தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


மற்றவர்கள் கருத்தை மாற்ற முடியுமா?

View previous topic View next topic Go down

மற்றவர்கள் கருத்தை மாற்ற முடியுமா? Empty மற்றவர்கள் கருத்தை மாற்ற முடியுமா?

Post by முழுமுதலோன் Fri Jul 19, 2013 10:49 am

மற்றவர்கள் கருத்தை மாற்ற முடியுமா?

ஒரு புகழ்பெற்ற அரசியல் தலைவர் தன் நாயுடன் வாக்கிங் சென்று கொண்டிருந்தார். எதிரே வந்த முல்லா "என்ன கழுதையுடன் வாக்கிங் போகிறீர்கள்?" என்று கிண்டலாகக் கேட்க தலைவருக்குக் கோபம் வந்து விட்டது.

"என்ன உனக்குக் கண் சரியாகத் தெரியவில்லையா? இது என் நாய்" என்றார்.

முல்லா தலைவரிடம் சொன்னார். "அது நாய் என்று எனக்குத் தெரியும். நான் கேள்வி கேட்டது அந்த நாயிடம்" என்றார்.

தலைவருக்கு தன்னைக் கழுதை என்று முல்லா பரிகாசம் செய்கிறார் என்று தெரிய சிறிது நேரம் தேவைப்பட்டது. எல்லோரும் தன்னை தலைவா என்று மரியாதையுடன் அழைக்கையில் முல்லா கழுதை என்கிறாரே என்று உடனே வெகுண்டு நீதிமன்றத்தில் முல்லா மீது வழக்கு தொடர்ந்தார். 

வழக்கை விசாரித்த நீதிபதி முல்லா ஒரு புகழ் பெற்ற தலைவரை கழுதை என்றழைத்தது தவறு என்றும் அந்தத் தலைவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கினார்.

முல்லா நீதிபதியிடம் ஒரு சந்தேகம் கேட்டார். "ஐயா நான் கழுதையைத் தலைவா என்றழைப்பதில் சட்டத்தில் ஏதாவது ஆட்சேபணை இருக்கிறதா?"

"இல்லை" என்றார் நீதிபதி.

சரி என்ற முல்லா அந்தத் தலைவரிடம் சென்று "தலைவா என்னை மன்னித்து விடுங்கள்" என்று கேட்க நீதிமன்றத்தில் பலத்த சிரிப்பலைகள்.

ஒருவர் உங்களைப் பற்றி என்ன நினைக்க வேண்டும் என்பதை நீங்கள் தீர்மானிக்க முடியாது. என்ன தான் தலைகீழாய் நின்றாலும் அடுத்தவர் மேல் நம் கருத்தைத் திணிக்க முடியாது. முல்லா வழக்குக்கு முன்னும் அந்தத் தலைவரைக் கழுதையாகத் தான் நினைத்தார். நீதிபதியின் தீர்ப்பிற்குப் பின்னும் அவர் கருத்தை மாற்றிக் கொள்ளவில்லை.

ஒவ்வொருவரும் அடுத்தவரை தங்கள் அளவுகோல்களை வைத்தே அளக்கிறார்கள். அவர்களைப் பற்றி அபிப்பிராயம் கொள்கிறார்கள். எனவே அடுத்தவர் உங்களைப் பற்றி உயர்வாக நினைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் என்ன தான் நீங்கள் பகீரதப் பிரயத்தனம் செய்தாலும் அவர்கள் தங்கள் கருத்தை எளிதாக மாற்றிக் கொள்வதில்லை. அதுவும் உங்களைப் பற்றி உயர்வாக நினைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நீங்கள் தற்பெருமை பேசினால் அது எதிர்மறையான விளைவையே ஏற்படுத்தும்.

உங்கள் குணாதிசயங்கள், நீங்கள் நடந்து கொள்ளும் முறை எல்லாம் தான் நீங்கள் யாரென்று வெளியுலகிற்கு அழுத்தமாகப் பிரசாரம் செய்கின்றன. மற்றவர்கள் அதை வைத்தே உங்களை எடை போடுகிறார்கள். எனவே உங்களைப் பற்றி அதிகம் நீங்களே சொல்லிக் கொள்வது தேவையற்றது. 

அதே நேரத்தில் அடுத்தவருக்குப் பிடிக்கிற மாதிரியெல்லாம் நடந்து கொண்டு பேரெடுக்க முயற்சி செய்யாதீர்கள். சில நாட்களிலேயே தோற்றுப் போவீர்கள். இறைவனால் கூட தொடர்ந்து மனிதனிடம் நல்ல பெயர் எடுக்க முடிவதில்லை. இறைவனாலேயே முடியாதது உங்களால் முடிந்து விடுமா என்ன? 

மற்றவர்கள் எண்ணத்தில் உயர வேண்டுமானால் -

உங்களைப் பற்றி அதிகம் சொல்லிக் கொள்வதைத் தவிருங்கள்.

ஒவ்வொருவரும் உங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று அடிக்கடி ஆராயப் போகாதீர்கள். 

உங்கள் பண்புகளை மேம்படுத்திக் கொள்ளுங்கள். 

மற்றவர்களிடம் கண்ணியத்தோடு நடந்து கொள்ளுங்கள்.

மற்றவர்களைப் பற்றி நல்லதையே பேசுங்கள். 

அப்படியும் ஒருசில சமயங்களில் உங்களைப் பற்றி வரும் எதிர்மறை விமரிசனங்களைப் பெரிதுபடுத்தாதீர்கள். 

- இவற்றைப் பின்பற்ற முடிந்தால் நீண்டகாலம் நீங்கள் பெரும்பாலானவர்களின் உயர்ந்த கருத்தில் இருக்க முடிவது உறுதி.

- என்.கணேசன்

நன்றி: விகடன் 
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

மற்றவர்கள் கருத்தை மாற்ற முடியுமா? Empty Re: மற்றவர்கள் கருத்தை மாற்ற முடியுமா?

Post by mohaideen Fri Jul 19, 2013 5:10 pm

கதையுடன் கூடிய அருமையான கருத்து
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

மற்றவர்கள் கருத்தை மாற்ற முடியுமா? Empty Re: மற்றவர்கள் கருத்தை மாற்ற முடியுமா?

Post by Muthumohamed Fri Jul 19, 2013 11:16 pm

சூப்பர் சூப்பர் சூப்பர்
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

மற்றவர்கள் கருத்தை மாற்ற முடியுமா? Empty Re: மற்றவர்கள் கருத்தை மாற்ற முடியுமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum