Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
வாழக் கற்றுக் கொள்ளுங்கள்!
Page 1 of 1 • Share
வாழக் கற்றுக் கொள்ளுங்கள்!
வாழக் கற்றுக் கொள்ளுங்கள்!
ஒரு மாணவன் ஒரு துறவியை அடைந்து தனது கோபத்தைக் கட்டுப்படுத்த ஏதேனும் ஒரு தியான முறை இருப்பின் கற்றுத் தருமாறு கோரினான். துறவி, "எங்கே உனது கோபத்தைக் காட்டு நானும் பார்க்கிறேன்' என்று கூறினார். அதற்கு அந்த மாணவன், "தற்சமயம் என் கோபம் என்னோடு இல்லை.
எனவே இப்போது காட்ட இயலாது' என்று கூறினான். "சரி பரவாயில்லை; உன்னிடத்தில் இருக்கும்போது என்னிடம் கொண்டுவந்து காட்டு' எனப் பணித்தார் துறவி. "அதுவும் இயலாத காரியம். ஏனெனில் எப்போது கோபம் வருமென்று தெரியாது. தங்களிடம் நான் வரும்போது அது நிச்சயம் என்னை விட்டு போயிருக்கும்' என்று பதிலளித்தான் மாணவன்.
"அப்படியானால் அது உன்னுடன் பிறந்து, உன்னுடனே உள்ள இயற்கையான குணமல்ல. உனது பெற்றோரோ, மற்றவரோ உனக்குப் பரிசாக வழங்கியதும் அல்ல. நீயாக வெளியிலிருந்து தேடிக்கொண்டு உள்ளாய் என்பது உனக்கு இப்போது விளங்குகின்றதல்லவா! நீ உன்னை மறந்த நிலையில் மற்றவரு டைய உணர்ச்சித் தூண்டுதளுக்கு ஆளாகும்போது கோபம் அடைகிறாய். அதுவே நீ விழிப்புடன் இருக்கும்போது கோபத்திற்கு ஆளாவதில்லை. எனவே நீ எப்போதும் விழிப்புடன் இருக்கக் கற்றுக்கொள்' என அறிவுறுத்தினார்.
கோபம் மட்டுமல்ல, எவரேனும் நாலுபேர் எதிரில் கேலி பேசினால் அவமான மாகக் கருதுகிறீர்கள். உங்களிடம் உள்ள ஏதோ ஒரு குறையை பலர் முன் னிலையில் சுட்டிக்காட்டி கிண்டலடித்தால் மனச்சோர்வு அடைகின்றீர்கள். அது வரையில் மகிழ்ச்சியாக இருந்த நீங்கள் குறுகிப் போகிறீர்கள். முகம் இருண்டு சோகமாக மாறிவிடுகிறீர்கள்.
தங்களுடைய இந்த எதிர் விளைவை எதிர்பார்த்துதான், அவர்கள் கேலியும் கிண்டலும் செய்துள்ளனர் என்பதை நீங்கள் உணர்ந்து கொண்டால், அவர்கள் செயல் உங்களை பாதிக்காது. உங்கள் மகிழ்ச்சியைப் பொறுக்காமல் நீங்கள் முகம் சுருங்குவதைக் கண்டு ஆனந்தப்படும் அப்பிறவிகள், நீங்கள் சிறிதும் சஞ்சலப் படாமல் இருப்பதைக் கண்ணுற்றால் ஏமாற்றமடைந்து ஒடுங்கிச் செல்வார்கள்.
எனவே நீங்கள் எப்போதும் விழிப்புடன் இருந்தால் உங்கள் உணர்ச்சிகள் உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும். இல்லாவிடில் தந்திரசாலிகளின் கைப்பாவை யாக வாழ நேரிடும். சுய கட்டுப்பாட்டுடன் வாழும் வரை நீங்கள்தான் உங்களுக்கு எஜமான். கட்டுப்பாட்டை இழக்கும்போது யாரோ ஒருவருக்கு அல்லது ஏதோ ஒன்றுக்கு நீங்கள் அடிமையாகி விடுகிறீர்கள்.
கடலில் புயல் ஏற்பட்டால் மேற்பரப்பில் மட்டும்தான் அலைகள் ஆர்ப்பரிக்கும். நடுக்கடல் அமைதியாக இருக்கும். அதனால்தான் புயல் சின்னம் உருவான வுடன் கப்பல்களை நடுக்கடலில் கொண்டு சென்று நிறுத்திவிடுகின்றனர். அதுபோல உணர்ச்சிக் கொந்தளிப்புகள் எல்லாம் மனத்தின் மேற்பரப்பு சம்பந்தப்பட்டது. அடி மனம் அமைதியானது. அடி மனத்தை தியானத்தின் மூலம் எளிதாக அடையலாம்.
மருத்துவர்கள் கூற்றுப்படி ரத்தக் கொதிப்பு, நீரிழிவு போன்றவைகள் நோய்கள் அல்ல. நோய்களை மட்டுமே மருந்துகளால் குணப்படுத்த இயலும். இவைகளை கட்டுப்பாட்டில் வைத்திருக்க இயலும்.
குணப்படுத்த இயலாது என்று தெரிவிக்கின்றனர். மேலும் வெளிக்காட்டாமல் அடக்கி வைக்கப்பட்ட உணர்ச்சிகளாலும் ரத்தக்கொதிப்பு, நீரிழிவு, இருதயக் கோளாறுகள் ஏற்படுவதாக மருத்துவ நிபுணர்கள் அறிக்கை வெளியிடுகின் றனர். எனவே, கோபம், துக்கம், அவமானம் போன்ற உணர்ச்சிகளை வெளிக் காட்டாமல் மறைப்பதாலோ, அடக்கி வைப்பதாலோ எந்தப் பலனும் இல்லை. அதே சமயத்தில் நமது கோபதாபங்களை நம்மைக் காட்டிலும் தாழ்ந்தவர்கள் மீது காட்டுவதும் தர்மமல்ல. ஒரு சிலர் வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணி களைத் துன்புறுத்தி தங்கள் உணர்ச்சிகளை தணித்துக் கொள்கின்றனர். இது போன்ற செயல்கள் காட்டுமிராண்டித் தனமானது. வன்மையாகக் கண்டிக்கத் தக்கது. வாயில்லாத பிராணிகளைத் தயவுசெய்து துன்புறுத்தாதீர்கள்.
மேன்மையான வழி, விழிப்புடன் வாழக் கற்றுக்கொள்வதுதான். உறங்கும்போது கூட விழிப்புடன் உறங்குமாறு ஞானம் அடைந்தவர்கள் போதிக்கின்றனர். விழிப்புடன் இருக்கும்போது உங்களால் எல்லாச் செயல்களையும் காரண காரியங்களுடன் புரிந்துகொள்ள முடிகிறது. விழிப்புடன் இருக்கும்போது ஐம்புலன்களும் உங்கள் கட்டுப்பாட்டிற்குள் செயல்படுகின்றன. புத்தி மற்றும் சித்தி மட்டுமே மேலோங்கி இருக்கின்றன. விழிப்புடன் இருப்பவர்களால் அடிமனதை அறிய முடிகிறது. அடிமனத்தில் அமைதியும், ஆனந்தமும் மட்டுமே உள்ளது. சத்-சித்-ஆனந்தத்தை (சச்சிதானந்தத்தை) அனுபவிக்க வேண்டுமெனில் விழிப்புடன் வாழக் கற்றுக் கொள்ளுங்கள்
ஆர்.ராஜேஸ்வரி
ஒரு மாணவன் ஒரு துறவியை அடைந்து தனது கோபத்தைக் கட்டுப்படுத்த ஏதேனும் ஒரு தியான முறை இருப்பின் கற்றுத் தருமாறு கோரினான். துறவி, "எங்கே உனது கோபத்தைக் காட்டு நானும் பார்க்கிறேன்' என்று கூறினார். அதற்கு அந்த மாணவன், "தற்சமயம் என் கோபம் என்னோடு இல்லை.
எனவே இப்போது காட்ட இயலாது' என்று கூறினான். "சரி பரவாயில்லை; உன்னிடத்தில் இருக்கும்போது என்னிடம் கொண்டுவந்து காட்டு' எனப் பணித்தார் துறவி. "அதுவும் இயலாத காரியம். ஏனெனில் எப்போது கோபம் வருமென்று தெரியாது. தங்களிடம் நான் வரும்போது அது நிச்சயம் என்னை விட்டு போயிருக்கும்' என்று பதிலளித்தான் மாணவன்.
"அப்படியானால் அது உன்னுடன் பிறந்து, உன்னுடனே உள்ள இயற்கையான குணமல்ல. உனது பெற்றோரோ, மற்றவரோ உனக்குப் பரிசாக வழங்கியதும் அல்ல. நீயாக வெளியிலிருந்து தேடிக்கொண்டு உள்ளாய் என்பது உனக்கு இப்போது விளங்குகின்றதல்லவா! நீ உன்னை மறந்த நிலையில் மற்றவரு டைய உணர்ச்சித் தூண்டுதளுக்கு ஆளாகும்போது கோபம் அடைகிறாய். அதுவே நீ விழிப்புடன் இருக்கும்போது கோபத்திற்கு ஆளாவதில்லை. எனவே நீ எப்போதும் விழிப்புடன் இருக்கக் கற்றுக்கொள்' என அறிவுறுத்தினார்.
கோபம் மட்டுமல்ல, எவரேனும் நாலுபேர் எதிரில் கேலி பேசினால் அவமான மாகக் கருதுகிறீர்கள். உங்களிடம் உள்ள ஏதோ ஒரு குறையை பலர் முன் னிலையில் சுட்டிக்காட்டி கிண்டலடித்தால் மனச்சோர்வு அடைகின்றீர்கள். அது வரையில் மகிழ்ச்சியாக இருந்த நீங்கள் குறுகிப் போகிறீர்கள். முகம் இருண்டு சோகமாக மாறிவிடுகிறீர்கள்.
தங்களுடைய இந்த எதிர் விளைவை எதிர்பார்த்துதான், அவர்கள் கேலியும் கிண்டலும் செய்துள்ளனர் என்பதை நீங்கள் உணர்ந்து கொண்டால், அவர்கள் செயல் உங்களை பாதிக்காது. உங்கள் மகிழ்ச்சியைப் பொறுக்காமல் நீங்கள் முகம் சுருங்குவதைக் கண்டு ஆனந்தப்படும் அப்பிறவிகள், நீங்கள் சிறிதும் சஞ்சலப் படாமல் இருப்பதைக் கண்ணுற்றால் ஏமாற்றமடைந்து ஒடுங்கிச் செல்வார்கள்.
எனவே நீங்கள் எப்போதும் விழிப்புடன் இருந்தால் உங்கள் உணர்ச்சிகள் உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும். இல்லாவிடில் தந்திரசாலிகளின் கைப்பாவை யாக வாழ நேரிடும். சுய கட்டுப்பாட்டுடன் வாழும் வரை நீங்கள்தான் உங்களுக்கு எஜமான். கட்டுப்பாட்டை இழக்கும்போது யாரோ ஒருவருக்கு அல்லது ஏதோ ஒன்றுக்கு நீங்கள் அடிமையாகி விடுகிறீர்கள்.
கடலில் புயல் ஏற்பட்டால் மேற்பரப்பில் மட்டும்தான் அலைகள் ஆர்ப்பரிக்கும். நடுக்கடல் அமைதியாக இருக்கும். அதனால்தான் புயல் சின்னம் உருவான வுடன் கப்பல்களை நடுக்கடலில் கொண்டு சென்று நிறுத்திவிடுகின்றனர். அதுபோல உணர்ச்சிக் கொந்தளிப்புகள் எல்லாம் மனத்தின் மேற்பரப்பு சம்பந்தப்பட்டது. அடி மனம் அமைதியானது. அடி மனத்தை தியானத்தின் மூலம் எளிதாக அடையலாம்.
மருத்துவர்கள் கூற்றுப்படி ரத்தக் கொதிப்பு, நீரிழிவு போன்றவைகள் நோய்கள் அல்ல. நோய்களை மட்டுமே மருந்துகளால் குணப்படுத்த இயலும். இவைகளை கட்டுப்பாட்டில் வைத்திருக்க இயலும்.
குணப்படுத்த இயலாது என்று தெரிவிக்கின்றனர். மேலும் வெளிக்காட்டாமல் அடக்கி வைக்கப்பட்ட உணர்ச்சிகளாலும் ரத்தக்கொதிப்பு, நீரிழிவு, இருதயக் கோளாறுகள் ஏற்படுவதாக மருத்துவ நிபுணர்கள் அறிக்கை வெளியிடுகின் றனர். எனவே, கோபம், துக்கம், அவமானம் போன்ற உணர்ச்சிகளை வெளிக் காட்டாமல் மறைப்பதாலோ, அடக்கி வைப்பதாலோ எந்தப் பலனும் இல்லை. அதே சமயத்தில் நமது கோபதாபங்களை நம்மைக் காட்டிலும் தாழ்ந்தவர்கள் மீது காட்டுவதும் தர்மமல்ல. ஒரு சிலர் வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணி களைத் துன்புறுத்தி தங்கள் உணர்ச்சிகளை தணித்துக் கொள்கின்றனர். இது போன்ற செயல்கள் காட்டுமிராண்டித் தனமானது. வன்மையாகக் கண்டிக்கத் தக்கது. வாயில்லாத பிராணிகளைத் தயவுசெய்து துன்புறுத்தாதீர்கள்.
மேன்மையான வழி, விழிப்புடன் வாழக் கற்றுக்கொள்வதுதான். உறங்கும்போது கூட விழிப்புடன் உறங்குமாறு ஞானம் அடைந்தவர்கள் போதிக்கின்றனர். விழிப்புடன் இருக்கும்போது உங்களால் எல்லாச் செயல்களையும் காரண காரியங்களுடன் புரிந்துகொள்ள முடிகிறது. விழிப்புடன் இருக்கும்போது ஐம்புலன்களும் உங்கள் கட்டுப்பாட்டிற்குள் செயல்படுகின்றன. புத்தி மற்றும் சித்தி மட்டுமே மேலோங்கி இருக்கின்றன. விழிப்புடன் இருப்பவர்களால் அடிமனதை அறிய முடிகிறது. அடிமனத்தில் அமைதியும், ஆனந்தமும் மட்டுமே உள்ளது. சத்-சித்-ஆனந்தத்தை (சச்சிதானந்தத்தை) அனுபவிக்க வேண்டுமெனில் விழிப்புடன் வாழக் கற்றுக் கொள்ளுங்கள்
ஆர்.ராஜேஸ்வரி
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» மறக்கக் கற்றுக் கொள்ளுங்கள்
» தையல் கற்றுக் கொள்ளுங்கள்
» கற்றுத் தரமாட்டார்கள்… நீங்களாகக் கற்றுக் கொள்ளுங்கள்.
» பறப்பதற்கு முன் சரியாக நடக்கக் கற்றுக் கொள்
» நல்லதை கற்றுக் கொடுப்போம்!
» தையல் கற்றுக் கொள்ளுங்கள்
» கற்றுத் தரமாட்டார்கள்… நீங்களாகக் கற்றுக் கொள்ளுங்கள்.
» பறப்பதற்கு முன் சரியாக நடக்கக் கற்றுக் கொள்
» நல்லதை கற்றுக் கொடுப்போம்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|