தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


மீடியா முதலாளிகள் நினைத்தால், மக்களை எந்த அடிமை நிலைக்கும் கொண்டு சென்றுவிடலாம்

View previous topic View next topic Go down

மீடியா முதலாளிகள் நினைத்தால், மக்களை எந்த அடிமை நிலைக்கும் கொண்டு சென்றுவிடலாம் Empty மீடியா முதலாளிகள் நினைத்தால், மக்களை எந்த அடிமை நிலைக்கும் கொண்டு சென்றுவிடலாம்

Post by Muthumohamed Thu Jun 06, 2013 5:39 pm

முன்குறிப்பு: பத்து வருடங்களுக்குமுன்னால் 2003ல் எழுதியது.ஆனால் நிகழ் காலத்திற்கும் ஏற்றது.

மீடியா முதலாளிகள் நினைத்தால், மக்களை எந்த அடிமை நிலைக்கும் கொண்டு சென்றுவிடலாம் என்பதை ஒரு வெள்ளிக்கிழமை ராத்திரி என் வீட்டு டிவியின் முன்னால் உட்கார்ந்தபடி உணர்ந்தேன்.

பத்து வருடம் முன்வரையில், டிவியில் கிரிக்கெட் மேட்ச் என்றால், அது ஒருநாள் போட்டிதான், அதுவும் பெரும்பாலான போட்டிகள் நேரடி ஒளிபரப்பாக வராது, ஹைலைட்ஸ் என்ற பெயரில் முக்கியமான அசத்தல்களையும் சொதப்பல்களையும் துண்டுதுண்டாக வெட்டிப்போடுவார்கள். ‘தடங்கலுக்கு வருந்துகிறோம்’ பலகையைக் காணாமல் ஒரு மேட்ச் பார்த்துமுடித்தால் போன பிறவிப் புண்ணியம்!

டெஸ்ட் மேட்ச்சா? மூச்! எட்டரை மணிச் செய்தியின் இறுதிப் பகுதியில் மனசே இல்லாமல் அவர்கள் சொல்கிற ஸ்கோரைமட்டும் கேட்டுவிட்டுத் தூங்கப்போகவேண்டியதுதான்!
பின்னர், பெரும்பாலான ஒருநாள் போட்டிகள், இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், ஷார்ஜா போல் நம்மூரைச் சுற்றிய பகுதிகளில் நடக்கிறவை, நேரடி ஒளிபரப்புகளாக வந்தன. பள்ளிக்கூடத்தைக் கட்டடித்துவிட்டு மேட்ச் பார்க்கிற பையன்கள் அதிகமானார்கள், இந்தியா விளையாடும் மேட்ச் என்றால் அலுவலகங்களுக்கு தைரியமாக விடுமுறை கேட்கிற பழக்கமும் ஆரம்பித்தது.

இத்தனைக்கும் தூர்தர்ஷனின் ஒளிபரப்பைப் பிரமாதம் என்றெல்லாம் சொல்வதற்கில்லை, பல தலைமுறைகள் முன்னாலேயே எழுதிவைக்கப்பட்ட ஒன்றிரண்டு கோணங்களில்மட்டுமே மேட்ச்சை ரசிக்கலாம், போதாக்குறைக்கு அவ்வப்போது கேமெராவை ஒரே திசையில் வைத்துவிட்டு தூங்கப்போய்விடுவார்கள், பதினைந்து ஓவர்களுக்கு ஒருமுறைதான் ஸ்கோர் காட்டுவார்கள், மற்ற நேரமெல்லாம் ’ஸுந்தர் ஷாட்’, ‘வெங்ஸர்கார் நே லெக்ஸைட் மேய்ன் க்ளான்ஸ் கீயா’ போன்ற ஹிந்தி வர்ணனைகளைக் கேட்டுத் தலையைப் பிய்த்துக்கொள்ளவேண்டியதுதான், விசுவாசமான காந்தங்கள்போல பந்து இடதுபக்கம் அடிக்கப்பட்டால் கேமரா வலதுபக்கமும், அது வலதுபக்கம் ஓடினால் கேமரா இடதுபக்கமும் நகரும், நியூஸ், பிரதம மந்திரி ஹரப்பா பயணம் போன்ற முக்கிய நிகழ்ச்சிகள் வந்தால் ஈவு, இரக்கம் இல்லாமல் மேட்ச்சை நிறுத்திவிடுவார்கள்… இத்தனைக்கும் இடையே இந்தியா உலகக் கோப்பை வாங்கிய காரணத்தால், அடுத்த (ரிலையன்ஸ்) உலகக் கோப்பைப் போட்டி இந்தியாவில் நடந்ததால் மக்கள் கிரிக்கெட்டைத் தொடர்ந்து ரசித்தார்கள், தங்கள் அணி தோற்றாலும் அடுத்த மேட்ச்சில் ஜெயிக்கும் என்று ஆசையோடு பார்த்தார்கள் (இன்றைக்கும்தான்!), கபில்தேவ், தெண்டுல்கர் போன்றோர் எல்லாருக்கும் பிடித்த முகங்களாக உருவானதற்கு இந்த ஒளிபரப்புகளும் முக்கியக் காரணம்.

அடுத்து, சாடிலைட் சேனல்கள் களத்தில் இறங்கின. இந்தியா உலகத்தின் எந்த மூலையில் கிரிக்கெட் விளையாடப் போனாலும் பின்னாலேயே கேமராக்களோடு ஓடினார்கள் இவர்கள், புதுமையான ஒளிப்பதிவு விந்தைகள், ஆட்டத்துக்கு நடுவே திடீரென்று இடைவெளி கிடைத்தால் போட்டி நடக்கிற தீவின் இயற்கைக் காட்சி, அல்லது போட்டியைக் காண வந்திருக்கிற அம்மணிகளின் காது ஜிமிக்கிகள் என்று எதையாவது சுவாரஸ்யமாகக் காட்டிக் கலகலப்பூட்டினார்கள், நல்ல, புரியக்கூடிய ஆங்கிலத்தில் திறமையான வர்ணனையாளர்கள், அசத்தலான க்ராஃபிக்சும், நுணுக்கமான அலசல்களும், எப்போதும் கண்முன் விரிகிற ஸ்கோர் போர்டுமாய், ஆட்ட அரங்கத்தில் உட்கார்ந்திருப்பதைவிட டிவி முன்னால் உட்கார்ந்திருப்பது சிறந்தது என்று உணரச் செய்யுமளவு இவர்களின் ஒளிபரப்புத் தரம் இருந்தது.

அடுத்து டெஸ்ட் மேட்ச்களும் நேரடி ஒளிபரப்பாயின, போரடிக்கும் ஆட்டம் என்று இந்தியர்கள் பல பத்தாண்டுகளாக நிராகரித்துவந்த ஓர் ஆட்டத்தைக்கூடச் சுவையாக ஆக்கமுடிந்தது இவர்களால்.

இதன் அடுத்த கட்டம் இப்போது, போன வாரம் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் ஆட்டம் மழையால் ரத்தானபோது நாமெல்லாம் என்ன செய்திருக்கவேண்டும்? டிவியை அணைத்துவிட்டுத் தூங்கப்போயிருக்கவேண்டும்!

ஆனால், ஒருவர் என்றால் ஒருவர்கூடத் தூங்கவில்லை. மழையைப் பற்றியும், மழை வராவிட்டால் என்ன பண்ணியிருக்கலாம் என்பதுபற்றியும், மழை இந்தியப் பந்துவீச்சாளர்களுக்குச் சாதகமா, பாதகமா என்பதுபற்றியும், நாளைக்கு மழை பெய்யுமா என்பதுபற்றியும், மழை வந்தவுடன் போட்டியை ரத்து செய்துவிட்டது நியாயமா என்பதுபற்றியும், வெளிநாட்டிலிருந்து மேட்ச் பார்க்க வந்தவர்களுக்கெல்லாம் அதனால் எத்தனை ஏமாற்றம் என்பதுபற்றியும் … இன்னும் என்னென்னவோ பேசி, கிட்டத்தட்ட மூன்று மணி நேரத்துக்கு அவர்கள் அடித்துக்கொண்டிருந்த வெட்டி அரட்டையை எல்லாரும் ஆவலாகப் பார்த்துக்கொண்டிருந்தோம். போட்டியே நடக்காவிட்டாலும், மூன்று மணி நேரம் அவர்கள் ஒளிபரப்பைப் பார்க்கவைத்துவிட்டார்கள்!

முதல் வரியை மீண்டும் படிக்கவும்!

நன்றி என். சொக்கன் வேர்ல்ட்பிரஸ்
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

மீடியா முதலாளிகள் நினைத்தால், மக்களை எந்த அடிமை நிலைக்கும் கொண்டு சென்றுவிடலாம் Empty Re: மீடியா முதலாளிகள் நினைத்தால், மக்களை எந்த அடிமை நிலைக்கும் கொண்டு சென்றுவிடலாம்

Post by மகா பிரபு Thu Jun 06, 2013 6:11 pm

உண்மைதான்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum