தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


படித்ததில் பிடித்தது.

View previous topic View next topic Go down

படித்ததில் பிடித்தது. Empty படித்ததில் பிடித்தது.

Post by முழுமுதலோன் Fri Jun 07, 2013 12:32 pm


உங்களுக்கு எந்த விதமான பிரச்சினைகளும் தேவை இல்லை என்றால் உங்களுக்கு ஏற்ற இடம் சுடுகாடு தான். அந்த இடத்தில் தான் எவ்வித பிரச்சினைகளும் இருக்காது.
-மேக்ஸ்வெல் மால்ட்ஸ்


நேரம் என்பது திரும்பி வராத அம்பு.
-ஜோஷுவா லோத் லிப்மென்


அனைவரிடமும் கர்வம் கொள்ளும் பழக்கம் இருக்கிறது. பிச்சைக்காரன் கூட திருடுவதில்லை என்று கர்வம் கொள்கிறான்.
-ஜப்பான் நாட்டுப் பழமொழி


செய்து வரும் வேலையை இடையில் நிறுத்தி விட்டு வெளியேறுபவர்களைப் பற்றி யாருக்கும் தெரிந்திருக்க முடியாது.
-ஹெர்பெர்ட் கேஸன்


மக்களுடைய பிரதிநிதிகளுடன் பழகியதிலிருந்து நான் நாய்களை மதிக்கத் தொடங்கி இருக்கிறேன்.
-கேம்ரடீன்


கோபத்துடன் கொதித்துக் கொண்டிருக்கும் போது ஒரு அருமையான பிரசங்கம் ஒன்றை உங்களால் செய்ய முடியும். ஆனால் நீங்கள் செய்த அந்தப் பிரசங்கத்தைப் பற்றி நீங்கள் வாழ்நாள் முழுவதும் வருத்தப்படுவீர்கள்.
-ஸ்டேன்லி ஜோன்ஸ்


தன்னைப் பார்க்க வருபவர்கள் அனைவருக்கும் நம்பிக்கையையும் சந்தோஷத்தையும் எவன் கொடுக்கிறானோ அவன் தான் உண்மையாக வாழ்ந்து வருகிறான்.
-லில்லியன் வைட்டிங்


இந்த உலகில் நல்ல முறையில் அபிவிருத்தி செய்யக்கூடிய ஒரு சிறுபகுதி நிச்சயம் இருக்கிறது. அந்த சிறுபகுதி நீங்கள் தான்.
-ஹக்ஸ்லீ

பெரும்பாலான மக்களுக்குப் பதவி, புகழ் போன்றவைகள் கிடைக்காததற்குக் காரணம் என்னவென்றால் அவர்களுக்குச் சிறிது கூட சம்பந்தமில்லாத விஷயங்களைத் தெரிந்து கொள்வதில் பெரும்பாலான நேரத்தை வீணடித்து விடுவது தான்.
-பெர்னார்டு ஷா


நீங்கள் நினைத்தபடி மற்றவர்களை மாற்ற முடியவில்லையே என்று வருந்தாதீர்கள். ஏன் என்றால் நினைத்தபடி நீங்கள் உங்களையே மாற்றிக் கொள்ள முடிவதில்லை.
-தாமஸ் கெம்பிஸ்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

படித்ததில் பிடித்தது. Empty Re: படித்ததில் பிடித்தது.

Post by முழுமுதலோன் Fri Jun 07, 2013 12:33 pm

பறவைகளைப் போல் மனிதனால் காற்றில் பறக்க முடியும். மீனைப் போல் தண்ணீரில் நீந்த முடியும். ஆனால் அவன் இவ்வுலகில் மனிதனைப் போல நடக்க மட்டும் இன்னும் கற்றுக் கொள்ளவில்லை.
- டாக்டர் ராதாகிருஷ்ணன்


நீங்கள் எவ்வளவு புயல்களை சமாளித்தீர்கள் என்பதைத் தெரிந்து கொள்ள உலகம் ஆர்வம் காட்டப் போவதில்லை. கப்பலைப் பத்திரமாக துறைமுகத்திற்குக் கொண்டு வந்து சேர்த்தீர்களா என்பதைத் தான் உலகம் அறிய விரும்புகிறது.
-வில்லியம் மெக்ஃபி


கெட்ட வழிகளில் கிடைக்கும் லாபமானது நஷ்டத்துக்குச் சமமானது.
- நார்மன் வின்செண்ட் பீல்


நீங்கள் புதிதாகத் தெரிந்து கொள்வதை என்று நிறுத்த ஆரம்பிக்கின்றீர்களோ அன்றே உங்கள் வயோதிக காலம் ஆரம்பித்து விடுகிறது.
-ஹெர்பர்ட் காஸன்


ஒரு உபதேசம் கேட்க ஆறு மைல் தூரம் செல்வது எளிது. ஆனால் வீடு திரும்பிய பின் அது பற்றி கால் மணி நேரம் சிந்திப்பது கஷ்டம்.
- பிலிப் ஹென்றி


நெருக்கமான பழக்கம் வெறுப்பை உண்டாக்கா விட்டாலும் இருக்கிற மதிப்பின் கூர்மையை மழுக்கி விடும்.
- ஹாஸ்லிட்


கண்ணியமான மனிதனே இல்லை என்று எவன் சொல்கிறானோ அவன் அயோக்கியன்.
- பெர்க்லி


இருவர் விவாதம் செய்கையில் ஒருவருக்குக் கோபம் வருமானால் விவாதத்தைத் தொடராமல் நிறுத்துபவன் அறிவாளி.
-புளுடார்க்


ஒரு மனிதனிடம் யோக்கியதை எந்த அளவு அதிகமாயிருக்கிறதோ அந்த அளவு அவன் ஒரு ஞானி போல் நடிக்க மாட்டான்.
- லவேட்டர்.


பணக்காரர்களே சந்தோஷத்தைக் காணாமல் பரிதாபமாக வாழ்கையில் ஒவ்வொருவனையும் பணக்காரனாக மாற்ற முயற்சிப்பதில் என்ன பயன்?
- பெர்ட்ராண்டு ரஸ்ஸல்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

படித்ததில் பிடித்தது. Empty Re: படித்ததில் பிடித்தது.

Post by முழுமுதலோன் Fri Jun 07, 2013 12:35 pm

பசித்தவன் எதையும் தின்பான். பகைத்தவன் எதையும் சொல்வான்.
ஓட்டைக் கப்பலுக்கு ஒன்பது மாலுமி

கடுங்காற்று மழை கூட்டும். கடும் சினேகம் பகை கூட்டும்.

வீட்டு வாசலில் காவேரி, முழுக மாட்டாளாம் மூதேவி.

குண்டு பட்டு சாகாதவன் வண்டு கடித்துச் செத்தானாம்

பண்ணிய பாவத்தைப் பட்டுத் தான் தொலைக்க வேண்டும்.

காட்டிலே செத்தாலும் வீட்டிலே தான் தீட்டு.

தலைக்குத் தலை அம்பலம். உலைக்கு அரிசி இல்லை.

நீரிலும் நனைய மாட்டான். நெருப்பிலும் வேக மாட்டான்.

அசை போட்டுத் தின்பது மாடு; அசையாமல் தின்பது வீடு.

ஏறச் சொன்னால் எருதுக்குக் கோபம். இறங்கச் சொன்னால் நொண்டிக்குப் கோபம்.

அஞ்சு காசுக்குக் குதிரையும் வேணும். அது ஆற்றைக் கடந்து பாயவும் வேணும்.

அறுவடைக் காலத்தில் எலிக்கு ஐந்து பெண்சாதி.

மேய்த்தால் கழுதை மேய்ப்பேன். இல்லா விட்டால் பரதேசி ஆவேன்.

அன்ன நடை நடக்கப் போய் தன்னடையும் கெட்டுப் போச்சு.

குதிரை செத்ததும் இல்லாமல் குழி தோண்ட மூணு பணம்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

படித்ததில் பிடித்தது. Empty Re: படித்ததில் பிடித்தது.

Post by முழுமுதலோன் Fri Jun 07, 2013 12:36 pm


ஒரேயடியாக உச்சிக்குப் போய் விட வேண்டும் என்ற முயற்சி தான் உலகில் பெருந்துயருக்குக் காரணமாய் இருக்கின்றது.
- காபெட்
கடமையும் இந்த நாளுமே நம்முடையவை. பயன்களும், எதிர்காலமும் கடவுளைச் சேர்ந்தவை.
- ஹாஸ்லிட்

ஆசிரியராக விரும்புபவன் முதலில் மாணவனாக இருக்க வேண்டும்.
- டிரைடன்

ஒருவர் புன்னகை புரியும் விதத்தில் இருந்தே அவர் குணத்தைப் பற்றி ஏதாவது தெரிந்து கொள்ளலாம். சிலர் புன்னகைப்பதே இல்லை. ஆனால் இளிக்க மட்டும் செய்வார்கள்.
- போவீ

பொறாமையுள்ளவன் தன் தாழ்ச்சியை எப்போதும் உணர்ந்து இருப்பான்.
- பிளினி

மருந்துக்களில் முதன்மையானவை ஓய்வும் உபவாசமும்.
- ஃபிராங்க்ளின்

ஒன்றுக்கும் பிரயோசனமில்லை என்று தள்ளி விடும் படியானவராக உள்ள எவரையும் இது வரையில் நான் பார்த்ததில்லை. சரியான சமயம் வாய்த்தால் ஏதாவதொரு வகையில் எவரும் பயன்படக் கூடும்.
- ஹென்றி ஃபோர்டு

வெறும் பேச்சும், பெரும் பேச்சும் பேசி செயல்படாமல் சோம்பிக் கிடப்பவர்கள் வழிகாட்டும் தலைவர்கள் என்ற மதிப்பினைப் பெறுகின்றனர் என்றால் அவர்கள் சுட்டிக் காட்டுகின்ற வழியில் நடப்பவர்கள் எத்தகைய லட்சியவாதிகளாகத் திகழ்வர் என்பதைக் கூறவும் வேண்டுமா?
- மான்செஸ்டர் கார்டியன்

சோம்பேறித்தனம், கர்வத்தால் மனம் கெடுதல், தடுமாற்றம், கூட்டமாக வீண் அரட்டையடித்தல், முரட்டுப் பிடிவாதம், போலித் தற்பெருமை, சுயநலம் ஆகிய ஏழு கெட்ட தன்மைகளும் நம்மை சுற்றி வளைத்துக் கொண்டு கெடுதல் செய்கின்ற பாவங்களாகும்.
- விதுர நீதி

ஒரு ஏழையான முட்டாளுக்கு நிறைய பணம் கிடைத்தால் அவன் பணக்கார முட்டாளாகத் தான் மாற முடியும்.
- ஆபிரகாம் மில்லர்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

படித்ததில் பிடித்தது. Empty Re: படித்ததில் பிடித்தது.

Post by முழுமுதலோன் Fri Jun 07, 2013 12:38 pm

எண்ணம் எல்லாம் பொய், எமன் ஓலை மெய்.

என் வீட்டுக்கு வந்தால் என்ன கொண்டு வருகிறாய்? உன் வீட்டுக்கு வந்தால் என்ன தருகிறாய்?

கீரைத் தண்டு பிடுங்க ஏலேலப் பாட்டா?

எள் எண்ணெய்க்குக் காய்கிறது. எலிப் புழுக்கை எதற்குக் காய்கிறது?

கோழி களவு போனதற்கு ஆடு வெட்டியா பொங்கல் இடுவார்கள்?

பூனைக்குப் பயந்து புலியிடம் போகலாமா?

சத்திரத்து சோத்துக்கு தாத்தய்யங்கார் உத்தரவு எதற்கு?

வேகாத சோத்துக்கு விருந்தாளி இரண்டு பேர்.

தானாகக் கெடுத்தது பாதி; தம்பிரான் கெடுத்தது பாதி.

தலைவலியும் தரித்திரமும் தனக்கு வந்தால் தெரியும்.

பறக்கப் பறக்க பாடுபட்டாலும் படுக்கப் பாயில்லை.

உடையவன் பாராத வேலை உருப்படாது.

தூங்குகிற மணியக்காரனை எழுப்பினால் பழைய கந்தாயம் கேட்டானாம்.

எடுக்கிறது எருமைச்சாணி, படுக்கிறது பஞ்சு மெத்தை

ஆசை தீர அனுபவித்தவனும் இல்லை, அள்ளிக்கொடுத்து கெட்டவனும் இல்லை.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

படித்ததில் பிடித்தது. Empty Re: படித்ததில் பிடித்தது.

Post by முழுமுதலோன் Fri Jun 07, 2013 12:39 pm

இன்றைக்கு என்பதும், நாளைக்கு என்பதும் இல்லை என்பதற்கு அடையாளம்

அஞ்சினவனைக் குஞ்சும் விரட்டும்.

தாய் அறியாத சூல் இல்லை. மனம் அறியாத பொய் இல்லை.

வைத்தியன் பிள்ளை மருந்தினால் சாகும்.

ஆயிரம் காக்கையை ஓட்ட ஒரு கல் போதும்.

காற்றில்லாமல் தூசு பறக்காது.

காவடிப்பாரம் சுமப்பவனுக்குத் தான் தெரியும்.

எகிறி எகிறி குதித்தாலும் எட்டு பத்தாகாது.

சாட்டை அடியும் சவுக்கடியும் தாங்கலாம்
மூட்டைக் கடியும் முணுமுணுப்பும் ஆகாது.

பனி பெய்து குளம் நிரம்பாது.

பாடுபட்டுக் குத்தினாலும் பதரில் அரிசி இருக்காது.

நாட்டுக்கு நல்ல துரை வந்தாலும் தோட்டி சுமப்பது புல் சுமையே.

பொன்குடத்திற்குப் பொட்டு தேவையில்லை.

இழவுக்கு வந்தவளா தாலி அறுப்பாள்?

மூன்று செவிக்கு எட்டின செய்தி மூடுமந்திரம் ஆகாது.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

படித்ததில் பிடித்தது. Empty Re: படித்ததில் பிடித்தது.

Post by முழுமுதலோன் Fri Jun 07, 2013 12:41 pm

ஒருவன் தான் தவறு செய்வதை ஒப்புக் கொள்ள வெட்கப்படவே கூடாது. ஒப்புக் கொள்வதன் பொருள் என்ன? அவன் நேற்றை விட இன்று அதிக அறிவு பெற்றிருக்கிறான் என்பதே.- போப்


நாம் வாழும் போது உலகம் முழுவதையும் வளைத்துக் கட்டிக் கொள்ள விரும்புகிறோம். ஆனால் இறந்த பிறகு தான் எவ்வளவு சிறிய இடம் நமக்குப் போதுமானது என்று தெரிகிறது.
- மாசிடோனிய மன்னர் பிலிப்

கல்விச் செருக்கு படித்த குப்பைகளை நம் தலைகளில் திணித்து
இருக்கின்ற மூளையை வெளியே தள்ளி விடுகின்றது.
- கோல்டன்

கேலியின் பெருமை கேட்பவர் செவியைப் பொறுத்தது. அது ஒரு போதும் சொல்பவர் நாவில் இல்லை.
- ஷேக்ஸ்பியர்

சணலை நெருப்பில் இருந்து ஒதுக்கி வைக்கவும். இளைஞனை சூதாட்டத்தில் இருந்து ஒதுக்கி வைக்கவும்.
- ஃபிராங்க்ளின்

ஒருவன் எந்த மனிதனுக்கு அஞ்சுகிறானோ அவனை நேசிப்பதில்லை.
- அரிஸ்டாடில்

சம்பாஷணை உலக அறிவை விருத்தி செய்யும். ஏகாந்தம் பேரறிவின் பள்ளி.
- கிப்பன்

உரையாடலில் மௌனமாய் இருப்பதும் ஒரு கலையாகும்.
- ஜாஸ்லிட்

அறிவுடைமை வலிமையை விடப் பெரியது. இயந்திர நுணுக்கங்களை அறிந்தவன் வெறும் வலிமையைக் கண்டு சிரிக்கிறான்.
- ஜான்சன்

நல்லவர்களது துரதிர்ஷ்டம் அவர்களை வானை நோக்கி முகங்களைத் திரும்பும்படி செய்கின்றது; கெட்டவர்களது துரதிர்ஷ்டம் அவர்கள் தரையை நோக்கி தலைகளைத் தொங்கவிட்டுக் கொள்ளும்படி செய்கின்றது.
- ஸா அதி

கண்கள் ஒன்று சொல்ல நாவொன்று சொன்னால், விஷயம் அறிந்தவன் கண்கள் சொல்வதையே நம்புவான்.
- எமர்சன்

பொய்யைத் துரத்திக் கொண்டு ஓடாதே. நீ அதை விட்டு விட்டால் அது விரைவில் தானாகவே செத்து விடும்.
- இ.நாட்


வழக்கங்கள், நம்பிக்கைகள், உறுதிகளை அமைக்க வேண்டிய பருவம் இளமைப் பருவம்.
- ரஸ்கின்

கூட்டம் தன் அபிமானத்தைக் கொண்டே சிந்திக்கும். அறிவைக் கொண்டு சிந்திக்காது.
-ட்புள்யூ.ஆர்.ஆல்ஜெர்

நேர்த்தியாகச் செய்து முடிப்பதோடு உன் வேலை தீர்ந்தது. அதைப் பற்றி பேசுவதை மற்றவர்களுக்கு விட்டு விடு.
- பிதாகோரஸ்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

படித்ததில் பிடித்தது. Empty Re: படித்ததில் பிடித்தது.

Post by முழுமுதலோன் Fri Jun 07, 2013 12:42 pm


காலம் போகும் வார்த்தை நிற்கும். கப்பல் போகும் துறை நிற்கும். (துறை=துறைமுகம்)

* அறிந்தவன் என்று கும்பிட்டால் அடிமை என்று சொல்லுவதா?


ஆற்றிலே நின்று அரகரா என்றாலும் சோற்றிலே இருக்கார் சொக்கலிங்கம்.

சுடுகாடு போன பிணம் வீடு திரும்பாது.

இட்டது எல்லாம் பயிராகாது. பெற்றது எல்லாம் பிள்ளையாகாது.

வாய் நல்லதானால் ஊர் நல்லது.

கேடு வரும் பின்னே. மதி கெட்டு வரும் முன்னே.

காரியம் பெரிதேயன்றி வீரியம் பெரியதல்ல.

மயிர் சுட்டுக் கரியாகாது.

ஆகாயத்தில் எறிந்த கல் அங்கேயே நிற்காது.

விசாரம் முற்றினால் வியாதி. (விசாரம்=கவலை)

திரு உண்டானால் திறமையும் உண்டாகும். (திரு=செல்வம்)

பல்லக்கு ஏற பாக்கியம் உண்டு; உந்தி ஏற சீவன் இல்லை. (சீவன்=உடல் சக்தி)

ஆசை இருக்குது தாசில் பண்ண; அம்சம் இருக்குது கழுதை மேய்க்க.

ஞானிக்கு இல்லை நாளும் கிழமையும்.

ஆற்று மணலில் கிடந்து புரண்டாலும் ஒட்டுகிறது தான் ஒட்டும்.

தலையை சிரைப்பதால் தலையெழுத்து மாறாது.

அரண்மனைக் கோழிமுட்டை அம்மியையும் உடைக்கும்.

அரசன் அன்று கொல்வான்; தெய்வம் நின்று கொல்லும்.

தின்னப் படை உண்டு; வெல்லப் படை இல்லை.

எட்டினால் சிண்டைப் பிடி; எட்டாவிட்டால் காலைப் பிடி.

வாழைப்பழம் கொண்டு வந்தவள் வாசலிலே. வாய் கொண்டு வந்தவள் வீட்டுக்குள்ளே.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

படித்ததில் பிடித்தது. Empty Re: படித்ததில் பிடித்தது.

Post by முழுமுதலோன் Fri Jun 07, 2013 12:44 pm

சாமி காட்டுமே தவிர ஊட்டாது.

அறப்படித்தவன் அங்காடி போனால் விற்கவும் மாட்டான், வாங்கவும் மாட்டான்.

இளமையில் கல்வி, சிலையில் எழுத்து.

உலக்கைப் பூசைக்கு அசையாதவள் திருப்பாட்டுக்கு அசைய மாட்டாள்.

கொண்டவன் தூற்றினால் கண்டவன் தூற்றுவான்.

தெய்வம் பாதி திறமை பாதி.

தளுக்கும் மினுக்கும் தாம்பத்தியம் ஆகாது.

ஆங்காரத்தினால் அழிந்தவர்கள் ஆயிரம் பேர்.

சனப்பலம் இருந்தால் மனப்பலம் வரும்.

தாய் இல்லாத போது தகப்பன் தாயாதி.

அரசன் குடுமியையும் அம்பட்டன் பிடிப்பான்.

மனசாட்சியை விட மறுசாட்சி வேண்டாம்.

கடல் வற்றிக் கருவாடு தின்ன ஆசைப்பட்டு குடல் வற்றி செத்ததாம் கொக்கு.

கூத்தாடி கிழக்கே பார்ப்பான். கூலிக்காரன் மேற்கே பார்ப்பான்.

பாராத உடைமையும் பாழ், கேளாத கல்வியும் பாழ்.

குயவனுக்குப் பல நாள் வேலை, தடியனுக்கு ஒரு நிமிட வேலை.

பெண்ணின் கோணல் பொன்னில் நிமிரும்.

அரைக்காசுக்குப் போன வெட்கம் ஆயிரம் கொடுத்தாலும் திரும்பாது.

எழுதிப் பாராதவன் கணக்கு கழுதை மேய்ந்த களம்.

அரையிலே புண்ணும் அண்டையிலே கடனும் ஆகாது.

முடியுள்ள சீமாட்டி எப்படியும் முடிப்பாள்.

கடன் வாங்கிக் கடன் கொடுத்தவனும் கெட்டான். மரம் ஏறிக் கை விட்டவனும் கெட்டான்.

அக்காள் இருந்தால் மச்சான் உறவு.

முரட்டுத்தனத்துக்கு முதல் தாம்பூலம்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

படித்ததில் பிடித்தது. Empty Re: படித்ததில் பிடித்தது.

Post by முழுமுதலோன் Fri Jun 07, 2013 12:45 pm

கவலையோ பயமோ இல்லாமல் வாழ்க்கையை நடத்துவதில் மிகுந்த அழகு இருக்கிறது. நம் அச்சங்களில் பாதி ஆதாரமற்றவை, பாதி நம்பத் தகாதவை.
- போவீ


ஒரு சிறந்த கவிஞன் ஒரு சோலையின் மிகச் சிறந்த பயன்களை எல்லாம் அனுபவித்து விடுகிறான். ஆனால் அந்த சோலையின் சொந்தக்காரனோ பழங்கள், மட்டுமே வீட்டுக்குச் சுமந்து செல்கிறான்.
- தோரோ


உலகில் நீங்கள் பிறக்கும் போது எதையும் கொண்டு வராமல் வெறும் உடலோடு தானே பிறந்தீர்கள். அதனால் பின்னால் எது கிடைத்தாலும் அதை லாபமென்று கொல்கிற மனப்பான்மையே வேண்டும்.
- டாமிஸ்டீல்


பிடிவாதமுள்ள மனிதர்களுக்கு அவர்கள் அடையும் கஷ்ட நஷ்டங்களே ஆசிரியர்கள்.
- ஷேக்ஸ்பியர்


மனிதர்கள் நம்மை நிந்திக்கையில் நாம் நம்மையும், அவர்கள் நம்மைப் புகழும் போது நாம் அவர்களையும் சந்தேகிக்க வேண்டும்.
- கோல்டன்


அபிப்பிராய வேற்றுமைகளுக்காக நான் ஒரு மனிதனை விட்டு விலக மாட்டேன், அவனுடைய முடிவைக் கண்டு கோபமடையவும் மாட்டேன். ஏனெனில் நானே சில நாட்களுக்குப் பிறகு என் கருத்துகளுக்கு எதிராக முடிவு செய்யவும் கூடும்.

- ஸர் தாமஸ் ப்ரௌன்


அதிக வறுமைப்பட்டவரும் அதிகச் செல்வமுடையவரும் நியாயத்தைச் சொன்னால் கேட்க மாட்டார்கள்..
- ஃபீல்டிங்


தகுதியற்ற புகழ்ச்சி மறைமுகமான அவதூறாகும்.
- போப்


ஒரு மனிதனுடைய பண்பை அவனுடைய அசாதாரணமான முயற்சிகளைக் கொண்டு அளவிட வேண்டாம். அவனுடைய தினசரி நடத்தையைக் கொண்டே பார்க்க வேண்டும்.
- பாஸ்கல்


தன் அறியாமையைத் தான் அறியாதிருத்தலே அறியாமையின் துயரம்.
- ஆல்காட்


அற்ப மனிதர்களுக்கு அற்ப விஷயங்கள் பெரிதானவை.
- கோல்டுஸ்மித்

ஆடம்பரத்தின் மென்மையான மெத்தையில் தான் பெரும்பாலான சாம்ராஜ்ஜியங்கள் மாய்ந்தொழிகின்றன.
- யங்


தொகுப்பு - என்.கணேசன்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

படித்ததில் பிடித்தது. Empty Re: படித்ததில் பிடித்தது.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum