தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஈரோடு தமிழன்பன் கவிதைகள்

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

ஈரோடு தமிழன்பன் கவிதைகள் Empty ஈரோடு தமிழன்பன் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Apr 24, 2013 8:29 am

நன்றி : ஈரோடு தமிழன்பன்

என்
தமிழனுக்குத்
திருவிழாத் தேதிகள் நினைவிருக்கும்
திதிநாள் பிறந்தநாள் நினைவிருக்கும்
திரும்பாத கடன்கள்
நிச்சயம் நினைவிருக்கும்
தாய்மொழி தமிழ்மட்டும்தான்
தவறியும்
நினைவில் இருப்பதில்லை
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ஈரோடு தமிழன்பன் கவிதைகள் Empty Re: ஈரோடு தமிழன்பன் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Apr 24, 2013 8:30 am

உள்ளங் கையில்
நிலாவை வைத்துக்கொண்டு
ஊரெல்லாம் திரிவான் தமிழன்
நட்சத்திரப் பிச்சை கேட்டு
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ஈரோடு தமிழன்பன் கவிதைகள் Empty Re: ஈரோடு தமிழன்பன் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Apr 24, 2013 8:31 am

தமிழ் செய்த
ஒரே ஒரு தவறு
அது
தமிழனுக்குத் தாய்மொழியானதுதான்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ஈரோடு தமிழன்பன் கவிதைகள் Empty Re: ஈரோடு தமிழன்பன் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Apr 24, 2013 8:32 am

“நதியைக்
கட்டவிழ்த்துவிடச் சொன்னோம்;
நாய்களைக்
கட்டவிழ்த்துவிட்டனர்.
ஒவ்வொரு
வெறியன் கண்களிலிருந்தும்
நூறு நூறு விரியன் பாம்புகள்.
வாளும் கையுமாய்,
கல்லும் கையுமாய்,
கடப்பாறையும் கையுமாய்
வெறியெடுத்த
கர்நாடக வெள்ளம்!
திடுக்கிட்ட
தீவுகளாய்த் தமிழர்”
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ஈரோடு தமிழன்பன் கவிதைகள் Empty Re: ஈரோடு தமிழன்பன் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Apr 24, 2013 8:32 am

மங்கையர்
இதழ்களில்
மிளகாயில் அல்வா
செய்யும் விதம்பற்றிய
குறிப்புகள் அல்ல...
வாலண்டைனா
வரலாறுகள் வர வேண்டாமா?
பருவப் பெண்களை
உறிஞ்சும்
பத்திரிகை அட்டைகளில்
ஈன்ஸ்டீன்
படம்
என்றைக்கு வருமோ
அன்றுதான்
கொச்சைப்பட்ட
அச்சு யந்திரங்களும்
நிச்சயம்
மகிழும்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ஈரோடு தமிழன்பன் கவிதைகள் Empty Re: ஈரோடு தமிழன்பன் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Apr 24, 2013 8:33 am

மாதர் தம்மை
இழிவு செய்யும் மடமையைக்
கொளுத்தென்றேன்...
நீங்களோ
மாதரையே கொளுத்துகிறீர்கள்!
கவிதை தந்ததற்குப்
பதிலாக-உங்களுக்குக்
காது கேட்கும்
கருவி நான் தந்திருக்கலாம்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ஈரோடு தமிழன்பன் கவிதைகள் Empty Re: ஈரோடு தமிழன்பன் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Apr 24, 2013 8:34 am

கைகளுக்கு
ஆயுதம் கேளுங்கள் பாரதி தருவான்
காதுக்கு ஜிமிக்கி கேட்க
அவனிடம் போகாதீர்கள்!
விழிப்பைக் கேளுங்கள்
கிழக்கைத் திறந்து வைப்பான்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ஈரோடு தமிழன்பன் கவிதைகள் Empty Re: ஈரோடு தமிழன்பன் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Apr 24, 2013 8:34 am

இடிகளின் கைகளில்
அதிகாரம் இருக்கும்போது நீங்கள்
தம்புராவின்
தங்கைகளாக இருக்கலாமா?
சீறும் கடலின் அலைகளிலிருந்து
முழக்கங்களைச் சேகரம் செய்யுங்கள்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ஈரோடு தமிழன்பன் கவிதைகள் Empty Re: ஈரோடு தமிழன்பன் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Apr 24, 2013 8:35 am

உங்கள்
துணிச்சலை...உங்கள்
உதடுகள் உச்சரிக்க வேண்டாம்
உடைந்து நொறுங்கும்
விலங்குகள் அதை
உரக்க முழங்க வேண்டுமே!
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ஈரோடு தமிழன்பன் கவிதைகள் Empty Re: ஈரோடு தமிழன்பன் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Apr 24, 2013 8:36 am

பெண்ணை மயில் என்றோம் - அவள்
ஆட்டத்தை அடக்கி விட்டோம்!
அவளைக் குயில் என்றோம்
பாட்டை முடக்கி விட்டோம்!
அவளை நிலவென்றோம்...
பிறைகளை அபகரித்தோம்...
பாரதி
பெண்ணைப் பெண்ணென்றான்
அவள்
பிறப்புக்கு அர்த்தம் கண்டான்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ஈரோடு தமிழன்பன் கவிதைகள் Empty Re: ஈரோடு தமிழன்பன் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Apr 24, 2013 8:37 am

நான் மட்டுமா வந்துள்ளேன்...
வந்திருக்கிறாள்
முப்பத்துமூன்று விழுக்காடு
தள்ளிப் போன
சோகத்தோடு
பாரத தேவியும் முழுசாக!
என்னோடுதான் வந்தாள்
என்றாலும், வண்டியில் கூட
இட ஒதுக்கீடு
கிடைக்கவில்லை
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ஈரோடு தமிழன்பன் கவிதைகள் Empty Re: ஈரோடு தமிழன்பன் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Apr 24, 2013 8:38 am

உன்
மணப்பந்தல் நினைவுகளுக்குப்
பாட்டுப்
பாலாபிஷேகம் புரிய
விரும்பவில்லை நான்
நீ எவனது படுக்கைக்கோ
போய்ச் சேராமல்
இருப்பதற்கு
ஒப்பாரி வைத்து எனது
வார்த்தைகளைக்
கிளிசரைனில்
முழுக்காட்ட ஒப்பாது
என் உள்ளம்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ஈரோடு தமிழன்பன் கவிதைகள் Empty Re: ஈரோடு தமிழன்பன் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Apr 24, 2013 8:39 am

சொத்துரிமைக்
காட்டேரி-உனது
கதவோரம்!-நீ
சன்னலின் வரதட்சணைக்
கொக்கியை
நீக்கினால்
சரி என்கிறாயா?
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ஈரோடு தமிழன்பன் கவிதைகள் Empty Re: ஈரோடு தமிழன்பன் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Apr 24, 2013 8:40 am

பெண்ணே
திசைகளில்
கோளாறு இருக்கிறது...
தேசப்படங்களைத்
திருத்திக் கொண்டிருப்பதால்
என்ன பயன்?
வரதட்சணை ஒழிப்பு...
வேர்களில் சீழ்பிடித்திருக்கும்போது
கிளைகள் மேல்
மருந்து தெளிக்கும்
கிறுக்குத்தனமே
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ஈரோடு தமிழன்பன் கவிதைகள் Empty Re: ஈரோடு தமிழன்பன் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Apr 24, 2013 8:40 am

மனைவியை நேசிப்பவர்
எந்தக் குக்கரில்
மனைவியை வேகவைக்கலாம்?
என்று கேட்டபடி
பெண்ணியம் பேசும் அறிவுஜீவி ஒருவர்
உதட்டையும் சன்னலையும்
ஒரே நேரத்தில் திறந்தார்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ஈரோடு தமிழன்பன் கவிதைகள் Empty Re: ஈரோடு தமிழன்பன் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Apr 24, 2013 8:41 am

தட்ட நான்
கை வைத்தபோது
சுட்டுக் கொண்டிருந்தது
கதவு மார்பு...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ஈரோடு தமிழன்பன் கவிதைகள் Empty Re: ஈரோடு தமிழன்பன் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Apr 24, 2013 8:42 am

எல்லோருக்கும்
இப்படி வினாக்களைத்
தயாரித்துக் கொடுத்த இரவு
எனக்கு
எந்த விடையையும்
தயாரித்துக் கொடுக்கவில்லை
வினாக்களுக்கும் விடைகளுக்கும்
வெளியே
இரவும் நானும் இருந்தோம் என்று சொல்
இருள்-
ஒரு கறுப்புப் பதிலை
என் காதில் முணுமுணுத்தது
எனினும்
எவர் நம்புபவர் இந்தப் பதிலைச்
சொன்னால்?
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ஈரோடு தமிழன்பன் கவிதைகள் Empty Re: ஈரோடு தமிழன்பன் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Apr 24, 2013 8:43 am

அவளைப்
பாத்திரம் கழுவவும்
துணிகள் துவைக்கவும்
பானையில் கொஞ்சம்
அரிசிகள் விதைக்கவும்
செய்யும்
நிர்பந்த நேரத்தில்,
அவள் சூரியர்களை
வறுமை
தின்று முடிக்கிறது
சாயம் போன
அவள் பாவாடைப் பூக்களிலும்
வடிகிறது சீழ்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ஈரோடு தமிழன்பன் கவிதைகள் Empty Re: ஈரோடு தமிழன்பன் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Apr 24, 2013 8:44 am

பள்ளிவாசல் இடிபடும் ஓசையில்
தஸ்பீக் மணிகள் உதிர
தாளம் பறிக்கப்பட்ட
ஊழிக் கூத்து,
சிவன் பாதங்களைக் கடித்து
தின்ன
விவிலியத்திலிருந்தும்
குருத்துவராக் கிரந்த ஓசையிலிருந்தும்
வெளியேறிக் கொண்டிருந்த
காயம்பட்ட கடவுளர்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ஈரோடு தமிழன்பன் கவிதைகள் Empty Re: ஈரோடு தமிழன்பன் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Apr 24, 2013 8:45 am

மதங்களின் மகுடங்களை உருக்கி,
மனங்களை திறக்கும்
சாவிகள் செய்வோம்!
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ஈரோடு தமிழன்பன் கவிதைகள் Empty Re: ஈரோடு தமிழன்பன் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Apr 24, 2013 8:45 am

தாய்க் குலத்துக்குத்
தனி மவுசு...
எவரெஸ்டுக்கும்
அவர்களது
உயரம் காண
அன்றைக்கு
ஏணி
தேவைப்படும்!
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ஈரோடு தமிழன்பன் கவிதைகள் Empty Re: ஈரோடு தமிழன்பன் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Apr 24, 2013 8:48 am

வாக்குச் சீட்டுக்கள்
ஒருநாள் ரொட்டிக்கு
டோக்கன் களாக...

செத்தவர்கள் எல்லோரும் கூட,
வாக்களித்துவிட்டுப் போகலாம்

உச்சியில்
மரணம், அவற்றின்
பொய்ம்மை நாக்கைப்
புறத்தே
தள்ளியது போலக்
கொடிகள்!

இனி, இனியேனும்
ஜனநாயகம்
கட்சிகளை
விவாகரத்து செய்துவிட்டு
ஜனங்களுக்கு
மாலை சூட்டட்டும்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ஈரோடு தமிழன்பன் கவிதைகள் Empty Re: ஈரோடு தமிழன்பன் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Apr 24, 2013 8:49 am

கல்வி எது? எதற்கு?
என்பதையெல்லாம்
அப்புறப்படுத்திய இவர்களின்
பை நிறையப் பாரம்!

சொந்த நாட்டிலேயே
சின்ன பிஞ்சுகளை
அந்நிய மனிதராய்
வேக வைத்து எடுக்க
உலை வைக்கும்
கொலைக் கூடங்களே

தேர்வுகளைவிட-இந்தத்
தேசத்தில்
வன்முறைச் சம்பவம்
எதுவும் கிடையாது
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ஈரோடு தமிழன்பன் கவிதைகள் Empty Re: ஈரோடு தமிழன்பன் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Apr 24, 2013 8:50 am

தேர்வை விடக்
கல்வியை இலட்சியமாய்க்
கருதியவன்
எழுத்தின் ஒளியில் நடப்பான்

கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ஈரோடு தமிழன்பன் கவிதைகள் Empty Re: ஈரோடு தமிழன்பன் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Apr 24, 2013 8:52 am

நாகசாகி ஈரோசிமா
அழிவுச் சின்னங்கள்
அல்ல...
அணுகுண்டு
நமது நெஞ்சில் திறந்த
இரண்டு கண்கள்!

துப்பாக்கிகளின்
இரும்பு உதடுகள்
உச்சரித்ததெல்லாம் போதும்

போர் நம்மை
ஒழிக்கும் முன்
போரைநாம் ஒழிப்போமா?
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ஈரோடு தமிழன்பன் கவிதைகள் Empty Re: ஈரோடு தமிழன்பன் கவிதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum