Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கதவைத் திற காற்று வரும்
Page 1 of 1 • Share
கதவைத் திற காற்று வரும்
கதவைத் திற காற்று வரும்
‘‘அட...!’’
‘‘யம்மாடி...!’’
‘‘அடி ஆத்தீ...!’’
‘‘இந்த பார்றா...!’’
‘‘யப்பா... யப்பா... யப்பா£...!’’
ஆச்சரியத்தில் நம்மை நாமே மறந்துவிடும்போது நாம் உச்சரிக்கின்ற வார்த்தைகள் இவை.
ஆச்சரியப்படுகிற மனது உண்மையில் ஆனந்தமயமானது. அள்ளி, அள்ளிப் பருகக்கூடிய சந்தோஷத்தை அளிப்பது
குழந்தைகளைப் பாருங்கள். எப்போதும் சுறுசுறுப்பாக, துருதுருவென்று இருப்பதற்குக் காரணமே எதைப் பார்த்தாலும் அதை ஆச்சரியத்தோடு பார்க்கிற பழக்கம்தான்.
ஒரு குழந்தையை கோயிலுக்குள் அழைத்துச் செல்லுங்கள். கோயிலுக்குள் இருக்கிற ஒவ்வொரு சிலையையும், ஒவ்வொரு தூணையும் ஆச்சரியத்தோடு அந்தக் குழந்தை பார்க்கும் அழகே அழகுதான். எதையுமே புத்தம் புதிதாகப் பார்க்கிற மனம் குழந்தைகளிடம் நிறையவே உண்டு. எத்தனையோ முறை யானையை பார்த்திருப்பார்கள் குழந்தைகள். என்றாலும் வீட்டுப்பக்கம் கோயில் யானையைப் பாகன் அழைத்துக் கொண்டு வந்தால் போதும், தெருவில் உள்ள குழந்தைகள் எல்லோரும் சாப்பிடுவதை விட்டுவிட்டு, படிப்பதை விட்டுவிட்டு, அந்த யானையின் பின்னால் அலைந்து கொண்டிருப்பார்கள். தெருவைக் கடந்து யானை போய்விட்டாலும், அந்த எண்ணம் மட்டும் குழந்தைகளின் மனதிலிருந்து மறைவதே இல்லை.
ஆனால், காலத்தின் கட்டாயம் நாமும் வளர்கிறோம். மாறுகிறோம். கல்வி என்கிற பெயரில் புதிது புதிதாக நிறைய கற்றுக் கொள்கிறோம். ஓரளவுக்குக் கற்றபிறகு நாமே எக்கச்சக்கமாகப் படிக்க ஆரம்பிக்கிறோம்.
விளைவு...?
ஒவ்வொன்றைப் பற்றியும் நம் மனதில் ஒரு கருத்து உருவாகிவிடுகிறது இவையிவை இப்படித்தான் என்கிற எண்ணம் நமக்கு வந்துவிடுகிறது. எல்லா விஷயங்களும் கேட்டதுதான். எல்லா பொருட்களும் பார்த்ததுதான். இனிமேல் புதிதாக என்ன இருக்கு? என்று எண்ணுபவர்கள் ஆச்சரியப்படும் மனநிலையை முற்றிலும் இழந்துவிடுகிறார்கள். இதன்பின் வாழ்க்கையே அலுப்பு தட்டிவிடுகிறது. எனவே, நடக்கும் சம்பவங்கள் எல்லாமே சோகமானதாகவே மாறியிருக்கிறது.
புதிது புதிதாகப் பார்க்கிற மனம், ஒவ்வொரு அனுபவமும் தனித்தன்மையானவை என்பதைப் புரிந்து கொள்ளும். ‘அன்று அவன் வீட்டுக்குப் போனேன். திட்டி அனுப்பிவிட்டான். இன்று போனால் என்னை நிச்சயம் வரவேற்பான்’ என்று எதையும் பாசிட்டிவ்வாகப் பார்க்கத் தூண்டும்.
ஆச்சரியப்படுகிற மனதுவாய்ப்புகளை நழுவவிடாது. ‘அந்த வியாபாரம் செய்தேன். ஏகப்பட்ட நஷ்டம் வந்துவிட்டது. ஆனால், நான் இப்போது செய்யவிருக்கிற வியாபாரம் சக்கைப்போடு போடும்’’ என்று புதிதாக நம்மைத் தேடிவரும் வாய்ப்பு எதையும் தவறவிடமாட்டோம்.
எனவே வாழ்க்கையில் எதையும் புதிதாகப் பார்க்கிற மனநிலையை உங்களுக்குள் உருவாக்கிக் கொள்ளுங்கள். காலையில் பூப்போல நான்கு இட்லி கிடைத்தால் ‘வாவ்’ என்று சின்னதாக ஆச்சரியப்படுங்கள். அலுவலகத்தில் ஒன்றுக்கு இரண்டாக வேலை கிடைத்தால் ‘வாரேவ்வா’ என்று ஆச்சரியத்தோடு ஏற்றுக் கொள்ளுங்கள். அணியைக் கண்டால் ஆச்சரியம், புது சட்டையைக் கண்டால் ஆச்சரியம், இ_மெயிலைப் பார்த்தால் ஆச்சரியம் என்று எல்லாவற்றுக்கும் ஆச்சரியப்பட ஆரம்பித்தீர்களென்றால், உங்கள் வாழ்க்கையில் சந்தோஷம் கரை புரண்டு ஓட ஆரம்பித்துவிடும்.
ஆனால், இப்போதைய நம் சோகத்துக்குக் காரணம், எதைக் கண்டு நாம் ஆச்சரியப்படக்கூடாதோ அதைக் கண்டு நாம் ஆச்சரியப்படுகிறோம். மனிதனின் அழகு ரசனைக்குரியது. ஆண்கள் ரசனைக்கு உரியவர்கள். பெண்களும் ரசனைக்கு உரியவர்கள்தான். அதற்காக, திருமணமான பெண்ணை ரசித்துப் பார்த்தால் அது ஆச்சரியமல்ல, அநாகரிகம். நடிகைகளைக் கண் கொட்டாமல் நாம் பார்த்து ரசிப்பது நம் மனதில் உள்ள வக்கிரத்தையே காட்டுகிறது.
பெண்ணாசைக்குப் பிறகு பொன்னாசை, பணத்தைக் கண்டவுடன் வாய் பிளந்து நின்றுவிடுகிறோம். எதைச் செய்வதற்கும் தயார். எனக்கு வேண்டியது பணம் என்கிற இழிவான நிலைக்கு நாம் வந்துவிட்டோம். இதனால் நமக்கென்று தீர்மானமான கொள்கைகள் இல்லாமல் போய்விட்டன. செய்யக் கூடியது, செய்யக்கூடாதது என்கிற விதிமுறைகள் இல்லாமல் போய்விட்டது.
சிலருக்குப் பதவியின் மீது ஆசை. அவரவர் நிலைமைக்கேற்ப பெரிய பதவியைப் பார்த்து ஆசைப்பட்டுக் கொண்டிருப்பார்கள்; ஆச்சரியப்பட்டுக் கொண்டிருப்பார்கள். ‘அந்தாளு என்னதான் பண்ணான்னு தெரியலை. ஆனா பதவியை வாங்கிட்டான்’ என்று புலம்பித் தீர்ப்பவர்கள் நம்மிடையே ஏராளம். பதவி வேண்டுமென்பதற்காக அவர்கள் எதை வேண்டுமானாலும் செய்யத் துணிவது கொடுமையிலும் கொடுமை.
எனவே, இன்று முதல் தவறான விஷயங்களைக் கண்டு ஆச்சரியப்படுவதை, ஆசைப்படுவதை முதலில் நிறுத்திக் கொள்வோம். நியாயமான, நேர்மையான விஷயங்களை மட்டுமே வேண்டி நிற்போம்.
லஞ்ச லாவண்யம் சகல இடங்களிலும் நுழைந்து விட்ட இந்தக் காலத்தில் _ ‘நியாயமாக, நேர்மையாக நடந்து கொள்ளுங்கள்’ என்று சொன்னால் அதற்காக நிச்சயமாக நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். ஒரே ஒரு விஷயத்தை மட்டும் உங்களுக்குத் தீர்மானமாகச் சொல்கிறேன். நீங்கள் நேர்மையான, நியாயமான வாழ்க்கையை வாழ்வதனால் எந்த நன்மையும் உங்களுக்குக் கிடைக்காவிட்டாலும் எந்தத் தவறும் செய்யாத வாழ்க்கை வாழ்ந்தோம் என்கிற திருப்தி உங்களுக்கு நிச்சயம் இருக்கும்.
kumudam article
‘‘அட...!’’
‘‘யம்மாடி...!’’
‘‘அடி ஆத்தீ...!’’
‘‘இந்த பார்றா...!’’
‘‘யப்பா... யப்பா... யப்பா£...!’’
ஆச்சரியத்தில் நம்மை நாமே மறந்துவிடும்போது நாம் உச்சரிக்கின்ற வார்த்தைகள் இவை.
ஆச்சரியப்படுகிற மனது உண்மையில் ஆனந்தமயமானது. அள்ளி, அள்ளிப் பருகக்கூடிய சந்தோஷத்தை அளிப்பது
குழந்தைகளைப் பாருங்கள். எப்போதும் சுறுசுறுப்பாக, துருதுருவென்று இருப்பதற்குக் காரணமே எதைப் பார்த்தாலும் அதை ஆச்சரியத்தோடு பார்க்கிற பழக்கம்தான்.
ஒரு குழந்தையை கோயிலுக்குள் அழைத்துச் செல்லுங்கள். கோயிலுக்குள் இருக்கிற ஒவ்வொரு சிலையையும், ஒவ்வொரு தூணையும் ஆச்சரியத்தோடு அந்தக் குழந்தை பார்க்கும் அழகே அழகுதான். எதையுமே புத்தம் புதிதாகப் பார்க்கிற மனம் குழந்தைகளிடம் நிறையவே உண்டு. எத்தனையோ முறை யானையை பார்த்திருப்பார்கள் குழந்தைகள். என்றாலும் வீட்டுப்பக்கம் கோயில் யானையைப் பாகன் அழைத்துக் கொண்டு வந்தால் போதும், தெருவில் உள்ள குழந்தைகள் எல்லோரும் சாப்பிடுவதை விட்டுவிட்டு, படிப்பதை விட்டுவிட்டு, அந்த யானையின் பின்னால் அலைந்து கொண்டிருப்பார்கள். தெருவைக் கடந்து யானை போய்விட்டாலும், அந்த எண்ணம் மட்டும் குழந்தைகளின் மனதிலிருந்து மறைவதே இல்லை.
ஆனால், காலத்தின் கட்டாயம் நாமும் வளர்கிறோம். மாறுகிறோம். கல்வி என்கிற பெயரில் புதிது புதிதாக நிறைய கற்றுக் கொள்கிறோம். ஓரளவுக்குக் கற்றபிறகு நாமே எக்கச்சக்கமாகப் படிக்க ஆரம்பிக்கிறோம்.
விளைவு...?
ஒவ்வொன்றைப் பற்றியும் நம் மனதில் ஒரு கருத்து உருவாகிவிடுகிறது இவையிவை இப்படித்தான் என்கிற எண்ணம் நமக்கு வந்துவிடுகிறது. எல்லா விஷயங்களும் கேட்டதுதான். எல்லா பொருட்களும் பார்த்ததுதான். இனிமேல் புதிதாக என்ன இருக்கு? என்று எண்ணுபவர்கள் ஆச்சரியப்படும் மனநிலையை முற்றிலும் இழந்துவிடுகிறார்கள். இதன்பின் வாழ்க்கையே அலுப்பு தட்டிவிடுகிறது. எனவே, நடக்கும் சம்பவங்கள் எல்லாமே சோகமானதாகவே மாறியிருக்கிறது.
புதிது புதிதாகப் பார்க்கிற மனம், ஒவ்வொரு அனுபவமும் தனித்தன்மையானவை என்பதைப் புரிந்து கொள்ளும். ‘அன்று அவன் வீட்டுக்குப் போனேன். திட்டி அனுப்பிவிட்டான். இன்று போனால் என்னை நிச்சயம் வரவேற்பான்’ என்று எதையும் பாசிட்டிவ்வாகப் பார்க்கத் தூண்டும்.
ஆச்சரியப்படுகிற மனதுவாய்ப்புகளை நழுவவிடாது. ‘அந்த வியாபாரம் செய்தேன். ஏகப்பட்ட நஷ்டம் வந்துவிட்டது. ஆனால், நான் இப்போது செய்யவிருக்கிற வியாபாரம் சக்கைப்போடு போடும்’’ என்று புதிதாக நம்மைத் தேடிவரும் வாய்ப்பு எதையும் தவறவிடமாட்டோம்.
எனவே வாழ்க்கையில் எதையும் புதிதாகப் பார்க்கிற மனநிலையை உங்களுக்குள் உருவாக்கிக் கொள்ளுங்கள். காலையில் பூப்போல நான்கு இட்லி கிடைத்தால் ‘வாவ்’ என்று சின்னதாக ஆச்சரியப்படுங்கள். அலுவலகத்தில் ஒன்றுக்கு இரண்டாக வேலை கிடைத்தால் ‘வாரேவ்வா’ என்று ஆச்சரியத்தோடு ஏற்றுக் கொள்ளுங்கள். அணியைக் கண்டால் ஆச்சரியம், புது சட்டையைக் கண்டால் ஆச்சரியம், இ_மெயிலைப் பார்த்தால் ஆச்சரியம் என்று எல்லாவற்றுக்கும் ஆச்சரியப்பட ஆரம்பித்தீர்களென்றால், உங்கள் வாழ்க்கையில் சந்தோஷம் கரை புரண்டு ஓட ஆரம்பித்துவிடும்.
ஆனால், இப்போதைய நம் சோகத்துக்குக் காரணம், எதைக் கண்டு நாம் ஆச்சரியப்படக்கூடாதோ அதைக் கண்டு நாம் ஆச்சரியப்படுகிறோம். மனிதனின் அழகு ரசனைக்குரியது. ஆண்கள் ரசனைக்கு உரியவர்கள். பெண்களும் ரசனைக்கு உரியவர்கள்தான். அதற்காக, திருமணமான பெண்ணை ரசித்துப் பார்த்தால் அது ஆச்சரியமல்ல, அநாகரிகம். நடிகைகளைக் கண் கொட்டாமல் நாம் பார்த்து ரசிப்பது நம் மனதில் உள்ள வக்கிரத்தையே காட்டுகிறது.
பெண்ணாசைக்குப் பிறகு பொன்னாசை, பணத்தைக் கண்டவுடன் வாய் பிளந்து நின்றுவிடுகிறோம். எதைச் செய்வதற்கும் தயார். எனக்கு வேண்டியது பணம் என்கிற இழிவான நிலைக்கு நாம் வந்துவிட்டோம். இதனால் நமக்கென்று தீர்மானமான கொள்கைகள் இல்லாமல் போய்விட்டன. செய்யக் கூடியது, செய்யக்கூடாதது என்கிற விதிமுறைகள் இல்லாமல் போய்விட்டது.
சிலருக்குப் பதவியின் மீது ஆசை. அவரவர் நிலைமைக்கேற்ப பெரிய பதவியைப் பார்த்து ஆசைப்பட்டுக் கொண்டிருப்பார்கள்; ஆச்சரியப்பட்டுக் கொண்டிருப்பார்கள். ‘அந்தாளு என்னதான் பண்ணான்னு தெரியலை. ஆனா பதவியை வாங்கிட்டான்’ என்று புலம்பித் தீர்ப்பவர்கள் நம்மிடையே ஏராளம். பதவி வேண்டுமென்பதற்காக அவர்கள் எதை வேண்டுமானாலும் செய்யத் துணிவது கொடுமையிலும் கொடுமை.
எனவே, இன்று முதல் தவறான விஷயங்களைக் கண்டு ஆச்சரியப்படுவதை, ஆசைப்படுவதை முதலில் நிறுத்திக் கொள்வோம். நியாயமான, நேர்மையான விஷயங்களை மட்டுமே வேண்டி நிற்போம்.
லஞ்ச லாவண்யம் சகல இடங்களிலும் நுழைந்து விட்ட இந்தக் காலத்தில் _ ‘நியாயமாக, நேர்மையாக நடந்து கொள்ளுங்கள்’ என்று சொன்னால் அதற்காக நிச்சயமாக நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். ஒரே ஒரு விஷயத்தை மட்டும் உங்களுக்குத் தீர்மானமாகச் சொல்கிறேன். நீங்கள் நேர்மையான, நியாயமான வாழ்க்கையை வாழ்வதனால் எந்த நன்மையும் உங்களுக்குக் கிடைக்காவிட்டாலும் எந்தத் தவறும் செய்யாத வாழ்க்கை வாழ்ந்தோம் என்கிற திருப்தி உங்களுக்கு நிச்சயம் இருக்கும்.
kumudam article
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: கதவைத் திற காற்று வரும்
ஒரே ஒரு விஷயத்தை மட்டும் உங்களுக்குத் தீர்மானமாகச் சொல்கிறேன். நீங்கள் நேர்மையான, நியாயமான வாழ்க்கையை வாழ்வதனால் எந்த நன்மையும் உங்களுக்குக் கிடைக்காவிட்டாலும் எந்தத் தவறும் செய்யாத வாழ்க்கை வாழ்ந்தோம் என்கிற திருப்தி உங்களுக்கு நிச்சயம் இருக்கும்.
ம்... உண்மையான மகிழ்ச்சி என்பது இதுதானே...
Re: கதவைத் திற காற்று வரும்
கண்டிப்பாக ஏற்றுக்கொள்ளக் வேண்டிய உண்மைகவியருவி ம. ரமேஷ் wrote:ஒரே ஒரு விஷயத்தை மட்டும் உங்களுக்குத் தீர்மானமாகச் சொல்கிறேன். நீங்கள் நேர்மையான, நியாயமான வாழ்க்கையை வாழ்வதனால் எந்த நன்மையும் உங்களுக்குக் கிடைக்காவிட்டாலும் எந்தத் தவறும் செய்யாத வாழ்க்கை வாழ்ந்தோம் என்கிற திருப்தி உங்களுக்கு நிச்சயம் இருக்கும்.
ம்... உண்மையான மகிழ்ச்சி என்பது இதுதானே...
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» கதவைத் திறந்து வை காற்று தானே வரும்
» கதவைத் திறந்து வைத்தால் காற்று மட்டுமல்ல கள்வரும் வருவார்கள்
» வெற்றி உங்களைத் தேடி வந்து உங்கள் வீட்டுக் கதவைத் தட்ட..
» அறிவியல் வளர்ச்சியால் அழிந்து வரும் பூச்சியினமும் நசிந்து வரும் விவசாயமும்.
» கைவிரலில் வரும் வலிகளும் அதனால் வரும் நோய்களும்
» கதவைத் திறந்து வைத்தால் காற்று மட்டுமல்ல கள்வரும் வருவார்கள்
» வெற்றி உங்களைத் தேடி வந்து உங்கள் வீட்டுக் கதவைத் தட்ட..
» அறிவியல் வளர்ச்சியால் அழிந்து வரும் பூச்சியினமும் நசிந்து வரும் விவசாயமும்.
» கைவிரலில் வரும் வலிகளும் அதனால் வரும் நோய்களும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|