தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


இன்னும் அதிகமாக கேள்!

View previous topic View next topic Go down

இன்னும் அதிகமாக கேள்! Empty இன்னும் அதிகமாக கேள்!

Post by ராஜா Tue May 07, 2013 3:40 pm

இன்னும் அதிகமாக கேள்! E_1367482468

பட்டியாலா என்ற சிற்றூரில் வரதன் என்றொரு ஏழை உழவன் இருந்தான். அவன் நாள்தோறும் ஏரிக்கரை வழியாகத் தன் வயலுக்கு செல்வான். அந்த ஏரிக்கரையில், நிறைய மீன்கள் இருக்கும். அவைகள் பசியால் வாடுமே என்று வருந்தினான். தான் எடுத்துச் செல்லும் உணவில், ஒரு பங்கை ஏரியில் போட்டு வந்தான். அங்குள்ள மீன்களும் அதைத் தின்றன.
வழக்கம் போல, அன்றும் அவன் ஏரிக்கரைக்கு வந்தான். தன் உணவில் ஒரு பங்கை மீன்களுக்குப் போட்டான். மீன்கள் உண்பதை மகிழ்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தான். அப்போது அவன் எதிரே தேவதை ஒன்று தோன்றியது.
""உழவனே! நான் இந்த ஏரியைக் காக்கும் தேவதை. இங்குள்ள மீன்களுக்குப் பல ஆண்டுகளாக நீ உணவு அளித்து வருகிறாய். நல்லவனான உனக்கு இந்த மந்திரச் சங்கை பரிசாக தருகிறேன். இதிலிருந்து நீ தேவையான பணத்தைப் பெறலாம். இனி நீ துன்பப்பட வேண்டாம்!'' என்ற தேவதை தன் கையிலிருந்த சங்கை அவனிடம் தந்தாள்.
அதை வாங்கிக் கொண்ட வரதன், தேவதையை வணங்கினான். தேவதை அங்கிருந்து மறைந்தது.
மந்திரச் சங்குடன் வீட்டிற்கு வந்து கொண்டி ருந்தான். வழியில், மளிகைக் கடையைப் பார்த்த அவன், "வீட்டிற்குத் தேவையான பொருள்கள் வாங்கலாமே' என்று நினைத்தான்.
தன் கையிலிருந்த மந்திரச் சங்கைப் பார்த்து, ""சங்கே! பணம் கொடு!'' என்றான்.
என்ன வியப்பு! அந்தச் சங்கிலிருந்து ஒரு வெள்ளிப் பணம் தரையில் விழுந்தது.
இந்த அதிசயத்தைப் பார்த்தான் கடைக்காரன்.
""உன் கையில் உள்ள சங்கு வேடிக்கையாக உள்ளதே... எப்படி அது உனக்குக் கிடைத்தது?'' என்று கேட்டான்.
""இது மந்திரச் சங்கு. மீன்களிடம் நான் காட்டிய அன்பிற்காக, ஏரித் தேவதை தந்தது. பணம் வேண்டும் என்று இதனிடம் கேட்டால் போதும், ஒரு பணம் வந்து விழும்,'' என்றான் வரதன்.
எப்படியாவது அவனை ஏமாற்றி, அந்தச் சங்கைக் கைப்பற்ற நினைத்தான் கடைக்காரன்.
""ஆ! இந்தச் சங்கு ஒரு வெள்ளிப் பணம் தருமா? அதிசயமாக உள்ளதே. இதை என் மனைவி பார்த்தால் வியப்பு அடைவாள். மந்திரச் சங்கை என்னிடம் கொடு. வீட்டிற்குள் சென்று அவளிடம் காட்டி விட்டு வருகிறேன்,'' என்று இனிமையாகப் பேசினான்.
அவனின் சூழ்ச்சியை அறியாத வரதன், ""காட்டி விட்டு வா,'' என்று சங்கைத் தந்தான்.
கடைக்கு அடுத்திருந்த தன் வீட்டிற்குள் நுழைந்தான் கடைக்காரன்.
வரதன் நீண்ட நேரம் காத்திருந்தான். கடைக்காரன் வீட்டை விட்டு வெளியே வரவே இல்லை. பொறுமை இழந்த அவன், கடைக்காரன் வீட்டுக் கதவைத் தட்டினான். கடைக்காரனின் மனைவி கதவைத் திறந்து வெளியே வந்தாள்.
""எங்கே கடைக்காரர்?'' என்று கேட்டான் வரதன்.
""அவசர வேலையாக, அவர் வெளியூர் சென்று விட்டார். நாளைதான் திரும்புவார்,'' என்றாள் .
""என் மந்திரச் சங்கை அவரிடம் தந்தேன். உங்களிடம் காட்டி விட்டு, வருவதாக வீட்டிற்குள் நுழைந்தார். அவர் வெளியே வரவே இல்லையே,'' என்றான் வரதன்.
""எனக்கு எதுவும் தெரியாது,'' சொல்லி விட்டு, வீட்டிற்குள் நுழைந்து, கதவை வேகமாகத் தாழிட்டாள்.
ஏமாற்றத்துடன் தன் வீடு வந்தான் வரதன்.
மறுநாள் காலையில் அந்தக் கடைக்குச் சென்றான். அங்கே கடைக்காரன் இருந்தான்.
""என் மந்திரச் சங்கைக் கொடு,'' என்று கோபத்துடன் கேட்டான்.
""மந்திரச் சங்கா? என்ன உளறுகிறாய்? நீயோ ஏழை. உன்னிடம் இருந்து நான் ஏன் அதை வாங்கக் போகிறேன். இங்கிருந்து ஒழுங்காகப் போய்விடு... இல்லையேல் உன்னைச் சிறையில் தள்ளி விடுவேன்,'' என்று மிரட்டினான் கடைக்காரன்.
""ஐயோ! இப்படி ஏமாந்து விட்டேனே... இனி என்ன செய்வேன்?'' என்று அழுது புலம்பிய படியே ஏரிக்கரைக்கு வந்தான்.
அந்த தேவதை மீண்டும் அவன் முன் தோன்றியது.
""உழவனே! ஏன் அழுகிறாய்?'' என்று அன்புடன் கேட்டது.
""தேவதையே! நீ தந்த மந்திரச் சங்கைக் கடைக்காரன் கேட்டான். நானும் தந்தேன். அவன் என்னை ஏமாற்றி விட்டான்,'' என்று நடந்ததை எல்லாம் சொன்னான்.
""நீ ஏமாந்ததற்காக வருத்தப்படாதே... அந்தக் கடைக்காரனை ஏமாற்றி மந்திரச் சங்கைப் பெற வழி சொல்கிறேன். நான் உனக்கு இன்னொரு மந்திரச் சங்கு தருகிறேன். அது பேசும் சங்கு. பணம் தருவதாகப் பேசும். ஆனால், பணம் ஏதும் தராது,'' என்ற தேவதை அவனிடம் இன்னொரு சங்கை தந்துவிட்டு மறைந்தது.
அதைக் கையில் வாங்கிய அவன், ""மந்திரச் சங்கே! எனக்கு ஒரு பணம் கொடு,'' என்றான்.
""ஏன் ஒரு பணம் கேட்கிறாய்? இரண்டு பணம் கேள்,'' என்றது.
தேவதை சொன்னதன் உண்மை அவனுக்கு புரிந்தது. பேசும் சங்குடன் அங்கிருந்து புறப்பட்ட அவன் அந்தக் கடைக்கு வந்தான்.
கையில் புதிய சங்குடன் வந்த அவனைப் பார்த்தான் கடைக்காரன்.
""வரதன்! கையில் புதிய சங்கு வைத்திருக் கிறாயே! இதுவும் மந்திரச் சங்கா? இது என்ன தரும்?'' என்று கேட்டான்.
""இதுவும் மந்திரச் சங்குதான். நான் முன்பு வைத்திருந்த சங்கு ஒரு முறைக்கு ஒரு பணம் தரும். இந்தச் சங்கோ எவ்வளவு பணம் கேட்டாலும் தரும். நானோ ஏழை. என்னால் ஒரு பணத்திற்கு மேல் செலவு செய்ய முடியாது. என் பழைய சங்கு என்னிடம் கிடைத்தால் போதும். ஏராளமான பணத்தை வைத்து நான் என்ன செய்யப் போகிறேன்? எனக்கு அதிக ஆசை இல்லையே,'' என்று வருத்தத்துடன் சொன்னான் வரதன்.
""இந்த சங்கு எவ்வளவு பணம் கேட்டாலும் தருமா? நம்ப முடியவில்லையே,'' என்றான் கடைக்காரன்.
""நீயே சோதித்துப் பார்,'' என்ற அவன் சங்கைக் கடைக்காரனிடம் தந்தான்.
கடைக்காரன் அந்தச் சங்கிடம், ""எனக்குப் பத்துப் பணம் தா,'' என்றான்.
""ஏன் பத்துப் பணம் கேட்கிறாய்? இருபது பணம் கேள்,'' என்று குரல் கொடுத்தது அந்தச் சங்கு.
சங்கை வரதனிடம் தந்த கடைக்காரன், தன் வீட்டிற்குள் சென்றான். ஒரு பணம் தரும் சங்கை எடுத்துக் கொண்டு வெளியே வந்தான்.
""வரதா! நேற்று என் மனைவியிடம் காட்டுவதற்காக இந்தச் சங்குடன் வீட்டிற்குள் நுழைந்தேன். என் மாமியாருக்கு உடல்நலம் சரியில்லை என்று கேள்விப்பட்டேன். அவரைப் பார்ப்பதற்காக வெளியூர் சென்று விட்டேன்.
""அவருக்கு என்ன ஆகுமோ என்ற கவலையில் வீட்டிற்குள் வந்தேன். அப்போதுதான் நீயும் வந்தாய். அந்தச் சூழ்நிலையில் உன்னிடம் கோபமாக நடந்து கொண்டேன். என்னை மன்னித்துவிடு. உன் மந்திரச் சங்கு எனக்கு எதற்கு? நீயே பெற்றுக் கொள்,'' என்று இனிமையாகப் பேசினான் கடைக்காரன்.
""உன் மீது எனக்கு எந்த கோபமும் இல்லை,'' என்றான் வரதன்.
""நண்பா! இரண்டு மந்திரச் சங்குகளை வைத்து என்ன செய்யப் போகிறாய்? கேட்ட பணம் தரும் புதிய சங்கை என்னிடம் தா. நீ எப்போது கேட்டாலும் அதைத் திருப்பித் தருகிறேன். உன் பழைய சங்கை வாங்கிக் கொள்,'' என்றான் கடைக்காரன்.
தன் திட்டம் வெற்றி பெற்றதை எண்ணி மகிழ்ந்தான் வரதன்.
பழைய சங்கைப் பெற்றுக் கொண்டு, புதிய சங்கைப் கடைக்காரனிடம் தந்தான்.
கடைக்காரனுக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு வந்தான். தன் மனைவியிடம் அந்தச் சங்கைக் காட்டினான்.
""அந்த வரதனை போன்ற ஏமாளியை நான் பார்த்ததே இல்லை. அவன் தந்த பழைய சங்கு ஒரு முறைக்கு ஒரு பணம்தான் தரும். அதைத் தந்துவிட்டு, இந்தப் புதிய சங்கை வாங்கி வந்தேன். இந்தச் சங்கு நாம் எவ்வளவு பணம் கேட்டாலும் தரும். நம் நல்ல நேரம். வாரி வாரி வழங்கும் இந்தச் சங்கு நமக்குக் கிடைத்தது. இனி நாமே, இந்த நாட்டில் பெரிய செல்வந்தர்கள்,'' என்று மகிழ்ச்சியுடன் சொன்னான் கடைக்காரன்.
""எவ்வளவு பணம் கேட்டாலும் இந்த மந்திரச் சங்கு தருமா?'' என்று வியந்தாள் அவன் மனைவி.
""ஆமாம். நீ போய் ஒரு போர்வையை எடுத்து வா. நாம் இதிலிருந்து நிறைய பணம் பெறுவோம்,'' என்றான் கடைக்காரன்.
ஒரு பெரிய போர்வையை விரித்தாள். அதன் நடுவில், மந்திரச் சங்கை வைத்து, இருவரும் அமர்ந்தனர்.
""மந்திரச் சங்கே! பத்துப் பொற்காசுகளைக் கொடு,'' என்றான் கடைக்காரன்.
""ஏன் பத்துப் பொற்காசுகளைக் கேட்கிறாய். இருபது பொற்காசுகளைக் கேள்,'' என்றது சங்கு.
"ஆ! இந்தச் சங்கு இப்படிப் பேசுகிறதே. வாரி வாரி வழங்கப் போகிறது' என்று இருவரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
""சங்கே! நீ சொன்னது போல இருபது பொற்காசுகளை தா!'' என்றான் கடைக்காரன்.
""ஏன் இருபது பொற்காசுகளை கேட்கிறாய்? நாற்பது பொற்காசுகளை கேள்,'' என்றது சங்கு.
இப்படி அவர்கள் எதைக் கேட்டாலும் இரட்டிப்பாகக் கேள் என்பதே, சங்கின் பதிலாக இருந்தது. இப்படியே, ஒரு லட்சம் பொற்காசு களை எட்டியது.
உண்மையை உணராத அவன், ""சங்கே! எங்களுக்கு ஒரு லட்சம் பொற்காசுகள் போதும். அதைத் தா,'' என்றான்.
""ஏன் ஒரு லட்சம் பொற்காசுகள் கேட்கிறாய்? இரண்டு லட்சம் பொற்காசுகள் கேள்,'' என்றது சங்கு.
மீண்டும் அவன் அதையே கேட்க, அதே பதிலைத் திரும்பச் சொன்னது.
அவர்களுக்கு உண்மை புரியத் தொடங்கியது. "இது பேசும் சங்கு. எதையும் தரும் சங்கு அல்ல. நன்றாக ஏமாந்து விட்டோமே... என்று கோபம் கொண்டான்.
அதைக் கையில் எடுத்த அவன், ""எதைச் சொன்னாலும் இரட்டிப்பாக கேள் என்கிறாயே... எங்களை முட்டாளாக்கப் பார்க்கிறாயா?'' என்று கத்தினான்.
சங்கு எந்த பதிலையும் சொல்லாமல் இருந்தது.
கோபம் கொண்ட கடைக்காரன், அதை ஓங்கித் தரையில் அடித்தான். அது பல துண்டுகளாக உடைந்து நொறுங்கியது. பேராசைப்பட்டு ஏமாந்ததை எண்ணி இருவரும் வருந்தினர்.
அங்கே பழைய சங்குடன் வரதன் தன் வீட்டிற்கு வந்தான். தேவைப்படும் போதெல்லாம் அதனிடம் ஒரு பணம் பெற்றான். அதைக் கொண்டு மற்றவர்களுக்கு விருந்து அளித்து, மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தான்.


நன்றி:தினமலர்.com
ராஜா
ராஜா
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 67

Back to top Go down

இன்னும் அதிகமாக கேள்! Empty Re: இன்னும் அதிகமாக கேள்!

Post by முழுமுதலோன் Tue May 07, 2013 6:04 pm

சூப்பர் சங்கு கைதட்டல் கைதட்டல்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

இன்னும் அதிகமாக கேள்! Empty Re: இன்னும் அதிகமாக கேள்!

Post by கவியருவி ம. ரமேஷ் Tue May 07, 2013 10:47 pm

அவர்களுக்கு உண்மை புரியத் தொடங்கியது. "இது பேசும் சங்கு. எதையும் தரும் சங்கு அல்ல. நன்றாக ஏமாந்து விட்டோமே... என்று கோபம் கொண்டான்.
அதைக் கையில் எடுத்த அவன், ""எதைச் சொன்னாலும் இரட்டிப்பாக கேள் என்கிறாயே... எங்களை முட்டாளாக்கப் பார்க்கிறாயா?'' என்று கத்தினான்.
சங்கு எந்த பதிலையும் சொல்லாமல் இருந்தது.
கோபம் கொண்ட கடைக்காரன், அதை ஓங்கித் தரையில் அடித்தான். அது பல துண்டுகளாக உடைந்து நொறுங்கியது. பேராசைப்பட்டு ஏமாந்ததை எண்ணி இருவரும் வருந்தினர்.

நல்ல பாடம்... பகிர்வுக்கு நன்றி... கைதட்டல்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

இன்னும் அதிகமாக கேள்! Empty Re: இன்னும் அதிகமாக கேள்!

Post by ராஜா Wed May 08, 2013 12:11 pm

நண்பர்களே பதிலுக்கு நன்றி.....
ராஜா
ராஜா
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 67

Back to top Go down

இன்னும் அதிகமாக கேள்! Empty Re: இன்னும் அதிகமாக கேள்!

Post by முரளிராஜா Wed May 08, 2013 1:08 pm

நல்ல கதை
பகிர்வுக்கு நன்றி நண்பரே
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

இன்னும் அதிகமாக கேள்! Empty Re: இன்னும் அதிகமாக கேள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum