Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
உடல் நலத்திற்கு ஊதுபத்தியும் ஊறுவிளைவிக்கும் - ஆய்வில் அதிர்ச்சி தகவல்!
Page 1 of 1 • Share
உடல் நலத்திற்கு ஊதுபத்தியும் ஊறுவிளைவிக்கும் - ஆய்வில் அதிர்ச்சி தகவல்!
உலக அளவில் புகையிலை பாதிப்பால் ஏற்படும் நோய்களை தீர்ப்பதற்குதான் ஒவ்வொரு நாட்டின் அரசுக்கும் அதிகம் செலவாகிறது.காரணம் இந்த புகையால்தான் ஆறு நொடிக்கு ஒருவர் இறப்பை தழுவுகிறார்கள். பொதுவாக புகையிலை என்றதும் நினைவிற்கு வருவது "சிகரெட்�. இதில் உள்ள நிக்கோடின் என்ற நச்சுப்பொருள்தான், புகைப்பவர்களை அடிமையாக்குகிறது. ஒரு சிகரெட்டில் 4 ஆயிரம் வேதிப்பொருட்கள் கலந்துள்ளன. இவற்றில் 43 பொருட்கள் புற்றுநோய் ஏற்படுத்தக் கூடியவை. தற்போது உலகளவில் 6 நொடிக்கு ஒருவர் புகையிலையால் பலியாகிறார்.மேலும் ஆண்டுக்கு 60 லட்சம் பேர், புகையிலை மற்றும் சிகரெட்டால் இறக்கின்றனர். 2030 - க்குள் இது ஒரு கோடியாக அதிகரிக்கும், என கணிக்கப்பட்டுள்ளது. இதில், 70 சதவீதம் பேர், வளரும் நாடுகளில் உள்ளனர்,
இதற்கிடையில் ஊதுவத்திகளை அதிகளவில் பயன்படுத்துவதால் வீட்டுக்குள்ளே காற்று மாசு அடைந்து, நுரையீரல் நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று ஓர் ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் சமய சடங்குகள் நடக்கும்போதும், வாசனைக்காகவும் ஊதுவத்திகள் கொளுத்தப்படுகின்றன. ஐக்கிய அரபு குடியரசில் 94 சதவீத வீடுகளில் ஊதுவத்திகள் பயன்படுத்தப்படுகின்றன.
இது போன்ற ஊதுவத்தி புகையால் கண், மூக்கு, தொண்டையில் பிரச்னைகள், தோலில் எரிச்சல், ஆஸ்துமா, தலைவலி, இதயக்கோளாறுகள் ஏற்படுகின்றன. நுரையீரல் செல்லின் கட்டமைப்பு முறையிலேயே மாற்றம் ஏற்படுகிறது. சுவாசம் தொடர்பான நோய்களால் ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சம் பேர் இறக்கின்றனர் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
முக்கியமாக சமைக்கும் அடுப்பிலிருந்து எழும் புகையால் அதிக பாதிப்பு ஏற்படுகிறது. ஊதுபத்தியும் கார்பன் மோனாக்சைடை வெளியிட்டு அதேபோன்ற காற்று மாசை ஏற்படுத்துகிறது.இந்நிலையில் ஊதுவத்திகளை பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து வடக்கு கரோலினா பல்கலைக்கழகத்தின் கொள்ளைநோய்கள் ஆராய்ச்சி துணை பேராசிரியர் காரின் யேத்ஸ், அதே பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் சிலர் சேர்ந்து ஆய்வு மேற்கொண்டனர்.ஆய்வுக்கென்று சிறப்பாக வடிவமைக்கப்பட்ட அறையில் ஊதுவத்திகள் கொளுத்தி வைக்கப்பட்டன. ஐக்கிய அரபு குடியரசில் சாதாரணமாக வீடுகளில் எந்த அளவுக்கு ஊதுவத்தி பயன்படுத்தப்படுமோ அதே அளவிலான ஊதுவத்திகள் புகையவிடப்பட்டன.
அந்த அறையில் மனித நுரையீரல் செல்கள் வைக்கப்பட்டிருந்தன. 3 மணி நேரத்துக்கு புகை அந்த செல்களை சூழ்ந்து இருக்கும்படி செய்யப்பட்டது. பின்னர் புகையால் எழுந்த துகள்கள் படியும் வகையில் 24 மணி நேரத்துக்கு அந்த செல்கள் பாதுகாக்கப்பட்டன. ஆய்வின்போது ஊதுவத்தியிலிருந்து வெளியாகும் கார்பன் மோனாக்சைடு, சல்பர் டை ஆக்சைடு, நைட்ரஜன், பார்மால்டிஹைடு ஆகிய வாயுகளின் அடர்த்தி குறித்தும் ஆராயப்பட்டது.பின்னர் அந்த செல்லை ஆராய்ந்தபோது சிகரெட் புகையால் ஏற்படும் அத்தனை பாதிப்புகளும் அந்த செல்களில் இருப்பது தெரியவந்தது.
Similar topics
» காப்பி உடல் எடை அதிகரிப்பதை தடுக்கும் : ஆய்வில் தகவல்
» நல்ல உறக்கத்திற்கும் உடல் பருமன் குறைவதற்கும் தொடர்புள்ளது: ஆய்வில் தகவல்
» புகை+ உடல் நலத்திற்கு பகை
» உடல் நலத்திற்கு முக்கியமான குறிப்புகள்
» உடல் நலத்திற்கு உதவும் காய்கறிகள்
» நல்ல உறக்கத்திற்கும் உடல் பருமன் குறைவதற்கும் தொடர்புள்ளது: ஆய்வில் தகவல்
» புகை+ உடல் நலத்திற்கு பகை
» உடல் நலத்திற்கு முக்கியமான குறிப்புகள்
» உடல் நலத்திற்கு உதவும் காய்கறிகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|