தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சாரல் காலம் ! நூல் ஆசிரியர் கவிஞர் மா .முத்துப்பாண்டி ! நூல் அணிந்துரை ; கவிஞர் இரா .இரவி !

View previous topic View next topic Go down

சாரல் காலம் ! நூல் ஆசிரியர் கவிஞர் மா .முத்துப்பாண்டி ! நூல் அணிந்துரை ; கவிஞர் இரா .இரவி ! Empty சாரல் காலம் ! நூல் ஆசிரியர் கவிஞர் மா .முத்துப்பாண்டி ! நூல் அணிந்துரை ; கவிஞர் இரா .இரவி !

Post by eraeravi Sat Jun 22, 2013 3:58 pm

சாரல் காலம் !
நூல் ஆசிரியர் கவிஞர் மா .முத்துப்பாண்டி !
நூல் அணிந்துரை ; கவிஞர் இரா .இரவி !

வானிலிருந்து வரும் அமுதம் மழை .உலக உயிரினங்களின் உயிர் மழை .ஒப்பற்ற மழை பற்றி பல்வேறு கோணங்களில் கவிதை வடித்துள்ளார் .நூல் ஆசிரியர் கவிஞர் மா .முத்துப்பாண்டி.உள்ளத்தில் உள்ளது கவிதை .உள்ளத்து உணர்வு கவிதை .கண்ட காட்சி கவிதை என்று முத்தான  கருத்துக்களால் முத்துக் கவிதை வடித்துள்ளார் .மா .முத்துப்பாண்டி .

மழையைப்  பற்றிப்  பல்வேறு கவிஞர்கள் கவிதை எழுதி உள்ளார்கள் .ஆனால் கவிஞர் மா .முத்துப்பாண்டி அளவிற்கு மழை பற்றி யாரும் எழுதவில்லை என்றுதான் சொல்லவேண்டும் .அந்த அளவிற்கு அடை மழை போல கவிதைகளைக்  கொட்டி உள்ளார் .சாரல் காலம் கவியருவியில் குளித்த மகிழ்ச்சியைத் தருகின்றது .பாராட்டுக்கள் .


இயற்கையை ரசிக்கத் தெரிந்தால்தான் இயற்கைப்  பற்றி எழுதிட முடியும் .நூல் ஆசிரியர் கவிஞர் மா.முத்துப்பாண்டி மழை கொட்டுவதை இமை கொட்டாமல் ரசித்த காரணத்தால் , மழையைப் பற்றி பல்வேறு கவிதைகள் வடித்துள்ளார் .பதச்சோறாக சில வரிகள் மட்டும் .

ரசனை !
கருமேகங்களை  நாண 
நடனமாடச் சொல்லுங்கள் !
நாம் அனைவரும் 
ரசிப்போம் ! ஈர்க்கின்ற  
மழைத்துளிகளில் !


நயகன் ,நாயகி பற்றியும் கவிதைகள் உள்ளன .கும்பகோணம் குழந்தைகள் தீ விபத்து ,சுனாமி என சமுதாய நிகழ்வுகள் யாவும் உற்று நோக்கி கவிதைகள் வடித்துள்ளார் .பாராட்டுக்கள் .இந்த நூலில்  புதுக்கவிதைகளும் ,ஹைக்கூ கவிதைகளும் உள்ளன .வாசகர்களுக்கு பல்சுவை விருந்து வைத்துள்ளார் .

பறவைக்காக ஏங்கி பறவை நேசத்துடன் வடித்த ஹைக்கூ நன்று .

எப்போது கிடைக்கும் விடுதலை 
இந்த அழகான 
கூண்டுக் கிளிக்கு !

தேசப்பிதா காந்தியடிகளின் கள்ளம் கபடமற்ற வெள்ளைச் சிரிப்பைப் பாராட்டும் விதமாக உள்ள ஹைக்கூ நன்று .

சிரிப்பைப் பார்த்துதான் சிரிக்கவே   
கற்றுக் கொண்டேன் ரூபாய் 
நோட்டில் காந்தியின் படம் !

நாட்டுப்பற்றை விதைக்கும் விதமாக உள்ள இராணுவ தேசிய மாணவர் படை கவிதை நன்று .கிராமிய மணம் வீசும் வண்ணம் கிராமிய மொழியிலும் கவிதை வடித்துள்ளார் .

காதலைப் பாடாத கவிஞன் இல்லை .காதலைப் பாடாதவன்  கவிஞன் இல்லை .கவிஞர் மா .முத்துப்பாண்டியும் காதலைப் பாடி உள்ளார் .

காதல் !
இயங்கிடும் இதயம் பிடிக்கும் !
இரக்கம் வரும் மனம் பிடிக்கும் !
புல்லிடம் பேசும் புன்னகை பிடிக்கும் !
புன்னகையில் மயங்கும் தேன்மொழி பிடிக்கும் !


பிடிக்கும் ! பிடிக்கும் !என்று முடித்து வாசகர்களுக்குப் பிடிக்கும் படியாக கவிதை எழுதி உள்ளார் .பாராட்டுக்கள் .எதிர் காலத்தில் பெரிய கவிஞராக வருவார் என்பதைப் பறைசாற்றும் விதமாக கவிதைகள் உள்ளன .இது கவிஞர் மா .முத்துப்பாண்டியின் முதல் நூல் மட்டுமல்ல ,முத்தாய்ப்பான நூலாக  வந்துள்ளது .வாழ்த்துக்கள் .


.மேஸ்ட்ரோ இளையராஜா பற்றிய கவிதை நன்று .அணிந்துரையிலேயே அத்தனை கவிதைகளையும் எழுதி விட முடியாது என்ற காரணத்தால் இன்னும் கவிதைகள்  எழுதவில்லை .உள்ளே சென்று நூலைப் படித்துப் பாருங்கள் .உங்கள் உள்ளதைக் கொள்ளைக் கொள்ளும் கவிதைகள் உள்ளன .



மனதில் பட்டதை ,தான் உணர்ந்த உணர்வை ,கண்ட காட்சியைப்  படம் பிடித்துக் காட்டுவதுபோல கவிதைகள் எழுதி உள்ளார் .மதுரை மன்னர் கல்லூரி மாணவர் .கல்லூரி மாணவப்  பருவத்தில் கவிதை எழுதும் படைப்பாற்றலுடன் கவிஞர் மா .முத்துப்பாண்டி திகழ்வது ,இன்றைய இளைய தலைமுறை நல்வழியில் பயணிக்கிறது என்று மகிழ்வடையும் விதமாக உள்ளது .இது முதல் நூல் .கன்னி முயற்சி .தனக்குள் உள்ள கவிதை எழுதும் ஆற்றலை இன்னும் வளர்த்துக் கொண்டு இன்னும் பல நூல்கள் எழுதிட வாழ்த்துகின்றேன் .



இந்த நூல் படிக்கும் வாசகர்கள் அனைவருக்கும் தான் கண்ட மழைக்காட்சி நினைவிற்கு வரும் என்று அறுதியிட்டுக் கூறலாம் .சாரல் காலம் நூல் குற்றாலச் சாரலாக ,கவிதைச் சாரலாக உள்ளது .உள்ளே சென்று கவிதைகளைப் படித்துப் பாருங்கள் .மழையை மறக்க மாட்டீர்கள் .மாமழை போற்றுவோம் !மாமழை போற்றுவோம் !

eraeravi
eraeravi
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 553

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
» தேன் சுவைத் துளிப்பாக்கள் ! நூல் ஆசிரியர் கவிஞர் முனைவென்றி நா .சுரேஷ் குமார் நூல் அணிந்துரை கவிஞர் இரா .இரவி .
» நம்மை மீட்டும் வீணை ! நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி ! நூல் அணிந்துரை கவிஞர் இரா .இரவி !
» சிறகுகளின் சுவாசங்கள் ! நூல் ஆசிரியர் கவிஞர் மு .ஆ .பீர்ஒலி . நூல் அணிந்துரை கவிஞர் இரா .இரவி .
» ஆதாம் எலும்பில் ஏவாள் அல்ல .. நூல் ஆசிரியர் கவிஞர் கந்தகப்பூக்கள் ஸ்ரீபதி . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
» படிக்காத மேதை காமராஜரிடம் படிக்க வேண்டியவை ! நூல் ஆசிரியர் கவிஞர் நீலம் மதுமயன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .

Permissions in this forum:
You cannot reply to topics in this forum