தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


தமிழர் அன்று சொன்னவை அர்த்தமுள்ளவை

View previous topic View next topic Go down

தமிழர் அன்று சொன்னவை அர்த்தமுள்ளவை Empty தமிழர் அன்று சொன்னவை அர்த்தமுள்ளவை

Post by முழுமுதலோன் Sun May 05, 2013 4:39 pm

தமிழர் அன்று சொன்னவை அர்த்தமுள்ளவை

ஏன்? எதற்கு? எப்படி?

ஏன்? எதற்கு? எப்படி? – இப்படிப்பட்ட கேள்விகளை எழுப்பினால்தான் இதுதான், இப்படித்தான் என்று இதுவரை குறுகிய வட்டத்திற்குள் இருந்த நாம் வெளியேறிப் பரந்து விரிந்த உலகில் சிறகடித்துப் பறந்து, சித்த மருத்துவத்தினையும் சிறகடித்துப் பறக்கச் செய்யலாம்.

வினாக்களும், விடைத் தேடல்களுமே நம் அறிவினைப் புதுப்பிக்கும், பிரகாசமடையச் செய்யும் வழிமுறைகள் ஆகும். என் மனத்தில் உதயமான சில வினாக்களும் அவற்றிற்கான விடை தேடலில் கிடைத்த விடைகளும் சில.

1) தோல் நோய் உள்ளவர்கள் ஏன் முட்டை சாப்பிடக் கூடாது?

முட்டை வெண்கருவில் உள்ள அவிடின் (Avidine) என்ற புரத் (Protein) நம் வயிற்றில் குடல் நுண்ணுயிரிகளால் (Intestinal bacterial) உற்பத்திச் செய்யப்படும் பயோடின் (Biotin) என்ற உயிர்ச்சத்துடன் இணைந்து சிறு குடலில் உறிஞ்சப்படுவதைத் தடுக்கிறது. பயோடின் (Biotin) தோல் வளர்ச்சியிலும், இறந்த தோலை புதுப்பிப்பதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. எனவே இரத்தத்தில் பயோடின் (Biotin) என்ற உயிர்ச்சத்து குறைந்தால், தோல் நோய்கள் ஏற்படும். ஆகையால்தான் தோல்நோய் உள்ளவர்கள் முட்டை சாப்பிடக்கூடாது – ஆதாரம் : Bio Chemistry
2) பால் முட்டை வெண்கரு உலோக நஞ்சுகளை எவ்வாறு முறிக்கும்?
பால் முட்டை வெண்கரு ஆகியவைகளில் உள்ள அல்புமின் (Albumin) குளோபுலின் (Globulin) முதலிய புரதங்கள் உலோகங்களில் உள்ள கார்பாக்சில் கூட்டுப் பொருளுடன் (Carboxyl Group) இணைந்து உலோக புரதக் கூட்டுப் பொருளாக (Metal Proteinate) மாறி உலோகத் தன்மையை வீழ்படிவாக்கி நச்சுத்தன்மை பரவாது தடுக்கிறது.
3) நெல்லிக்காயும், நோய் எதிர்ப்புத் திறனும்
நெல்லிக்காயில் உயிர்ச்சத்து – சி (Vitamin C) அதிகமாக உள்ளது. உயிர்ச்சத்து – சி செல்களின் இனப்பெருக்கத்தில் (Cells Reproduction) முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் உயிர்ச்சத்து – சியில் ஆண்டி – ஆக்சிடன்ட் (Anti – Oxidant) தன்மை அதிகமாக உள்ளதால் நோய் வராமல் தடுக்கிறது. எனவே கற்ப மூலிகையாக கருதப்படுகிறது.
4) தேன் ஏன் துணை மருந்தாகக் கொடுக்கப்படுகிறது?
தேன் வயிற்றுப் பகுதியிலே உறிஞ்சப்படுகிறது. தேனுடன் சேர்ந்து சூரணங்களைக் கொடுக்கும்போது, மருந்தானது விரைவில் உறிஞ்சப்பட்டு இரத்தத்தில் கலக்கிறது. மேலும் தேனில் அதிக அளவு உயிர்ச்சத்து – சி உள்ளது. அது நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கச் செய்வதால், நோயும் குணமடைந்து, மீண்டும் நோய் ஏற்படாதவாறு உடல் உறுப்புகளைச் சீராக்குகிறது.

பதனீர் – தமிழகத்தின் குளிர்பானம்
அறுவடைக் காலம் முடிந்துவிட்டது. விளைந்த நெல்லை எல்லாம் அறுத்து சேர்த்தாகிவிட்டது. இனிமேல் என்ன செய்ய? அண்ணாந்து வானத்தைப் பார்க்கிறான் பாட்டாளி மகன். கொஞ்சம் கூட கருணையே இல்லாமல் கதிரவன் சுட்டெரிக்கிறான். அட... என்ன இது மழை நீரா? மேலே தெறித்த நீர்த்துளியை சுவைத்துப் பார்க்கிறான். ஒரே இனிப்பு. பச்சை ஓலையுடன் காட்சிதரும் பனையில் இருந்து வடிகிறது இனிப்பு.

நீர்... பதனீர்
ஆம் அதுதான் பதனீர் – இயற்கை அளித்த இன்சுவை பானம். பனை – தமிழனின் தனிப்பெருஞ் சொத்து, தமிழ் மண்ணுக்கென்று உள்ள பல சிறப்புகளில் தலை சிறந்தது பனை என்று சொன்னால் அது மிகையாகாது. தமிழகத்தில் மட்டும் மொத்தம் 5.01 கோடி பனை மரங்கள் உள்ளன. ஐந்து கோடி தமிழ் மக்களுக்கும் பங்கு வைத்தால் ஒவ்வொரு தமிழனுக்கும் ஒரு பனை மரம் கண்டிப்பாகக் கிடைக்கும்.
செம்மண், சரளை, மணல், கரிசல் என்ற மண் வேறுபாடுகள் இன்றி எல்லா மண்ணிலும் வளர்ந்து பலன் தரும் பனை தமிழனின் பரம்பரைச் சொத்து ஆகும். தமிழனின் மூளைச் சோம்பலுக்குச் சிறந்த எடுத்துக்காட்டு பனைமரம்.செயற்கை இரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள் ஆகியவைகளின் நச்சுக்கரங்களால் இன்னும் மாசுபடாமல் கொஞ்சம் பெருமிதத்துடன் வானளாவ வளர்ந்து நிற்கும் பனைமரத்தின் அனைத்துப் பாகங்களும் பலன் தந்து கற்பக மரமாக காட்சியளிக்கின்றன.

பனை – உடை – ஆடு
தொன்றுதொட்டு வறண்ட மணற் பகுதிகளில் மனிதனை வாழ வைத்தது – பனை – உடை – ஆடு என்ற ஒருங்கிணைந்த சூழ்நிலை இணைப்பே (Integrated Biological Chain) ஆகும். பனை குடிசை அமைக்க உதவியது. குடிசைத் தொழில் மூலம் கருப்பட்டி தயாரிக்க, பனை பதநீரைச் சுரந்தது. உடை இத்தொழிலுக்கு எரிபொருள் தந்தது; மற்றும் நெற்றுக்களை உதிர்த்து ஆடு வளர்க்க உதவியது; பனை, உடை ஆகிய மரங்களின் கீழ்ப் புற்களும் வளர்ந்து, ஆடுகளுக்குத் தீவனமாகியது. ஆடுகள் இந்த மரங்களுக்கு உரமிட்டன. பணத்தேவையை ஆடும், கருப்பட்டியும் பூர்த்தி செய்தன.இந்த அருமையான சுற்றுப்புறச் சூழல் சங்கிலியைச் சீமைக் கருவேல், வேலிக் கருவேல் ஆகியவை சிதைத்து விட்டன. வேலிக் கருவேலின் நிழலில் பனை வளருவதில்லை. ஆனால் நம் நாட்டின் பூர்வீக உடையான வெள்வேல் உடையின் நிழலில் பனை செழித்து வளரும்.

தென்னையை விதைத்தவன் தின்றுவிட்டுச் சாவான்.
பனையை விதைத்தவன் பார்த்துவிட்டுச் சாவான்.
இந்தப் பழமொழியைக் கூறியே, நம் மக்கள் பனை விதைப்பதைக் கைவிட்டு விட்டனர். ஆனால் உண்மை என்னவெனில் தென்னையை விதைப்பவன் நிறைய தேங்காய் கலந்த உணவுப் பொருட்களைத் தின்றுவிட்டு உடலில் கொழுப்புச் சத்து அதிகமாகிச் சாவான். பனையை விதைப்பவனோ, அதனுடைய நற்பலனால் தன்னுடைய சந்ததியர் வளமாக வாழ்வதை பார்த்துவிட்டு சாவான் என்பதே உண்மை.
பதனீரும், கள்ளும்சர்க்கரைப் பொருள் நிரம்பிய பதனீர் துரிதமாகப் புளித்து கள்ளாக மாறும் இயல்புடையது. பதனீர் சுரந்து 6 முதல் 8 மணி நேரத்திற்குள்ளேயே பதனீரில் ஆல்கஹால் தோன்றிவிடும். பின்னர்ப் படிப்படியாக ஆல்கஹாலின் அளவு 5% அதிகரித்து விடும். இதுவே போதை தரும் கள். இவ்விதம் கள்ளாக மாறுவது காற்றிலே மிதந்து கொண்டிருக்கும் ஈஸ்ட் பூசணங்களால் ஏற்படுகிறது. பதனீர் உடனுக்குடன் கள்ளாக மாறாமல் இருக்கவே, பதனீர் இருக்கும் பானையினுள் அடிக்கடி சுண்ணாம்பைத் தடவுகின்றனர்.பதனீரிலே எல்லாம் இருக்கிறதுஆண், பெண் ஆகிய இருபால் மரங்களிலும் பதனீர் சேகரிக்கலாம்.

தினசரி ஒரு மரம் 10-12 லிட்டர் பதனீர் சுரக்கும். நல்ல சூழ்நிலையில் 18 லிட்டர் வரை பதனீர் பெறலாம்.
250 மில்லி லிட்டர் பதனீரில்,
அமிலகார நிலை 7.2
மொத்த சர்க்கரைப் பொருள் 26.8 கிராம்
இரும்பு 5.5 மில்லி கிராம்
கால்சியம் 35.5 மில்லி கிராம்
பாஸ்பரஸ் 32.4 மில்லி கிராம்
தையமின் 82.3 மில்லி கிராம்
ரிபோஃபிளேவின் 44.4 மில்லி கிராம்
வைட்டமின் சி 12.2 மில்லி கிராம்
நிகோடினிக் அமிலம் 674.4 மில்லி கிராம்
புரதம் 47.7 மில்லி கிராம்
சக்தி 113.3 கலோரி

இவ்வாறு அனைத்து ஊட்டச் சத்துக்கள் நிரம்பிய பதனீர் ஒரு அருமையான பானமாகும். மெலிந்தோருக்குச் சிறந்த உரமாக்கி (Tonic) ஆகும். இலேசாகப் புளித்த கள் உடலுக்கு நன்மை பயப்பதாகும். இதில் நிறைய வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் உற்பத்தியாகி இருக்கும். எனவே அருந்துவோரிடம் வைட்டமின் பி பற்றாக் குறை தோன்றுவதில்லை.கோடைக் காலத்தில் தினந்தோறும் ¼ லிட்டர் முதல் ½ லிட்டர் வரை பதனீர் பருகி வர, உடலுக்கு மிகவும் நலம் பயப்பதுடன் கோடைக்கால நோய்கள் வராமலும் தடுக்கும்.
தோலின் வழியே எண்ணெய் உட்புகுமா?
சித்த மருத்துவர்கள் பலரிடமும் இக்கேள்வி கேட்கப்படுகின்றது. அதற்குப் பிரபல மருத்துவ அறிஞர் பியோதர்ஸ் லைன்கோ கூற்று பதில் கூறும்.‘‘சில குறிப்பிட்ட சமயங்களில் தோலின் வழியே பொருட்கள் உள்ளே செல்ல முடியும். சில சந்தர்ப்பங்களில் தோல் அதைச் சுற்றியுள்ள காற்று, திரவங்களிலிருந்து கரைசல்களையும், பால்மங்களையும் தொங்கு கரைசல்களையும் விரும்பி உள்ளே இழுத்துக் கொள்ளும்.’’

ஒன்பது கோள்களின் தத்துவம்
நம் உடலின் ஒவ்வொரு உறுப்பினையும் ஒவ்வொரு கோள்களுடன் ஒப்பிடலாம்.
ஞாயிறு - தமரகம்
திங்கள் - மூளை
செவ்வாய் - குருதி
புதன் -புப்புசம்
வியாழன் - ஈரல்
வெள்ளி - சல, சனன உறுப்புகள்
சனி - எலும்பு
ராகு - கைகள்
கேது - கால்கள்

முன்னோர்களின் நீண்ட ஆயுள் இரகசியம் மனிதனின் உண்மையான ஆயுட்காலம் 300 ஆண்டுகள். பழங்கால மனிதர்கள் சுமார் 300 ஆண்டுகள் வாழ்ந்ததாக ‘‘பைபிள்’’ போன்ற புனித நூல்களில் கூறப்படுகின்றன. எவற்றிற்கும் விலங்குகளை வைத்து ஆய்வு செய்யும் நவீன மருத்துவத்தின் வழிமுறைப்படியே, வாழ்நாள் ஆய்விலும் விலங்குகளை வைத்து செய்யப்பட்ட ஓர் ஆய்வினை நாம் கண்ணுற்றால் ஒரு பேருண்மை புலனாகும்.சமைக்காத, இயற்கையாகக் கிடைக்கும் பச்சை உணவுகளை உண்டு வாழும் முயல் இனத்தில், முயல்குட்டி பிறந்த 3 மாதத்தில் பருவத்திற்கு வந்து குட்டிபோட ஆரம்பிக்கிறது. அதன் ஆயுள் சுமார் 60 மாதங்கள் 20x3=60 மாதம் = 5 வருடங்கள்) பிறந்த ஒரு ஆட்டுக்குட்டி 6 மாதத்தில் வயதிற்கு வந்து குட்டி போடும். அதன் ஆயுள் சுமார் 10 ஆண்டுகள் (20x6=120 மாதம்) ஒரு பசுமாட்டின் கன்று பிறந்து 1 வருடத்தில் பருவம் எய்தி கன்று போடும். அதன் ஆயுள் சுமார் 20 வருடங்கள் (20x1=20 வருடம்) இவ்வகையில் 15 வயதில் பருவம் எய்தி குழந்தை பெறத் தயாராகும் மனித இனம், அதைப்போலவே 20 மடங்கு அதாவது 20x15=300 ஆண்டுகள் உயிர்வாழ வேண்டும். இதுதான் இயற்கை நியதி. இந்த நீண்ட ஆயுளுக்குக் காரணம் அவர்களது இயற்கையோடு இயைந்த வாழ்வும், உணவாக காய்கறிகள், கீரைகள், பழங்கள் இவைகளை இயல்புநிலை மாறாமல் (அ) ஆவியில் வேகவைத்து உண்பதால் இருக்கலாம். திருமூலர் கி.பி. தல் நூற்றாண்டுமுதல் 5-ம் நூற்றாண்டு வரை வாழ்ந்ததாக சரித்திரச் சான்றுகள் உள்ளன.வேகவைத்த, தாளித்த, வறுத்த உணவுகளை உண்ண ஆரம்பித்தால் ஆயுள் குறையும். சுற்றுச்சூழல் மாசுபாடுகளால் சுத்தமான காற்றும், சுத்தமான குடிநீரும் கிடைக்காமல் மேலும் ஆயுள் குறைகிறது. தவிர புகை, மது போன்ற போதைகளில் ஈடுபட, ஈடுபட ஆயுள் மேலும் குறையும். இன்று நமது ஆயுட்காலம் பெரும்பாலும் 100 வயதுக்குக் கீழேதான் என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். ‘‘ஊனுடம்பு ஆலயம்’’ என்று இவ்வுடம்பைப் பற்றிக் கூறிய பெருமை உலகளவில் தமிழனுக்கு மட்டுமே உண்டு. இது உலகிலுள்ள 600 கோடி மக்களுக்கும் மாறாத உண்மை. இவ்வுடம்பு இயற்கை நமக்களித்த வரப்பிரசாதம். இதை உணர்ந்து நோயற்று நீண்ட ஆயுளுடன் நம்மாலும் வாழ முடியும். இதற்கு உதவுவதுதான் இந்த ‘‘குடலைக் கழுவி உடலை வளர்க்கும் முறை.’’

மறந்து போன மருத்துவ முறை – அட்டை விடல்

சித்த மருத்துவத்தின் முன்னோடிகளான சித்தர்கள் நமக்கு விட்டுச் சென்ற வியக்கத்தக்க மருத்துவ முறைகள் பல ஆகும். அவற்றில் சிறப்பான பல முறைகள் பயன்படுத்தப்படாமல், மறைக்கப்பட்டோ, மறக்கப்பட்டோ அழிக்கப்பட்டோ விட்டன. சில மருத்துவ முறைகள் அயல் நாட்டினரால் எடுத்துச் செல்லப்பட்டு வேறு விதத்தில் வளர்ச்சியும் பெற்றுள்ளன. இதில் சிறந்த முறையான, சித்த மருத்துவத்தின் இராட்சச சிகிச்சையின் கீழ் கூறப்பட்ட அட்டைவிடல் மருத்துவத்திறனைப் பற்றி சித்தர் நூல்களின் கூறப்பட்டதும், இன்றைய உலகில் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதைப் பற்றியும் இக்கட்டுரையில் காணலாம்.

மேலும் அட்டை விடல் மருத்துவத்தைச் சிறந்த முறையில் பயன்படுத்துவதற்கான வழியையும் காண்போம்.மாறிவரும் இன்றைய நவீன உலகில் இத்தகைய முறைகளைப் பின்பற்ற மகக்ள் முன்வராமையும், இவைகளைப் பற்றி மருத்துவர்களிடையே போதிய அறிவும், அனுபவமின்மையும், மேற்குறிப்பிட்ட முறைகள் வளர்ச்சி அடையாமல் அழிவதற்குக் காரணமாக அமைகின்றன. எனவே இத்தகைய முறைகளைத் தற்போதைய உலகிற்குத் தகுந்தவாறு எளிமையாக்கி, நவீன முறையில் பயன்படுத்துவதன் மூலமாக மக்களிடையே நிலவும் ஐயத்தினைப் போக்கி, சித்த மருத்துவத்தின் அறுவை மருத்துவத் துறையில் ஒரு மாபெரும் புரட்சியை ஏற்படுத்த முடியம்.

http://esiddhar.blogspot.in/
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தமிழர் அன்று சொன்னவை அர்த்தமுள்ளவை Empty Re: தமிழர் அன்று சொன்னவை அர்த்தமுள்ளவை

Post by ஸ்ரீராம் Wed May 08, 2013 3:00 pm

மிகவும் பயனுள்ள பகிர்வுக்கு நன்றி அண்ணா
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

தமிழர் அன்று சொன்னவை அர்த்தமுள்ளவை Empty Re: தமிழர் அன்று சொன்னவை அர்த்தமுள்ளவை

Post by கவியருவி ம. ரமேஷ் Wed May 08, 2013 10:36 pm

நீர்... பதனீர்
ஆம் அதுதான் பதனீர் – இயற்கை அளித்த இன்சுவை பானம். பனை – தமிழனின் தனிப்பெருஞ் சொத்து, தமிழ் மண்ணுக்கென்று உள்ள பல சிறப்புகளில் தலை சிறந்தது பனை என்று சொன்னால் அது மிகையாகாது. தமிழகத்தில் மட்டும் மொத்தம் 5.01 கோடி பனை மரங்கள் உள்ளன. ஐந்து கோடி தமிழ் மக்களுக்கும் பங்கு வைத்தால் ஒவ்வொரு தமிழனுக்கும் ஒரு பனை மரம் கண்டிப்பாகக் கிடைக்கும்.

டாஸ்மாக்கால் இது தடைபட்டுப்போனதுதான் வருத்தம்... ஆந்திரா பக்கம் நிறைய கிடைக்கிறது...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

தமிழர் அன்று சொன்னவை அர்த்தமுள்ளவை Empty Re: தமிழர் அன்று சொன்னவை அர்த்தமுள்ளவை

Post by கவிப்புயல் இனியவன் Thu May 09, 2013 10:03 am

இதுபோல் ஞாயிறு -கோதுமை
திங்கள் - அரிசிச்சாதம்
செவவாய் - உழுந்து
புதன் - பாசிப்பயறு ..
வியாழன் - கடலை
வெள்ளி -மொச்சை
சனி - எள்ளு சாப்பிட்டால் ..வளமான வாழ்க்கை அமையும்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழர் அன்று சொன்னவை அர்த்தமுள்ளவை Empty Re: தமிழர் அன்று சொன்னவை அர்த்தமுள்ளவை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum