தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஆயிரம் வார்த்தைகளை விட அரை நொடி மெளனம் அர்த்தமுள்ளது..........

View previous topic View next topic Go down

ஆயிரம் வார்த்தைகளை விட அரை நொடி மெளனம் அர்த்தமுள்ளது.......... Empty ஆயிரம் வார்த்தைகளை விட அரை நொடி மெளனம் அர்த்தமுள்ளது..........

Post by முழுமுதலோன் Thu Aug 08, 2013 4:41 pm

ஆயிரம் வார்த்தைகளை விட அரை நொடி மெளனம் அர்த்தமுள்ளது..........


                                 
நற்செயல்


சொல்லப்படாத நல்ல வார்த்தைகள் இன்னும் மலராத மலர்களே
செய்யப்படாத நல்ல செயல்கள் இன்னும் பிறவாத குழந்தைகளே

ஒராயிரம் நல்லசொற்களும் யாரையும் மாற்றுவதில்லை
ஒரொயொரு நல்ல செயலே யாரையும் மாற்றுகின்றன

நன்றிது தீது இது என்று இரண்டு தேற்றுதல் துணிவு
தேற்றம் இதுவெனச் செய்க நல்வினையே எப்போதும்

பெயருக்கு எடை எழத்துக்களால் அல்லஅதன் நற்செயல்களாலே
பெயருக்கு அழகு உச்சரிப்பாலல்ல அவள் நற்புகழ்களாலே

அறிஞரைக் கண்டால் கை உயர்வது வாழ்த்துவதற்கு
வறிஞரைக் கண்டால் கை உயர்வது வழங்குவதற்கு

மற்றவரை சரிக்க வைத்தவருக்கு ஒரு போதும் தனிமையில்லை
மற்றவரை மகிழச் செய்தவருக்கு ஒரு போதும் வறுமையில்லை

ஆயிரம் வார்த்தைகளை விட அரை நொடி மெளனம் அர்த்தமுள்ளது
ஆயிரம் கடிதங்களை விட அரை பார்வை பயனுள்ளது

நல்ல எண்ணங்களே நல்ல திட்டங்களின் வரைபடம்
நல்ல செயல்களே நல்ல சாதனைகளின் பிறப்பிடம்

நமது சிந்தனைகளுக்கும் நாம் ஒருபனே பொறுப்பாளி
நமது செயல்களுக்கும் நாம் ஒருபனே முதலாளி

குறைவாக இருக்கிறதென்று கொடுக்காமல் இருந்து விடாதே
தாமதமாகி விட்டதென்று செய்யாமல் இருந்து விடாதே


XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
                                 
நன்மை


சகம்  எல்லாம் தங்க நிழல் பரப்பி
புகழ் மணம் கமழம் குணம் பல பூத்து வாழ்க

மக்கள் உலகில் நன்மை செய்யுங்கள் பலனாக
கடவுள் உலகில் நன்மை பெறுங்கள்

கோபுரத்தின் உச்சியிலே விளக்கேற்று ஊரெல்லாம் ஒளியாகும்
குடிசையின் உள்ளத்திலே விளக்கேற்று உலகெல்லாம் புகழாகும்

நன்மையை எண்ணுபவன் தாயைப் போல சிறந்தவன்
நன்மையைச் செய்பவன் தாயை விடவும் சிறந்தவன்

உனக்கு நன்மை என்பதெல்லாம் உண்மையான நன்மையல்ல
ஊருக்கு நன்மை என்பதுவே உண்மையான நன்மையாகும்

கைக்கு தேன் கிடைத்தால் நாவுக்கு தரும்
கருனைக்கு செல்வம் வந்தால் நல்லவர்க்கு தரும்


மண்ணிலே தேன் விழந்தால் யாருக்கு லாபம்
கயவருக்கு பொருள் கிடைத்தால் கலவரமாகும்

உண்மையைச் சொல்பவன் பின் ஒரு கூட்டமே வரும்
நன்மையைச் செய்பவன் பின் ஒரு நாடே வரும்

நம் விழியின் அளவே நமக்கு பார்வை தெரியும்
நம் எண்ணத்தின் அளவே நமக்கு உயர்வு வரும்

என்று என்பதை விட நன்மை செய்வதே முக்யமானது
 நன்று என்பதை இன்றே செய்வது மிகநன்மையானது.

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
                             
பயன்


பொன்னை பொருள் என்று போகத்தில் திளைக்காதே
உன்னை பொருள் என்று தியாகத்தில் நிலைப்பாயே

ஒருவனுக்கு உணவு கொடுத்தால் ஒரு பசிவயிறு உயிர் பிழைக்கும்
ஒருவனுக்கு கல்வி கொடுத்தால் ஒருதலை முறை வயிறு பிழைக்கும்

எதிர்பார்த்து கொடுப்பவன் கடன் தரும் வியாபாரியே
எதிர் பாராது கொடுப்பவன் பால் தரும் தாய்க்கு சமம்

எளிமையான தோட்டத்தினுள்ளே வலிமையான இதயமுள்ளவர் அறிஞர்
வளமையான தோட்டத்திள்ளே வறுமையான கைகளுள்ளவர் அற்பார்

தற்புகழ் தேடி தன்னலம் விரும்பிச் செய்யும் பனியும் ஒரு பிணியே
தர்னே வாங்கி தனக்கே அணிந்து கொள்ளும் 
மாலையும் ஒரு அவமானமாகும்

கல்வி கற்றதின்  பயன் கல்லாதவருக்கு எல்லாம் 
கல்லாதவருக்கு எல்லாம் கற்று கொடுக்கவே
பொருள் பெற்றதின் பயன் 
இல்லாதவருக்கு எல்லாம் தந்து மகிழவே

நீரான போதும் குடிப்பதற்கு குடிநீராவோம்
நெருப்பான போதும் தீபத்தின் ஒளியாவோம்
மையான போதும் பேனாவுக்கு மையாவோம்
செருப்பான போதும் ஏழைக்கு உதவுவோம்

பணத்தையும் காலத்தையும் விரயமாக்காதே 
ஊருக்காகபயன்படுத்து
படிப்பையும் பொருளணயும் வரவுவைக்காதே 
உலகுக்காக பயன்படுத்து.


XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
                       
தானம்


கிழிந்த உடையையும் மிஞ்சிய உணவையும் 
தருவது மட்டும் தர்மம் ஆகாது
உயர்ந்த உதவியையும் சிறந்த ந்ன்மையையும் 
செய்வதே ந்ல்ல தர்ம்மாகும்


கர்மம் என்பது முற்ப்பிறப்பிற்கு நாம் செய்யும் பரிகாரம்
தர்மம் என்பது வரும் பிறப்பிற்கு நாம் செய்யும் உபகாரம்


நிழல் படத்துக்காக சிரித்து வைப்பார் போலியான தலைவர்கள்
புகழ் படத்துக்காக கொடுத்து வாழ்வார் போலியான வள்ளல்கள்


பணத்தினால் வந்த பயன் பரிதவிப்பவருக்கு கொடுத்து மகிழும்
குணத்தினால் வந்த பயன் பாசமுள்ளவரிடம் பகிர்ந்து வாழும் நலமே


விளம்பரத்துக்காக் வியாபாரமாய் செய்யப்படும் தானம் நீர் மேலெழுத்து
இரக்கத்துக்காக இனிமையாய் கொடுக்கப்படும் தானம் 
கல் எழுதியஎழுத்து


நாய்க்கு எலும்பு தந்து வள்ளல் என்று வேடமிடுகிறார்
பசிக்கு மோர் தந்து தலைவர் என்று நாடகமாடுகிறார்


பசித்தவனுக்கு ஒளித்தது திருடனுக்கு உணவாகும்
கதிரவனுக்கு ஒளிக்காதது காமுகனுக்கு விருந்தாகும்


கொடுப்பது சிறிது என்று தயங்காதே
         வாங்குப‌வர்க்கு அது பெரிது
எடுப்பது சிறிது என்று திருடாதே
         இழந்தவருக்கு அது பெரிது


கைகளில்லாத மேகமும் கருணையைம் பொழிகிறது
கைகள் உள்ள மனிதனோ கருமியாய் இருக்கிறான்


XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX


பரிசுத்தமான நதிகள் மற்றவர் பாவங்களை நீக்கும்
பரிசுத்தமான இதயங்கள் மற்றவர் இன்னல்களை [b style="font-family: Arial, Helvetica, sans-serif;"] நீக்கும்[/b]


மற்றவர்க்கு எந்த நாளும் சுகம் வளர்ந்திட
கடமையின் முந்துகின்ற மனிதரே முதல் தவ முனிவர் ஆவாரே

பிறர் துயர் பேணும் பெருமையும் சாந்தமும்
அறம் நிறை அகமும் அறிவும் அமைதல் வேண்டும்

ஞானமுற்ற நெஞ்சமெல்லாம் அருளும் அன்பும் தேடித்திரியுமே
ஊனமுற்ற உள்ளமெல்லாம் பொருளும் பொன்னும் நாடிநலியுமே

இதயங்களில் ஈரம் இல்லாத மனிதரின் நாடு
கலயங்களில் ஈரம் காணாத மக்களின் சுடுகாடாகும்

திறம் என்பது அஞ்சி வந்தவரின் அச்சத்தை தீர்ப்பதுவே
அறம் என்பது பசித்து வந்தவரின் பசியை தீர்ப்பதுவே

அள்ளிக் கொடுக்காத செல்வமும்
சொல்லிக் கொடுக்காத கல்வியும் வீணே
கொள்கையில்லாத அரசியலும்
குறிக்கோளில்லாத பயணமும் வீணே

ஒருவரிடம் பணம் குவிய குவிய பத்து பேர் திருடர்களாகிறார்கள்
ஒருவரிடம் உணவு குவிய குவிய நூறு பேர் பிச்சைக்காரர்களாகிறார்கள்

காற்றோட்டமில்லாத வீட்டிலே புழக்கமிருக்கும்
கருணையில்லாத மனதிலேயும் புழக்கமிருக்கும்


XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
           
புண்ணியம்

காற்றடிக்கும் போதே கடல் பயணத்தை நடத்தி விடு
செல்வமிருக்கும் போதே நல்ல புண்ணியத்தை சேர்த்து விடு

நாம் செய்த தீமைகள் நிழல் போல பின் தொடரும்
நாம் செய்த நன்மைகள் நன்றியுள்ள நாய் போல் பிந்தொடரும்

கண்ணின் ஒழுக்கம் கண்ணியம்
கருணையின் பழக்கம் புண்ணியம்

சன்னலை திறந்து விடுங்கள்
  அறையின் புழுக்கம் கரைந்து விடும்
மற்றவர் துயரை தீருங்கள்
  மனதின் துக்கம் மறைந்துவிடும்

புண்ணிய ஊர்களுக்கு போனால் நமக்கும் புண்ணியமே
அன்னிய தேசங்களுக்கு போனால் நாமும் அன்னியமே

விழந்தது கணக்கு இல்லை
விழந்த பின் எழுந்ததே புகழாகும்

சேர்த்தது கணக்கு இல்லை
சேர்த்த பின் கொடுத்ததே புண்ணியமாகும்

கருணையும் காற்றுமுள்ளவை மிதக்கின்றன‌
கர்வமும் கனமுள்ளவை மூழ்குகின்றன‌

கல்வியில்லாது உள்ளத்தில் கண்ணியம் சேராது
 [b style="font-family: Arial, Helvetica, sans-serif;"]கருணையில்லாது உலகத்தில் புண்ணியம் கிடையாது[/b]


 [b style="font-family: Arial, Helvetica, sans-serif;"]XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX[/b]
                             
தொண்டு


நம் சுமையை நாம் சுமக்க வலியால் முதுகு வளையும்
பிறர் சுமையை நாம் சுமக்க புகழும் தலை நிமிரும்

தக்கோர் செயல் எல்லாம் தமக்காக அல்லவே
முக்கியம் புகழோ அல்ல அது நம் உயிர்க்கடமையே

யாருக்கு பிறந்தோம் என்பதை பேருக்கு முன் வரும் எழத்து சொல்லும்
யாருக்காக வாழ்ந்தோம் என்பதை 
தேருக்கு பின் வரும் கூட்டம் சொல்லும்

தனக்காக வாழ்வது மிருகம்
பிறர்க்காக தேய்வது தெய்வம்
தன்னுயிரை வளர்ப்பது மனிதம்
பிறருயிரை காப்பது புனிதம்

நீ சிந்தும் ஒரு சோற்று பருக்கை பல உயிர்களுக்கு சாப்பாடு
நீ சிந்தும் ஒரு துளி வியர்வை பல செல்வங்களுக்கு திறவு கோல்

தேவையுள்ளவர் துயர் தீர்ப்பதே நல்ல சேவையாகும்
சேவைகளே ஒரு சமூகத்தை சீராக்க உதவுகிறது

நம் தேவைகள் வள‌ர வள‌ர துயரம் நெருங்கி வரும்
நம் சேவைகள் வளர வளர இறைவன் நெருங்கி வருகிறான்

வழங்குவதிலும் வாழ்த்துவதிலும் முதலில் நிற்க வேண்டும்
வாங்குவதிலும் ஏங்குவதிலும் இறுதியிலும் நிற்க வேண்டாம்

-------------------------------------------------------------

Posted by DrBALA SUBRA MANIAN
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ஆயிரம் வார்த்தைகளை விட அரை நொடி மெளனம் அர்த்தமுள்ளது.......... Empty Re: ஆயிரம் வார்த்தைகளை விட அரை நொடி மெளனம் அர்த்தமுள்ளது..........

Post by முரளிராஜா Thu Aug 08, 2013 8:55 pm

நன்றி அண்ணா பகிர்ந்தமைக்கு
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ஆயிரம் வார்த்தைகளை விட அரை நொடி மெளனம் அர்த்தமுள்ளது.......... Empty Re: ஆயிரம் வார்த்தைகளை விட அரை நொடி மெளனம் அர்த்தமுள்ளது..........

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Aug 09, 2013 6:22 am

ஒராயிரம் நல்லசொற்களும் யாரையும் மாற்றுவதில்லை
ஒரொயொரு நல்ல செயலே யாரையும் மாற்றுகின்றன
உண்மைதான்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ஆயிரம் வார்த்தைகளை விட அரை நொடி மெளனம் அர்த்தமுள்ளது.......... Empty Re: ஆயிரம் வார்த்தைகளை விட அரை நொடி மெளனம் அர்த்தமுள்ளது..........

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum