Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
'குழந்தைகளைத் தேடும் கடவுள் ' நூல் ஆசிரியர் சேலம் கவிஞர் ச .கோபிநாத் நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
Page 1 of 1 • Share
'குழந்தைகளைத் தேடும் கடவுள் ' நூல் ஆசிரியர் சேலம் கவிஞர் ச .கோபிநாத் நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
'குழந்தைகளைத் தேடும் கடவுள் '
நூல் ஆசிரியர் சேலம் கவிஞர் ச .கோபிநாத் 8790231240
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
வாசகன் பதிப்பகம் .11/96 சங்கிலி ஆசாரி நகர் .சன்னியாசி குண்டு .சேலம் .636015.
செல் 9944391668.
உயிரூட்டிய பெற்றோருக்கும் .அறிவூட்டிய ஆசிரியர்களுக்கும் இந்த நூலை காணிக்கை ஆக்கி இருப்பது சிறப்பு .பதிப்பாளர் கவிஞர் ஏகலைவன் பதிப்புரை ,அட்டைப்பட வடிவமைப்பு அச்சு ,உள் ஓவியங்கள் யாவும் மிக நேர்த்தி வாசகன் பதிப்பகத்தின் பெருமை மிக வெளியீடாக வந்துள்ளது .பாராட்டுக்கள் .இனிய நண்பர் ஹைக்கூ ஆய்வுக் கவிஞர் மு .முருகேஷ் ,பேராசிரியர் முனைவர் மித்ரா இருவரின் அணிந்துரையும் மிக நன்று .
'குழந்தைகளைத் தேடும் கடவுள் 'என்பதை விட 'கடவுளைத் தேடும் குழந்தைகள் 'என்றால் இன்னும் பொருத்தமாக இருக்கும் .குழந்தைகளிடம் கடவுளை வணங்கு என்று நாம் கற்பிக்கும்போது குழந்தைகள்தான் கடவுள் எங்கே என்று தேடுகின்றன .
நூல் ஆசிரியர் சேலம் கவிஞர் ச .கோபிநாத் அவர்களுக்கு இந்த நூல் இரண்டாவது நூல் .சிறப்பான ஹைக்கூ கவிதைகளின் தொகுப்பு நூல் இது.என்பதில் இரண்டாவது கருத்து இருக்காது. தொலைக்காட்சி தொல்லைக்காட்சியாகி விட்ட காரணத்தால் பார்ப்பதை பெரும்பாலும் தவிர்த்து வருகிறேன் .எப்போதாவது பார்த்தால் விஜய் தொலைக்காட்சியில் திரு ,கோபிநாத் தொகுத்து வழங்கும் நீயா ? நானா ? நிகழ்ச்சி மட்டும் பார்ப்பதுண்டு .காரணம் .விழிப்புணர்வு விதைக்கும் விதமாக விவாதித்து வருகிறார் .நூல் ஆசிரியர் சேலம் கவிஞர் ச .கோபிநாத் அவர்களும் நீயா ? நானா ?திரு ,கோபிநாத் போல எதிர் காலத்தில் புகழ் பெறுவார் .அந்த அளவிற்கு விழிப்புணர்வு விதைக்கும் விதமாக ஹைக்கூ வடித்துள்ளார் .
.அடுத்த வீட்டில் வசிப்பது யார் என்று தெரியாமலே அடுக்ககங்களில் வாழ்ந்து வருகின்றனர் .பழங்கால நேசம் ,பரிவு ,அன்பு ,மனித நேயம் இன்று இல்லை .அடுக்ககங்களின் அவலம் சுட்டும் ஹைக்கூ .
தோப்பு
தனிமரமானது
அடுக்கக வாழ்க்கை !
ஓவியம் வரைதல் ,இசை இசைத்தல் ,பாடல் பாடுதல் ,மேடையில் பேசுதல் இப்படி பல்வேறு திறமைகள் இருந்தாலும் திருமனதிற்குப் பின் ' இல்லத்தரசிகள் 'என்ற பெயரில் பெண்களின் திறமை முழுவதும் வீணடித்து விடும் அவலம் உணர்த்தும் ஹைக்கூ .
அடிப்படிகளில்
பொசுக்கப்படுகின்றன
பெண்களின் திறமைகள் !
காதலை எழுதாத கவிஞன் இல்லை .காதலை எழுதாதவன் கவிஞன் இல்லை ..காதலை ஊறுகாய் அளவிற்கு கொஞ்சமாய் எழுதுவது நன்று .நூல் ஆசிரியர் சேலம் கவிஞர் ச .கோபிநாத் அவர்கள் காதலைகொஞ்சமாய் எழுதியது சிறப்பு .
நம்மை அறிந்தே
நாம் தொலையும்
காதல் !
தொலைக்காட்சியைக் கண்டுபிடித்தவர் இருந்தால் உண்மையில் வருந்துவார் .அறிவியல் கண்டுபிடிப்பில் மூட நம்பிக்கை முடை நாற்றம் வீசும் விதமாக தொலைக்காட்சியில் சோதிட நிகழ்சிகள் . எந்த வண்ணத்தில் சட்டை போட வேண்டும் என்பதை நாம்தான் முடிவு செய்ய வேண்டும் .ஆனால் நமது சட்டை வண்ணத்தை சோதிடர் சொல்வார் .என்ன கொடுமை இது .இந்த அவலத்தைக் கண்டிக்கும் ஹைக்கூ .
தொலைக்காட்சியில் சோதிடம்
அறிவியல் விதைக்கும்
மூட நம்பிக்கை!
.முன்பெல்லாம் கடைக்குச் செல்லும்போது கையில் பை எடுத்துச் செல்வோம் .இப்போது பலரும் பை எடுத்துச் செல்வதில்லை .நெகிழிப் பைகளே எங்கும் எதிலும் என்றாகி விட்டது .நெகிழிப் பையை தின்னும் விலங்குகள் இறந்து வருகின்றன .
தொண்டை நெறிக்கும்
நெகிழிப் பைகள்
அழியத் தொடங்கின விலங்குகள் !
குழந்தைகள் இருக்கும் வீடு என்பதற்கு அடையாளம் சுவரில் கிறுக்கல்கள் இருக்கும் .
வாடகை வீடாக இருந்தால் வீட்டின் உரிமையாளர் பார்த்தல் வசை பாடுவார் .அவருக்குத் தெரியாது புரியாது.
குழந்தைகள் மனசு .
சுவரெங்கும்
கிறுக்கல்கள்
குழந்தைகளின் வீடு !
நம் நாட்டில் ஏவுகணைங்கள் ஏவுகின்றனர் .விரைவில் வல்லரசு ஆகப் போகிறோம் என்று மார் தட்டிக் கொள்கிறோம் .ஆனால் ஏழைகளின் வறுமை மட்டும் இன்னும் ஒழியவே இல்லை .அரசியல்வாதிகள் அவர் வறுமை அவர் மக்கள் வறுமை ஒழித்து வளமாகி பெரும் பணக்காரர்கள் ஆகி விட்டார்கள் .மக்களின் வறுமை மட்டும் அப்படியே தொடர்கின்றது .பலரின் வாழ்க்கை
வீடு .
பாதசாரிகளே கவனம்
சாலையோரம்
வீடுகள் !
உலகில் உள்ள எல்லாக் கவிஞர்களின் பாடு பொருள் நிலா என்பது உண்மை .இவரும் நிலாவைப் பாடி உள்ளார்.
அதிகம் பாடப்பட்டும்
அழகு குன்றவில்லை
நிலா !
நிலவிற்கு அழகு குன்றவில்லை . கூடிக் கொண்டேதான் போகின்றது .
தந்தை பெரியார் இறுதி மூச்சு உள்ளவரை நம் நாட்டில் உள்ள மூட நம்பிக்கைகளை ஒழிக்க போராடினார் .
ஆனால் இன்னும் மூட நம்பிக்கை .ஒழியவில்லை கணினி யுகத்திலும் காட்டுமிராண்டிப் பழக்கம் தொடர்வது வேதனை .
சாலையெங்கும் சிதறின
எலுமிச்சைகளின் வடிவில்
மூட நம்பிக்கைகள் !
இன்றைய திரைப்படப் பாடல்கள் கொச்சையாகவும் பச்சையாகவும் ஆங்கிலச் சொற்கள் கலந்தும் வருகின்றன .இதன் பொருள் தெரியாமலே குழந்தைகள் மனப்பாடம் செய்து விடுகின்றனர் .
முக்கியத்துவம் இழந்தது
மனப்பாடச் செய்யுள்
திரைப்பாடல் !
சமுதாயதிற்கு நன்மை பயக்கும் விதமாக விழிப்புணர்வு விதைக்கும் விதமாக ஹைக்கூ கவிதைகள் எழுதி உள்ளார் ..நூல் ஆசிரியர் சேலம் கவிஞர் ச .கோபிநாத் அவர்களுக்கு பாராட்டுக்கள் .வாழ்த்துக்கள்
.
--
நூல் ஆசிரியர் சேலம் கவிஞர் ச .கோபிநாத் 8790231240
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
வாசகன் பதிப்பகம் .11/96 சங்கிலி ஆசாரி நகர் .சன்னியாசி குண்டு .சேலம் .636015.
செல் 9944391668.
உயிரூட்டிய பெற்றோருக்கும் .அறிவூட்டிய ஆசிரியர்களுக்கும் இந்த நூலை காணிக்கை ஆக்கி இருப்பது சிறப்பு .பதிப்பாளர் கவிஞர் ஏகலைவன் பதிப்புரை ,அட்டைப்பட வடிவமைப்பு அச்சு ,உள் ஓவியங்கள் யாவும் மிக நேர்த்தி வாசகன் பதிப்பகத்தின் பெருமை மிக வெளியீடாக வந்துள்ளது .பாராட்டுக்கள் .இனிய நண்பர் ஹைக்கூ ஆய்வுக் கவிஞர் மு .முருகேஷ் ,பேராசிரியர் முனைவர் மித்ரா இருவரின் அணிந்துரையும் மிக நன்று .
'குழந்தைகளைத் தேடும் கடவுள் 'என்பதை விட 'கடவுளைத் தேடும் குழந்தைகள் 'என்றால் இன்னும் பொருத்தமாக இருக்கும் .குழந்தைகளிடம் கடவுளை வணங்கு என்று நாம் கற்பிக்கும்போது குழந்தைகள்தான் கடவுள் எங்கே என்று தேடுகின்றன .
நூல் ஆசிரியர் சேலம் கவிஞர் ச .கோபிநாத் அவர்களுக்கு இந்த நூல் இரண்டாவது நூல் .சிறப்பான ஹைக்கூ கவிதைகளின் தொகுப்பு நூல் இது.என்பதில் இரண்டாவது கருத்து இருக்காது. தொலைக்காட்சி தொல்லைக்காட்சியாகி விட்ட காரணத்தால் பார்ப்பதை பெரும்பாலும் தவிர்த்து வருகிறேன் .எப்போதாவது பார்த்தால் விஜய் தொலைக்காட்சியில் திரு ,கோபிநாத் தொகுத்து வழங்கும் நீயா ? நானா ? நிகழ்ச்சி மட்டும் பார்ப்பதுண்டு .காரணம் .விழிப்புணர்வு விதைக்கும் விதமாக விவாதித்து வருகிறார் .நூல் ஆசிரியர் சேலம் கவிஞர் ச .கோபிநாத் அவர்களும் நீயா ? நானா ?திரு ,கோபிநாத் போல எதிர் காலத்தில் புகழ் பெறுவார் .அந்த அளவிற்கு விழிப்புணர்வு விதைக்கும் விதமாக ஹைக்கூ வடித்துள்ளார் .
.அடுத்த வீட்டில் வசிப்பது யார் என்று தெரியாமலே அடுக்ககங்களில் வாழ்ந்து வருகின்றனர் .பழங்கால நேசம் ,பரிவு ,அன்பு ,மனித நேயம் இன்று இல்லை .அடுக்ககங்களின் அவலம் சுட்டும் ஹைக்கூ .
தோப்பு
தனிமரமானது
அடுக்கக வாழ்க்கை !
ஓவியம் வரைதல் ,இசை இசைத்தல் ,பாடல் பாடுதல் ,மேடையில் பேசுதல் இப்படி பல்வேறு திறமைகள் இருந்தாலும் திருமனதிற்குப் பின் ' இல்லத்தரசிகள் 'என்ற பெயரில் பெண்களின் திறமை முழுவதும் வீணடித்து விடும் அவலம் உணர்த்தும் ஹைக்கூ .
அடிப்படிகளில்
பொசுக்கப்படுகின்றன
பெண்களின் திறமைகள் !
காதலை எழுதாத கவிஞன் இல்லை .காதலை எழுதாதவன் கவிஞன் இல்லை ..காதலை ஊறுகாய் அளவிற்கு கொஞ்சமாய் எழுதுவது நன்று .நூல் ஆசிரியர் சேலம் கவிஞர் ச .கோபிநாத் அவர்கள் காதலைகொஞ்சமாய் எழுதியது சிறப்பு .
நம்மை அறிந்தே
நாம் தொலையும்
காதல் !
தொலைக்காட்சியைக் கண்டுபிடித்தவர் இருந்தால் உண்மையில் வருந்துவார் .அறிவியல் கண்டுபிடிப்பில் மூட நம்பிக்கை முடை நாற்றம் வீசும் விதமாக தொலைக்காட்சியில் சோதிட நிகழ்சிகள் . எந்த வண்ணத்தில் சட்டை போட வேண்டும் என்பதை நாம்தான் முடிவு செய்ய வேண்டும் .ஆனால் நமது சட்டை வண்ணத்தை சோதிடர் சொல்வார் .என்ன கொடுமை இது .இந்த அவலத்தைக் கண்டிக்கும் ஹைக்கூ .
தொலைக்காட்சியில் சோதிடம்
அறிவியல் விதைக்கும்
மூட நம்பிக்கை!
.முன்பெல்லாம் கடைக்குச் செல்லும்போது கையில் பை எடுத்துச் செல்வோம் .இப்போது பலரும் பை எடுத்துச் செல்வதில்லை .நெகிழிப் பைகளே எங்கும் எதிலும் என்றாகி விட்டது .நெகிழிப் பையை தின்னும் விலங்குகள் இறந்து வருகின்றன .
தொண்டை நெறிக்கும்
நெகிழிப் பைகள்
அழியத் தொடங்கின விலங்குகள் !
குழந்தைகள் இருக்கும் வீடு என்பதற்கு அடையாளம் சுவரில் கிறுக்கல்கள் இருக்கும் .
வாடகை வீடாக இருந்தால் வீட்டின் உரிமையாளர் பார்த்தல் வசை பாடுவார் .அவருக்குத் தெரியாது புரியாது.
குழந்தைகள் மனசு .
சுவரெங்கும்
கிறுக்கல்கள்
குழந்தைகளின் வீடு !
நம் நாட்டில் ஏவுகணைங்கள் ஏவுகின்றனர் .விரைவில் வல்லரசு ஆகப் போகிறோம் என்று மார் தட்டிக் கொள்கிறோம் .ஆனால் ஏழைகளின் வறுமை மட்டும் இன்னும் ஒழியவே இல்லை .அரசியல்வாதிகள் அவர் வறுமை அவர் மக்கள் வறுமை ஒழித்து வளமாகி பெரும் பணக்காரர்கள் ஆகி விட்டார்கள் .மக்களின் வறுமை மட்டும் அப்படியே தொடர்கின்றது .பலரின் வாழ்க்கை
வீடு .
பாதசாரிகளே கவனம்
சாலையோரம்
வீடுகள் !
உலகில் உள்ள எல்லாக் கவிஞர்களின் பாடு பொருள் நிலா என்பது உண்மை .இவரும் நிலாவைப் பாடி உள்ளார்.
அதிகம் பாடப்பட்டும்
அழகு குன்றவில்லை
நிலா !
நிலவிற்கு அழகு குன்றவில்லை . கூடிக் கொண்டேதான் போகின்றது .
தந்தை பெரியார் இறுதி மூச்சு உள்ளவரை நம் நாட்டில் உள்ள மூட நம்பிக்கைகளை ஒழிக்க போராடினார் .
ஆனால் இன்னும் மூட நம்பிக்கை .ஒழியவில்லை கணினி யுகத்திலும் காட்டுமிராண்டிப் பழக்கம் தொடர்வது வேதனை .
சாலையெங்கும் சிதறின
எலுமிச்சைகளின் வடிவில்
மூட நம்பிக்கைகள் !
இன்றைய திரைப்படப் பாடல்கள் கொச்சையாகவும் பச்சையாகவும் ஆங்கிலச் சொற்கள் கலந்தும் வருகின்றன .இதன் பொருள் தெரியாமலே குழந்தைகள் மனப்பாடம் செய்து விடுகின்றனர் .
முக்கியத்துவம் இழந்தது
மனப்பாடச் செய்யுள்
திரைப்பாடல் !
சமுதாயதிற்கு நன்மை பயக்கும் விதமாக விழிப்புணர்வு விதைக்கும் விதமாக ஹைக்கூ கவிதைகள் எழுதி உள்ளார் ..நூல் ஆசிரியர் சேலம் கவிஞர் ச .கோபிநாத் அவர்களுக்கு பாராட்டுக்கள் .வாழ்த்துக்கள்
.
--
eraeravi- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 553
Re: 'குழந்தைகளைத் தேடும் கடவுள் ' நூல் ஆசிரியர் சேலம் கவிஞர் ச .கோபிநாத் நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
ஓவியம் வரைதல் ,இசை இசைத்தல் ,பாடல் பாடுதல் ,மேடையில் பேசுதல் இப்படி பல்வேறு திறமைகள் இருந்தாலும் திருமனதிற்குப் பின் ' இல்லத்தரசிகள் 'என்ற பெயரில் பெண்களின் திறமை முழுவதும் வீணடித்து விடும் அவலம் உணர்த்தும் ஹைக்கூ .
அடிப்படிகளில்
பொசுக்கப்படுகின்றன
பெண்களின் திறமைகள் !
விழிப்புணர்விலும் கல்வியிலும் பெண்கள் மென்மையடைந்தும் வருகிறார்கள்...
பாராட்டுகள்
Re: 'குழந்தைகளைத் தேடும் கடவுள் ' நூல் ஆசிரியர் சேலம் கவிஞர் ச .கோபிநாத் நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
eraeravi- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 553
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|