தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கனவில் ஓர் கோடை விடுமுறை...

View previous topic View next topic Go down

கனவில் ஓர் கோடை விடுமுறை... Empty கனவில் ஓர் கோடை விடுமுறை...

Post by ஓசூர் பார்கவ் Tue May 07, 2013 1:55 pm

ராசுவுக்கு முழு ஆண்டு பரீட்சை ஆரமித்து இரண்டு நாட்கள் ஆகியிருந்தன...

அம்மா... என்னிக்கு மா கடைசி பரீட்சை? என்றான்... இன்னும் நான்கு பாடம் ஆன பிறகு என்றாள் அவன் அம்மா.

பரீட்சை முடிஞ்ச அன்னிக்கே நம்ம ஊருக்கு கிளம்பிடுவோம் தானே?
என்றான் ஆர்வமாக...
அதை பத்தி இப்போ என்ன...
இன்னும் நாலு நாள் இருக்கு அதுக்கு...
நாளைய பரீட்சைக்கு இப்போ ஒழுங்கா படி என்றால் சின்ன அதட்டலாக...

அழுக்கு தாடி.. அழுக்கு தாடி...
தொண்டு செய்து பழுத்த பழம்,
அழுக்கு தாடி மார்பில் விழும் என்று கத்த...

தப்பு தப்பா படிக்காத, ஒழுங்கா படி என்றாள் அவன் அம்மா.

அப்படின்னா சொல்லுங்க மா... பரிட்சை முடிஞ்ச அன்னிக்கே ஊருக்கு போவோம் தானே என கேட்டான் மீண்டும்...

ஆமா.. இதோட இன்னிக்கு மட்டுமே பல தடவ கேட்டுட்டே...
பாடத்தில் கவனம் செலுத்தி படி, இன்னும் நாலு நாள்ல ஊருக்கு போகபோறோம் என்றாள் அம்மா..

உற்சாகமான ராசு, வேகமாக படித்தான்

தொண்டு செய்து பழுத்தபழம்
தூய தாடி மார்பில் விழும்
மண்டை சுரப்பை உலகுதொழும்
மனக்குகையில் சிறுத்தைஎழும் .. குர்ர்ர்.. குர்ர்ர்.... (உற்சாகத்தில் சிறுத்தை ஆனான் லொள்ளு )
அவர்தாம் பெரியார்
பார் அவர்தாம் பெரியார்.

இப்படியாக அடுத்த நான்கு நாளும் ஊருக்கு போவதை பற்றிய நினைப்புக்கு நடுவிலேயே பரிட்சைகளை முடித்தான்...

கடைசி பரீட்சை முடிந்து வீட்டுக்கு வந்த உடன், அம்மா... போலாமா... எப்போ கிளம்ப போறோம்.. எப்போ கிளம்ப போறோம் என்று நச்ச்சரித்துக்கொண்டிருந்தான் ராசு... அப்பா வேலையிலிருந்து வந்தவுடன் கிளம்பவேண்டியதுதான் என்றாள் அவன் அம்மா...

அப்படின்னா... அப்பா எத்தனை மணிக்கு வருவார் என்றான் மீண்டும்...
இதோ பாரு.. வெளிய போய் உன் நண்பர்களோடு விளையாடு நானே கூப்படறேன் என்றாள் அம்மா...

'பீனெபீனிக்' 'பீனெமீனிக்' என்று வண்டி ஹாரன் அடிப்பதுபோல சமிக்ஞை மூலம் தனது நண்பர்களை அழைத்தான். மூன்று, நான்கு வீடுகளிலிருந்து பதிலுக்கு 'பீனெபீனிக்' 'பீனெமீனிக்' என்று சத்தம் வந்தது... அனைவரும் வெளியே வர... சைக்கிள் டயர், குச்சி எடுத்துக்கொண்டு விளையாட கிளம்பினார்கள் .

மாலை ஏழு மணிக்கு ஓசூரிலிருந்து மன்னார்குடிக்கு புறப்பட்டு சென்றனர். தங்கையுடன் ஜன்னல் இருக்கைக்கு சண்டை போட்டு, தங்கை விட்டுக் கொடுத்ததால் குஷியாகி நீயும் வேடிக்கை பாரு... என்று ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்துக்கொண்டே தூங்கினான்.

காலை கண் முழித்தபோது பேருந்து தஞ்சை பேருந்து நிலையத்தில் இருந்தது... அப்பா... இன்னும் எவ்ளோ நேரம்.. என்று தூங்கிக்கொண்டிருந்த அப்பாவை எழுப்பினான்... சொல்லுப்பா.. இன்னும் எவ்ளோ நேரம்....
இன்னும் ஒரு மணிநேரம் என்றார் அவன் அப்பா...
ரொம்ப ஜாலி ஐ... இன்னும் ஒரு மணிநேரம் தானா .. ஜாலி... ரொம்ப ஜாலி என்று குதுகலித்து திரும்ப தூங்கிவிட்டான்...

ருக்மணி குளம் தாண்டியது தான் தாமதம்... மன்னை வந்தாச்சு என்று குதூகலித்து ஆர்ப்பாட்டம் செய்துக்கொண்டே மாமா இல்லம் அடைந்தனர்... நாகைப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூரிலிருந்து மற்ற மாமா, பெரியம்மா அவர்களின் பசங்களெல்லாம் முழு ஆண்டு விடுமுறைக்காக அங்கு வந்திருந்தனர்... அடுத்த ஒரு மாதம் அவிழ்த்து விட்ட கழுதைதான் என்று ராசுவின் அம்மா அவனைப் பார்த்து சொல்ல... அவன் ஏற்கனவே கொளுத்தும் வெயிலிலும் மகிழ்ச்சியில் மூழ்கியிருந்தான்...

வீதியே அமர்க்களப் படும்படியாக அக்கம் பக்கத்து வீட்டு சிறுவர்கள் உட்பட ஒரு கூட்டமே சேர்ந்து ஐஸ் பாய்(கண்ணாமூச்சி), ஓட்டப்பந்தயம், பாண்டி, அந்தாக்ஷரி, திருடன் போலீஸ் மற்றும் அவரவர் ஊர்களில் தாம் விளையாடும் விளையாட்டுக்களை மற்றவர்களுக்கு சொல்லிக்கொடுத்து புதிது புதிதாக விளையாடி அன்பை பரிமாறிக்கொண்டு கோடை விடுமுறையை குதூகலமாக கழித்துக்கொண்டிருந்தனர்... கொண்டாட்டம்

ஒரு மாதம் போனதே தெரியாமல் முடிந்துவிட்டது, இரண்டு நாட்களில் புது வகுப்பு தொடங்கவுள்ளது... அன்று மாலை மீண்டும் ஊருக்கு செல்ல வேண்டும்... நாளைக்கு போகலாம்.. நாளைக்கு போகலாம் என்று அழுதுக்கொண்டே ஊருக்கு கிளம்பினான். கண்ணீர் வடி
ஊருக்கு வரும்போது நான் ஜன்னல் இருக்கைல உட்கார்ந்தேன் தானே இப்போ நீ உட்காரு என்று தங்கைக்கு இருக்கையை குடுத்துவிட்டு தூங்கிவிட்டான். நண்பேன்டா

'தூங்காதே தம்பி தூங்காதே, நீ சோம்பேறி என்ற பெயர் வாங்காதே.. தூங்கா...' என்று தனது கைப்பேசியில் Missed call வர... அரை தூக்கத்திலிருந்து எழுந்தவனுக்கு ஒரு கணம் ஒன்னும் புரியவில்லை... முழித்தல்

மீண்டும் 'தூங்...' என்று ஆரமிப்பதர்க்கு முன்பே அழைப்பு Cut ஆக, எந்த நாதாரிடா அது... கோபம்

தூங்கும்போது Missed call குடுக்கறது என்று திட்டிக்கொண்டே இவன் அந்த எண்ணிற்கு அழைத்தான்,

Hello யாருங்க பேசறது? என்று கடுப்பாக...

'நான் தாம்பா... சந்தீப்... உன் மேனேஜர்.. இது என் புது number.. சரி... சனி, ஞாயிறு
சேர்த்து மூணு நாள் Leaveல போயிருந்தியே... இனிக்கு வேலைக்கு வரத்தானே, என்று கேட்கத்தான் phone பண்ணேன்' என்றார்.

Phone நான் பண்ணேன் சார்... நீங்க Missed call தான் குடுத்தீங்க... laugh
எல்லாம் நேரத்துக்கு வருவேன்.. இப்போ Bus ல இருக்கேன்.. நான் அப்றோம்
கூப்புடறேன் என்று அழைப்பை துண்டித்தான்.

ச்சே.. காலங்கார்த்தால இவனுங்க வேற.... என்று அங்கலாயித்துக்கொண்டு...
அவ்வளவு நேரம் தான், தனது நான்காம் வகுப்பு முழு ஆண்டு லீவு பற்றி கனவு கண்டுகொண்டிருந்ததை உணர்ந்து... சோம்பல் முறித்துக் கொண்டே முன் இருக்கையில் கை வைத்து ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்தான்.. பேருந்து கிருஷ்ணகிரி பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தது...

முன் இருக்கையில் ஒரு சிறுவன்..

அப்பா ஓசூர் எப்போ பா வரும்.. சொல்லுங்கப்பா.. ஓசூர் எப்போ பா வரும் என்று தூங்கிக்கொண்டிருந்தவரை எழுப்ப... இன்னும் ஒரு மணி நேரம் என்று சொன்னதை கேட்டு, ரொம்ப ஜாலி ஐ .. இன்னும் ஒரு மணி நேரம் தானா ஜாலி... என்று குஷியானத்தை கண்டு புன்முறுவல் செய்தான் ராசு புன்முறுவல் .

கனவில் ஓர் கோடை விடுமுறை... KOKV
ஓசூர் பார்கவ்
ஓசூர் பார்கவ்
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 57

http://www.karutthukkalam.com

Back to top Go down

கனவில் ஓர் கோடை விடுமுறை... Empty Re: கனவில் ஓர் கோடை விடுமுறை...

Post by முரளிராஜா Tue May 07, 2013 1:58 pm

இவரை போன்றே நாம் ஒவ்வொருவரும் நம் பால்ய கால விடுமுறைகளை சந்தோசமாக கழித்த காலங்களை அவ்வப்பொழுது நினைத்துக்கொண்டுதான் இருக்கிறோம்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

கனவில் ஓர் கோடை விடுமுறை... Empty Re: கனவில் ஓர் கோடை விடுமுறை...

Post by கவியருவி ம. ரமேஷ் Tue May 07, 2013 2:16 pm

தப்பு தப்பா படிக்காத, ஒழுங்கா படி என்றாள் அவன் அம்மா.

கண்டிப்பும் குழந்தைகளின் ஆர்வமும்... நடப்பியலைக் காட்டுகின்றன... நல்ல கதைக்களம்... பாராட்டுகள் நண்பரே... கைதட்டல் கைதட்டல்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கனவில் ஓர் கோடை விடுமுறை... Empty Re: கனவில் ஓர் கோடை விடுமுறை...

Post by ஓசூர் பார்கவ் Tue May 07, 2013 4:27 pm

தங்கள் இருவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் புன்முறுவல்
ஓசூர் பார்கவ்
ஓசூர் பார்கவ்
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 57

http://www.karutthukkalam.com

Back to top Go down

கனவில் ஓர் கோடை விடுமுறை... Empty Re: கனவில் ஓர் கோடை விடுமுறை...

Post by மகா பிரபு Tue May 07, 2013 8:04 pm

நானும் சிறு வயதை தாண்டி இப்ப ........
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

கனவில் ஓர் கோடை விடுமுறை... Empty Re: கனவில் ஓர் கோடை விடுமுறை...

Post by ஸ்ரீராம் Tue May 07, 2013 8:12 pm

மிக அருமையான சிறுகதை... என்னை எனக்கு நினைவு படுத்துகிறது....

அந்த நாள் ஞாபகம் வந்தது நெஞ்சிலே........... நண்பேன்டா
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

கனவில் ஓர் கோடை விடுமுறை... Empty Re: கனவில் ஓர் கோடை விடுமுறை...

Post by ஓசூர் பார்கவ் Tue May 07, 2013 8:22 pm

மகா பிரபு wrote:நானும் சிறு வயதை தாண்டி இப்ப ........

இப்ப ...? முழுசா சொல்லலைனா பக்குன்னு இருக்குல!!! நக்கல்
ஓசூர் பார்கவ்
ஓசூர் பார்கவ்
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 57

http://www.karutthukkalam.com

Back to top Go down

கனவில் ஓர் கோடை விடுமுறை... Empty Re: கனவில் ஓர் கோடை விடுமுறை...

Post by ஓசூர் பார்கவ் Tue May 07, 2013 8:25 pm

ஸ்ரீராம் wrote:மிக அருமையான சிறுகதை... என்னை எனக்கு நினைவு படுத்துகிறது....

அந்த நாள் ஞாபகம் வந்தது நெஞ்சிலே........... நண்பேன்டா
நன்றி நண்பரே புன்முறுவல்

(அப்படியே நன்றி தெரிவிக்கும் படியான ஒரு 'சிரிப்பான் உருவம்' இணைத்தால் அனைவரும் உபயோகப்படுத்த ஏதுவாக இருக்கும்!)
ஓசூர் பார்கவ்
ஓசூர் பார்கவ்
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 57

http://www.karutthukkalam.com

Back to top Go down

கனவில் ஓர் கோடை விடுமுறை... Empty Re: கனவில் ஓர் கோடை விடுமுறை...

Post by கவியருவி ம. ரமேஷ் Tue May 07, 2013 10:51 pm

தேடி கண்டுபிடித்து இணைத்துவிடுவார்கள்... சீக்கிரம் வந்துவிடும் பாருங்கள்...

கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கனவில் ஓர் கோடை விடுமுறை... Empty Re: கனவில் ஓர் கோடை விடுமுறை...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum