு அஞ்சலி செலுத்தியிருக்கலாமே என்று அவன் மனதில் தோன்றியது

ஆக, இங்கு பூ ஒன்றுதான். ஆனால் அவரவர் வாழும் சூழ்நிலைக்கேற்ப அப்பூ நோக்கப் படுகிறது. அதுபோல, நான் எழுதும் கருத்து ஒன்றுதான், ஆனால் உலகில் பல்வேறு சூழ்நிலையில் வாழும் மனிதர்கள் தான் புரிந்துகொள்ளும் விதம் மட்டும் வெவ்வேறாகவும் இருக்கலாம். அதில் தப்பொன்றுமில்லை. அவர்கள் எழுதும் விமர்சனக் கோணத்தில் நானும் என் கருத்தைச் சிந்தித்து இன்னும் பல கருத்துக்கள் வெளிவரவும் வாய்ப்புள்ளது. ஆதி சங்கரர் அதைத்தான் சொல்கிறார். கரு நிறத்தைக் கருப்பென்று ஏற்றுக்கொள்ளாமல், கருப்பில்லை என்று வாதாடினால் கருப்பு நிறத்தில் பல்வேறு உண்மைகள் உலகுக்கு பலபேர்கள் மூலம் வெளிவர வாய்ப்பிருக்கிறதல்லவா.
என் சிந்தனைகள் தொடர்ந்து உங்களை நாடிவரும்.
நன்றி,
முத்து ஐயர்
muthuaiyer
muthuaiyer
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 63

Back to top Go down

நான் யார்........ Empty Re: நான் யார்........

Post by Rikaz (Amarkkalam) Fri Jul 16, 2010 2:30 pm

உண்மையிலே உங்களின் இந்த பதிவு அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டிய ஒன்று. எதிலும் ஒரு ஆராய்ந்து பார்க்கும் முனைப்புத்தன்மை இருந்தால் அதிலிருக்கும் நல்ல விசயங்களையும் அறியலாம் அதனால் ஏற்படும் தீமைகளையும் அறியலாம் ஆனால் நாம் எதனை அறியப்போகிறோம் பின்பற்றப்போகிறோம் என்பது தான் நம் முடிவு.

உங்களின் பதிவிற்காய் காத்திருக்கும் தோழன் நான்.

நன்றி
Rikaz (Amarkkalam)
Rikaz (Amarkkalam)
தள நிர்வாகி
தள நிர்வாகி

பதிவுகள் : 108

Back to top Go down

நான் யார்........ Empty Re: நான் யார்........

Post by இனியவளே Fri Jul 16, 2010 3:25 pm

முத்து அவர்களே உங்களின் பதிவு மிக்க நல்ல கருத்து

நீங்கள் சொல்வது முற்றிலும் நல்லனவே

தங்களின் பதிவிற்கு மிக நன்றி
இனியவளே
இனியவளே
தள நிர்வாகி
தள நிர்வாகி

பதிவுகள் : 476

Back to top Go down

நான் யார்........ Empty Re: நான் யார்........

Post by Guest Sat Jul 17, 2010 8:55 am

அன்புடன் வரவேற்கிறேன் முத்து ஐயர் அவர்களே
தங்களின் கருத்துக்கள் சுதந்திரமாக பதிவுசெய்யுங்கள்
Anonymous
Guest
Guest


Back to top Go down

நான் யார்........ Empty Re: நான் யார்........

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum