தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


அடுத்தவர் மனதைப் புண்படுத்தினால் - திருக்குறள் கதைகள் #25

View previous topic View next topic Go down

அடுத்தவர் மனதைப் புண்படுத்தினால் - திருக்குறள் கதைகள் #25 Empty அடுத்தவர் மனதைப் புண்படுத்தினால் - திருக்குறள் கதைகள் #25

Post by ஸ்ரீராம் Mon Apr 08, 2013 9:54 am


நல்லூர் கிராமத்தைச் சேர்ந்த சிவபாலன் கருணை உள்ளம் கொண்டவன். பொறுமைசாலி. ஆனால் அவன் மனைவி அன்னபூரணி அவனுக்கு நேர் எதிர்.யாரையும் மதிக்க மாட்டாள். தன் கணவனுக்குக் கூட சரியாக உணவளிக்க மாட்டாள். கருமித்தனமும், சோம்பேறித்தனமும் நிறைந்தவள். ஆனாலும் அவளை சிவபாலன் அனுசரித்து காலம் தள்ளினான். ஒரு முறை வயதான பாட்டி ஒருவர் நல்லூர் கிராமத்தின் வழியாகச் சென்றார். பசியினால் ஒரு மரத்தடியில் சோர்ந்து அமர்ந்தார். இதைப் பார்த்த சிவபாலன், அவர் மீது இரக்கம் கொண்டு தன் வீட்டுக்கு அழைத்துச் சென்றான்.

தன் கணவனுடன் வயதான பாட்டி வருவதைக் கண்டு எரிச்சலடைந்த அன்னபூரணி, அவனைத் தனியே வீட்டுக்குள் அழைத்துச் சென்று கடுமையாக திட்டினாள். ஆனாலும் அவளிடம் கெஞ்சி சமாதானப்படுத்திய பிறகு, பாட்டியை சாப்பிடுமாறு சிவபாலன் அழைத்தான். உள்ளே நடந்ததை கேட்டுக் கொண்டிருந்த பாட்டி, பசியின் கொடுமையால் வேறு வழியில்லாமல் சாப்பிடச் சென்றார். அப்போது "ஏய் கிழவி, உட்கார்ந்து தொலை. சோறு போடுகிறேன், கொட்டிக்கொள்" என கடும் வார்த்தைகளை அள்ளி வீசினாள்.

இதைக் கேட்டு மனம் வெதும்பிய பாட்டி, சாப்பிடாமல் வெளியேறினார். அவரை சமாதானப்படுத்த பின்னாலேயே சென்ற சிவபாலனிடம், ஒரு யோசனையைக் கூறினார் பாட்டி. அதை ஏற்றுக்கொண்ட சிவபாலன், உடனே வீட்டுக்கு சென்று தான் துறவறம் செல்வதாகக் கூறி அனைத்து உடமைகளையும் எடுத்துக் கொண்டு புறப்பட்டான். அவனைத் தடுக்காத அன்னபூரணி, தன்னிடம் தேவையான நகைகள், பணம், தானியங்கள், இருப்பதால் கவலை இல்லை என இறுமாப்புடன் இருந்தாள்.

வேலைக்குச் சென்று சம்பாதித்துத் தந்த சிவபாலன் தற்போது இல்லாததால், வீட்டில் இருந்த பொருட்களைக் கொண்டு சமைத்து உண்டு வந்தாள் அன்னபூரணி. ஒரு நாள் இரவு வீட்டுக்குள் புகுந்த திருடன், அவளது நகைகள், பணம் மற்றும் நெல் மூட்டைகளை கொள்ளையடித்தனர். தனியாக இருந்ததால் அவர்களை எதிர்த்து அன்னபூரணியால் எதுவும் செய்ய முடியவில்லை. நாட்கள் செல்லச் செல்ல சாப்பாட்டுக்கு மிகுந்த சிரமப்பட்டாள். அவளது குணம் தெரிந்த அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள், ஒரு வாய் சோறு கூட போடாமல் சுடுசொற்களால் விரட்டியடித்தனர். இதே போல தானும் மற்றவர்களிடம் நடந்து கொண்ட போது அவர்கள் மனம் என்ன பாடுபடும் என்பதை உணர்ந்த அன்னபூரணி, தன் செயல்களுக்காக மனம் வருந்தி தனிமையில் அழுது புலம்பினாள்.

அப்போது திடீரென் அவள் முன் வந்த சிவபாலன், "கடும் வார்த்தைகளால் மற்றவர்களை புறக்கணிப்பதால் அவர்கள் மனம் புண்படுவதை நீ உணர வேண்டும் என்பதால் தான், துறவறம் செல்வது போல நடித்தேன். அதே போல, செல்வம் இருக்கும் மமதையில் யார் துணையும் வேண்டாம் என இருந்த உன்னுடைய செல்வங்கள் கொள்ளை போனதும் பழைய இறுமாப்புடன் உன்னால் இருக்க முடிந்ததா?" என அவளிடம் கேட்டான்.

தான் திருந்தி விட்டதாக தன் காலில் விழுந்த அன்னபூரணியிடம், களவு போன நகை, பணத்தைக் கொடுத்து, அவளுக்கு பாடம் கற்பிக்க தானே கொள்ளைக்காரன் வேடமணிந்து திருடிச் சென்றதாக தெரிவித்தான். அதன் பின் கணவனுடன் அன்பாக வாழத் தொடங்கிய அன்னபூரணி, பசி என்று வந்தவர்களுக்கு அறுசுவை உணவு படைத்து மகிழ்வித்தாள்.

திருவள்ளுவர் இதைதான் இப்படி சொல்கிறார்

மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து


விளக்கம்: முகர்ந்து பார்த்தாலே வாடி விடும் அளவுக்கு மென்மையானது அனிச்ச மலர். அது போல வீட்டுக்கு வந்த விருந்தினர்களைக் கண்டு முகம் சுளித்தால், அவர்களது மனம் உடனே புண்படும்.

நன்றி அம்புலிமாமா
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

அடுத்தவர் மனதைப் புண்படுத்தினால் - திருக்குறள் கதைகள் #25 Empty Re: அடுத்தவர் மனதைப் புண்படுத்தினால் - திருக்குறள் கதைகள் #25

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Apr 08, 2013 2:32 pm

விளக்கம்: முகர்ந்து பார்த்தாலே வாடி விடும் அளவுக்கு மென்மையானது அனிச்ச மலர். அது போல வீட்டுக்கு வந்த விருந்தினர்களைக் கண்டு முகம் சுளித்தால், அவர்களது மனம் உடனே புண்படும்.

சிறப்பான கதை...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

அடுத்தவர் மனதைப் புண்படுத்தினால் - திருக்குறள் கதைகள் #25 Empty Re: அடுத்தவர் மனதைப் புண்படுத்தினால் - திருக்குறள் கதைகள் #25

Post by முழுமுதலோன் Mon Apr 08, 2013 5:43 pm

அருமை
நாமெல்லாம் எப்போதும் விருந்தினர்களை அன்போடுதானே வரவேற்போம்!!
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

அடுத்தவர் மனதைப் புண்படுத்தினால் - திருக்குறள் கதைகள் #25 Empty Re: அடுத்தவர் மனதைப் புண்படுத்தினால் - திருக்குறள் கதைகள் #25

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum