தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சுத்தம்.....சுகாதாரம்....

View previous topic View next topic Go down

சுத்தம்.....சுகாதாரம்.... Empty சுத்தம்.....சுகாதாரம்....

Post by முரளிராஜா Sat May 11, 2013 10:05 am

சுத்தம்.....சுகாதாரம்.... 0ed1f96f-0ddf-45b4-a00b-08aed7f789e7_S_secvpf

ஆரோக்கியம் என்பது இன்றைய பல சூழல்களில் நமக்கு சவால் தான். சுகாதாரக் கேடுள்ள சில இடங்களை நாம் பார்க்க நேரும்போது முடிந்தவரை அந்த இடத்தில் இருந்து நாம் விரைவில் வெளிவரவே முயற்சிப்போம். குறிப்பாக பொது இடங்களில் உள்ள கழிப்பறை களை பார்த்ததுமே கண்ணைக் கட்டும்.

குடல் குமட்டிக் கொண்டு வாய் வரை வந்து போகும். ஆரோக்கியம் பற்றி கொஞ்சமும் அக்கறைப்படாதவர்கள் பெருகி விட்டதே இதற்குக் காரணம். ஒவ்வொரு வித ஆரோக்கியக் குறைவும் ஒவ்வொரு வித நோயைக் கொண்டு வரும் என்பது இவர்களுக்கும் தெரியும். ஆனால் எங்கோ பொது இடத்தில் தானே இம்மாதிரியான குறைபாடுகள்.

அந்த இடத்திற்கு நாம் அடிக்கடி போகவா போகிறோம் என்பதான அலட்சிய மனோபாவம் ஆரோக்கியக்குறைவை சரி செய்யும் குறைந்த பட்ச முயற்சிகளைக் கூட எடுக்க விடாமல் நம்மில் பலரையும் கட்டிப் போட்டு விடுகிறது. கழிவு நீர்க்குழாய் உடைந்து ரோட்டில் சாக்கடை நீர் ஆறாக ஓடுகிறது.

அதன் குடலைப் புடுங்கும் நாற்றத்தை சகித்துக் கொண்டு காலையும் மாலையும் அந்த வழியாக கடக்கும் மனிதர்கள் எத்தனை எத்தனை பேர்! அத்தனை பேர் மனதிலும் முதலில் எரிச்சல் எட்டிப் பார்க்கும். அடுத்ததாக எங்கே அந்த சாக்கடை நம் உடைகளை பாழ்படுத்தி விடுமோ என்ற பயம் எட்டிப் பார்க்கும்.

ஒருவழியாக போராடி அந்த சாக்கடைப் பகுதியை கடந்து விட்டால் அப்புறமாய் அதை மறந்தே போவோம். இப்படி தெரு என்றால் அலட்சியம் காட்டும் நாம், இதுவே நம் வீடு என்னும் பட்சத்தில் சுத்தம் சுகாதாரம் பேணிக் காப்போம். ஆனால் இதில் கூட பலருக்கு எந்த மாதிரியான ஆரோக்கியக் குறைபாட்டை எப்படி சரி செய்வது என்பதில் குழப்பம் வரும்.

பிளாட்டுகளில் வசிக்கும் பலரும் தங்களை வீட்டுக்குள் மூடி வைத்துக் கொண்டு ஆரோக்கியத்தை வாசலோடு நிறுத்தி விடுகிறார்கள். திறந்து வைக்கிற உங்கள் வீட்டு ஜன்னலில் இருந்து தான்முதல் ஆரோக்கியம் தொடங்குகிறது. காற்றடித்தாலும், மழை பொழிந்தாலும், வெயிலடித்தாலும் நாம் முதலில் செய்யும் காரியம் வீட்டைச் சுற்றியி ருக்கும் ஜன்னலை மூடுவது.

இது வீட்டை பாதுகாப்பது போல தோன்றினாலும், எப்போதும் ஜன்னலை மூடி வைத்திருப்பது ஒரு தவறான விஷயம். நோய்க்கிருமிகள் அறைக்குள் சுற்றிச் சுற்றி பெருகி நம்மை தாக்கும். ஜன்னலை திறந்து வைப்பதினால் சுத்தமான காற்றும் சூரிய வெளிச்சமும் அறை முழுக்க சுற்றி யிருக்கும். நோய்க்கிருமிகளை வெளியேற்றும்.

அதனால் அறையின் ஜன்னலை பெரும்பாலும் திறந்து வைத்திருப்பதே நல்லது. பெரும்பாலான கிருமிகள் சூரிய வெப்பத்தில் மறைந்து விடும். தூய்மையான காற்றில் நல்ல பிராணவாயு நிறைந்திருக்கும். அது அறையெங்கும் பரவி நம்மை சுறுசுறுப்பாக இயங்க வைக்கும். இப்போது சுற்றி இருக்கும் சுற்றுச்சூழல் மாசுகளால் பிராணவாயு தட்டுப்பாடாக இருக்கிறது.

அதன் விளைவாக நுரையீரல் பாதிக்கப்பட்டு பலவித நோய்கள் தோன்றுகிறது. போதாக்குறைக்கு நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களிலுள்ள ரசாயனம், கரியமில வாயு வெளியிடும் பொருட்கள் இவற்றால் வீட்டின் தூய்மை கெட வாய்ப்பிருக்கிறது. சிலர் செருப்புக்காலுடன் வீட்டுக்குள் வந்து விடுவார்கள்.

இதனால் காலணிகளில் ஒட்டிக்கொண்டிருக்கும் பல நோய் தொற்றுக் கிருமிகள் வீட்டுக்குள் வருகிறது. அதனால் காலணிகளை வீட்டுக்குள் ஒருபோதும் கொண்டு வரக் கூடாது. வீட்டை சுத்தப்படுத்திய பின் அறையில் ரூம் ஸ்ப்ரே அடிப்பது பல வீடுகளில் வழக்கம். ஆனால் ரூம் ஸ்ப்ரேக்களில் பெரும்பாலும் கடுமையான ரசாயனப் பொருட்களே சேர்ந்திருக்கிறது.

அது அறையில் பரவியிருக்கும் தூய்மையான காற்றை மாசுபடுத்தி விஷமாக்கி விடுகிறது. அதற்கு மேல் நாம் பயன்படுத்தும் கொசு மருந்து, ஸ்ப்ரே போன்றவை காற்றோடு கலந்து வெகு நேரம் மூச்சை திணற அடிக்கிறது. அது சுவாசிக்கும் போது உள்ளே சென்று தீய விளைவுகளை ஏற்படுத்துகிறது.

இயற்கையான முறையில் அறையை வாசனையாக வைக்க நல்ல மலர்களை வாங்கி துளைகளுள்ள மூங்கில் கூடைகளில் வைத்து விட்டால் அறையெங்கும் வாசம் பரவும். அறையை மூடி வைத்துவிட்டு சமைப்பதால், சமையல் எரிவாயுவில் உள்ள கார்பன் மோனோ ஆக்சைடு, நைட்ரஜன் வாயுக்கள் வெளிப்பட்டு பெருமளவு காற்றில் கலந்துவிடும்.

இந்த வாயுக்கள் காற்றோடு கலந்து உடலில் சேரச்சேர உடற்சோர்வு, மூச்சுத்திணறல், கண்ணெரிச்சல், இருமல், போன்ற பல உபாதைகள் ஏற்படும். அதனால் கேஸ் எரியும் போது கண்டிப்பாக ஜன்னல்கள் திறந்திருக்க வேண்டும். சமைக்கும் போது எக்ஸ்ஹாஸ்ட்ட்ட் பேன்கள்களை பயன்படுத்த வேண்டும். வீட்டுக்குள் கிருமிகள் தேங்காமல் பார்த்துக் கொண்டாலே அது ஆனந்தம் விளையாடும் வீடு தானே!

நன்றி மாலை மலர்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

சுத்தம்.....சுகாதாரம்.... Empty Re: சுத்தம்.....சுகாதாரம்....

Post by ரானுஜா Sat May 11, 2013 3:55 pm

நல்ல பகிர்வு நன்றி
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

சுத்தம்.....சுகாதாரம்.... Empty Re: சுத்தம்.....சுகாதாரம்....

Post by ஸ்ரீராம் Sat May 11, 2013 4:01 pm

பயனுள்ள பகிர்வுக்கு நன்றி

சுத்தம் சோறு போடும் (சுகாதாரம் சாம்பார் ஊத்துமானு கேக்ககூடாது போதை)
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

சுத்தம்.....சுகாதாரம்.... Empty Re: சுத்தம்.....சுகாதாரம்....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum