தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சிறுகதை -அம்மா

View previous topic View next topic Go down

சிறுகதை -அம்மா  Empty சிறுகதை -அம்மா

Post by கவிப்புயல் இனியவன் Mon Jul 01, 2013 7:38 pm

"அம்மா"

உறக்கம் இல்லாமல் படுக்கையில் புரண்டு கொண்டிருந்தேன். ஜன்னல் வழியே வெளியேப் பார்த்தேன். இன்னமும் விடியவில்லை.நேரம் என்ன இருக்கும்?

காகம் ஓன்று ஜன்னலில் உட்கார்ந்து கரைய ஆரம்பித்தது. விடியும் முன் காகம் கரைவது வித்தியாசமாய் இருந்தது.இது அதிகம் பசி பிடித்த காகம். கண்ட கண்ட வேளைகளில் கரையும்.

சூ ' என்று விரட்டினேன். அது சட்டை செய்யாமல் மீண்டும் 'கா கா 'வென்று இன்னமும் உச்ச ஸ்தாயியில் கரைய ஆரம்பித்தது. எரிச்சல் மிக எழுந்தேன். அது கொஞ்சம் கூட அசராமல் அங்கேயே உட்கார்ந்து கொண்டிருந்தது. விளக்கைப் போட்டு கடிகாரம் பார்த்தேன். மணி மூன்று நாற்பது.இந்த நேரத்தில் இது என் இப்படி கரைத்து எரிச்சலை உண்டு பண்ணுகிறது. மீண்டும் கையை தூக்கி விரட்டினேன். அது இன்னமும் வேகமாக கரைய ஆரம்பித்தது.

கதவு தட்டப்படும் ஓசை. இந்த நேரத்தில் யார்?

"யாரு?" என்றேன்.

" நான் வாசு ?"

" வாசுன்னா " என்று கேட்டபடியே கதவை திறந்தேன்.

அந்த பையன் அங்கு நின்றிருந்தான்.

அரை இருட்டில் அவன் முகத்தை என் நினைவறைகளில் தேடினேன்.ம்ஹும் .யார் என்று தெரியவில்லை.

" யாருப்பா நீ ?"

" சார் என்னை அடையாளம் தெரியலையா.. நான்தான் வாசு, உங்க பெரிய அண்ணன் முரளி வீட்டு சொந்தக்காரர் பையன்..உங்கம்மா இறந்துட்டாங்க உடனே உங்களை கூட்டு வரச் சொன்னாரு.."

"நீ எதுலப்பா வந்தே ?"
" சைக்கிள சார்,வாங்க ,நான் டபுள்ஸ் அடிப்பேன்.."

சைக்கிளில் அவன் பின்னால் உட்கார்ந்து போனேன்.அவன் மேல் இருந்து வியர்வை ஸ்மெல் அடித்துக் கொண்டிருந்தது. வேகமாக மிதித்து போனான்.

அம்மாவை ஹாலில் கிடத்தியிருந்தார்கள். எந்த சலனமும் முகத்தில் இல்லை. வயதின் முதுமை ரேகைகள் மட்டுமே.

" எப்படி ?" அண்ணன் பக்கம் திரும்பி கேட்டேன்.

மன்னி பதில் சொன்னாள். " சீக்கிரமே எழுதுட்டாங்க. .. காபி கேட்டாங்க .. பால் இன்னும் வரலைன்னு சொன்னேன்.. ஒரு டம்பளர் சுடு தண்ணியாவது கொடுன்னாங்க.. போட்டு கொண்டு வரதுக்குள்ள ... கூட்டுப் பார்த்தேன் பதில் இல்ல.. தொட்டு எழுப்பலாம்ன்னு தொட்டேன்.. சில்லிப்பாய் இருந்தது.. எதிர்த்தால இருக்கிற டாக்டரை எழுப்பி இவர் கூட்டிண்டு வந்தார்.. பார்த்ததும் சொல்லிட்டார் ."

' சம்பத்துக்கும் ,சாரிக்குக் சொல்லிட்டேன்.. அவங்க மதுரையில் இருந்து கிளம்பியாச்சு.. சந்தானத்தை தான் எப்படி காண்டக்ட் பண்றதுன்னு தெரியலை"

"நான் பார்த்துக்கறேன்.." என்றேன்.

" எப்படி ,சொல்லாம விட்டுடோம்ன்னு குதிப்பான்.. ரொம்ப தூரத்தில இருக்கான்.. சொல்ல வேண்டியது நம்மா கடமை..வரானோ இல்லையோ ?" என்று அண்ணன் இழுத்தான்.

சந்தானம் வேலை செய்வது சிப்சாகர் ,அஸ்ஸாம் கேந்திர வித்யாலயாவில்.. ஆறு வருடம் முன்னால் அங்கே வேலைக்குப் போனவன் அங்கேயே ஒரு அஸ்ஸாமியப் பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டான்.. அதற்கு பின் வரவேயில்லை.. அம்மாவுக்கு அவனை ரொம்ப பிடிக்கும்.. அவனுக்கு பிடிச்சிருக்கும் பண்ணிண்டிருப்பான்... அவன் ஒருத்தன் தான் டான்னு ஒண்ணாம் தேதி யான்ன ஆயிரம் ரூபாய் சொளையா அனுப்பறான்.. வேற யார் எனக்கு சேசரா?" என்பாள்.

யாருக்கு தெரியும் அவன் மனதில் என்ன ஓடுகிறது என்று.

கேந்திரிய வித்யாலா விற்கு செய்தி அனுப்ப ஒ.என்.ஜி.சி.யை தான் நாட வேண்டும்.அவர்களிடம் நிச்சயம் ஹாட் லைன் இருக்கும்.சாவு வேறு கோரிக்கை வைத்தால் செய்வார்கள்.கதீட்ரல் சர்ச் அருகே அவர்களின் அலுவுலகத்தைப் பார்த்த நினைவு.

வாசுவின் சைக்கிளை வாங்கி கொண்டு வேகமாய் மிதித்துப் போனேன்.

டுட்டியில் இருந்த வாலிபர் செண்டிமெண்டலானவராய் இருப்பார் போல் இருக்கிறது.

விஷயம் சொன்னதும்"வயசு என்ன ?"என்று கேட்டார்.

சொன்னேன்,

" ஒ ..எழுபதா..நடமாடிட்டு இருந்தாங்களா..?"

"ம்?"

"அட்டாக்கா?"

"ஆமாம்"

"அஸ்ஸாமுக்கு தான் சொல்ல முடியும் ..சொல்லிடறேன்..அவங்க சிப்சாகர் பாஸ் பண்ணிடுவாங்க.. எப்படியும் அவர் அஸ்ஸாம் வரைக்கு ரயில்தான் வரணும்..அங்க வந்து பிளைட் பிடிக்கலாம்.."

விவரங்களை எழுதி தர சொன்னார்.

எழுதி கொடுத்தேன்.

"நான் சொல்லிடறேன்..நீங்க போய் உங்க வேலைகளை பாருங்க..?"

"நன்றி சார்..?"

"இதுக்கு ஏன் நன்றி.. கிளம்புங்கள்.. எங்கம்மாவுக்கு வயசு அறுபத்து ஆறு "என்றார்.

வீட்டிற்க்கு திரும்பிய போது சில சொந்தகார்கள் , உள்ளூர் காரர்கள் வந்திருந்தார்கள். காசி பாட்டி நாற்காலியில் உட்கார்ந்திருந்தாள். காசி பாட்டிக்கு வயது தொன்னூற்று ஆறு. இன்னமும் கிழங்கு மாதிரி இருந்தாள்.

பாட்டியின் பெயர் வேறு.ஆனால் எப்பொழுது சண்டை வந்தாலும்" எனக்கு என்ன இருக்கு..வேண்டாம்ன்னு தீர்மானம் பண்ணேன்னா கிளம்பி காசி போயிடுவேன்.. அங்க ஒரு மூலையில உட்கார்ந்த ஒரு உருண்டை சாதம் கிடைக்காதா?"என்பாள்.அதனால் அவர் பெயரே காசி பாட்டி என்றாகி விட்டது.

என்னைப் பார்த்ததும் " ஸ்ரீதரா .. எங்கடா போனே , சந்தானத்துக்கு சொல்லிட்டியா ?" என்று கூப்பிட்டா ள். வந்த உடன் செய்திகளை சேகரித்து விட்டாள் போல.

பக்கத்தில் போன என் கைகளை தன் தளர்ந்த சுருங்கிய கைகளால் பிடித்துக் கொண்டாள்.

" என்னடா பண்றே , உன் கல்யாணத்தை பார்த்துட்டு தான் கண்ணை மூடுவேன்னு சொன்னா ...மகராசி போயிட்டா..சந்தானம் சந்தானம்ன்னு மூச்சுக்கு மூச்சு சொல்வாளே அவன் வர வரைக்கும் வச்சிக்க முடியாதா ?"
"தூரத்திலே இருந்து கவனித்து கொண்டிருந்த அண்ணன் வந்து விட்டான்.

" நான் தான் சொன்னேனே பாட்டி ..வீட்டு ஓனர் ஒத்துக்க மாட்டார்ன்னு ..அவர் வீட்டுல சின்ன பொண்ணுங்க எல்லாம் இருக்கு ..ரெண்டு தடவை வந்து பார்த்துட்டு போயிட்டார்.."

" ஆமாம் "

அண்ணன் " உங்களை பின்னாடி கூப்பிடறா..காபி இருக்காம்.."

பாட்டி எழுந்து போனாள்.

அண்ணன் ," வாத்தியாருக்கு சொல்லிட்டேன்..பணம் ஏதும் கொண்டு வந்தியா ?" என்றான்.

"ம் " என்றேன்.

அண்ணன் நகர்ந்து விட்டான்.

நான் அம்மாவின் உடலைப் பார்த்தேன்.

மதுரையில் இருக்கும் சகோதரர்கள் வீடு, அண்ணன் வீடு என மாறி மாறி இரண்டு மாசம் இருப்பாள். சந்தானம் மாதா மாதம் ஆயிரம் ரூபாய் அனுப்பி விடுவான். அதை பெருமையாக சொல்வார்.

" வேற யார் இப்படி சேசரா. ஒண்ணாம் தேதியான டான்னு பணம் கைக்கு வந்துடும்.." என்பாள். அப்படி சொல்லும் போது நான் எந்த பதிலும் சொல்ல மாட்டேன். என்ன சொன்னாலும் தவறாக போகும்.

வாத்தியார் வந்து விட்டார்.

" எண்டா எப்ப எடுக்கறதா இருக்கேள்...இன்னைக்கா நாளைக்கா முடிவு பண்ணிடேள்னா, முதல்ல இடு காட்டுக்கு பணம் கட்டி ரசித்து போட்டுண்டு வந்திடுங்கோ.. ஐஸ் பொட்டிக்கு சொல்லலையா..?"

" ம்ஹும் .. ஐஸ் பாருக்கு ஆள் அனுப்பியிருக்கேன்.. மதுரையில இருந்து தம்பிங்க வந்ததும் இன்னைக்கே எடுத்துடலாம்ன்னு.."

" அவா எத்தனை மணிக்கு வந்து சேர்வா ?"

" ஆறு மணிக்குள்ள வந்துடுவான்னு நினைக்கிறேன்.. பார்க்கலாம்.."

" சரி ஒரு மூவாயிரம் கொடு மத்த வேலைகளை நான் பார்க்கிறேன்.. "என்றார் வாத்தியார்.

அண்ணன் என்னைப் பார்த்தான்.

" நான் பேங்க் திறந்ததும் எடுத்துண்டு வரணும்..உன்கிட்ட இருந்து மூவாயிரம் மாமாகிட்ட கொடு.. அப்புறம் கணக்கு பார்த்துக்காலம் " என்றான்.

" என் கிட்ட இரண்டாயிரம் தான் இருக்கு.."

" மன்னி கிட்ட இருக்க கேளு .. அவகிட்ட அப்புறம் தந்துக்கலாம் " என்றான்.

மன்னியிடம் பணம் ஆயிரம் வாங்கி கொண்டு என்னிடம் இருந்த பணத்தையும் சேர்த்து அவரிடம் கொடுத்தேன்.

அவர்" யாராவது ஒருத்தர் கணக்கு வட்சுகொங்கோ.. அப்பப்ப தேவைப் படும் " என்றபடியே போனார்.

வந்த சொந்த காரர்கள் எல்லாம் அம்மாவை பற்றி விசாரித்து விட்டு அடுத்து 'ஏன் கல்யாணம் பண்ணிக்கலை 'என்று என்னை துக்கம் விசாரித்தார்கள்.

நேரம் கரைய கரைய டென்ஷனில் தலை வலிக்க ஆரம்பித்தது.பின் புறம் போய் அங்கே கொதியில் இருந்த காபியை எடுத்து குடித்தேன்.

வீட்டு ஓனர் வந்தார்.

" உங்க அண்ணா சந்தானம் என்னோட லைனுக்கு போன் பண்ணினார்.. நாளைக்கு ராத்திரிதான் ப்ளைட்டாம்.. டெல்லி வந்து அங்க இருந்து மாறி வரணுமாம்... உங்க அண்ணா கிட்ட சொல்லிடுங்கோ ..ஆமாம் இன்னைக்கு எடுத்துடுவேள் இல்ல "

நான் அவரைப் பார்த்தேன். அவர் கவலை அவருக்கு.

" ம் எடுத்துடுவோம் " என்றேன்.

ஹாலில் சம்பத் ,சாரி பேச்சுக் குரல் கேட்டது.வந்து விட்டார்கள் போல் இருக்கிறது.சம்பத் நிச்சயம் கொஞ்ச நேரத்தில் பின்னாடி வருவான்.காபி குடிக்காமல் இருக்க அவனால் முடியாது.

சரியாய் வந்து விட்டான்.

" என்னடா நீ இங்க தான் இருக்கியா.. "

அவனிடம் ஒரு டம்பளர் காபியை எடுத்து கொடுத்தார் பரிசாரகர்.

"ஏண்ணா " என்ற படியே சின்ன மன்னியும் அங்கு வந்து விட்டாள்.ஒரு நிமிடம் அவனை தனியாய் யாருடனும் பேச விட மாட்டாள்."

" ஸ்ரீதர்.. அம்மாக்கு உன் கல்யாணத்தை பார்க்கணும்னு ஆசை , போன மாசம் வந்திருந்தபோது கூட சொன்னா..எனக்கு என்னமோ தோணித்து..இன்னும் ஒரு வாரம் இருந்துட்டு போங்களேன்னு?பெரியவனைப் பார்க்கணும்ன்னு கிளம்பி வந்துட்டா"

வாத்தியார் குரல் தான் பிரதானமாய் கேட்டது.

" எல்லோரும் முடி எடுத்துட்டு தலையில தண்ணி ஊதிண்டுடேளா"

"ம்." என்றாம்.

"இங்க வா "

புடவையின் ஒரு முனை அம்மாவின் மேல் கிடந்தது.இன்னொரு முனையைப் பிடித்து ஏன் கையில் கொடுத்தார்.

" இத அப்படியே வாசல் படியில கொண்டு போடு.."

போட்டேன்.

வெளியில் மூங்கில் தயாரக இருந்தது. வேனும் நின்று கொண்டிருந்தது.

அண்ணன் என்னைப் பார்த்தான்.

" நீ அம்மா கூட வேன்ல வந்துடு.. நாங்க முன்னாடி கார்ல போயிடறோம் ?"

"ம்"

வேனில் ஏற்றியதும் எல்லோரும் காருக்கு பாய்ந்தார்கள்.

நான் வேனில் அம்மாவின் பாடைக்கு அருகில் உட்கார்ந்தேன்.

" என்ன எல்லோரும் மாறி மாறி பந்தாடறா? இங்க ரெண்டு மாசம் ,அங்க ரெண்டு மாசம்ன்னு,சமைக்கவும் விட மாட்டேன்கறா ..ஒண்ணும் சரியில்ல "

அந்த நாள் எனக்கு நினைவில் வந்தது.

அன்று சனிக்கிழமை.

வீட்டில் துணி துவைத்து கொண்டிருந்தேன்.

கதவை தட்டும் ஓசை.

திறந்தேன்.

அம்மா!

" உள்ள வாம்மா "

" எப்படிடா இருக்கே , கோவிலுக்கு போறேன்னு சொல்லிண்டு வந்திருக்கேன்.. உன்னை பார்க்க வரேன்னு தெரிஞ்சா தேவை இல்லாத கேள்வி எல்லாம் கேட்பா அந்த ராட்சஸி ..வாய்க்கு இதமா சாப்பிட்டு இரண்டு வருஷம் ஆறது.. கொஞ்சம் வேப்பம் பூ ரசம் பண்ணி அப்பளாம் சுட்டு தாடா ?"

" நல்ல மணமா பண்றே.. ஒரு வேளை சமைக்க தெரியாம இருந்தா கல்யாணத்தைப் பண்ணிடுருப்பியோ?" என்னமோ..?

நான் எந்த பதிலும் சொல்லவில்லை.

போகும் போது ஒரு டம்ப்ளரில் ஊற்றி தரச் சொல்லி வேப்பம் பூ ரசத்தை குடித்து விட்டு போனாள். அதன் பின் இப்பொழுதுதான் பார்க்கிறேன்.

இடும் காடு வந்து விட்டது.

வேனில் இருந்து இறக்கி தயாராக இருந்த சிதையை நோக்கி தூக்கிப் போனோம்.

நான் கால் மாட்டில் ஒரு பக்கம் பிடித்திருந்தேன்.

சிதையை நெருங்கும் போது தான் கவனித்தேன்.

நான் பிடித்திருந்த பக்கம் அம்மாவின் காட்டை விரல் துணி தாண்டி வெளியல் தெரிந்தது. அது மெல்ல அசைந்தது. எனக்கு தூக்கி வாரி போட்டது.

பிரமையோ. இல்லை உண்மைதான். உயிர் போகவில்லை.

வேறு யாரும் கவனிக்கவில்லை.

" எப்படிடா இருக்கே , கோவிலுக்கு போறேன்னு சொல்லிண்டு வந்திருக்கேன்.. உன்னை பார்க்க வரேன்னு தெரிஞ்சா தேவை இல்லாத கேள்வி எல்லாம் கேட்பா அந்த ராட்சஸி .. வாய்க்கு இதமா சாப்பிட்டு இரண்டு வருஷம் ஆறது.. கொஞ்சம் வேப்பம் பூ ரசம் பண்ணி அப்பளாம் சுட்டு தாடா ?"

அம்மா சொன்னது நினைவிற்கு வந்தது.

சடுதியில் கோட்டி துணியை இழுத்து விட்டேன்.விரல்கள் வெளியே தெரியாதவாறு மூடினேன்.

சாம்பலாக இன்னும் சில வினாடிகள் தான்.
நன்றி ;சிறீதரன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிறுகதை -அம்மா  Empty Re: சிறுகதை -அம்மா

Post by Muthumohamed Mon Jul 01, 2013 8:50 pm

அம்மா நீ தான் என் உயிர் சூப்பர் சூப்பர் சூப்பர் 
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

சிறுகதை -அம்மா  Empty Re: சிறுகதை -அம்மா

Post by கவிப்புயல் இனியவன் Mon Jul 01, 2013 8:58 pm

சொல்லவே ஆசையாக இருக்கு ...
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிறுகதை -அம்மா  Empty Re: சிறுகதை -அம்மா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum