Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
ஒரு தாயின் உண்மையான மகிழ்ச்சி - திருக்குறள் கதைகள் 18
Page 1 of 1 • Share
ஒரு தாயின் உண்மையான மகிழ்ச்சி - திருக்குறள் கதைகள் 18
சோழ நாட்டின் பூம்புகாரில் வாழ்ந்து வந்த ஞானசீலர் கல்வியில் சிறந்தவர். அது மட்டுமின்றி ஊரார் புகழும் அளவிற்கு குணநலனிலும், தான தர்மத்திலும் சிறந்து விளங்கினார். அவருக்குப் பல ஆண்டுகள் கழித்து ஒரு மகன் பிறந்தான். அவன் பிறந்த சில மாதங்களிலேயே அவர் உயிர் நீத்தார்.
குணசீலன் என்ற பெயர் கொண்ட அவன் தன் தந்தையைப் போலவே கல்வியில் சிறந்து விளங்கினான். ஞானசீலரின் மகன் என்பதால், அவனுக்கு ஊரில் மதிப்பும், மரியாதையும் கிடைத்தது. குருகுலத்திலும், ஊரிலும் அவனது அறிவுத் திறமையைக் கண்டு ஞானசீலரின் மகனும் அறிவாளி தான் எனப் பெருமையாகப் பேசினர். ஆனால் அவனது தாய் மட்டும் அவனைப் புகழ்ந்து பேசுவதில்லை. தன் தாய் தன்னை ஒரு வார்த்தை கூட பாராட்டாமல் இருப்பது கண்டு குணசீலன் கவலை கொண்டான்.
குருகுலவாகத்துக்குப் பின் அவனுக்கு அரண்மனையில் பொறுப்பான பதவி கிடைத்ததால், அவர்களது வாழ்க்கைத் தரம் உயர்ந்தது. தன் தந்தையைப் போலவே தான தர்மத்திலும் சிறந்து விளங்கினான். பூம்புகார் முழுவதும் அவனது அறிவுக்கூர்மையைப் பற்றியும், தர்ம குணத்தைப் பற்றியும் பெருமையாக பேசப்பட்டது. அரண்மனையில் ஒருமுறை தீர்க்க முடியாத சிக்கலை, தன் அறிவுக்கூர்மையால் தீர்த்து வைத்தான். இதைக் கேள்விப்பட்ட சோழ மன்னர், குணசீலனை நேரில் அழைத்து ஊரார் முன்னிலையில் பாராட்டினார். அப்போது, தன் தந்தையின் அறிவுக்கூர்மையை குணசீலன் மிஞ்சி விட்டதாக புகழ்ந்து பேசினார்.
அப்போது ஆனந்தக் கண்ணீர் வடித்த அவனது தாய், தன் மகனின் நெற்றியில் முத்தமிட்டுப் பாராட்டினாள். இதைக் கண்டு குழப்பம அடைந்த குணசீலன், "சிறுவயதில் இருந்து என்னை அனைவரும் பாராட்டும் போது, நீங்கள் மட்டும் எதுவும் பேசாமல் இருந்தீர்கள். இப்போது மட்டும் பாராட்டுகிறீர்களே?" எனக் கேட்டான்.
அதற்கு பதிலளித்த அவனது தாய், "சிறுவயது முதலே உன் அறிவுக்கூர்மையைப் பார்த்து எல்லோரும் ஞானசீலரின் மகன் என்றே பாராட்டினார்கள். அப்போதெல்லாம் நான் மகிழ்ச்சி அடைந்திருக்கிறேன். ஆனால் அந்த பெருமை எல்லாம் உன் தந்தைக்கே சேரும். இன்று உன்னை சான்றோன் என்றும், குணசீலனின் தந்தை ஞானசீலர் என்றும் பாராட்டினார்கள். எனவே தான் இன்று நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இன்று தான் நான் உன்னைப் பார்த்து பெருமைப்படுகிறேன்" என ஆனந்தக் கண்ணீரோடு கூறினாள்.
இதைதான் திருவள்ளுவரும் சொல்கிறார்
ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன் மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்
விளக்கம்: ஒரு தாய் தனக்கு மகன் பிறக்கும் போது அடையும் மகிழ்ச்சியை விட, அவனை அறிஞன் என்றும், நற்குணமுடையவன் என்றும் ஊரார் போற்றும் போது அதிக மகிழ்ச்சி அடைகிறாள்.
நன்றி அம்புலிமாமா
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» சான்றாண்மை - திருக்குறள் கதைகள் #10
» தீர விசாரிப்பதே மெய்! - திருக்குறள் கதைகள் #27
» திருக்குறள் கதைகள் #1
» மாறிய மனம் - திருக்குறள் கதைகள் #11
» நா... காக்க! - திருக்குறள் கதைகள் #32
» தீர விசாரிப்பதே மெய்! - திருக்குறள் கதைகள் #27
» திருக்குறள் கதைகள் #1
» மாறிய மனம் - திருக்குறள் கதைகள் #11
» நா... காக்க! - திருக்குறள் கதைகள் #32
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum