தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


பெண்கள் எல்லோரும் தியாகிகளா?

View previous topic View next topic Go down

பெண்கள் எல்லோரும் தியாகிகளா? Empty பெண்கள் எல்லோரும் தியாகிகளா?

Post by முழுமுதலோன் Sun May 19, 2013 12:25 pm

பெண்கள் எல்லோரும் தியாகிகளா?

- சமர்ப்பணம், தியாகம் இரண்டும் ஒன்றா..?

- ஒன்றுபோல தோன்றினாலும், இரண்டும் வேறுவேறு.

சமர்ப்பணம் என்பது நம் கடமையை எந்த எதிர்பார்ப்பும் இன்றி செய்வது. சமூகத்திற்காகவும் அதைச் செய்யலாம். வீட்டிற்காகவும் அதைச் செய்யலாம். பண்டிதர் அன்னமாசார்யார் தன் பாடல்களை இறைவனுக்கு சமர்ப்பித்தார். அது அவருக்கு நிரந்தர புகழைத் தந்தது. அது சமர்ப்பணம்தான். தியாகம் அல்ல. ஆனால் அவரே தான் இறைவனைத் தவிர வேறு யாரையும் பாட முன்வராத காரணத்தால் வாழ்வாதாரங்களையும், வருமானத்தையும் இழந்தார். அதனால் அது தியாகம் என்ற நிலையை அடைந்துவிடுகிறது.

சுதந்திர போராட்ட வீரர்களை தியாகிகள் என்கிறோம். ஆனால் ராணுவ வீரர்களை தியாகிகள் என்று கூறுவதில்லை. ஏனெனில் அவர்கள் நாட்டிற்காக தன்னை சமர்ப்பணம் செய்கிறார்கள். அதற்கு கவுரவமிக்க ஊதியம் பெறுகிறார்கள். அவர்களின் சமர்ப்பணத்தால் நாடு பாதுகாப்பாக உள்ளது. ஆனால் விடுதலைப் போராட்ட வீரர்கள், தங்கள் சொத்து, சுகம், இன்பதுன்பங்களை இழந்து விடுதலைக்காக உழைத்தார்கள். அதனால் அது தியாகமாக போற்றப்படுகிறது.

சமர்ப்பணத்திற்கும், லட்சியத்திற்கும் தொடர்பு உள்ளது. நம் குறிக்கோளை அடைய நம் உழைப்பை சமர்பிக்க வேண்டியுள்ளது.

திருமணத்திற்கு பின்பு குடும்பத்தை உருவாக்கும் கடமை கணவன், மனைவி இருவருக்கும் பொதுவாகிறது. அதனால் குடும்பத்தில் சமர்ப்பணம் என்பது இருவரிடத்திலும் இருக்க வேண்டியதாகிறது.

குடும்பத்திற்கான முதல் சமர்ப்பணம் கணவரின் முதல்மாத சம்பளத்திலிருந்து ஆரம்பிக்கிறது. குடும்பத்தின் நிர்வாக பொறுப்பை மனைவி ஏற்றுக்கொள்ளும்போது கணவரின் பொருளாதார ஒத்துழைப்பு மிக அத்தியாவசியமாவதால், கணவரின் சமர்ப்பணம் கட்டாயமாகிறது. அந்த குடும்பத்திற்காக மனைவியும் தன் உழைப்பையும், உணர்வுப்பூர்வமான வழி நடத்தலையும் சமர்ப்பிக்க வேண்டியுள்ளது. அதை அவர்கள் மற்றவர்களுக் காகச் செய்யாமல் மனப்பூர்வமாக செய்யும்போது அது சிறப்பிற்குரியதாகிறது. தன் குடும்ப வளர்ச்சிக்காக ஒரு பெண், சமர்ப்பிக்க வேண்டிய விஷயங்கள் ஏராளம். அதேபோலத்தான் ஒரு ஆண் சமூக வளர்சிக்காக சமர்ப்பிக்க வேண்டியதும் ஏராளம்.

தந்தை தன் மகனின் கல்விச் செலவிற்காக கூடுதல் நேரம் உழைத்து சம்பாதிக்க வேண்டியுள்ளது. அப்படி அவர் உழைப்பதை, தியாகம் என்று சொல்லிவிட முடியாது. அதேபோல் மகனின் பரீட்சை நேரத்தில் தன் தூக்கத்தையும், ஓய்வையும் தவிர்த்துவிட்டு தாய், அவனுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கிறாள். அதுவும் தியாகம் அல்ல. ஏனெனில் இருவருக்கும் குழந்தையிடம் எதிர்பார்ப்பு உள்ளது. அதை அவர்கள் செய்ய வேண்டிய கடமையும் உள்ளது.

தனி மனித வாழ்விலும் சரி, பொதுநல வாழ்விலும் சரி இந்த சமர்ப்பணமும், தியாகமும் ஒன்றை ஒன்று நெருங்கி நிற்கும். ஆனால் இந்த இரண்டுக்குமே வித்தியாசம் உண்டு.

காந்திஜி இந்த நாட்டிற்காக தன் உயிரைக் கொடுத்தார். இது தியாகம். அதே காந்திஜி, அரிச்சந்திரன் நாடகத்தைப் பார்த்து பொய் பேசுவதை தவிர்த்தார். அது சமர்ப்பணம். தியாகம் என்பது ஒருவரின் இறப்புக்கு பின்பும் சிறப்பு அளிக்கும்.

சமர்ப்பணம் ஒருவரை மனிதனாக்குகிறது. தியாகம் ஒருவரை தெய்வமாக்குகிறது. இந்த இரண்டிற்கும் சிறிய இடைவெளிதான். மனிதன் மனிதனாக வாழ சமர்ப்பணம் தேவை. இது கடமையால் உருவாக்கப்படுவது. தியாகம் பிறர் நலனுக்காக தன்னை அர்ப்பணித்துக் கொள்வது. இது உயர்ந்த பண்பு உள்ளத்தால் உருவாக்கப்படுவது.

தாய் கஷ்டப்பட்டு உழைத்து தன் குழந்தைக்கு பிடித்த உணவை சமைத்துக் கொடுத்தால் அது சமர்ப்பணம். பட்டினியோடு இருக்கும் தனக்காக கிடைத்த உணவை வாங்கி, பசியோடு இருக்கும் பக்கத்து வீட்டு குழந்தைக்கு கொடுத்தால் அது தியாகம். எல்லா தாய்மார்களும் தியாகிகள் அல்ல. ஆனால் எல்லா தாய்மார்களும் சமர்ப்பணவாதிகள்தான்!

அலுவலகத்தில் தன்னுடைய பதவி உயர்வை மற்றவருக்கு விட்டுக் கொடுத்தால் அது தியாகம். தன்னுடைய பதவி உயர்வுக்காக நேர்மையாக உழைத்தால் அது சமர்ப்பணம்.

பொதுவாழ்வில் தங்களை தியாகிகள் என்று பலர் கூறிக்கொள்கிறார்கள். அவர்கள் தியாகத்திற்கும், சமர்ப்பணத்திற்கும் உள்ள வித்தியாசம் தெரியாமல் தங்களை குழப்பிக் கொண்டு மக்களையும் குழப்புகிறார்கள். மக்களின் நலனுக்காக பதவியை துறந்தால் அது தியாகம். பதவிக்காக போராட்டம், உண்ணாவிரதம், ஜெயில் என்று போனால் அது தியாகம் அல்ல. ஒரு குடிமகன் சரியாக வருமானவரி செலுத்தினால் அது சமர்ப்பணம். நிவாரணநிதியாக ஒரு மாத ஊதியத்தை கொடுத்தால் அது தியாகம்.

பகவத்கீதையில் கிருஷ்ணர்..

“நீ எனக்கு எதையாவது சமர்பிக்கும்போது நான் உன்னுடன் இருக்கிறேன்.

நீ எதையாவது தியாகம் செய்யும்போது நான் உன்னுடன் இணைகிறேன்”- என்று கூறுகிறார்.

சமர்ப்பணத்திற்கும், தியாகத்திற்கும் உள்ள சிறந்த விளக்கம் இது.

தினமலர்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

பெண்கள் எல்லோரும் தியாகிகளா? Empty Re: பெண்கள் எல்லோரும் தியாகிகளா?

Post by mohaideen Sun May 19, 2013 3:53 pm

தகவலுக்கு நன்றி
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum