Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
இன்னும் வளரவேண்டும்...
Page 1 of 1 • Share
இன்னும் வளரவேண்டும்...
எனக்கு எல்லாம் இருக்கு; இதுக்கு மேல ஒண்ணும் தேவையில்லை. அப்புறம் நான் ஏன் அலட்டிக்கணும்?’’ என்று வாழ்வின் மிக உயரிய நிலையைத் தொட்டவர்களைப் போல சிலர் கேட்பது எனக்கு வியப்பைத் தருகிறது.
600 கோடி ரூபாய்க்கு வருட வர்த்தகம் செய்யும் ஒரு மிகப்பெரிய தமிழகத் தொழிலதிபரைக் கேட்டேன். ‘‘என்ன, மன நிறைவுதானே?’’ ‘‘நிச்சயம் நிறைவுதான். ஆனாலும் இதோடு திருப்தியடைந்துவிட முடியுமா? அடுத்த இலக்கை நிர்ணயித்து அதை நோக்கி நகர ஆரம்பித்தாயிற்று.’’
‘‘இன்னும் வளரவேண்டும்தான். ஆனால் இதற்கு எல்லைதான் என்ன?’’
‘‘ஒரு தொழிலில் திருப்தி அடைந்துவிடுவது என்பது தேக்கம் அடைவதற்குச் சமம். தேக்கம் வந்துவிட்டால் அது சரிவின் ஆரம்பம் என்பேன்.
தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருப்பதில் பல நன்மைகள் இருக்கின்றன. அம்பானி சகோதரர்களிடம் கேட்டுப்பாருங்களேன், திருப்திதானே என்று! இன்னும் வளர்ந்தால் எத்தனையோ பேருக்கு நேரடி வேலை வாய்ப்புகளும், மறைமுக வேலை வாய்ப்புகளும் தர என் நிறுவனம் காரணமாக இருக்குமே!’’
இப்படி அவர் மண்டைப் போடாகப் போட்ட பிறகு ஆசைதான் துன்பங்களுக்குக் காரணம் என்கிற புத்தரின் போதனையையும், ‘போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து’ என்கிற நம் சான்றோரின் வாக்கையும் வைத்து இவரை வாதத்தில் வென்றுவிட முடியும் என்கிற நம்பிக்கை எனக்குப் போய்விட்டது.
‘உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு’ என்கிற பாடல் வரிகள் 60களில் நன்கு எடுப்பட்டன. இன்று ‘உனக்கு மேலே உள்ளவர் கோடி; நினைத்துப் பார்த்து நீயூம் உயரு’ என்று புதுக் கவிதை பாட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.
ஒகேனக்கலில் பரிசல்காரர்கள் நீரோட்டத்தை எதிர்த்து திறமையாகப் பரிசலை நகர்த்துகிறார்கள். வேகமான நீரோட்டத்திற்கு எதிராக ஒரு கைத் துடுப்பு என்ன பெரிதாகச் செய்து விடமுடியும்?
ஆனாலும் மெல்ல, அழகாக முன்னேறுகிறார்கள். இலக்கில் சரியாகக் கொண்டுபோய்ச் சேர்க்கிறார்கள். பிறகுதான் வியர்வையைத் துடைக்கிறார்கள். இப்படி நீரோட்டத்திற்கு எதிராகத் துடுப்புப் போடுவதை நிறுத்திவிட்டு சாவகாசமாக வியர்வையைத் துடைத்தால் நாம் எங்கே கொண்டு போய்த் தள்ளப்படுவோம் என்று சிந்தித்துப் பார்த்தேன்.
வாழ்விலும் இதேதான். போட்டிமயத்தில் எவ்வளவு முன்னதாகப் போனாலும் நூறாவது ஆளாக ஆகிவிடுகிற நாம், நம் போட்டி உணர்வையும் வளர்ச்சியில் காட்டும் தாகத்தையும் திருப்தியடைந்த நிலையில் ஒதுக்கிவைத்தால் நாம் எங்கே கொண்டுபோய் நிறுத்தப்படுவோம் என்று எண்ணிப் பாருங்கள்.
வளர்ச்சியில் தாகம் காட்டாத வரை இருக்கிற இடத்தைக் காப்பாற்றிக் கொள்வதே கடினமாகிவிடும். நாளும் படிப்படியான முன்னேற்றம். அல்லது அங்குல முன்னேற்ற மேனும். இதுதான் இந்த நிமிடத்திற்கு வேண்டிய முக்கியச் சிந்தனை.
நன்றி குமுதம்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» இன்னும் சில நிமிடங்களில்...
» இன்னும் ஏதோ ஒன்று..
» எடுத்து வையுங்கள் இன்னும் ஒரே ஒரு அடி...
» இன்னும் கொஞ்சம் சிரியுங்களேன்!!!!
» உனக்கேன் இன்னும் புரியவில்லை? -
» இன்னும் ஏதோ ஒன்று..
» எடுத்து வையுங்கள் இன்னும் ஒரே ஒரு அடி...
» இன்னும் கொஞ்சம் சிரியுங்களேன்!!!!
» உனக்கேன் இன்னும் புரியவில்லை? -
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|