தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஆரோக்கியமான வாழ்விற்கு கைகளை சுத்தமாக வைத்திருத்தலும் ஒன்று...

View previous topic View next topic Go down

ஆரோக்கியமான வாழ்விற்கு கைகளை சுத்தமாக வைத்திருத்தலும் ஒன்று... Empty ஆரோக்கியமான வாழ்விற்கு கைகளை சுத்தமாக வைத்திருத்தலும் ஒன்று...

Post by முழுமுதலோன் Fri Mar 29, 2013 9:39 am

ஆரோக்கியமான வாழ்விற்கு கைகளை சுத்தமாக வைத்திருத்தலும் ஒன்று...

கையை ஏன் கழுவ வேண்டும்??

நாம் தெரிந்து வைத்திருக்க வேண்டிய சில விஷயங்கள்...நிறைய நேரங்களில் சில விஷயங்களை நாம் சீரியசாக எடுத்துக் கொள்வதில்லை. நிறைய இடங்களில் நாம் எப்படி சுத்தமாக இருக்கவேண்டும் என்கிற விசயம் இன்னும் அறிந்தும் அறியாமல் நடந்து கொள்கிறோம்..

பழங்காலத்தில் வீட்டின் முன்புறத்தில் ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வைத்திருப்பார்கள். வெளி இடங்களுக்குச் சென்று வருபவர்கள், அந்த நீரில், கை கால்களை சுத்தம் செய்து பிறகே வீட்டுற்குள் நுழைவார்கள். ஆனால் இந்த பழக்கம் தற்போது மறைந்துபோய்விட்டது. நாம் முன்னோர்களையும் மறந்தோம், அவர்கள் கற்றுத் தந்த நல்ல பழக்க வழக்கங்களையும் அடியோடு மறந்துவிட்டோம்.

நம் உடல் உறுப்புகளில் அதிக கிருமிகள் நடமாட வாய்ப்பு அதிகம் உள்ள இடம் நம் கை தான். இந்த கையை நாம் எந்த அளவிற்கு சுத்தமாக வைத்திருக்கிறோம் என்று பார்க்கவேண்டும்..

நாம் தினமும் சாப்பிடச் செல்லும் போது கைய மட்டும் நனைச்சா போதுமா?..... இல்லை.. இல்லவே இல்லை.. சுத்தமாக இரு விரல்களின் இடுக்குகள் முதற் கொண்டு தேய்த்து கழுவ வேண்டும்.

நமக்கு தெரிந்தவர்களை ஆஸ்பத்திரியில் பார்க்க செல்லும் முன் நம் கைகளை கழுவிக்கொண்டு செல்ல வேண்டும். அது போல அங்கிருந்து புறப்படும் போதும் கைகளை சுத்தமாக கழுவ வேண்டும்.

ஆஸ்பத்திரிகளில் அதெற்கென்று ஒதுக்கப்பட்ட இடங்களில் சென்று கைகளை சுத்தமாக கழுவுங்கள். ஏனெனில், அதிகமான கிருமிகள் கைகள் மூலமாகத்தான் பரவுகின்றன. அல்லது நோயாளியின் பக்கத்தில் வைத்திருக்கும் sanitizers(கிருமி நாசினிகள்) உபயோகியுங்கள்.

கைகளைக் கழுவிய பின் , அங்கு வைத்திருக்கும் டிஷ்யூவால் கையை துடைத்துவிட்டு அதற்குறிய குப்பைத் தொட்டிகளில் போடவேண்டும். அது போல குழாயை மூடுவதற்கும் டிஷ்யுகளைத்தான் உபயோகிக்க வேண்டும். கழுவிய கையால் குழாயை மூடக் கூடாது. இப்பொழுதெல்லாம் elbow tap உபயோகிக்கிறார்கள். அல்லது காலால் அழுத்தி திறக்கும் குழாய்களை வைக்கின்றனர்.

இது மாதிரி நாம் செய்தால், நமக்கு மட்டும் அல்ல, நாம் சந்திக்க சென்ற நோயாளிகளுக்கும் நல்லது. குடும்பத்தோடு செல்வதை தவிர்க்க வேண்டும்.

14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை அழைத்து செல்வதை தவிர்ப்பது நல்லது. அது போல் பூங் கொத்துக்கள், பழங்கள் கொண்டு செல்வதையும் தவிர்க்க வேண்டும். இவைகளின் மூலம்தான் அதிக கிருமிகள் பரவுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நோயாளியின் கட்டிலில் உட்காருவதை தவிர்க்க வேண்டும்... வெள்ளை அணுக்கள் குறைந்து அவதிப்படும் நோயாளிகளை பார்க்க செல்லும்போது நிச்சயமாக மாஸ்க் போட்டுத்தான் அவர்களை பார்க்க செல்ல வேண்டும். செறுப்பு, ஷூக்களை வெளியில் கழட்டி வைத்துவிட்டு செல்வது நல்லது. அல்லது அறையின் வெளியில் வைத்திருக்கும் ஷூ கவர்களை மாட்டிக் கொள்ள வேண்டும்.

நாம் நமது கைகளை பயன்படுத்திய பின் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். விரல்களில் உள்ள நகக்கண்களை கண்ணும் கருத்துமாக பார்க்கவேண்டும். கிருமிகள் அதனுள் இருந்து குடலுக்குள் செல்லும் வாய்ப்புகள் அதிகம் உண்டு.

அலுவலகத்தில் கம்யூட்டர் பயப்டுத்துதல், அடுத்தவர் போனை வாங்கி பேசுதல், அடுத்தவர் பேனாவை பயன்படுத்துதல் இந்த மாதிரி பயன்படுத்தி பின் எதாவது சாப்பிட நேரும் போது கைகளை கழுவுவது அவசியம் ஆகிறது.

சிறுவயதில் இருந்தே குழந்தைகளுக்கு இப்பழக்கத்தை நாம் கொண்டு வர வேண்டும் அதன் மூலம் அவர்கள் பெரியவர்கள் ஆகும் போது கைகளை சுத்தமாக அவர்களே வைத்திருப்பர்கள்...

ஆரோக்கியமான வாழ்விற்கு கைகளை சுத்தமாக வைத்திருத்தலும் ஒன்று... மேல் சொல்லியவைகளைக் கடைபிடித்தால் நமக்கு வேண்டியவர்கள் அனாவசியமாக கஷ்டப்படுவதைத் தவிர்க்கலாமே!!!!.

நன்றி சங்கவி


முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ஆரோக்கியமான வாழ்விற்கு கைகளை சுத்தமாக வைத்திருத்தலும் ஒன்று... Empty Re: ஆரோக்கியமான வாழ்விற்கு கைகளை சுத்தமாக வைத்திருத்தலும் ஒன்று...

Post by முரளிராஜா Tue Apr 02, 2013 2:18 pm

ஆரோக்கியமான வாழ்விற்கு கைகளை சுத்தமாக வைத்திருத்தலும் ஒன்று... மேல் சொல்லியவைகளைக் கடைபிடித்தால் நமக்கு வேண்டியவர்கள் அனாவசியமாக கஷ்டப்படுவதைத் தவிர்க்கலாமே!!!!.
சூப்பர்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ஆரோக்கியமான வாழ்விற்கு கைகளை சுத்தமாக வைத்திருத்தலும் ஒன்று... Empty Re: ஆரோக்கியமான வாழ்விற்கு கைகளை சுத்தமாக வைத்திருத்தலும் ஒன்று...

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Apr 02, 2013 2:36 pm

கடைபிடிக்க வேண்டிய ஒன்றுதான்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ஆரோக்கியமான வாழ்விற்கு கைகளை சுத்தமாக வைத்திருத்தலும் ஒன்று... Empty Re: ஆரோக்கியமான வாழ்விற்கு கைகளை சுத்தமாக வைத்திருத்தலும் ஒன்று...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum