தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


பத்தாவது வயதில் தமிழ் விக்கிபீடியா!

View previous topic View next topic Go down

 பத்தாவது வயதில் தமிழ் விக்கிபீடியா!  Empty பத்தாவது வயதில் தமிழ் விக்கிபீடியா!

Post by முரளிராஜா Fri Jul 12, 2013 9:46 am

[You must be registered and logged in to see this image.]

ஒரு நபர் அல்லது ஓர் இடம் அல்லது ஒரு ஊர், மாநிலம், நாடு அல்லது ஒரு சினிமா அல்லது ஒரு நாவல் என எதைக் குறித்து தெரிந்து கொள்ள விரும்பினாலும் என்ன செய்வோம்? அது பற்றி தெரிந்த நபரை தேடிச் செல்வோம். அவரிடம் உரையாடுவோம். இல்லையெனில் எதைக் குறித்து நாம் தேடுகிறோமோ அது குறித்து வெளியாகியிருக்கும் நூல்களை படிப்போம். இதெல்லாம் அந்தக் காலம். இன்று பிரபஞ்சத்தில் உள்ள எந்த விஷயம் குறித்து அறிய விரும்பினாலும் அதை நொடியில் தெரிந்து கொள்ளலாம். யெஸ், விரல் நுனியில் நமக்குத் தேவையான அனைத்துத் தகவல்களும் கொட்டி விடும்.


எப்படி? அதுதான் 'விக்கிபீடியா' இணையதளத்தின் சாதனை. ஒரு கம்ப்யூட்டர். கூடவே இன்டர்நெட் கனெக்ஷன். இது இருந்தால் போதும். 'விக்கிபீடியா' தளத்துக்குச் சென்று அங்கிருக்கும் 'தேடல்' குறிப்பில் நமக்குத் தேவையான பெயரை கம்போஸ் செய்தால் போதும். விவரங்கள் ஆதியோடு அந்தமாக வந்து விழும். 2000ம் ஆண்டில் ஜிம்மி வேல்ஸ் என்பவரால் ஆங்கிலத்தில் தொடங்கப்பட்ட இந்தத் தளம் அந்த ஆண்டு இறுதிக்குள் சீன, ஜெர்மானிய, பிரெஞ்ச், இத்தாலியன், ஹீப்ரூ, ஜப்பானிஸ், ரஷ்யன், போர்ச்சுகல், அராபிக், ஹங்கேரி... என 19 மொழிகளில் கிளை பரப்பிவிட்டது.

மூன்று ஆண்டுகளுக்கு பிறகு, அதாவது, 2003ல் இந்தத் தளத்தின் தமிழ்ப் பிரிவை இலங்கையைச் சேர்ந்த மயூரநாதன் தொடங்கினார். உலகின் தகவல் களஞ்சியமாக செயல்பட்டு வரும் 'விக்கிபீடியா'வின் தமிழ்ப் பிரிவில் 2005ம் ஆண்டு தன்னை முழுமையாக இணைத்துக் கொண்டார் கோவையை சேர்ந்த ரவிசங்கர். கடந்த எட்டு வருடங்களில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகளை அந்தத் தளத்தில் எழுதியிருக்கும் இவர், இப்போது 'தமிழ் விக்கிபீடியா'வின் ஆய்வு குழுவில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

''துபாயில் கட்டிடத் தொழிலை நிர்வகித்து வரும் மயூரநாதன், தமிழ் மொழியின் மீது பற்றுள்ளவர். அதனால்தான் தகவல் களஞ்சியமான 'விக்கிபீடியா'வின் சேவை தமிழ் மொழிக்கும் தேவை என்பதை உணர்ந்து அதைத் தொடங்கினார். முதல் இரண்டு வருடங்கள் அவர் மட்டுமே தனியாளாக கட்டுரைகளை எழுதி, தகவல்களை இணைத்து வந்தார். அவரது முயற்சிக்கு நல்ல பலன் கிடைக்க ஆரம்பித்தது. என்னைப் போன்ற பலர், 'விக்கிபீடியா'வில் இணைய முடிவு செய்தோம். எங்கள் பங்களிப்பை செலுத்தத் தொடங்கினோம். இப்போது 'தமிழ் விக்கிபீடியா'வில் 45 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.

இதுவரை 50 ஆயிரம் கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. இந்திய மொழிகளில், 'தமிழ் விக்கிபீடியா' பிரிவு இரண்டாவது இடத்தில் இருக்கிறது. இதற்கெல்லாம் காரணம், மயூரநாதனின் அயராத உழைப்புதான்...'' என்று நெகிழ்ந்த ரவி சங்கர், 'விக்கிபீடியா' தளம் எப்படி செயல்படுகிறது என்று விவரிக்க ஆரம்பித்தார்.''இதில் உறுப்பினராக சேருவது மிகவும் சுலபம். இந்த இணையதளத்துக்குச் சென்றால் உறுப்பினராக சேருவதற்கான விண்ணப்பம் இருக்கும். அதை பூர்த்தி செய்தாலே போதும். 'விக்கிபீடியா' உறுப்பினராகி விடலாம்.

அதன் பிறகு கட்டுரைகள் எழுதலாம். ஏற்கனவே எழுதப்பட்டுள்ள கட்டுரைகளில் இருக்கும் தகவல் பிழைகளை திருத்தலாம். அல்லது புதிய விஷயங்களை சேர்க்கலாம். இதில் உறுப்பினராக எப்படி கட்டணம் வசூலிப்பதில்லையோ அதே போல் செய்யும் வேலைக்கும் சன்மானமும் வழங்கப்படுவதில்லை. இது இலவச சேவைத் தளம். தகவல்களை தேடி வரும் மக்களுக்கு வேண்டிய விஷயங்களை இலவசமாக தருவது போலவே விஷயம் தெரிந்தவர்களின் உழைப்பை சேவை நலன் கருதி இலவசமாகவே பெற்றுக் கொள்கிறோம்...'' என்று சொல்லும் ரவிசங்கர், வெப் டிசைன் நிறுவனத்தை நிர்வகித்து வருகிறார்.

''சொந்த ஊர் புதுக்கோட்டை. கல்லூரி படிப்பை முடித்துவிட்டு சில ஆண்டுகள் அயல்நாடுகளில் வேலைப் பார்த்தேன். அதன் பிறகு இந்தியாவுக்கு வந்துவிட்டேன். இங்கு தொழில் தொடங்கிய போதுதான் எனக்கு 'விக்கிபீடியா' இணையதளம் பற்றி தெரியவந்தது. சிறுவயது முதலே தமிழ் மேல் ஆர்வம் இருந்ததால் இந்தச் சேவையில் என்னையும் இணைத்துக் கொண்டேன். கடந்த எட்டு வருடங்களில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியிருக்கிறேன். இப்போது மற்றவர்கள் எழுதிய கட்டுரையை பதிவு செய்யும் முன் அதில் உள்ள பிழைகளை திருத்தும் முக்கிய பொறுப்பில் இருக்கிறேன். இதை எனக்குக் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாக கருதுகிறேன்...'' என்றவரிடம், 'சன்மானம் இல்லாமல் எப்படி மக்கள் கட்டுரைகள் எழுத விரும்புவார்கள்' என்று கேட்டோம். சிரித்தார்.

''தமிழகத்தில் பிறந்து, தமிழ் மொழியால் வளர்ந்தவர்கள் நாம். அப்படி யிருக்க அந்தத் தமிழ் மொழியை நாம் வளர்க்காமல் வேறு யார் வளர்ப்பார்கள்? இன்று கம்ப்யூட்டர் அத்தியாவசியமான சாதனமாகிவிட்டது. எனவே, அதை அனைத்துத் துறைகளை சேர்ந்தவர்களும் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இந்நிலையில் கணினி வழியே தமிழை வளர்ப்பதும், அதை வருங்கால சந்ததியினருக்கு கொண்டு செல்வதும் நம் ஒவ்வொருவரின் கடமை.யாரையும் உறுப்பினராக சேரச் சொல்லி நாங்கள் கட்டாயப்படுத்துவதில்லை. ஒரு நாளைக்கு ஒரு மணிநேரம் வேலை செய்தால் போதும். அலுவலக நெருக்கடியில் இது கூட செய்ய முடியவில்லையா? பரவாயில்லை. வார இறுதி நாட்களில் சில மணி நேரங்களை ஒதுக்குங்கள்.

வரலாறு, புவியியல், அறிவியல், நாவல்... என நீங்கள் படித்த விஷயங்களை, தகுந்த ஆதாரங்களுடன் வலையில் ஏற்றுங்கள். அதுபோதும்.ஒரு விஷயம் தெரியுமா? 'விக்கிபீடியா'வில் உறுப்பினர்களாக இருப்பவர்கள் அனைவருமே வேறு நிறுவனத்தில் பணிபுரிபவர்கள்தான் அல்லது சொந்தமாக தொழில் நடத்துபவர்கள்தான். இங்கு கோவையிலேயே எனக்கு தெரிந்த அம்மாவும், மகனும் இதில் ஆக்டிவ்வாக செயல்படுகிறார்கள்...'' என்று சொல்லும் ரவிசங்கர், 'விக்கிபீடியா'வில் கட்டுரைகள் எப்படியிருக்க வேண்டும் என்று பட்டியலிட்டார்.

''இந்தத் தளத்தில் இருக்கும் செய்திகள்/ கட்டுரைகள் அனைத்தும் ஏதாவது ஒரு புத்தகம் மற்றும் ஆய்வுக் கட்டுரைகளில் இருந்து எடுக்கப்பட்டவைதான். நேரடியாக ஓர் இடத்துக்கு சென்று பத்திரிகைகள் போல் ரிப்போர்ட்டிங் செய்ய வேண்டிய அவசியமில்லை. எனவே, இருந்த இடத்தில் இருந்தபடி உறுப்பினர்கள் தங்கள் சேவையை செய்யலாம்...'' என்றவர், 'விக்கிபீடியா'வின் மற்ற அம்சங்கள் குறித்து விவரித்தார். ''முதலாவது 'விக்கிமேனியா'. உலகளாவிய மாநாடு இதன் சிறப்பம்சம்.

கடந்த இரண்டு வருடங்களாக இதை நாங்கள் நடத்தி வருகிறோம். உலக நாடுகளைச் சேர்ந்த 'விக்கிபீடியா' உறுப்பினர்கள் இதில் கலந்து கொள்வார்கள். இதன் மூலம் பல தரப்பட்ட மக்களின் அறிமுகம் கிடைக்கும். இதற்கான செலவை 'விக்கிபீடியா'வின் அறக்கட்டளை ஏற்றுக் கொள்ளும். கடந்த ஆண்டு இஸ்ரேலில் நடைபெற்ற மாநாடு மாபெரும் வெற்றி என்பது குறிப்பிட வேண்டிய விஷயம். அடுத்து, 'விக்ஷ்னரி'. அதாவது, அகராதி. உலகிலுள்ள அனைத்து மொழி சொற்களுக்கான தமிழ் அர்த்தத்தையும் இதிலிருந்து பெறலாம். இப்போது இரண்டு லட்சம் தமிழ் சொற்களை இதில் பதிவு செய்திருக்கிறோம்.

மூன்றாவது, 'விக்கி நூல்கள்'. குழந்கைளுக்கான நூல்கள் முதல் இலக்கியம் சார்ந்த நூல்கள் வரை அனைத்தும் இதில் அடங்கும். நான்காவது, 'விக்கி செய்தி'. தினமும் நடக்கும் முக்கிய செய்தி யின் தொகுப்பு இது...'' என்று ரவிசங்கர் பட்டிய லிட்டு முடித்ததும் ஒன்றுதான் தோன்றியது. இனும் பல்லாயிரம் ஆண்டுகள் தமிழ் வாழும்!
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum