தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


பட்டாம் பூச்சிகளின் கனவுகள் ! நூல் ஆசிரியர் சேலம் கவிஞர் ச .கோபிநாத் நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

View previous topic View next topic Go down

பட்டாம் பூச்சிகளின் கனவுகள் !  நூல் ஆசிரியர் சேலம்  கவிஞர் ச .கோபிநாத்  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Empty பட்டாம் பூச்சிகளின் கனவுகள் ! நூல் ஆசிரியர் சேலம் கவிஞர் ச .கோபிநாத் நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

Post by eraeravi Thu Aug 01, 2013 8:35 pm

பட்டாம் பூச்சிகளின் கனவுகள் !

நூல் ஆசிரியர் சேலம் கவிஞர் ச .கோபிநாத் 8790231240

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

கலைவாணித் தமிழ்க் கூடம் .சி .எம் .சி .சாலை ,செஞ்சை .காரைக்குடி .விலை ரூபாய் 20.

நூல் ஆசிரியர் சேலம் கவிஞர் ச .கோபிநாத் அவர்கள் பல்வேறு இதழ்களில் தொடர்ந்து எழுதி வரும் படைப்பாளி .பல்வேறு பரிசுகளும் ,விருதுகளும் பெற்றவர் .ஆங்கில இலக்கியத்தில் பட்டம் பெற்று ஆங்கில ஆசிரியராகப் பணிபுரிந்துக் கொண்டே தமிழ்ப்பணியும் செய்து வருவதற்கு பாராட்டுக்கள். இவரது ஹைக்கூ கவிதைகளை இதழ்களில் படித்து இருக்கிறேன் .மொத்தமாக முதல் நூலாகக் கண்டதில் மனம் மகிழ்ந்தது .மனம் திறந்த மடலுடன் நூல்களையும் அனுப்பி இருந்தார் .நூலின் தலைப்பே கவித்துமாக உள்ளது.

மூன்று அடி ,இரண்டு காட்சி .ஒரு வியப்பு ,மெல்லத் திறந்து இருக்கும் கதவு ,உணர்வு இலக்கியம் இப்படி ஹைக்கூ கவிதைக்கு பல்வேறு விளக்கம் சொன்னபோதும் ,படிக்கும் வாசகர் .சிந்தையில் எண்ண அலைகளை எழுப்பி வெற்றிபெறுகின்றது .நூலின் முதல் ஹைக்கூ கவிதையே முத்தாய்ப்பாக உள்ளது .கடவுளின் பெயரால் , மதத்தின் பெயரால் நடக்கும் வன்முறைகளைக் கண்டிக்கும் விதமாக உள்ளது .

கோவில் வாசல்
இரத்த சுவடுகள்
அன்பே கடவுள் ?

பேருந்துகள் ஒன்றை ஒன்று முந்திக்கொண்டு மிக வேகமாகச் .செல்கின்றன போட்டிப் போட்டு மிக வேகமாக ஓட்டும் ஓட்டுநர்களுக்கு எச்சரிக்கை செய்யும் விதமாக உள்ள ஹைக்கூ நன்று .

முந்தி செல்லும் வாகனங்கள்
முதலில் செல்கிறது
ஓட்டுநர்கள் உயிர் !

நம் நாட்டில் கடவுள் திருவிழாவிற்கும் , கடவுளுக்கும் பஞ்சம் இல்லை .ஆனால் ஏழைகளின் பஞ்சம் தீர்ந்த பாடில்லை .தினந்தோறும் பெட்ரோல் விலை உயர்வு .அதன் காரணமாக விலைவாசிகள் உயர்வு .ஏழைகளின் வாழ்க்கையே பெரும் போராட்டமாகி வருகின்றது .என்பதை எள்ளல் சுவையுடன் உணர்த்தும் ஹைக்கூ நன்று .

வைகை ஆற்றில் அழகர்
காவிரி ஆற்றில் ரங்கன்
நட்டாற்றில் மனிதன் !
.
ஹைக்கூ கவிதைகளில் வாசகர் மனதில் படிக்கும்போது காட்சிப்படுத்துதல் ஒரு உத்தி .அதனை சிறப்பாக கையாண்டு உள்ளார் .காட்சிப்படுத்தும் ஹைக்கூ நிறைய இருந்தாலும் பதச்சோறாக சில மட்டும் உங்கள் பார்வைக்கு .

கனத்த ஓசையுடன்
வெடித்துச் சிதறும் பட்டாசுகள்
படபடப்பாய் வண்ணத்துப் பூச்சி !

இந்த ஹைக்கூவை படித்து முடித்தவுடன் ,நம்மனகண்ணில் வண்ணத்துப் பூச்சி தோன்றி நமக்கும் படபடப்பு வருகின்றது .

இயந்திரமயமான உலகில் மனிதனும் இயந்திரமாகவே மாறி வருகிறான் .பாசம் ,நேசம் , அன்பு மறந்து வருகிறான் .பெற்றோர்களை பிரிந்து வாழ்கின்றனர் .திருமணம் ஆனவுடன் உடனடியாக தனிக்குடித்தனம் சென்று விடுகின்றனர் .அதனை உணர்த்தும் ஹைக்கூ .

குழைந்தைகள் மறந்தனர்
யானைச்சவாரி
முதியோர் இல்லத்தில் தாத்தாக்கள் !

மதுரையில் பிறந்து உலக அளவில் நாட்டியத்தில் சாதனை புரிந்து வரும் திருநங்கை நர்த்தகி நடராஜ் உள்பட பல திருநங்கைகள் வாழ்வில் சாதனை நிகழ்த்தி வருவதை உற்று நோக்கி வடித்த ஹைக்கூ ஒன்று மிக நன்று .

பிழையாய் பிறப்பு
வளர்பிறையாய் வாழ்வு
சாதிக்கும் திருநங்கைகள் !

'புகைபிடித்தல் உடல் நலத்திற்கு கேடு' என்று அச்சடித்து இருந்தாலும் அதனைப் படித்துவிட்டு புகைக்கும் இளைஞர்கள் இருக்கின்றனர் .அவர்களின் சிந்தனைக்கு ஒரு ஹைக்கூ

இரு விரல்களுக்குக்கிடையே
ஒற்றைக் கால் எமன்
வெண் சுருட்டு !

நம்நாட்டில் பாறைகளை வெட்டி எடுத்து அயல்நாடுகளுக்கு அனுப்பி கொள்ளை அடிக்கின்றனர் .ஆற்றில் மணல்களை அள்ளி எடுத்து கடத்திக் கொள்ளை அடிக்கின்றனர் .தடுக்க முடியவில்லை .போட்டிப் போட்டு இயற்கையை அழித்து வருகின்றனர் .பொறுமையின் சின்னம் பூமி என்பார்கள் .அந்த பூமியே பொறுத்தது போதும் என்று பொங்கிய சினம்தான் சுனாமி .இதனை உணராமல் தொடர்ந்து இயற்கையை அழித்து வருகின்றனர் .

நொந்து போனது
நொய்யல் ஆறு
மணல் சுரண்டல் !

நூல் ஆசிரியர் சேலம் கவிஞர் ச .கோபிநாத் ஹைக்கூ பற்றி எழுதியுள்ள ஹைக்கூ நன்று .

பெருங்கடலாய் கருத்துக்கள்
சிறுதுளியாய் வரிகள்
ஹைக்கூ !

குழந்தைகளுக்கு இருக்கும் மனிதநேயம் பெரியவர்களுக்கு இருப்பதில்லை என்பதே உண்மை என்பதை உணர்த்திடும் ஹைக்கூ .

வழிகாட்டும் குழந்தை
சாலை கடக்கும் பார்வையற்றவர்கள்
மலர்கிறது மனிதநேயம் !

உலகப்பொதுமறை வடித்த திருவள்ளுவர் பற்றி ஒரு ஹைக்கூ .

வாழ்க்கை பட்டறையில்
புடம் போடும் கொல்லராய்
குறள் கொடுத்த வள்ளுவர் !
.
குடி கெடுக்கும் குடி பற்றி எழுதிய ஹைக்கூ குடிகாரர்களுக்கு விழிப்புணர்வு தரும் விதமாக உள்ளது .

மதி மயக்கும்
மது மயக்கம்
வீணாகும் மனிதர்கள் !

நூல் ஆசிரியர் சேலம் கவிஞர் ச .கோபிநாத் இயற்கையின் மீது பாசம் பற்று நேசம் மிக்கவர்என்பதைப் பறை சாற்றும் விதமாக உள்ள ஹைக்கூ .எள்ளல் சுவையுடன் உள்ளது .

காட்டுப் பாதையில்
மனிதர்கள் நடமாட்டம்
மரங்கள் ஜாக்கிரதை !

வளர்ந்து வரும் படைப்பாளி கவிஞர் ச .கோபிநாத் அவர்களே தொடந்து எழுதுங்கள் .வாழ்த்துக்கள் .பாராட்டுக்கள் .

.
eraeravi
eraeravi
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 553

Back to top Go down

பட்டாம் பூச்சிகளின் கனவுகள் !  நூல் ஆசிரியர் சேலம்  கவிஞர் ச .கோபிநாத்  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Empty Re: பட்டாம் பூச்சிகளின் கனவுகள் ! நூல் ஆசிரியர் சேலம் கவிஞர் ச .கோபிநாத் நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Aug 01, 2013 8:45 pm

நம் நாட்டில் கடவுள் திருவிழாவிற்கும் , கடவுளுக்கும் பஞ்சம் இல்லை .ஆனால் ஏழைகளின் பஞ்சம் தீர்ந்த பாடில்லை .தினந்தோறும் பெட்ரோல் விலை உயர்வு .அதன் காரணமாக விலைவாசிகள் உயர்வு .ஏழைகளின் வாழ்க்கையே பெரும் போராட்டமாகி வருகின்றது .என்பதை எள்ளல் சுவையுடன் உணர்த்தும் ஹைக்கூ நன்று .

வைகை ஆற்றில் அழகர்
காவிரி ஆற்றில் ரங்கன்
நட்டாற்றில் மனிதன் !

விவரிப்புக்குப் பாராட்டுகள் கவிஞரே
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

பட்டாம் பூச்சிகளின் கனவுகள் !  நூல் ஆசிரியர் சேலம்  கவிஞர் ச .கோபிநாத்  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Empty Re: பட்டாம் பூச்சிகளின் கனவுகள் ! நூல் ஆசிரியர் சேலம் கவிஞர் ச .கோபிநாத் நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

Post by eraeravi Thu Aug 01, 2013 10:35 pm

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
eraeravi
eraeravi
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 553

Back to top Go down

பட்டாம் பூச்சிகளின் கனவுகள் !  நூல் ஆசிரியர் சேலம்  கவிஞர் ச .கோபிநாத்  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Empty Re: பட்டாம் பூச்சிகளின் கனவுகள் ! நூல் ஆசிரியர் சேலம் கவிஞர் ச .கோபிநாத் நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
»  'குழந்தைகளைத் தேடும் கடவுள் ' நூல் ஆசிரியர் சேலம் கவிஞர் ச .கோபிநாத் நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» நேரத்தைப் போற்றிடுவோம் ! காலத்தை வென்றிடுவோம் ! நூல் ஆசிரியர் கவிஞர் டி .வி .எஸ் .மணியன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» ஆதாம் எலும்பில் ஏவாள் அல்ல .. நூல் ஆசிரியர் கவிஞர் கந்தகப்பூக்கள் ஸ்ரீபதி . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
» படிக்காத மேதை காமராஜரிடம் படிக்க வேண்டியவை ! நூல் ஆசிரியர் கவிஞர் நீலம் மதுமயன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
» உயிர் திருடும் உனக்கு ! நூல் ஆசிரியர் கவிஞர் ஆரூர் தமிழ்நாடன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .

Permissions in this forum:
You cannot reply to topics in this forum