Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
பொறுமையாக இருக்கப் பாருங்கள்.
Page 1 of 1 • Share
பொறுமையாக இருக்கப் பாருங்கள்.
இப்போதெல்லாம் சிறிய விஷயத்திற்குக் கூட பொறுமையில்லாமல் கொதித்துப் போகிறோம். இதனால் பகைமை வளர்ந்து விடுகிறது. இந்தப் பகைமை நம் உறவுகளையும் நட்புகளையும் இழந்து ஒன்றுமில்லாமல் செய்து விடுகிறது. நாம் பொறுமை இழப்பதால் நம்மையே இழந்து போகிறோம் என்பதை யாரும் உணர்வதில்லை. எந்த விஷயத்தையும் எளிதாக எடுத்துக் கொள்ளாமல் அதைப் பெரியதாக நினைத்துக் கொள்வதால், அதைத் தாங்கிக் கொள்ள முடியாத நிலைக்குப் போய் விடுகிறோம். எந்த விசயத்தையும் முழுமையாகத் தெரிந்து கொள்ளாமலும் போய் விடுகிறோம்.
பொறுமை நமக்கு பல உண்மைகளைக் கற்றுத் தருகிறது. எதையும் தாங்கிக் கொள்ளும் பொறுமையை நாம் வளர்த்துக் கொள்ளப் பழகிக் கொள்ள வேண்டும். பொறுமையாயிருப்பது நமக்கு கஷ்டமாகத் தோன்றினாலும் அது நமக்கு பலமான மன வலிமையையும் அதன் மூலம் பல நன்மைகளையும் தருகிறது.
பொறுமையாயிருப்பதற்கு இந்த பூமியை உதாரணமாகச் சொல்வார்கள். இந்தப் பூமியில் எத்தனையோ நல்லது கெட்டது நடந்தாலும் அதையெல்லாம் தாங்கிக் கொண்டிருக்கும் பூமியை ஒரு தாயாக இந்து மத புராணங்கள் பெருமைப் படுத்துகிறது.
ஒரு மண் ஜாடியின் கதையைக் கேளுங்கள்.
ஒரு கலைப்பொருள் கண்காட்சியில் அனைவரது கவனத்தையும் கவர்ந்தது ஒரு மண் ஜாடி. அதில் அவ்வளவு கலை நுணுக்கம். அதிலிருந்த மலர் ஓவியங்கள் அழகிய கலை வேலைப்பாடுகளுடன் காட்சியளித்தது.
இந்த ஜாடியின் அழகைக் கண்டு வியந்த சிறுவன் ஒருவன் அந்த மண்ஜாடியிடம் "எப்படி இந்த அழகிய வடிவத்தைப் பெற்றாய்?" என்று கேட்டான்.
"சிறுவனே நான் உடனே இந்த அழகிய உருவத்தைப் பெறவில்லை. நான் இந்தப் பூமியில் மண்ணாக, மனிதர்களின் நடைபாதையாக, விலங்குகளின் மேய்ச்சல் தரையாகக் கேட்பாரற்றுக் கிடந்தேன்.
ஒரு நாள் கலைஞன் ஒருவன் என்னை மண்வெட்டி கொண்டு வெட்டினான். ஆ! அப்போது நான் அடைந்த வேதனை... சகிக்க முடியாத ஒன்று. "பொறு...பொறு..." என்று ஆணையிட்டது இறைவனின் குரல். பொறுத்திருந்தேன். பின்னர் என்னைத் துவைத்துப் பிசைந்து, தண்ணீர் ஊற்றி, மிதித்து...அப்பப்பா... அப்போது நான் பட்ட இம்சை... கதறினேன்.
பொறு மண்ணே! மீண்டும் ஆணை ஆண்டவனிடமிருந்து.
பிசைந்த என்னைச் சக்கரத்தில் இட்டுச் சுழற்றினான் அவன். எனக்குத் தலை சுற்றி, மயக்கம் வந்தது. சுற்றிச் சுற்றி இறுதியில் ஜாடியாக வடிவெடுத்தேன். ஆனாலும் நான் அனுபவித்த வேதனை... அதிகம்.
"பொறுத்திரு" இறைவனின் குரல்.
"பொறுத்திருந்தேன். பிறகு என்னைத் தீயிலிட்டுப் பொசுக்கினான். அப்போது வெந்து உறுதிப்பட்டேன். தாங்க முடியாத எரிச்சல். பொறுத்திருந்தே. அதன் பிறகு ஏதேதோ வண்ண ரசாயணங்கள் என் மேனியில் பூசப்பட்டது தகிப்பு... தாங்க முடியாத வேதனை...
"இன்னும் சற்று பொறுத்திரு..." கடவுளின் குரல்.
"தகதகப்பு. வண்ணப்பூச்சு. ஈர்க்க வைக்கும் கோலப்புதுமை. ஆஹா... இப்போது நான் அழகின் அற்புதம். காண்போரை லயிக்க வைக்கும் எழில் ஜாடியாக ஒப்பற்ற கலைப்பொருளாகக் காட்சியளிக்கிறேன்" என்று அதன் அழகின் ரகசியத்தையும் அதற்காக அது அடைந்த அவதிகளையும் அது காட்டிய பொறுமைகளையும் சொல்லி முடித்தது.
எந்தவொரு விசயத்திலும் பொறுமை தேவையாயிருக்கிறது. பொறுமையாயிருப்பவர்கள் பல இடங்களில் நல்ல பெயரைப் பெற்றிருக்கிறார்கள். பல தொழில்களில் முன்னேற்றம் கண்டிருக்கிறார்கள். நீங்களும் நல்ல பெயரையும் முன்னேற்றத்தையும் பெற பொறுமையை இன்றிலிருந்தே கடைப்பிடிக்கத் துவங்குங்கள்.
நன்றி -முத்துக்கமலம்
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: பொறுமையாக இருக்கப் பாருங்கள்.
முரளிராஜா wrote:உங்க பொறுமையை பற்றி எனக்கு தெரியும் செந்தில்
எல்லாம் உங்களிடம் குடித்த யானை பால்தான் மன்னா இல்லை அண்ணா!
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: பொறுமையாக இருக்கப் பாருங்கள்.
பொறுமையைப்பற்றி கதையுடன் கூடி அருமை
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Similar topics
» இதை பாருங்கள்...
» வாழ்ந்து பாருங்கள்!
» வாழ்க்கையின் மறுபக்கத்தையும் பாருங்கள்!
» தேவனே என்னை பாருங்கள்
» அழகான Gardern பாருங்கள்
» வாழ்ந்து பாருங்கள்!
» வாழ்க்கையின் மறுபக்கத்தையும் பாருங்கள்!
» தேவனே என்னை பாருங்கள்
» அழகான Gardern பாருங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|