தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


வெற்றியோடு மகிழ்ச்சியும் பெற சிறப்பான வழிகள்

View previous topic View next topic Go down

வெற்றியோடு  மகிழ்ச்சியும் பெற சிறப்பான வழிகள்  Empty வெற்றியோடு மகிழ்ச்சியும் பெற சிறப்பான வழிகள்

Post by முழுமுதலோன் Sun Apr 07, 2013 7:42 am



01. வெற்றி வேண்டுமா எப்போதும் மகிழ்ச்சியான முகத்துடன் இருங்கள், மன இறுக்கம் நோய்களை ஏற்படுத்தி ஆரோக்கியத்தை கெடுத்து வாழ்க்கையை வீணாக்கி விடுகிறது.

02. ஒருவர் வீடு செல்லும்போது அவர்கள் உங்களை மகிழ்ச்சியாக வரவேற்க வேண்டுமானால் நீங்கள் அங்கு மகிழ்வோடு போக வேண்டும்.

03. முள்ளும் ரோஜாவும் ஒரே செடியில் இருப்பதைப் போல வாழ்க்கையிலும் நன்மையும், தீமையும், ஒழுக்கமும் ஒழுக்கமின்மையும் கலந்துதான் இருக்கும், ஆகவே வாழ்வை குறையாக நினைத்து மகிழ்ச்சியான முகத்தை இழந்துவிடாதீர்கள்.

04. வாழ்க்கை முழுவதும் வெற்றியே கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பவன் குழந்தைப் பருவத்தைத் தாண்டாதவன், தோல்விகளை மட்டுமே எதிர்பார்ப்பவன் வளர்ச்சியடையாதவன்.

05. வாழ்க்கை என்கின்ற கட்டடத்தில் ஏற்படுகின்ற விரிசல்களை இணைக்கின்ற சீமென்டு போன்றதுதான் நகைச்சுவை உணர்வாகும்.

06. எவன் ஒருவன் வாழ்வின் கஷ்டங்களையும் துன்பங்களையும் சந்தித்துக் கொண்டு நகைச்சுவை உணர்வுடன் வாழ்கிறானோ அவனே மகிழ்ச்சியான மனிதன்.

07. பிறவியால் உங்களுக்கு அமைந்த தோற்றத்தில் நீங்கள் மாற்றம் செய்ய முடியாது, நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ அப்படியே புகைப்படத்திலும் காட்சி தருவீர்கள். ஆனால் உள்ளத்தை மலர்ச்சியாக்கி நீங்கள் தரும் முக மலர்ச்சி உங்கள் தோற்றத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். அழகாக இருந்தாலும் மலராத தாமரைக்கு ஏது மதிப்பு..

08. நகைச்சுவை உணர்வு வாழ்வில் ஏற்படும் கஷ்டங்களை தாங்கிக் கொள்ளும் வல்லமையை உங்களுக்கு தந்துவிடுகிறது.

09. அழிவிலும் பெரிய இலாபம் இருக்கிறது. நன்மைகளோடு நம்முடைய தவறுகளும் எரிந்து சாம்பலாகிவிட்டன. இனி எல்லாவற்றையுமே புதிதாகத் தொடங்கப் போகிறோம் என்பதற்காக கடவுளுக்கு நன்றி கூறுவோம். – தாமஸ் அல்வா எடிசன்

10. நீங்கள் நினைத்தால் வாழ்வின் பிரகாசமான பகுதியை பார்க்க முடியும். எப்போதும் கவலையும், தோல்வி மனப்பான்மையுமாக சுற்றிக் கொண்டிருக்காதீர்கள். உங்களை சுற்றியுள்ளவர்களை மகிழ்விப்பது உங்கள் கடமை.

11. மகிழ்ச்சி வெளியில் இருந்து வருவதில்லை மகிழ்ச்சியாக இருப்பதாக எண்ணிக் கொண்டாலே மகிழ்ச்சி உங்களிடம் தோன்றிவிடும். கடவுளிடம் நம்பிக்கை வைப்பது மகிழ்ச்சியை பெற காரணமாகிறது.

12. நம்முடைய வாழ்க்கைக்கு காரணமாக இருக்கின்ற கடவுள்தான் நமது பிரச்சனைகளின் தீர்வுக்கும் காரணமாக இருக்கிறார். ஆகவே அவரிடம் நம்பிக்கை வைக்கின்றபோது கவலைகள் தாமாகவே நீங்கி மகிழ்ச்சி தோன்றுகிறது.

13. உலகம் எனக்கு எத்தனை சிரமங்களை தந்தாலும், அதற்குப் பதிலாக எனது படுக்கையை இழக்கமாட்டேன் என்றான் நெப்போலியன்.

14. மகிழ்ச்சியைப் பற்றியே பேசுங்கள் ஏற்கெனவே உலகத்தில் நிரம்பியுள்ள கவலைகள் போதும், உங்களுடைய கவலைகளையும் அதில் கொட்டாதீர்கள்.

15. நல்லதையே செய்யுங்கள் இதன் மூலம் நீங்களும் மகிழ்ந்து மற்றவரையும் மகிழ்விக்கலாம்.

16. குடும்பத்தில் உற்சாகத்தைப் பரப்புங்கள் உங்கள் குழந்தைகள் ஆரோக்கியமாக வளர உங்கள் குடும்பத்தில் உற்சாகம் இருக்க வேண்டியது அவசியம்.

17. பூக்காத மரங்கள் காய்ப்பதில்லை கடவுள் நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்திக் கொண்டால் நீங்களும் பூக்கும் மரமாவீர்கள்.

18. நீங்கள் சிரித்தால் உலகம் உங்களுடன் சேர்ந்து சிரிக்கும், அழுதால் நீங்கள் மட்டும்தான் தனியாக அழவேண்டி வரும். உங்கள் மகிழ்ச்சியில் அக்கறை காட்டும் உலகம் ஒருபோதும் துன்பத்தில் அக்கறை காட்டாது.

19. நாள் பூராவும் பணியாற்றிய உடம்புக்கு ஓய்வு கொடுப்பது அவசியம், ஓய்வைப்போல மறுபடியும் சக்தி அளிக்கக் கூடியது எதுவும் இல்லை. ஓய்வு நரம்புகளை முறுக்கேற்றி மன அமைதியை ஏற்படுத்த மிகச் சிறந்த டானிக்காகும்.

20. ஓய்வு என்பது நமக்குக் கிடைத்துள்ள தனியான சலுகையாகும், நன்றி பாராட்டி அதை அனுபவிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.

21. ஓய்வெடுக்கத் தெரிந்தவன் நரகங்களை வென்றவனைவிட பெரியவனாகும் என்றார் பென்ஜமின் பிராங்கிளின்.

22. உலகம் முழுவதும் ஐம்பது வீதமான மக்கள் தூக்கம் இல்லாமல் அலைகிறார்கள் தொன் கணக்கில் தூக்க மாத்திரைகளை உற்பத்தி செய்ய வேண்டியிருக்கிறது. இவை எதுவுமே வேண்டியதில்லை உங்கள் இதயத்தை தூய்மையாக வைத்திருங்கள் தூக்கம் தானே வந்துவிடும்.

23. நேரம் கழித்து எழுந்திருப்பது கூட தூக்கமின்மைக்கு காரணமாகிவிடும். காலை ஆறு மணிக்கு மேல் தூங்குகின்ற பழக்கத்தை விடுங்கள், தூக்கமின்மையை தவிர்க்க அது நல்ல வழி.

24. இயற்கையாக ஒரு மனிதனுக்கு ஐந்து மணி நேரம் தூக்கம் போதும், பழக்கம் அதை ஏழு மணி நேரமாக்கியுள்ளது, சோம்பல் ஒன்பது மணியாக்கி, தீய பழக்கங்கள் அதை பதினொரு மணியாக உயர்த்திவிட்டது. எவ்வளவு நேரம் தூங்குகிறோம் என்பதல்ல எவ்வளவு ஆழமாக தூங்குகிறோம் என்பதே முக்கியம். பகலில் அரை மணி நேரம் தூங்குவது இரவில் மூன்று மணி நேரம் தூங்குவதற்கு சமம்.

நன்றி: அலைகள் பழமொழிகள்

[You must be registered and logged in to see this link.]
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum