Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
முயன்றால் முழுமைப் பேறு அடையலாம். வளமோடு வாழலாம்.
Page 1 of 1 • Share
முயன்றால் முழுமைப் பேறு அடையலாம். வளமோடு வாழலாம்.
பசித்திரு, தனித்திரு, விழித்திரு!
அன்று புத்தரின் சீடர்கள் அனைவரும் ஆவலாய்க் காத்திருந்தார்கள். இன்று அருமையான சொற்பொழிவு இருக்கும் என்று! புத்தர் வந்து அமர்ந்தார். எதுவும் பேசவில்லை. ஒரு மணி நேரம் இப்படியே கழிந்து விட்டது.
சீடர்கள் சலிப்புற்றார்கள். அவர்கள் எதிர்பார்த்த அருள் உரை கிடைக்கவே யில்லை.
புத்தர் எல்லோரையும் ஊடுருவிப் பார்த்தார். அனைவரது முகங்களிலும் ஏமாற்றம், கோபம், சலிப்பு, வருத்தம் இவையே தென்பட்டன.
ஆனால் ஒருவரின் முகம் மட்டும் பூரண மலர்ச்சியோடு ஆனந்தமாய்க் காணப் பட்டது. அனந்தர் என்ற அந்த சீடரை அருகில் அழைத்தார் புத்தர். தனது கையி லிருந்த மலரைக் கொடுத்து ஆசிர்வதித்தார். மற்றவர்களுக்கு இந்தச் செய்கை கள் எதுவும் புரியவில்லை.
புத்தர் கூறினார். குழந்தைகளே! இதுவரை நான் அளித்த உபதேசங்களில் மிக வும் முக்கியமானது, இன்று இப்பொழுது கொடுத்த உபதேசம்தான். ஆம். அது மெüன உபதேசம். ஆனால் நீங்கள் உங்கள் காதுகளை மட்டும் தீட்டி வைத்தி ருந்தீர்கள். ஆனால் அனந்தர் ஞானப் பசி என்னும் வேட்கையோடு முழுவதும் தயார் நிலையில் இருந்தான். அதனால் நான் இன்று அளித்த மெüனோபதேசம் முழுமையாய்ச் சென்று அவனையடைந்தது. பசித்தவர் மட்டுமே புசிப்பர். ஆகை யால் பசியோடு இருங்கள் என்றார்.
தனித்திருத்தல் என்பது கூட்டத்திலிருந்து ஒதுங்கி வாழ்தல் அல்ல. நம்முடைய மனத்தை இறந்த காலத்திலும் எதிர்காலத்திலும் நிறுத்தாமல் நிகழ்காலத்தில் மட்டுமே வைத்திருப்பது தனித்திருத்தலுக்கு ஏதுவாகும்.
மனம் என்பது பலரது கருத்துகளின் தொகுப்பு. அனைத்துக் கருத்துகளும் வெளியிலிருந்து பெறப்பட்டவைதான். மனத்துக்கு சுயம் என்று எதுவும் இல்லை. மனத்தை எண்ணங்கள் தோன்றாதவாறு வைத்திருந்தால் சுயத் தன்மை தெரியும்.
மனத்தில் எப்போதும் ஓர் எண்ணம் தோன்றி, முடிந்து, மறு எண்ணம் வந்து கொண்டே இருக்கும். இந்த இரண்டுக்கும் இடைவெளி இருக்கும் அல்லவா? அதையே பிடித்துக் கொண்டு, அடுத்த எண்ணத்தை வர விடாமல் அந்த இடை வெளியை நீட்டித்துக் கொண்டே இருக்க வேண்டும். அப்படியிருந்தால், ஓர் உன்னதமான அனுபவம் கிடைக்கும். அதுதான் மெüனம் என்ற நிலை.இந்த மெüன நிலை, நம் செயல்பாடுகளில் ஒரு தெய்வீகத்தன்மையை உண்டு பண்ணிவிடும். பார்வையில் கருணை இருக்கும். அன்னியரும் அன்போடு அணுகுவர். தொடுதலில் ஒரு இதம் இருக்கும். ராமலிங்கர், ராமகிருஷ்ண பரமஹம்சர், ரமண மகரிஷி போன்ற மகான்கள் இப்படித் தனித்திருந்துதான் சமாதி நிலையை அடைந்தனர்.
விழித்திருத்தல் என்பது சுய உணர்வோடு இருத்தல். உணர்ச்சி வசப்பட்டு செய் யும் காரியங்கள், ஏதோ ஞாபகத்தில் செய்யும் காரியங்கள், அறியாமல் செய்து விடும் செயல்கள் ஆகியவை எதிர்விளைவுகளையே ஏற்படுத்தும். ஆனால் விழிப்புணர்வோடு செய்யும் செயல்கள் யாவும் விவேகத்தையும் வெற்றியை யும் கொடுக்கும்.
அமெரிக்க சொற் பொழிவுக்குப் பின், சுவாமி விவேகானந்தர் ஒரு கல்லூரிக்கு விஜயம் செய்திருந்தார். அப்பொழுது அந்த அமெரிக்க மாணவர்கள் துப்பாக்கிச் சுடும் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். ஆனால் குறி தவறிக் கொண்டே இருந்தது. இதை விவேகானந்தர் பார்த்துக் கொண்டே இருந்தார். அப்பொழுது ஒரு மாணவர் விவேகானந்தரைப் பார்த்து, மன ஒருமைப்பாடு பற்றிப் பேசினீர்களே! இப்பொழுது உங்கள் மனத்தை ஒருமைப்படுத்தி குறி தவறாமல் சுடுங்கள் பார்க்கலாம் என்று அவரைக் கேலி செய்தான். வாழ்க்கை யிலேயே முதன்முறையாக சுவாமி விவேகானந்தர் துப்பாக்கியை எடுத்தார். இரண்டு, மூன்று முறை சுட்டார். அனைத்துக் குண்டுகளும் குறி தவறாமல் இலக்கைச் சென்றடைந்தன. அந்த அமெரிக்க மாணவர்கள் மிகவும் ஆச்சரிய மடைந்தனர். அவர் செயலிலும் வீரர் என்பதைப் புரிந்து கொண்டனர். காரணம் விழிப்புணர்வு. நாம் செய்யும் அனைத்துச் செயல்களையும் விழிப்புணர்வோடு ஒரு சாட்சி போல் கவனிக்க வேண்டும். பசித்திருத்தல், தனித்திருத்தல், விழித் திருத்தல் -இது காலை, மாலை பத்து நிமிடம் செய்யும் தியானமல்ல. இரு பத்தி நான்கு மணி நேரமும் அந்த நிலையிலேயே வாழ்வது. இது ஒரு தவம். முயன்றால் முழுமைப் பேறு அடையலாம். வளமோடு வாழலாம்.
ரேவதி பாலு
மனவளக் கலை மன்றம்,
கோவை
அன்று புத்தரின் சீடர்கள் அனைவரும் ஆவலாய்க் காத்திருந்தார்கள். இன்று அருமையான சொற்பொழிவு இருக்கும் என்று! புத்தர் வந்து அமர்ந்தார். எதுவும் பேசவில்லை. ஒரு மணி நேரம் இப்படியே கழிந்து விட்டது.
சீடர்கள் சலிப்புற்றார்கள். அவர்கள் எதிர்பார்த்த அருள் உரை கிடைக்கவே யில்லை.
புத்தர் எல்லோரையும் ஊடுருவிப் பார்த்தார். அனைவரது முகங்களிலும் ஏமாற்றம், கோபம், சலிப்பு, வருத்தம் இவையே தென்பட்டன.
ஆனால் ஒருவரின் முகம் மட்டும் பூரண மலர்ச்சியோடு ஆனந்தமாய்க் காணப் பட்டது. அனந்தர் என்ற அந்த சீடரை அருகில் அழைத்தார் புத்தர். தனது கையி லிருந்த மலரைக் கொடுத்து ஆசிர்வதித்தார். மற்றவர்களுக்கு இந்தச் செய்கை கள் எதுவும் புரியவில்லை.
புத்தர் கூறினார். குழந்தைகளே! இதுவரை நான் அளித்த உபதேசங்களில் மிக வும் முக்கியமானது, இன்று இப்பொழுது கொடுத்த உபதேசம்தான். ஆம். அது மெüன உபதேசம். ஆனால் நீங்கள் உங்கள் காதுகளை மட்டும் தீட்டி வைத்தி ருந்தீர்கள். ஆனால் அனந்தர் ஞானப் பசி என்னும் வேட்கையோடு முழுவதும் தயார் நிலையில் இருந்தான். அதனால் நான் இன்று அளித்த மெüனோபதேசம் முழுமையாய்ச் சென்று அவனையடைந்தது. பசித்தவர் மட்டுமே புசிப்பர். ஆகை யால் பசியோடு இருங்கள் என்றார்.
தனித்திருத்தல் என்பது கூட்டத்திலிருந்து ஒதுங்கி வாழ்தல் அல்ல. நம்முடைய மனத்தை இறந்த காலத்திலும் எதிர்காலத்திலும் நிறுத்தாமல் நிகழ்காலத்தில் மட்டுமே வைத்திருப்பது தனித்திருத்தலுக்கு ஏதுவாகும்.
மனம் என்பது பலரது கருத்துகளின் தொகுப்பு. அனைத்துக் கருத்துகளும் வெளியிலிருந்து பெறப்பட்டவைதான். மனத்துக்கு சுயம் என்று எதுவும் இல்லை. மனத்தை எண்ணங்கள் தோன்றாதவாறு வைத்திருந்தால் சுயத் தன்மை தெரியும்.
மனத்தில் எப்போதும் ஓர் எண்ணம் தோன்றி, முடிந்து, மறு எண்ணம் வந்து கொண்டே இருக்கும். இந்த இரண்டுக்கும் இடைவெளி இருக்கும் அல்லவா? அதையே பிடித்துக் கொண்டு, அடுத்த எண்ணத்தை வர விடாமல் அந்த இடை வெளியை நீட்டித்துக் கொண்டே இருக்க வேண்டும். அப்படியிருந்தால், ஓர் உன்னதமான அனுபவம் கிடைக்கும். அதுதான் மெüனம் என்ற நிலை.இந்த மெüன நிலை, நம் செயல்பாடுகளில் ஒரு தெய்வீகத்தன்மையை உண்டு பண்ணிவிடும். பார்வையில் கருணை இருக்கும். அன்னியரும் அன்போடு அணுகுவர். தொடுதலில் ஒரு இதம் இருக்கும். ராமலிங்கர், ராமகிருஷ்ண பரமஹம்சர், ரமண மகரிஷி போன்ற மகான்கள் இப்படித் தனித்திருந்துதான் சமாதி நிலையை அடைந்தனர்.
விழித்திருத்தல் என்பது சுய உணர்வோடு இருத்தல். உணர்ச்சி வசப்பட்டு செய் யும் காரியங்கள், ஏதோ ஞாபகத்தில் செய்யும் காரியங்கள், அறியாமல் செய்து விடும் செயல்கள் ஆகியவை எதிர்விளைவுகளையே ஏற்படுத்தும். ஆனால் விழிப்புணர்வோடு செய்யும் செயல்கள் யாவும் விவேகத்தையும் வெற்றியை யும் கொடுக்கும்.
அமெரிக்க சொற் பொழிவுக்குப் பின், சுவாமி விவேகானந்தர் ஒரு கல்லூரிக்கு விஜயம் செய்திருந்தார். அப்பொழுது அந்த அமெரிக்க மாணவர்கள் துப்பாக்கிச் சுடும் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். ஆனால் குறி தவறிக் கொண்டே இருந்தது. இதை விவேகானந்தர் பார்த்துக் கொண்டே இருந்தார். அப்பொழுது ஒரு மாணவர் விவேகானந்தரைப் பார்த்து, மன ஒருமைப்பாடு பற்றிப் பேசினீர்களே! இப்பொழுது உங்கள் மனத்தை ஒருமைப்படுத்தி குறி தவறாமல் சுடுங்கள் பார்க்கலாம் என்று அவரைக் கேலி செய்தான். வாழ்க்கை யிலேயே முதன்முறையாக சுவாமி விவேகானந்தர் துப்பாக்கியை எடுத்தார். இரண்டு, மூன்று முறை சுட்டார். அனைத்துக் குண்டுகளும் குறி தவறாமல் இலக்கைச் சென்றடைந்தன. அந்த அமெரிக்க மாணவர்கள் மிகவும் ஆச்சரிய மடைந்தனர். அவர் செயலிலும் வீரர் என்பதைப் புரிந்து கொண்டனர். காரணம் விழிப்புணர்வு. நாம் செய்யும் அனைத்துச் செயல்களையும் விழிப்புணர்வோடு ஒரு சாட்சி போல் கவனிக்க வேண்டும். பசித்திருத்தல், தனித்திருத்தல், விழித் திருத்தல் -இது காலை, மாலை பத்து நிமிடம் செய்யும் தியானமல்ல. இரு பத்தி நான்கு மணி நேரமும் அந்த நிலையிலேயே வாழ்வது. இது ஒரு தவம். முயன்றால் முழுமைப் பேறு அடையலாம். வளமோடு வாழலாம்.
ரேவதி பாலு
மனவளக் கலை மன்றம்,
கோவை
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: முயன்றால் முழுமைப் பேறு அடையலாம். வளமோடு வாழலாம்.
மிக்க பயனுள்ள பகிர்வு
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» நெய்யை மறக்காமல் அளவோடு சாப்பிடுங்கள், வளமோடு வாழுங்கள்.
» அளவோடு உண்டு வளமோடு வாழ வந்தாச்சு கலோரி மெஷின்!
» முயன்றால் முடியாதென்றொன்றில்லை
» முயன்றால் உங்களால் முடியும்!
» குழந்தைப் பேறு கிடைக்குமா?
» அளவோடு உண்டு வளமோடு வாழ வந்தாச்சு கலோரி மெஷின்!
» முயன்றால் முடியாதென்றொன்றில்லை
» முயன்றால் உங்களால் முடியும்!
» குழந்தைப் பேறு கிடைக்குமா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|