தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


யார் ஆம்பிளை!?

View previous topic View next topic Go down

யார் ஆம்பிளை!? Empty யார் ஆம்பிளை!?

Post by thamiliniyan Sun Apr 28, 2013 12:30 pm

காதுக்குள் கிணுகிணுத்ததது அலாரம்.புரண்டு அதன் மண்டையில் ஒரு தட்டுத்தட்டி அதன் வாயை அடைத்தேன்.இன்னும் கொஞசம் படுத்திரு என்றது என் சோம்பல்.உள்ள வேலைகள் கண் முன் விரிந்த போது தூக்கமும் சோம்பலும் தூர ஓடின.

போர்வையை உதறிய படியே கட்டிலை விட்டு எழுந்தேன்.பக்கத்தில் படுத்திருந்த கண்ணாவின் முகத்தில் அசதியும் அயர்ச்சியும் தெரிந்தன.விலகிக் கிடந்த போர்வையை இழுத்துப் போர்த்தி விட்டு மெதுவாக இறங்கினேன்.

சமையலறைக்குள் நுழைந்து லைட்டைப் போட்டேன்.நான் இரவே கழுவிக் கொழுவிய பாத்திரங்களும் கூட்டித் துடைத்த சமையலறையும் என்னுள் மிச்சமிருந்த சோம்பலையும் கலைத்து விரட்டியது.இதுவே போட்டது போட்ட படியே இருந்திருந்தால் சமையலறையுள் நுழைந்தவுடனேயே ஒரு அலுப்பும் சலிப்பும் ஏற்பட்டடிருக்கும்

மளமளவென்று குக்கரைப் பற்ற வைத்து காப்பிக்குத் தண்ணீர் வைத்தேன்.பாத்ரூமிற்குள் நுழைந்து பத்து நிமிடத்தில் புத்துணர்ச்சியுடன் வெளியில் வந்தேன்.

பக்கத்து வீட்டில் பாமா சமைலறையில் பாத்திரங்களுடன் மோதும்சத்தம் கேட்டது.பாவம் பாமா!?நேற்றிரவு அவள் கணவன் ரவி நன்றாகக் குடித்து விட்டு வீட்டிற்கு வரும் போது இரவு 10.00 மணி.பின்11.00 மணிவரை ஒரே அடியும் உதையும் ஏச்சும் பேச்சும் வாங்கிய பத்மா இதோ விடிய நான்கு மணிக்கு சமையலறையுள்.!ஏழு மணிக்கு முன் கணவனை வேலைக்கு அனுப்ப வேண்டுமே!

ஐயோ! அதே ஏழு மணிக்கு நானும் கிளம்ப வேண்டுமே! என்ற அவசரத்துடன் முகம் துடைத்து ,வந்து கொதித்துக் கொண்டிருந்த நீரில் காப்பி கலந்து நன்றாக ஆற்றி ஆறவைத்துக் கொண்டு சென்று கண்ணாவை எழுப்பினேன்.

"கண்ணா!கண்ணா! இந்தாங்க காப்பி. இத குடிச்சிட்டுப் படுங்க"என்ற எனது குரலின் அதிர்வில் புரண்டு,திரும்பி,எழுந்த கண்ணாவின் கைகளில் கோப்பையை வைத்தேன்.நன்றியுடன் என்னை நோக்கிய அந்தக் கண்களில் தென்பட்ட பரிவும் பாசமும் எனக்கு இன்னும் தெம்பூட்டியது.

"சனியனே! இந்தக்காலையிலேயே என்னைக் கொல்லப் போறியா!?இவ்வளவு சூடா எவன்டி காப்பி குடிப்பான்?"பக்கத்து வீட்டில் ரவியின் கூச்சல் அடங்க முன் பத்மாவின் வீறிடல் காதைப் பிளந்தது.சூடான காப்பியை அவள் மேல் வீசியிருப்பான்.

பதறி எழுந்த கண்ணாவை ஆசுவாசப் படுத்தி அடக்கி மீண்டும் படுக்கச் சொல்லி விட்டு மீண்டும் சமையலறைக்குள் நுழைந்தேன்.பர பரவென்று பம்பரமாய்ச் சுழன்று,ஓய்ந்து,நின்று,சற்று நேரத்தைப் பார்த்த போது அது ஐந்தரை ஆகிக் கொண்டிருந்தது.

இந்த ஒன்றேகால் மணி நேரத்தில்மேசையில் காலையுணவாக இடியப்பமும் முட்டைச்சொதியும்,
பகலுணவாக ஒரு கிழங்குப் பிரட்டலும் பருப்பும் ரசமும் சூடாக வாசனை பரப்பிக் கொண்டிருக்க ரைஸ் குக்கரில் சாதம் கொதித்துக் கொண்டிருக்க சமையலறையில் பாத்திரங்கள் பழைய படி கழுவிக் கொழுவித் தொங்க சமையலறையும் கூட்டித் துப்பரவானது.

பக்கத்து வீட்டில் பத்மாவின் விசும்பலும் பாத்திரங்களின் உருட்டலும் தொடர்ந்து கொண்டிருந்தன.

நான் மீண்டும் இரண்டு கோப்பைகளில் காப்பி ஊற்றிக் ஆற்றியெடுத்துக் கொண்டு பக்கத்து அறையில் படுத்திருந்த என் இரண்டு வாரிசுகளையும் நோக்கிச் சென்றேன்.கலைத்துப் போட்ட அழகிய ஓவியங்களாக கட்டிலில் கலைந்து கிடந்தனர் இருவரும்.இருவரையும் கொஞ்சிக்.கெஞ்சிக்,கூத்தாடி எழுப்பி காப்பியைக் கொடுத்தேன்.குடித்தவுடன் மீண்டும் கட்டிலில் சரிந்த அவர்களை உசுப்பி எழுப்பி பாத்ரூமுக்குள் விரட்டி எடுத்து இரவே அயர்ன் பண்ணிய சீருடைகளை எடுத்துக் கொடுக்கவும் கண்ணா அசதியுடன் எழும்பி வரவும் சரியாக இருந்தது.

பிள்ளைகளின் மிகுதி வேலைகளை கண்ணாவிடம் பொறுப்பளித்து விட்டு நான் மீண்டும் பாத்ரூமுக்குள் நழைந்து குளித்து முடித்து திரும்பி வர நேரம் ஆறைத் தொட்டு விட்டது.

பக்கத்து வீட்டில் பத்மா இப்போத பிள்ளைகளுடன் மல்லுக் கட்டும் சத்தம் கேட்டது.

"ஏன் பிள்ளைகள் என் உயிரை வாங்குறீங்க!?அப்பா தான் தினம் தினம் என்னை வதைச்சுக் கொல்லுறாறென்றால்! நீங்களுமா?சண்டை போடாமல் வெளிக்கிடுங்கள்"பத்மா பிள்ளைகளிடம் புலம்ப "பளார்" என்ற சத்தத்துடன் ரவியின் கூச்சல் கேட்டது."ஏன்டி உனக்கு எவ்வளவு திமிர் இருந்தால் என்னைப் பற்றி பிள்ளைகளிடம் குறை கூறுவாய்?"

பிள்ளைகளின் தலையை வாரிக கட்டிக் கொண்டிருந்த கண்ணா"பாவம் ராஜி பத்மா!கொஞ்சம் போய்ப் பார்ப்போமா?!?"என நான்"ரவியைப் பற்றித் தெரியும் தானே?காலையிலேயே நாம் அசிங்கப்பட வேண்டுமா?பேசாமல் வேலையைப் பாருங்கள்"என்றேன்.

மீண்டும் ரவியின் கூச்சல் கேட்டது."நான் ஆம்பளையடி.இப்படித்தான் இருப்பேன்.குடிப்பேன்.கூத்தடிப்பேன்.நீயார் அதக் கேட்க?உன் வேலை ஆக்கிப் போடுவதும் அடங்கிப் போவதும் தான்."பதிலாக பத்மாவின் விசும்பல் மட்டும் தான் கேட்டது.

கண்ணா என்னைப் பார்த்த பார்வையில் ஆயிரம் அர்த்தங்கள் மின்னின.

"உனக்கு ஆக்கிப் போடுறதுக்கும்,அடங்கிப் போடுறதுக்கும் நான் என்ன பொட்டையன்னு நெனச்சியா?"ரவியின் ஆவேச அதட்டலில் ஆம்பிளை ஆணவம் தாண்டவமாடியது.

'ஹ்ம் இந்த ரவி என்று திருந்தி பத்மாவிற்கு என்று நிம்மதி கிடைக்கப் போகுதோ!?' என்று எண்ணிய படியே மளமளவென்ற உடை மாற்றி,தலை சீவி,வெளிக்கிட்டு பகலுணவையும் கட்டியெடுத்துக் கொண்டு தயாராகி நின்ற பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு வாசலுக்கு வந்தேன்.

பிள்ளைகளை பாடசாலை வாகனத்தில் ஏற்றி விட்டு நான் எனது பஸ்ஸைப் பிடிக்க வேண்டும். கண்ணா வெளிக்கிட்டு பக்கத்தில் உள்ள பாடசாலைக்குப் போக இன்னும் நேரம் இருக்கிறது.

நாம் வாசலில் இறங்க எம்மோடு எம்பின்னே வந்த கண்ணா வாசலில் நின்று வழியனுப்ப பக்கத்து வீட்டிலிருந்து ரவியும் வெளியே வந்தான். எம்மைக் கண்ட ரவி என்னையும் வாசலில் நினற் கண்ணாவையும் பார்த்து விட்டு,

"பாருங்க ராஜசேகர் உங்கள் மனைவி கண்ணம்மாவிற்கும் இப்ப நான்கு மாதம் தானே ஆகுது?ஆனா உங்க மனைவிக்கிட்ட உள்ள சுறுசுறுப்பிலும் பொறுப்பிலும் கொஞ்சமாவது பத்மாகிட்ட இல்லையே!
நாங்க ஆம்பிளைங்க.நமக்கு முடியுமா பொம்பிளை மாதிரி காலையிலேயே எழும்பி சமைக்கவும் வீட்டு வேலைகளை செய்யவும்?நாங்க ஆம்பிளையா லட்சணமா இருந்தா தானே வெளியில் கௌரவமா நடமாட முடியும்.!?"

ரவியின் கேள்விக்கு நான் பதில்கூற முயலவில்லை.வாசலில் நின்ற என் கண்ணம்மாவினைத் திரும்பிப் பார்த்தேன்.அவளின் நான்கு மாத வயிறு என் ஆண்மைக்கு சாட்சி கூற அவளின் கண்களில் மின்னிய கண்ணீர் பனித்துளிகள் என் அணுசரணைக்கும் அரவணைப்பிற்கும் பெருமிதத்துடன் நன்றி கூறியது!

அவள் திரும்பி ரவியைப் பார்த்த பார்வையில் நீயா ஆம்பிளை என்ற கேள்வி தொங்கியது!!?

-தமிழினியன்-
கே.எம்.சீ.பிரபாகரன்
thamiliniyan
thamiliniyan
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 504

Back to top Go down

யார் ஆம்பிளை!? Empty Re: யார் ஆம்பிளை!?

Post by முழுமுதலோன் Sun Apr 28, 2013 2:33 pm

வீட்டுக்கு ஒருத்தர் உங்களை மாதிரி இருந்தால் போதும் பிரச்சனையே இருக்காது


கண்ணா என்னைப் பார்த்த பார்வையில் ஆயிரம் அர்த்தங்கள் மின்னின.

அவளின் நான்கு மாத வயிறு என் ஆண்மைக்கு சாட்சி கூற அவளின் கண்களில் மின்னிய கண்ணீர் பனித்துளிகள் என் அணுசரணைக்கும் அரவணைப்பிற்கும் பெருமிதத்துடன் நன்றி கூறியது!
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

யார் ஆம்பிளை!? Empty Re: யார் ஆம்பிளை!?

Post by thamiliniyan Sun Apr 28, 2013 6:45 pm

நீங்கள் ரவி தானே! நக்கல்
thamiliniyan
thamiliniyan
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 504

Back to top Go down

யார் ஆம்பிளை!? Empty Re: யார் ஆம்பிளை!?

Post by ரானுஜா Sun Apr 28, 2013 7:27 pm

நல்ல கதை

கொண்டவன் சரியா இருந்தா கூரை மேல ஏறிக் கூவலாம்
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

யார் ஆம்பிளை!? Empty Re: யார் ஆம்பிளை!?

Post by thamiliniyan Sun Apr 28, 2013 7:28 pm

நீங்களும் கூவ வாழ்த்துகிறேன்!!
thamiliniyan
thamiliniyan
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 504

Back to top Go down

யார் ஆம்பிளை!? Empty Re: யார் ஆம்பிளை!?

Post by ரானுஜா Sun Apr 28, 2013 7:31 pm

தமிழினியன் wrote:நீங்களும் கூவ வாழ்த்துகிறேன்!!
பயந்து ஓடு
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

யார் ஆம்பிளை!? Empty Re: யார் ஆம்பிளை!?

Post by thamiliniyan Sun Apr 28, 2013 7:42 pm

ஐயோ! இது என்ன கொடுமை!!!!!!ஏனிந்த தலை தெறித்த ஓட்டம்
thamiliniyan
thamiliniyan
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 504

Back to top Go down

யார் ஆம்பிளை!? Empty Re: யார் ஆம்பிளை!?

Post by ரானுஜா Sun Apr 28, 2013 7:46 pm

தமிழினியன் wrote:ஐயோ! இது என்ன கொடுமை!!!!!!ஏனிந்த தலை தெறித்த ஓட்டம்

சும்மா தான் காலைல ஜாக்கிங் போகல laugh
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

யார் ஆம்பிளை!? Empty Re: யார் ஆம்பிளை!?

Post by mohaideen Sun Apr 28, 2013 9:22 pm

நல்ல கதை
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

யார் ஆம்பிளை!? Empty Re: யார் ஆம்பிளை!?

Post by முரளிராஜா Mon Apr 29, 2013 7:43 am

கவிதை மட்டுமல்ல கதையிலும் கலக்குறிங்க தமிழினியன் கைதட்டல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

யார் ஆம்பிளை!? Empty Re: யார் ஆம்பிளை!?

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Apr 29, 2013 4:14 pm

"சனியனே! இந்தக்காலையிலேயே என்னைக் கொல்லப் போறியா!?இவ்வளவு சூடா எவன்டி காப்பி குடிப்பான்?"பக்கத்து வீட்டில் ரவியின் கூச்சல் அடங்க முன் பத்மாவின் வீறிடல் காதைப் பிளந்தது.சூடான காப்பியை அவள் மேல் வீசியிருப்பான்.

மனைவியின் பாசமும்... கணவனின் கோபமும்... கதை எப்படி நகர்கிறது பாருங்கள்...
கைதட்டல்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

யார் ஆம்பிளை!? Empty Re: யார் ஆம்பிளை!?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum