தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


மணந்தரும் சாதி மல்லி

View previous topic View next topic Go down

மணந்தரும் சாதி மல்லி Empty மணந்தரும் சாதி மல்லி

Post by முழுமுதலோன் Fri Aug 02, 2013 10:05 am

அறிவோம் தமிழ் மருத்துவத்தின் அருமையை 
மணந்தரும் சாதி மல்லி

 
மணந்தரும் சாதி மல்லி Saathi-malli
சுடுகாட்டுப்புகை, சாக்கடை, மலம், அழுகிய பண்டங்கள், இறந்த உடல்கள் கெட்டுவரும் வாடை இவற்றை நுகர்வதால் வாழ்நாட்கள் குறைந்துபோகும். எனவேதான் நாம் நமது சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்திருக்கவேண்டும். தூய்மையான இடங்களில் வசித்தால், அறிவும், அழகும், வாழ்நாட்களும், நாள்தோறும் நலமும் கூடிப்பெருகும்.மூச்சுக் காற்று உள்ளிழுக்கப்படும்போது காற்றில் கலந்திருக்கும் வாசத்தை பிரித்தறியும் உணர்வு நரம்பினால் நாம் மணத்தை உணர்கிறோம். நாற்றமடிக்கும் அழுகல் வாசனையை உடைய மணத்தை நுகர்வதால் உடலும் குருதி நாளங்களும் அசுத்தமடையும். நலம்கெடும். மனத்தூய்மையும் கெடும். மனத்தூய்மை கெட்டுப்போவதால் பிறரைப் பழிவாங்கும் எண்ணம் மேலோங்கும். கோபம், கவலை, மந்தப்புத்தி, வஞ்சனை ஆகிய எண்ணங்களும் மேலெழும். ஊழிக்காற்றடித்தால் நச்சுக்காய்ச்சல், காலரா, வயிற்றுப்போக்கு ஊரெங்கும் பரவுகிறது.

இயற்கை நறுமணமான நல்ல வாசனையுடைய பொருட்களின் மணத்தை நுகர்வதால் மனமும் தூய்மையடையும், தெய்வீக எண்ணங்கள் பெருகும். எனவேதான் கோயில்களில் மற்றும் திருமணம் போன்ற விழாக்களில் நறுமணத்துடன் கூடிய அழகான மலர்களால் அழகுபடுத்துகிறார்கள். அன்பிற்கும் மதிப்பிற்கும் உரியவர்களைக் காணச்செல்லும்போது மலர்க்கொத்தைக் கொடுத்து வாழ்த்துவது வழக்கம். வெளியில் சென்ற கணவன் பணிச்சுமைகளையும் மேலும் பல இன்னல்களையும் பெற்று வீடுதிரும்பும்போது மனைவியின் இன்முகத்துடன் அவர் அணிந்திருக்கும் மல்லிகையின் மணமும் கலந்து மனச்சோர்வைப் போக்கி உற்சாகத்தைத் தருவது உண்மைதானே…!மணந்தரும் சாதி மல்லி Saathi-malli

மல்லிகையில் பலவகைகள் இருந்தாலும் மாலதி என்று அழைக்கப்படும் சாதிமல்லி மற்றெல்லாப் பூக்களையும் விட மேலான மணம் வீசக்கூடியது. இந்தமலர் சராசரியாக 60 அடிதூரம் வரை அதன் மணத்தைப் பரப்பக்கூடியது.

இதன் இலைகளைப் பறித்து சிறிது நல்லெண்ணை விட்டு வதக்கி வாதவலி வீக்கங்களுக்கு ஒற்றடம் கொடுக்க வலி நின்று வீக்கம் கரையும். தொண்டை நோய்க்கும், மார்பு வலிக்கும் ஒற்றடமிடலாம். இலையுடன் சேர்ந்து சிறிது சுக்கு, சுண்ணாம்புப் பால் சேர்த்தரைத்து நெற்றி, கன்னம், இவைகளில் தடவி சூடுகாட்டினால் நீர்த்தோசத்தினால் ஏற்பட்ட தலைவலி நீங்கும்.

இலைச்சாற்றுடன் சம அளவு நல்லெண்ணை சேர்த்துக் காய்ச்சிவடித்துச் சீழ்வடியும் புண்களுக்குத் தடவ ஆறும். காதில்வடியும் சீழ் நிற்கும். இளம்வயதில் பலவிதத்திலும் வாலிபத்தினைப் பாழாக்கிப் பிஞ்சிலே பழுத்த கனிகள் போல் நாடிநரம்பு தளர்ந்தவர்கள் இதன் இலையை அரைத்து தொடையிடுக்கு மற்றும் அவ்விடங்களில் கட்டிவர நாடி நரம்புகள் வலிமைபெற்று புத்துணர்வடையும். பூக்களை அரைக்காமல் வைத்துக்கட்டினாலும் இதே பலன் கிடைக்கும்.

குழந்தைகளுக்குப் பால்தருவதை நிறுத்திய தாய்மார்களுக்குப் பால் கட்டிக்கொண்டு மார்பில் வலியுண்டாகும். இதற்கு சாதிமல்லிப்பூக்களை மார்பில் பரவலாகவைத்துக் கட்டி வந்தால் விரைவில் நலமடையும்.

பூவை அரைத்து வீக்கங்களில் தடவ வீக்கம் குறையும். தோலில் உண்டாகும் சொறி மற்றும் சிரங்குக்கு பூவை அரைத்துக் கட்டி 15 கழித்துக் குளித்துவந்தால் நலமடையும். சாதிமல்லி வேருடன் சிறு வசம்புத்துண்டு சேர்த்து எலுமிச்சம்பழ சாற்றில் அரைத்து தலைக்குத் தடவிக் குளித்தால் பேன்கள் ஒழியும். தலைவலி பொடுகு அரிப்பு நீங்கும்.

சில ஆண்களுக்குப் பெண்கள் போல மார்பு பெரிதாக இருக்கும். இவர்கள் 3 மாதம் தொடர்ந்து இரவில் சாதிமல்லிப்பூவை மார்பில் வைத்துக் கட்டிக் காலையில் எடுத்துவிட மார்புகள் அளவில் சிறியதாகும். கடவுளுக்குப் பிடித்தமான மலர்களில் ஒன்றான சாதிமல்லியை இரவில் நமக்கும், குழந்தைகளுக்கும் அணிவித்துப் படுக்கையிலும் தூவி உறங்குவதால் மன அமைதியும் உயர்வான எண்ணங்களும், தூய மூச்சுக்காற்றும் பெற்று முகம் மலர்ச்சியும் அழகும் நிறைந்து காணப்படும்.

முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

மணந்தரும் சாதி மல்லி Empty Re: மணந்தரும் சாதி மல்லி

Post by செந்தில் Fri Aug 02, 2013 10:20 am

கைதட்டல் பயனுள்ளபகிர்வுக்கு நன்றி அய்யா கைதட்டல் 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

மணந்தரும் சாதி மல்லி Empty Re: மணந்தரும் சாதி மல்லி

Post by முரளிராஜா Fri Aug 02, 2013 1:18 pm

பயனுள்ளபகிர்வு
நன்றி அண்ணா
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

மணந்தரும் சாதி மல்லி Empty Re: மணந்தரும் சாதி மல்லி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum