தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ரேகைகள். உங்களுக்காக சில பயனுள்ள தகவல்கள்

View previous topic View next topic Go down

ரேகைகள். உங்களுக்காக சில பயனுள்ள தகவல்கள் Empty ரேகைகள். உங்களுக்காக சில பயனுள்ள தகவல்கள்

Post by முழுமுதலோன் Tue Mar 05, 2013 1:46 pm

கைரேகை சாஸ்திரங்கள்

கைரேகை சாஸ்திர ரேகைகள்.

1: ஆயுள் ரேகை
2: புத்தி ரேகை
3: இதய ரேகை
4:சுக்கிரனின் வட்டப்பாதை
5: சூரிய ரேகை
6: புதன் ரேகை
7: விதி ரேகை
ஆண்களுக்கு வலக்கை ரேகையையும் பெண் களுக்கு இடக்கை ரேகையையும் பார்க்க வேண் டும் என கைரேகை நிபுணர்கள் கூறி வருகின்ற னர் என்பது யாவரும் அறிந்ததே! ஆனால் ஆய் வின்படி, இரண்டு கைகளின் ரேகையையும் பார்த்துத்தான் துல்லியமாக பதில் கூற முடியும். ஆண்களுக்கு இடக்கை ரேகையையைப் பார்த்து 40 வயதிற்கு முன்னால் நடந்த பலன்களையு ம், வலக்கை ரேகையையைப் பார்த்து 40 வயதிற்கு பிறகு நடக்கப்போ கிற பலன்களையும் கூற வேண்டும். அதுபோல் பெண்களுக்கு வலக்கை ரேகையையைப் பார்த்து 40 வயதிற்கு முன்னால் நடந்த பலன் களையு ம், இடக்கை ரேகையையைப் பார்த்து 40 வயதிற்கு பிறகு நடக்கப் போகி ற பலன்களையும் கூற வேண்டும். ஓர் ஆடவரின் இடக்கையில் உள்ள ரேகைகளும், மேடுகளும் பலவீனமாக இரு க்க, அவரது வலக்கையில் உள்ள ரேகைகளும், மேடுகளும் பல மாக இருந்தால், அவர் 40 வயது வரை பலவிதமான கஷ்டங்களை அனுபவித்து, அதற்கு பிறகு படிப்படி யாக தனது வாழ்வில் போராடி வெற்றியடைந்து, நல்ல நிலைமையை அடைவார் எனக்கூற வேண்டும். இரண்டு கைகளில் உள்ள ரேகைகளு ம், மேடுகளும் பல மாக இருந்தால் அந்த நபர் வாழ்நாள் முழுவதும் நல்ல சந்தோ ஷமான வாழ்க்கையைப் பெறுவார். ஆண்களுக்கு வலக் கை ரேகை சிறப்பாக இருக்க, இடக்கை ரேகை அம்சங்கள் பலவீனமாக இருந் தால் இவர்களுக்கு 2/3 பங்கு சுப பலனும் 1/3 பங்கு பாவ பலனும் உண்டாகும் என அறிய வேண்டும். இவ்வாறு பெண்களுக்கு இருந் தால் 1/3 பங்கு சுப பலனும் 2/3 பங்கு பாவ பலனும் உண்டாகும். அதாவது ஆண்களுக்கு வலக்கை ரேகையையும், பெண்களுக்கு இட க்கை ரேகையையும் அதிக சக்தி வாய்ந்தது.
கைரேகை மேடுகள்

மேடுகளின் படி விரல்களையும் குருவிரல் (ஆட்காட்டி விரல்),சனி விரல் (நடு விரல்), சூரிய விரல்(மோதிர விரல்), புதன் விரல் (சுட்டு விரல்) என்கிறார்கள். ஆனால் கட்டை விரலை சுக்கிரவிரல் என்று கூறவில்லை. இனி ரேகைகளை பார்ப்போம்..
விதி ரேகை

உள்ளங்கையில் மணிக்கட்டு பகுதியில் இருந்து ஒரு ரேகை சனி மேட்டை நோக்கிச் செல்லும். இதுவே விதி ரேகை அல்லது தொழில் ரேகை ஆகும். இது நமது உழைப்புக்குத் தகுந்த பலனைக் கொடுக்கக் கூடியது. சிலர் கைகளில் இந்த ரேகையே இருக்காது..! இவர்கள் எவ்வளவு தான் கஷ்டப்பட்டுப் பாடுபட்டாலும், பலன் கிடைக்காது. விதி ரேகை தெளிவாக அமைந்து வெட்டுக்குறி, தீவு ஏதும் இல்லாது மணிக்கட்டிலிருந்து சனி மேடு வரை செல்வது நல்லது. இவர்கள் வாழ் நாள் முழுவதும் தொழில் விஷயத்தில் பிரச்சனை ஏதும் இல்லாது நிம்மதியாக வாழ்வர். விதி ரேகையுடன் ஆயுள், புத்தி, இருதய ரேகைகளும் நன்றாக அமைந் திருந்தால், இவர்களுக்கு நல்ல தேக ஆரோக்கியமும் , புத்திசாலித் தனமும் , நல்ல தொழில் விருத்தியும் ஏற்பட இடமுண்டு. இவர்களது எதிர்காலம் சந்தோசமாக அமையும்.
ஆயுள் ரேகை
முக்கியமானது..! சிலரது கைகளில் தடிமனாகவும், ஆழமாகவும், சிலரது கைகளில் லேசாகவும் மெல்லியதாகவும் பதிந்திருக்கும். தடிமனான ஆயுள் ரேகை மிருக பலத்தையும், மெல்லிய ஆயுள் ரேகை ஆத்ம பலத்தை யும் குறிப்பிடும். தெளி வாகவும், மெல்லி யதாகவும், நீளமாகவும் அமைந்த ஆயுள் ரேகை, நல்ல தேக பலத்தையும், ஆரோக் கியத்தையும் கொடு க்கும். தடிமனான ஆயுள் ரேகை உடையோர் அடிக்கடி சிறு, சிறு உடல் உபாதையால் சிரமப்படுவர். ஆயுள் ரேகை சுக்கிர மேட்டைச் சுற்றி எவ்வாறு அமை ந்துள்ளது என்பதை ஆராய வேண்டும், ஆயுள் ரேகை சுக்கிர மேட்டைச் சுற்றி நன்கு விலகியிருந்தால், இவர்களது தேக ஆரோக்கியம் நன்றா கவும் சுக்கிர மேட்டைச் சுற்றி நெருங்கிக் காணப்பட்டால், நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாகவும் இருக்கும். ஆயுள் ரேகை குரு மேட்டுப் பக்கம் சற்று உயர்ந்து காணப்பட்டால், இவர்கள் தன்னடக்கம், கட்டுப்பாடு, லட்சிய உணர்வு, உயர் வெண்ணம் கொண்டவர்களாக இருப்பர். ஆயுள்ரேகை கீழ் செவ் வாய் மேட்டிலிருந்து ஆரம்பித்திருந்தால், இவர்கள் உணர்ச்சி வசப்படக்கூடியவர்களாகவு
ம், அடக்கமில்லாதவர்களாகவும், சண்டை சச்சரவுகளில் ஈடுபடக் கூடிய வர்களாகவும் இருப்பர். ஆயுள் ரேகையிலிருந்து மேல் நோக்கி எழும் ரேகைகள் சிறியதாக இருந்தால், இவர்கள் நல்ல உழைப்பு, உற்சாகம், அதிர்ஷ்டம் உடையவர்களாக இருப்பர். புத்தி ரேகை
குரு மேட்டின் அடிப்பகுதியில் ஆயுள் ரேகையை ஒட்டி ஆரம்பமாகி, உள்ளங்கையில் குறுக்காக செவ்வாய் மேடு அல்லது சந்திர மேட்டை நோக்கிச் செல்லும் ரேகை புத்தி ரேகை ஆகும். இது ஓரளவு அழுத் தமாகவும், தெளிவாக வும், மெல்லியதாக வும் இருந்து தீவு, புள்ளி, உடைதல், போ ன்ற குறைபாடு கள் இல்லாது அமைந்தால் இவர்கள் புத்திசாலியாகவும் , அதிக ஞாபக சக்தி உடையவர்களாகவும், நேர்மையாக வும் இருப்பர். புத்தி ரேகை நீளமாக அமை ந்திருந்தால், இன்னும் விசேஷ மான பலனைத் தரும். புத்தி ரேகை நமது மூளையின் அமைப்பையும், அது வேலை செய்யும் திறனையும், நமது மனோ நிலை யையும் எடுத்துக் காட்டுகிறது..!
புத்திரேகையானது ஆயுள் ரேகையுடன் இணைந்து உற்பத்தி யாகாமல் அல்லது ஆயுள் ரேகையுடன் ரேகை இணைப்பு எதுவு மில்லாமல் தனித்து ஆயுள், இருதய ரேகைகளுக்கு மத்தியில் உற்ப த்தியாகும் புத்திரேகை, அவ் விதம் ரேகை அமைந்தவன் புத்தியின் பலத்தையும் சுதந்திரப் போக் கையும் தன்னிச்சையான பிடிவாத குணத்தையும் காட்டும்.
ஆயுள் ரேகையோடு புத்திரேகையானது இணைந்து உற்பத்தியாகி இருந் தால் தாய், தந்தை, மனைவி, பிள்ளை, குடும்பமென்று பிரிக்க முடியாத பாசப்பிணைப்பு இருக்கும்.
ஆயுள் ரேகையுடன் இணைந்த உற்பத்தியாகாத புத்தி ரேகையைக் கொண்டவர் எப்போதும் தனித்து நிற்பதில், தனித்து வாழ்வதில் பிரியம் காட்டுவார். புதன் ரேகை
இதனைப் ஆரோக்கிய ரேகை என்றும் கூறுவர். இது விதி ரேகையின் அருகே ஆரம்பித்து புதன் மேடு வரை செல்லும். உடல் நிலை எவ்வாறு உள்ளது என்பதை இந்த ரேகை எடுத்துக் காட்டும். உள்ளங்கையில் உள்ள மற்ற ரேகைகளான புத்திரேகை, ஆயுள் ரேகை, இருதய ரேகை ஆகியவற்றில் ஏதாவது குறைபாடு இருந்தாலும், இந்தப் புதன் ரேகை நன்றாக அமைந் திருந்தால், இவர்களது தேகத்தில் ஏதாவது பீடைகள் வந்தாலும், அவை யெல்லாம் உடனடியாக நிவர்த்தியா வதற்கு இது உறுதுணையாக இருக்கும். மேலும், புதன் மேடு பலவீனமாக இருந்தாலும் இந்த ரேகை பலமாக இருந்தால் புதன் மேட்டால் ஏற்படும் குறைபாடுகள் யாவும் விலகி விடும். இந்த ரேகை தெளிவாகவும், மெல்லிய தாகவும், ஓரளவு அழுத்தமாகவும் இருப்பது நல்லது. தீவு, பிளவு, வெட்டுக்குறி, சங்கிலிக் குறி போன்ற குறைபாடுகள் ஏதும் இல்லாது இது அமைந்திந்தால் இவர்கள் நல்ல பேச்சு சாதூர்யம், சொல்வன்மை கலை, வியாபரத்திறமை ஆகியவற்றுடன் பெரும் பணம் சம்பாதித்து சிறப்பாக வாழ்வர்.
இருதய ரேகை
இது புதன் மேட்டில் உற்பத்தியாகிச் சூரிய மேடுகளைத் தாண்டி குரு மேட்டில் முடியும். சிலருக்கு இந்த இருதய ரேகை சனி மேட்டில் முடியும்; அல்லது கிரக மேடுகளுக்கு வெகுவாக கீழே தள்ளிப் புத்திரேகையை ஒட்டியும் முடிய லாம். சிலர் கைகளில் புத்தி ரேகை, இரு தய ரேகை ஆகிய இரண்டும் சேர்ந்து, உள்ளங்கையில் குறுக்கே ஒரே ரேகை யாகவும் காணப்படலாம். இருதய ரேகை மூலம் நமது இருதயம் எவ்வாறு வேலை செய்கிறது என்பதையும், இருதயத் துடிப்பு இரத்த ஓட்டம் போன்றவற்றையும், இருத யத்தில் ஏற்படக் கூடிய கோளாறுக ளையு ம் தெரிந்து கொள்ளலாம். இந்த ரேகை மூலம் அன்பு, பாசம், காதல் போன்ற உணர் வுகள் எந்த அளவில் உள்ளன என்பதையும் தெரிந்து கொள்ளலாம். சூரிய ரேகை
விதி ரேகைக்கு இணையாக, மோதிர விரலின் கீழே இருக்கும். இது புகழையும், இகழையும் குறிப்பிட்டுக் காட்டும்


பிற முக்கிய ரேகைகள்…
சுக்கிர ரேகை
மணிக்கட்டிற்கு அருகில் உள்ளங்கையின் கீழிலிருந்து, சுண்டு விரலை நோக்கி உள்ளங்கையின் மேல்நோக்கி ஓடுகி றது; தொடர்ச்சியான உடல்நல பிரச்சினை கள், வியாபார புத்திசாலித்தனம், அல்லது தொடர்பு கொள்வதில் திறமை ஆகியவற் றைக் குறிப்பிட்டுக்காட்டும். சுக்கிரனின் வட்டப்பாதை
இது சுண்டு விரலுக்கும், மோதிர விரலுக்கும் இடையில் தொடங்கி, மோதிர விரல் மற்றும் நடுவிரல்களுக்கு கீழே ஒரு கீற்று போல ஓடி, நடுவிரலுக்கும், சுட்டு விரலுக்கும் இடையில் முடிகிறது; இது உணர்வு ப்பூர்வமான அறிவு மற்றும் திறமையாக கையாள்வதற்கான திறமை ஆகியவற்றோடு தொடர்புபட்டது. அப்போலோ ரேகை

இது ஓர் அதிருஷ்ட வாழ்க்கையைக் குறிக்கிறது; இது மணிக்கட்டில் இருக்கும் சந்தர மேட்டில் இருந்து, மோதிர விரலுக்கு (அப்போலோ விரலுக்கு) இடையில் பயணிக்கி றது. வட்ட ரேகை
இது ஆயுள் ரேகையைக் கடந்து ‘x’ வடிவத்தை உருவாக்குகிறது. இது மிகவும் தீமையின் அறிகுறியாக பார்க்கப்படுகிறது. கைரேகை பார்க்க வருபவருக்கு கவலையை உண்டாக் கும் என்பதால், கைரேகை பார்ப்பவர்கள் பொதுவாக இந்த ரேகையைக் குறிப்பிட்டு கூறுவதில்லை. வட்ட ரேகையின் பொதுவான குறியீடுகள், பிற ரேகைகளால் ‘M’ என்று உருவாக்கப்பட்டிருக்கு ம். நட்பு ரேகைகள்
குறுகிய கிடைமட்ட ரேகைகள், இது உள்ளங்கையின் மோதும் விளிம் பில் இதய ரேகைக்கும், சுண்டு விரலின் கீழ் பகுதிக்கும் இடையில் காண ப்படும்; நெருங்கிய உறவுகள், சில நேரங்களில் – ஆனால் எப்போதும் கிடை யாது – காதல் ஆகியவற்றைக் குறிப்பிட் டுக் காட்டும் என்று நம்பப் படுகிறது. பயண ரேகைகள்
கிடைமட்ட ரேகைகளான இவை உள்ள ங்கையின் புடைத்த விளிம்பில் மணிக்கட்டிற்கும், இதய ரேகைக்கும் இடையில் காணப்படுகிறது; ஒவ் வொரு ரேகையும் அந்த நபரால் மேற் கொள்ளப்படும் ஒரு பயணத்தைக் குறிப்பிடுவதாக கூறப்படுகிறது – இந்த ரேகை நீண்டிருந்தால், அந்த நப ருக்கு மிகவும் முக்கியமான பயணம் அமையும் என்று கூறப்படுகிறது. பிற குறியீடுகள்.
நட்சத்திரங்கள், வெட்டுகள், முக்கோணங்கள், சதுரங் கள், திரிசூலங்கள், மற்றும் வளையங்கள் ஆகியவை உட்பட ஒவ்வொரு விரல்களின் கீழேயும் இவை இருக்கின்றன; உள்ளங்களையில் இவை இருக்கும் இடம் மற்றும் பிற ரேகைகளின் குறுக்கீடு இல்லாமல் இருக்கும் தன்மை ஆகியவற்றைக் கொண்டு இவற்றின் அர்த்தங்களும் பாதிப்புகளும் கணிக்கப்படும்.


நன்றி விதை2விருட்சம்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ரேகைகள். உங்களுக்காக சில பயனுள்ள தகவல்கள் Empty Re: ரேகைகள். உங்களுக்காக சில பயனுள்ள தகவல்கள்

Post by முரளிராஜா Wed Mar 06, 2013 6:52 am

கைரேகை சாஸ்திரங்கள் பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum