Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
ஆதாம் எலும்பில் ஏவாள் அல்ல .. நூல் ஆசிரியர் கவிஞர் கந்தகப்பூக்கள் ஸ்ரீபதி . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
Page 1 of 1 • Share
ஆதாம் எலும்பில் ஏவாள் அல்ல .. நூல் ஆசிரியர் கவிஞர் கந்தகப்பூக்கள் ஸ்ரீபதி . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
ஆதாம் எலும்பில் ஏவாள் அல்ல ..
நூல் ஆசிரியர் கவிஞர் கந்தகப்பூக்கள் ஸ்ரீபதி .
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
கந்தகப்பூக்கள் பதிப்பகம் .குட்டியணஞ்சான் ,தெரு சிவகாசி .626123.
செல் 9843577110
விலை ரூபாய் 60.
நூலின் தலைப்பும் , அட்டைப்படமும் வித்தியாசமாக உள்ளது .நூல் விமர்சனம் எழுதுவதில் தனி முத்திரை பதித்து வரும் இனிய நண்பர் சேலம் கவிஞர் பொன் குமார் அவர்களின் அணிந்துரை நூலிற்கு அழகு சேர்ப்பதாக உள்ளது .இந்நூல், எங்க வீட்டுச் செல்லங்களுக்கு என்று பதிவு செய்து இருப்பது சிறப்பு .
நூல் ஆசிரியர் சிற்றிதழ் ஆசிரியர் கவிஞர் கந்தகப்பூக்கள் ஸ்ரீபதி தொடர்ந்து இயங்கி வரும் படைப்பாளி .திருமணத்திற்கு மொய் செய்வதை நினைத்தாலே பலருக்கு வெறுப்பு வரும் .ஒரே நேரத்தில் ஒரே நாளில் பல திருமணங்கள் வந்து சிரமப்படுவதும் உண்டு .செலவு பெருகி வருகிறது .வரவு பெருக வில்லையே என்று வருந்துவதும் உண்டு .அவர்களது மன நிலையை படம் பிடித்துக்காட்டும் புதுக்கவிதை ஒன்று .
அழைப்பிதழ்களை வரவேற்பதில்லை ..
என்ன செய்வது
தேய்பிறைகளிலும் முகூர்த்தங்கள் !
முகூர்த்தங்கள் அதிகரித்த அளவிற்கு
வருமானங்கள் ?
காதலியைப் பார்த்துக் கேட்கும் கேள்வி போல ஒரு நுட்பமான கவிதை .
காதல் விருட்சம் .
வெறும் சதை என்று
வியாக்கியானம் பேசித் திரியும் என்னுள்
எப்படி நீ விதையானாய் ?
அமெரிக்கா என்ன சொல்கிறது அதனை உடன் நிறைவேற்றும் அடிமைகளாக மத்தியில் ஆள்வோர் இருக்கும் அவலத்தை எள்ளல் சுவையுடன் சுட்டும் கவிதை நன்று .
நவீன இராமாயணம் !
இந்திய சீதை
அழுது கொண்டே இருக்கிறாள் !
அமெரிக்க அசோக வனத்தில் !
போலிகள் நிஜத்தை வெல்லும் அளவிற்கு தோற்றம் அளிக்கும் .சிலர் போலிகளைக் கண்டு ஏமாந்து விடுவதும் உண்டு .
அதனை உணர்த்தும் கவிதைகள் .
பொய் மான் கூட்டம் !
புகைப்படச் சட்டத்துள்
சலசலத்து வழியும்
நீர் வீழ்ச்சி !
குளிர்பதன பெட்டி மேல்
பறப்பது போல் நிற்கும்
வண்ணத்துப் பூச்சி !
தொலைக்காட்சிப் பெட்டி மேல்
வாசமற்றுச் சிறுக்கும்
பூ ஜாடி !
நாம் கண்ட சில போலிகளைக் காட்சிப் படுத்தி நூல் ஆசிரியர் வெற்றி பெறுகின்றார் .போலிகளைக் கண்டு ஏமாறாதீர்கள் என்று எச்சரிப்பது போல உள்ளது .
.உனக்கான கவிதை !
எனக்கான கவிதையாய்
நீ இருக்கையிலே
கவிதைக்கே கவிதையா ?
சிந்தை சிதறுகிறது !
புதுக்கவிதையில் காதலியை கவிதையாக்கி படிக்கும் வாசகர்களுக்கு அவரவர் காதலியை நினைவூட்டி விடுகிறார் .
பெயரிடாதீர் !
ஆயிரம் முறை
உன்னை மறக்க நினைத்தாலும்
பாடாய்ப் படுத்தும்
உன் பெயரோடு கூடிய
சில கடைகளின் பதாகைகள் !
காதலியின் பெயரை கடையின் பாதகையில் பார்த்து உணர்ந்த உணர்வை கவிதையாக்கி நமது உணர்வையும் நினைத்துப் பார்க்க வைத்துள்ளார் .
அர்த்தனாரியின் இடபாகமும் !
ஆதாம் எழும்பும் !
கருப்பு அங்கியும் !
ஆதிக்கத்தின் சின்னங்கள் !
அதிகம் பற்றி நம்மை சிந்திக்க வைக்கிறார் .நூல் ஆசிரியர்
வித்தியாசமான இதுவரை யாரும் வழங்காத காதல் பரிசு தருகிறார் பாருங்கள் .
காதல் பரிசு !
உனக்கு அனுப்ப
ஒரு பரிசு தேடுகிறேன்
எந்தனது எண்ணத்தை
எதுவுமே நிறைவு செய்யவில்லை !
உனக்கு எப்போதும் பிடிக்கின்ற
மௌனத்தையே இப்போதும் !
மனசு !
என் மனசு
மாடாய்ப் போனது !
எப்போதும் அவளை
அசை போட்டுக் கொண்டே ..
காதலி பற்றி , காதல் பற்றி பல சுவையான கவிதைகள் நூலில் நிறைய உள்ளது .பதச் சோறாக சில மட்டும் உங்கள் பார்வைக்கு .
ஏ ஞாபக மறதியே !
என் பிரியமான ஞாபக மறதியே !
ஏன் நீ அவள் விசயத்தில் மட்டும்
என்னோடு ஒத்துழைக்க மறுக்கிறாய் ?
காதல் பற்றி பல கவிதைகள் இருந்தாலும் ,சமுதாயம் பற்றியும் சில கவிதைகள் நூலில் உள்ளது .
அப்பன் சொல்லும் பாடம் கேளு !
தப்பைக் கண்டால் எதிர்த்து நில்லு !
பாதகம் செய்வோரை
பாதையில் கண்டால்
பாரதி மீசையாய் !
நூல் ஆசிரியர் கவிஞர் கந்தகப்பூக்கள் ஸ்ரீபதி அவர்களுக்கு பாராட்டுக்கள் .வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள் .
நூல் ஆசிரியர் கவிஞர் கந்தகப்பூக்கள் ஸ்ரீபதி .
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
கந்தகப்பூக்கள் பதிப்பகம் .குட்டியணஞ்சான் ,தெரு சிவகாசி .626123.
செல் 9843577110
விலை ரூபாய் 60.
நூலின் தலைப்பும் , அட்டைப்படமும் வித்தியாசமாக உள்ளது .நூல் விமர்சனம் எழுதுவதில் தனி முத்திரை பதித்து வரும் இனிய நண்பர் சேலம் கவிஞர் பொன் குமார் அவர்களின் அணிந்துரை நூலிற்கு அழகு சேர்ப்பதாக உள்ளது .இந்நூல், எங்க வீட்டுச் செல்லங்களுக்கு என்று பதிவு செய்து இருப்பது சிறப்பு .
நூல் ஆசிரியர் சிற்றிதழ் ஆசிரியர் கவிஞர் கந்தகப்பூக்கள் ஸ்ரீபதி தொடர்ந்து இயங்கி வரும் படைப்பாளி .திருமணத்திற்கு மொய் செய்வதை நினைத்தாலே பலருக்கு வெறுப்பு வரும் .ஒரே நேரத்தில் ஒரே நாளில் பல திருமணங்கள் வந்து சிரமப்படுவதும் உண்டு .செலவு பெருகி வருகிறது .வரவு பெருக வில்லையே என்று வருந்துவதும் உண்டு .அவர்களது மன நிலையை படம் பிடித்துக்காட்டும் புதுக்கவிதை ஒன்று .
அழைப்பிதழ்களை வரவேற்பதில்லை ..
என்ன செய்வது
தேய்பிறைகளிலும் முகூர்த்தங்கள் !
முகூர்த்தங்கள் அதிகரித்த அளவிற்கு
வருமானங்கள் ?
காதலியைப் பார்த்துக் கேட்கும் கேள்வி போல ஒரு நுட்பமான கவிதை .
காதல் விருட்சம் .
வெறும் சதை என்று
வியாக்கியானம் பேசித் திரியும் என்னுள்
எப்படி நீ விதையானாய் ?
அமெரிக்கா என்ன சொல்கிறது அதனை உடன் நிறைவேற்றும் அடிமைகளாக மத்தியில் ஆள்வோர் இருக்கும் அவலத்தை எள்ளல் சுவையுடன் சுட்டும் கவிதை நன்று .
நவீன இராமாயணம் !
இந்திய சீதை
அழுது கொண்டே இருக்கிறாள் !
அமெரிக்க அசோக வனத்தில் !
போலிகள் நிஜத்தை வெல்லும் அளவிற்கு தோற்றம் அளிக்கும் .சிலர் போலிகளைக் கண்டு ஏமாந்து விடுவதும் உண்டு .
அதனை உணர்த்தும் கவிதைகள் .
பொய் மான் கூட்டம் !
புகைப்படச் சட்டத்துள்
சலசலத்து வழியும்
நீர் வீழ்ச்சி !
குளிர்பதன பெட்டி மேல்
பறப்பது போல் நிற்கும்
வண்ணத்துப் பூச்சி !
தொலைக்காட்சிப் பெட்டி மேல்
வாசமற்றுச் சிறுக்கும்
பூ ஜாடி !
நாம் கண்ட சில போலிகளைக் காட்சிப் படுத்தி நூல் ஆசிரியர் வெற்றி பெறுகின்றார் .போலிகளைக் கண்டு ஏமாறாதீர்கள் என்று எச்சரிப்பது போல உள்ளது .
.உனக்கான கவிதை !
எனக்கான கவிதையாய்
நீ இருக்கையிலே
கவிதைக்கே கவிதையா ?
சிந்தை சிதறுகிறது !
புதுக்கவிதையில் காதலியை கவிதையாக்கி படிக்கும் வாசகர்களுக்கு அவரவர் காதலியை நினைவூட்டி விடுகிறார் .
பெயரிடாதீர் !
ஆயிரம் முறை
உன்னை மறக்க நினைத்தாலும்
பாடாய்ப் படுத்தும்
உன் பெயரோடு கூடிய
சில கடைகளின் பதாகைகள் !
காதலியின் பெயரை கடையின் பாதகையில் பார்த்து உணர்ந்த உணர்வை கவிதையாக்கி நமது உணர்வையும் நினைத்துப் பார்க்க வைத்துள்ளார் .
அர்த்தனாரியின் இடபாகமும் !
ஆதாம் எழும்பும் !
கருப்பு அங்கியும் !
ஆதிக்கத்தின் சின்னங்கள் !
அதிகம் பற்றி நம்மை சிந்திக்க வைக்கிறார் .நூல் ஆசிரியர்
வித்தியாசமான இதுவரை யாரும் வழங்காத காதல் பரிசு தருகிறார் பாருங்கள் .
காதல் பரிசு !
உனக்கு அனுப்ப
ஒரு பரிசு தேடுகிறேன்
எந்தனது எண்ணத்தை
எதுவுமே நிறைவு செய்யவில்லை !
உனக்கு எப்போதும் பிடிக்கின்ற
மௌனத்தையே இப்போதும் !
மனசு !
என் மனசு
மாடாய்ப் போனது !
எப்போதும் அவளை
அசை போட்டுக் கொண்டே ..
காதலி பற்றி , காதல் பற்றி பல சுவையான கவிதைகள் நூலில் நிறைய உள்ளது .பதச் சோறாக சில மட்டும் உங்கள் பார்வைக்கு .
ஏ ஞாபக மறதியே !
என் பிரியமான ஞாபக மறதியே !
ஏன் நீ அவள் விசயத்தில் மட்டும்
என்னோடு ஒத்துழைக்க மறுக்கிறாய் ?
காதல் பற்றி பல கவிதைகள் இருந்தாலும் ,சமுதாயம் பற்றியும் சில கவிதைகள் நூலில் உள்ளது .
அப்பன் சொல்லும் பாடம் கேளு !
தப்பைக் கண்டால் எதிர்த்து நில்லு !
பாதகம் செய்வோரை
பாதையில் கண்டால்
பாரதி மீசையாய் !
நூல் ஆசிரியர் கவிஞர் கந்தகப்பூக்கள் ஸ்ரீபதி அவர்களுக்கு பாராட்டுக்கள் .வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள் .
eraeravi- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 553
Similar topics
» படிக்காத மேதை காமராஜரிடம் படிக்க வேண்டியவை ! நூல் ஆசிரியர் கவிஞர் நீலம் மதுமயன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
» உன் உதட்டுச் சாயத்தால் ! நூல் ஆசிரியர் கவிஞர் சுபாஷ் சரோன் ஜீவித் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» காதல் தொகை ! ( காதற்றொகை ) நூல் ஆசிரியர் கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» மழைப் பேச்சு ! இது இன்பத் தமிழ் ! நூல் ஆசிரியர் கவிஞர் அறிவுமதி ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» உயிர் திருடும் உனக்கு ! நூல் ஆசிரியர் கவிஞர் ஆரூர் தமிழ்நாடன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
» உன் உதட்டுச் சாயத்தால் ! நூல் ஆசிரியர் கவிஞர் சுபாஷ் சரோன் ஜீவித் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» காதல் தொகை ! ( காதற்றொகை ) நூல் ஆசிரியர் கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» மழைப் பேச்சு ! இது இன்பத் தமிழ் ! நூல் ஆசிரியர் கவிஞர் அறிவுமதி ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» உயிர் திருடும் உனக்கு ! நூல் ஆசிரியர் கவிஞர் ஆரூர் தமிழ்நாடன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|