Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
உறக்கம் என்பது உடலுக்கு அமைதி தரும் இரக்கம் என்பது உள்ளத்துக்கு அமைதி தரும்
Page 1 of 1 • Share
உறக்கம் என்பது உடலுக்கு அமைதி தரும் இரக்கம் என்பது உள்ளத்துக்கு அமைதி தரும்
உறக்கம் என்பது உடலுக்கு அமைதி தரும் இரக்கம் என்பது உள்ளத்துக்கு அமைதி தரும்
இனிமை
கண்களை அகற்றி மிரட்டினால் குழந்தைகளும் பகை கொள்ளும்
உதடுகளை விரித்து சிரித்தால் விலங்குகளும் நட்பு கொள்ளும்
அன்பு எனப்படுவது மற்றவர் மனம் மகிழ்ச் செய்தல்
பண்பு எனப்படுவது மற்றவர் மனம் வாடாது பழகுதல்
பொன்னகை கழுத்துஅழகு தரும்
புன்னகை முகத்துக்கு அழகு தரும்
ஆயுளும் பொருள்நகை கொடுத்து சாதிக்க இயலாததை
அன்பான ஒருபுன்னகை கொடுத்து சாதிக்க இயலுமே
மலரானது வண்டுகளை ஈர்ப்பதுபோல
சிலர் முகம் மனிதரை கவர்ந்திடும்
காந்தமது துகள்களை ஈர்ப்பது போல
சிலர் முகம் இதயங்களை கவர்ந்திடும்
உழைக்கும் போது இரும்பின் உறுதி வேண்டும்
உறவாடும் போது கரும்பின் மொழி வேண்டும்
அடித்தாலும் மென் மலர் செண்டால் அடித்தால் வலிக்காது
கண்டித்தாலும் தேன் இனிய செல்லால் சென்னால் வலிக்காது
நாக்கு என்பது தேனும் தென்றலும் கலந்து செய்தால்
மந்திரக் கோலாகும்
நாக்கு என்பது தேனும் தீயும் கலந்து செய்தால்
கொலை ஆயுதமாகும்
வன்சொல்லைவிட கொடிய நஞ்சு எதிலும் இல்லை
இன்சொல்லை விட இனிய மருந்து உலகில் இல்லை
நற்குணவான்களின் நேய மொழி தேன் போல் இனிக்குமே
தர்குணவாள்களின் தீய மொழி தீப் போல் எரிக்குமே
Xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
அருள்
ஆற்றுதல் என்பது நாடி வந்தவரை வாழ்வித்தல்
போற்றுதல் என்பது அன்பு வைத்தவரை பிரியாதிருத்தல்
உடல் பெற்ற கண் பொருளை பார்க்கும்
உள்ளம் பெற்ற கண்தான் அருளை பார்க்கும்
பொறாமை என்ற பார்வை விழிகளுக்கு இருள் சேர்க்கும்
பொறுமை என்ற பார்வை விழிகளுக்கு அருள் சேர்க்கும்
அடுத்தவர் துயர் கெடுத்து அவரைக் காத்தலே
நான் இங்குஎடுத்த நல் தவத்தின் இலக்கணம்.
பிறர்க்காய் இராப்பகலாய் உழைப்பார் ஒரு பயன் கருதாதார்ர்
அகிலமும் தாங்கும் அருளே அரங்கமாக சகலமும் செய்வார்
உன்னிடம் பொருளைப் பெறுபவன் உனக்குப் புண்ணியம் தந்த வள்ளலே
உன்னிடம் அருளைப் பெற்றவள் உனக்கும்
புகழ் சேர்த்த புண்ணியவானே
போக்கு வரவு இல்லையென்றால் பொருளாதாரம் வளர்வதில்லை
பொருளாதாரம் இல்லையென்றால் அருளாதாரம் வளர்வதில்லை
மலர் தந்த கைகளிலே மணம் ஒட்டிக் கொள்ளும்
கருணை தந்த கைகளிலே மணம் ஒட்டிக் கொள்ளும்
ஈரமான இறகுகள் பறப்பதற்கு இடையூறாக இருக்கும்
ஈரம், இரக்கமில்லாத இதயங்கள் சிற்ப்பதற்கு தடையாக இருக்கும்
செயல்படும் சத்யத்தின் பெயரே ஆண்டவன்
செயல்படும் கருணணயின் உருவமே இறைவன்.
Xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
இரக்கம்
காமம் களவு கோபம் கொண்டவன் காட்டில் உள்ள மிருகம்
கருணை அன்பு இரக்கம் கொண்டவன் இதயம் உள்ள தெய்வம்
ஈரமில்லாத மண்ணில் பயிர்கள் எதுவும் வளர்வதில்லை
ஈரமில்லாத மனதில் இறைவன் என்றும் வருவதில்லை
வரப்பிலே ஈரம் இல்லையென்றால் பயிர் வளராது
இதயத்திலே ஈரம் இல்லையென்றால் உயிர் வளராது
உறக்கம் என்பது உடலுக்கு அமைதி தரும்
இரக்கம் என்பது உள்ளத்துக்கு அமைதி தரும்
தேவனது வார்த்தைகள் திருடரது இதயத்தையும் உறுத்தும்
ஏழையின் வறுமைகள் வள்ளலின் இதயத்தை வருத்தும்
கல்லான வயலிலே புல்லும் புண்டும் வளர்வதில்லை
கல்லான மனதிலே கருணையும் கடவுளும் வருவதில்லை
இறகுகள் ஈரம் ஒட்டினால் பறக்க முடியாது
இதயங்களில் ஈரம் காய்ந்தால்சிறக்க முடியாது
அரியதென்று கள்ளும். ஒரு செயலில்லைதுணிந்தவர்க்கு
எளியதென்று தள்ளும் ஒரு மனிதரில்லை இனியவர்க்கு
ஈரமுள்ள அடுப்பில் நெருப்பு பற்றாது
ஈரமுள்ள மனதில் அன்பு வற்றாது
வஞ்சிக்கப்பட்டவருக்கு தேவை நீதியே வெறும் இரக்கமல்லை
வாடிநின்றவருக்கு தேவை உதவியே வெறும் வார்த்தையல்ல
Xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
கருணை
கனியும் கருணையே கனியாகக் காய்த்து
துயரம் உருவம் உயிக்க்கெல்லாம்துன்பம் துடைப்பாயே
கருணையற்ற கண்கலெல்லாம் பார்வையில்லாத புண்களே
இரக்கமற்ற கைகளெல்லாம் ஊனமுற்ற கட்டைகளே
கண் பார்வை இல்லாதவருக்கு உலகமே இருள்
கருணை பார்வை இல்லாதவருக்கு உள்ளமே இருள்
கடவுளென்ற மரத்தின் நிழலே கருணை என்பார்
கருணையென்ற மரத்தின் நிழலே புகழ் என்பார்
காற்று நிரம்பிய பைகள் உயர்ந்து வானில் பறக்கும்
கருணை நிரம்பிய மனங்கள் புகழ் வானில் உயரும்
உயிரில்லாத உடல்கள் பிணம் எனப்படும்
கருணையில்லாத கண்கள் ஊனம் எனப்படும்
இருள் நோக்கி விரையும் ஒளியென ஏழ்மை நோக்கி ஒடும் கருணை
நீரைத் தேடி ஒடும் மீனென வளமை நோக்கி ஒடும் கயமை
கற்பென்ற உடை அணிந்தால் மிருகம் மனிதமானது
கருணையென்ற கண் விழித்தால் மனிதம் தெய்வமானது
அச்சத்தில் வியர்ப்பான் கோழை
அயர்வில் வியர்ப்பான் ஏழை
காமத்தில்வியர்ப்பான் காமுகன்
கருணையில் வியர்ப்பவன் புனிதன்
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
மனிதநேயம்
உறக்கம் உடல் தளர்வை அகற்றும்
இரக்கம் மன தளர்வை மாற்றும்
பகுத்து அறியும் அறிவு மனித வளத்தை வளர்க்கும்
பகுத்து உண்ணும் உணவு மனித நேயத்தை வளர்க்கும்
அபிமானம் என்பது நமக்கு பிறந்தவர்களை நாம் நேசிப்பது
மனிதாபிமானம் என்பது மண்ணில் பிறந்தவர்களை நாம் நேசிப்பது
ஆறு பள்ளம் தங்கினால் குளம் குட்டையாகும்
மனித நேயம் தேங்கினால் குணம் குட்டையாகும்
தந்தையே ஆதியாக வந்த மானுட குடும்பத்துக்காக
சொந்த இச்சை துறந்து மற்றவர்க்காக வாழ்வது கடமை
அன்னை தந்த பரிசு சகோதர பாசம் அதை பகைக்கலாமோ
ஆண்டவன் தந்த பரிசு மனிதநேயம் அதை சிதைக்கலாமோ
தேரில் செல்பவனுக்கு காலில் நடப்பவன் வலி தெரிவதில்லை
வானில் பறப்பவனுக்கு வயிறுபசித்தவன் வலி புரிவதில்லை
இறைவனோ மனித நேயம் இணைவதற்கு
இரண்டு பேதங்கள் வைத்தான்
மனிதனோ மனித பகை வளர்வதற்கு
இராண்டாயிரம் பேதங்கள் பிரித்தான்
இரத்தத்தின் எண்ணம் சுத்தமானால் துயரத்தின் சத்தம் நிற்கும்
இதயத்தின் ஆழத்தில் கருணை மலர்ந்தால் அமைதியது நித்தம் வரும்
காகம் கூட பகிர்ந்துண்ணும் நாகம் கூட நட்புறவாகும்
மிருகம் கூட பகையின்றி வாழும் நாய் கூட நன்றியறியும்
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
காருண்யம்
உயிர் அனைத்தும் அவன் பிறப்பென உணர்ந்தால் கொலையிருக்காது
உடைமை அனைத்தும் அவன் பரிசென அறிந்தால் கொள்ளையிருக்காது
வெளிச்சமே தெரியாத விழியிடம் வண்ணத்தைப்பார் என்பது மடமையே
ஒழுக்கமே இல்லாத கயவனிடம் கருணையைக் காட்டு என்பதும் ம்டமை
மண்ணின் வாசம் மலராலே
மனதின் வாசம் பாசத்தாலே
வானத்தின் வாசம் மழையாலே
மனிதனின் வாசம் கருணையாலே
பயந்து அழுபவன் கோழை
பசிக்கு அழுபவன் ஏழை
காமத்தின் அழுபவன் மிருகம்
காருண்யத்தில் அழுபவன் தெய்வம்
தன் உடலை வளர்க்க வாடுபவன் மனிதன்
தன் இனத்தை வளர்க்க பாடுபவன் கவிஞன்
கடன் வாங்கினால் அவனுக்கடிமை
காமம் தீர்த்தால் அவனுக்கடிமை
கயமை செய்தால் சிறைக்கடிமை
கருணை கொண்டால் இறைக்கடிமை
காண்களில் கருணை பிறந்தால் உதிரத்தில் அமுது சுரக்கிறது
இதயத்தில் கோபம் மிருந்தால் இரத்தத்தில் நஞ்சு கலக்கிறது
குரங்குக்கு கோவணம் கட்டி விட்டு ஜிவகாருண்யம் என்பார்
கோவிலுக்கு வெள்ளையடித்துவிட்டு பாவம் தீர்ந்தது என்பார்
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
உதவி
கடனாக கொடுத்து வருந்துவதை விட இலவசமாக கொடுத்து மகிழலாம்
வைத்திருந்து இழந்து வருந்துவதை விட
உதவியாக கொடுத்து மகிழலாம்
நமக்காக உடல் வருந்தும் போது உள்ளமும் சேர்ந்து அழம்
பிறருக்காக உடல் வருந்தும் போது உள்ளம் மகிழந்து உதவும்
பிறர்க்கு துன்பம் வந்த பின் காப்பாற்ற ஓடுபவனே மனிதன்
பிறர்க்கு துன்பம் வரும் முன் காப்பாற்ற நினைப்பவனே அறிஞன்
நேசம் மிஞ்சும் போது சிலர் நிறைய சிந்தித்து அறிஞராகிறார்
செல்வம் மிஞ்சும் போது சிலர் நிறைய கொடுத்து வள்ளலாகிறார்
பிறர்க்கு கிடைப்பதை தடுத்து மகிழ்பவர் அற்பர்
தனக்கு கிடைப்பதை கொடுத்து மகிழ்பவர் அறிஞர்
குருடான மனிதருக்கு முகம் பார்க்கும் கண்ணாடியா பரிசு
வறுமையான வயிற்றுக்கு கதை அளக்கும் கவிதையா பரிசு
ஓராயினும் வாக்குறுதியை விட ஒரு பிடி உணவு உதவியாகுமே
பேராயினும் வார்த்தைகளை விட ஒரு கை உதவி உயிராகுமே
யாரிடமும் அன்புமில்லாத மனிதன் உணர்வற்ற சடமே
யாருக்கும் உதவில்லாத மனிதன் உயிரற்ற பினமே
இன்று உண்ணாத உணவு நாளை கெட்டுப் போய் விடும்
இன்று கொடுக்காத உதவி நாளை விட்டுப் போய் விடும்
புதை மணலில் புதைந்தவன் ஒரு பிடிகிடைத்தால் வெளிவருவான்
துயர மனதில் புதைந்தவன் ஒரு கைகிடைத்தால் தப்பிவிடுவான்
-------------------------------------------------------------
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
Posted by DrBALA SUBRA MANIAN
இனிமை
கண்களை அகற்றி மிரட்டினால் குழந்தைகளும் பகை கொள்ளும்
உதடுகளை விரித்து சிரித்தால் விலங்குகளும் நட்பு கொள்ளும்
அன்பு எனப்படுவது மற்றவர் மனம் மகிழ்ச் செய்தல்
பண்பு எனப்படுவது மற்றவர் மனம் வாடாது பழகுதல்
பொன்னகை கழுத்துஅழகு தரும்
புன்னகை முகத்துக்கு அழகு தரும்
ஆயுளும் பொருள்நகை கொடுத்து சாதிக்க இயலாததை
அன்பான ஒருபுன்னகை கொடுத்து சாதிக்க இயலுமே
மலரானது வண்டுகளை ஈர்ப்பதுபோல
சிலர் முகம் மனிதரை கவர்ந்திடும்
காந்தமது துகள்களை ஈர்ப்பது போல
சிலர் முகம் இதயங்களை கவர்ந்திடும்
உழைக்கும் போது இரும்பின் உறுதி வேண்டும்
உறவாடும் போது கரும்பின் மொழி வேண்டும்
அடித்தாலும் மென் மலர் செண்டால் அடித்தால் வலிக்காது
கண்டித்தாலும் தேன் இனிய செல்லால் சென்னால் வலிக்காது
நாக்கு என்பது தேனும் தென்றலும் கலந்து செய்தால்
மந்திரக் கோலாகும்
நாக்கு என்பது தேனும் தீயும் கலந்து செய்தால்
கொலை ஆயுதமாகும்
வன்சொல்லைவிட கொடிய நஞ்சு எதிலும் இல்லை
இன்சொல்லை விட இனிய மருந்து உலகில் இல்லை
நற்குணவான்களின் நேய மொழி தேன் போல் இனிக்குமே
தர்குணவாள்களின் தீய மொழி தீப் போல் எரிக்குமே
Xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
அருள்
ஆற்றுதல் என்பது நாடி வந்தவரை வாழ்வித்தல்
போற்றுதல் என்பது அன்பு வைத்தவரை பிரியாதிருத்தல்
உடல் பெற்ற கண் பொருளை பார்க்கும்
உள்ளம் பெற்ற கண்தான் அருளை பார்க்கும்
பொறாமை என்ற பார்வை விழிகளுக்கு இருள் சேர்க்கும்
பொறுமை என்ற பார்வை விழிகளுக்கு அருள் சேர்க்கும்
அடுத்தவர் துயர் கெடுத்து அவரைக் காத்தலே
நான் இங்குஎடுத்த நல் தவத்தின் இலக்கணம்.
பிறர்க்காய் இராப்பகலாய் உழைப்பார் ஒரு பயன் கருதாதார்ர்
அகிலமும் தாங்கும் அருளே அரங்கமாக சகலமும் செய்வார்
உன்னிடம் பொருளைப் பெறுபவன் உனக்குப் புண்ணியம் தந்த வள்ளலே
உன்னிடம் அருளைப் பெற்றவள் உனக்கும்
புகழ் சேர்த்த புண்ணியவானே
போக்கு வரவு இல்லையென்றால் பொருளாதாரம் வளர்வதில்லை
பொருளாதாரம் இல்லையென்றால் அருளாதாரம் வளர்வதில்லை
மலர் தந்த கைகளிலே மணம் ஒட்டிக் கொள்ளும்
கருணை தந்த கைகளிலே மணம் ஒட்டிக் கொள்ளும்
ஈரமான இறகுகள் பறப்பதற்கு இடையூறாக இருக்கும்
ஈரம், இரக்கமில்லாத இதயங்கள் சிற்ப்பதற்கு தடையாக இருக்கும்
செயல்படும் சத்யத்தின் பெயரே ஆண்டவன்
செயல்படும் கருணணயின் உருவமே இறைவன்.
Xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
இரக்கம்
காமம் களவு கோபம் கொண்டவன் காட்டில் உள்ள மிருகம்
கருணை அன்பு இரக்கம் கொண்டவன் இதயம் உள்ள தெய்வம்
ஈரமில்லாத மண்ணில் பயிர்கள் எதுவும் வளர்வதில்லை
ஈரமில்லாத மனதில் இறைவன் என்றும் வருவதில்லை
வரப்பிலே ஈரம் இல்லையென்றால் பயிர் வளராது
இதயத்திலே ஈரம் இல்லையென்றால் உயிர் வளராது
உறக்கம் என்பது உடலுக்கு அமைதி தரும்
இரக்கம் என்பது உள்ளத்துக்கு அமைதி தரும்
தேவனது வார்த்தைகள் திருடரது இதயத்தையும் உறுத்தும்
ஏழையின் வறுமைகள் வள்ளலின் இதயத்தை வருத்தும்
கல்லான வயலிலே புல்லும் புண்டும் வளர்வதில்லை
கல்லான மனதிலே கருணையும் கடவுளும் வருவதில்லை
இறகுகள் ஈரம் ஒட்டினால் பறக்க முடியாது
இதயங்களில் ஈரம் காய்ந்தால்சிறக்க முடியாது
அரியதென்று கள்ளும். ஒரு செயலில்லைதுணிந்தவர்க்கு
எளியதென்று தள்ளும் ஒரு மனிதரில்லை இனியவர்க்கு
ஈரமுள்ள அடுப்பில் நெருப்பு பற்றாது
ஈரமுள்ள மனதில் அன்பு வற்றாது
வஞ்சிக்கப்பட்டவருக்கு தேவை நீதியே வெறும் இரக்கமல்லை
வாடிநின்றவருக்கு தேவை உதவியே வெறும் வார்த்தையல்ல
Xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
கருணை
கனியும் கருணையே கனியாகக் காய்த்து
துயரம் உருவம் உயிக்க்கெல்லாம்துன்பம் துடைப்பாயே
கருணையற்ற கண்கலெல்லாம் பார்வையில்லாத புண்களே
இரக்கமற்ற கைகளெல்லாம் ஊனமுற்ற கட்டைகளே
கண் பார்வை இல்லாதவருக்கு உலகமே இருள்
கருணை பார்வை இல்லாதவருக்கு உள்ளமே இருள்
கடவுளென்ற மரத்தின் நிழலே கருணை என்பார்
கருணையென்ற மரத்தின் நிழலே புகழ் என்பார்
காற்று நிரம்பிய பைகள் உயர்ந்து வானில் பறக்கும்
கருணை நிரம்பிய மனங்கள் புகழ் வானில் உயரும்
உயிரில்லாத உடல்கள் பிணம் எனப்படும்
கருணையில்லாத கண்கள் ஊனம் எனப்படும்
இருள் நோக்கி விரையும் ஒளியென ஏழ்மை நோக்கி ஒடும் கருணை
நீரைத் தேடி ஒடும் மீனென வளமை நோக்கி ஒடும் கயமை
கற்பென்ற உடை அணிந்தால் மிருகம் மனிதமானது
கருணையென்ற கண் விழித்தால் மனிதம் தெய்வமானது
அச்சத்தில் வியர்ப்பான் கோழை
அயர்வில் வியர்ப்பான் ஏழை
காமத்தில்வியர்ப்பான் காமுகன்
கருணையில் வியர்ப்பவன் புனிதன்
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
மனிதநேயம்
உறக்கம் உடல் தளர்வை அகற்றும்
இரக்கம் மன தளர்வை மாற்றும்
பகுத்து அறியும் அறிவு மனித வளத்தை வளர்க்கும்
பகுத்து உண்ணும் உணவு மனித நேயத்தை வளர்க்கும்
அபிமானம் என்பது நமக்கு பிறந்தவர்களை நாம் நேசிப்பது
மனிதாபிமானம் என்பது மண்ணில் பிறந்தவர்களை நாம் நேசிப்பது
ஆறு பள்ளம் தங்கினால் குளம் குட்டையாகும்
மனித நேயம் தேங்கினால் குணம் குட்டையாகும்
தந்தையே ஆதியாக வந்த மானுட குடும்பத்துக்காக
சொந்த இச்சை துறந்து மற்றவர்க்காக வாழ்வது கடமை
அன்னை தந்த பரிசு சகோதர பாசம் அதை பகைக்கலாமோ
ஆண்டவன் தந்த பரிசு மனிதநேயம் அதை சிதைக்கலாமோ
தேரில் செல்பவனுக்கு காலில் நடப்பவன் வலி தெரிவதில்லை
வானில் பறப்பவனுக்கு வயிறுபசித்தவன் வலி புரிவதில்லை
இறைவனோ மனித நேயம் இணைவதற்கு
இரண்டு பேதங்கள் வைத்தான்
மனிதனோ மனித பகை வளர்வதற்கு
இராண்டாயிரம் பேதங்கள் பிரித்தான்
இரத்தத்தின் எண்ணம் சுத்தமானால் துயரத்தின் சத்தம் நிற்கும்
இதயத்தின் ஆழத்தில் கருணை மலர்ந்தால் அமைதியது நித்தம் வரும்
காகம் கூட பகிர்ந்துண்ணும் நாகம் கூட நட்புறவாகும்
மிருகம் கூட பகையின்றி வாழும் நாய் கூட நன்றியறியும்
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
காருண்யம்
உயிர் அனைத்தும் அவன் பிறப்பென உணர்ந்தால் கொலையிருக்காது
உடைமை அனைத்தும் அவன் பரிசென அறிந்தால் கொள்ளையிருக்காது
வெளிச்சமே தெரியாத விழியிடம் வண்ணத்தைப்பார் என்பது மடமையே
ஒழுக்கமே இல்லாத கயவனிடம் கருணையைக் காட்டு என்பதும் ம்டமை
மண்ணின் வாசம் மலராலே
மனதின் வாசம் பாசத்தாலே
வானத்தின் வாசம் மழையாலே
மனிதனின் வாசம் கருணையாலே
பயந்து அழுபவன் கோழை
பசிக்கு அழுபவன் ஏழை
காமத்தின் அழுபவன் மிருகம்
காருண்யத்தில் அழுபவன் தெய்வம்
தன் உடலை வளர்க்க வாடுபவன் மனிதன்
தன் இனத்தை வளர்க்க பாடுபவன் கவிஞன்
கடன் வாங்கினால் அவனுக்கடிமை
காமம் தீர்த்தால் அவனுக்கடிமை
கயமை செய்தால் சிறைக்கடிமை
கருணை கொண்டால் இறைக்கடிமை
காண்களில் கருணை பிறந்தால் உதிரத்தில் அமுது சுரக்கிறது
இதயத்தில் கோபம் மிருந்தால் இரத்தத்தில் நஞ்சு கலக்கிறது
குரங்குக்கு கோவணம் கட்டி விட்டு ஜிவகாருண்யம் என்பார்
கோவிலுக்கு வெள்ளையடித்துவிட்டு பாவம் தீர்ந்தது என்பார்
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
உதவி
கடனாக கொடுத்து வருந்துவதை விட இலவசமாக கொடுத்து மகிழலாம்
வைத்திருந்து இழந்து வருந்துவதை விட
உதவியாக கொடுத்து மகிழலாம்
நமக்காக உடல் வருந்தும் போது உள்ளமும் சேர்ந்து அழம்
பிறருக்காக உடல் வருந்தும் போது உள்ளம் மகிழந்து உதவும்
பிறர்க்கு துன்பம் வந்த பின் காப்பாற்ற ஓடுபவனே மனிதன்
பிறர்க்கு துன்பம் வரும் முன் காப்பாற்ற நினைப்பவனே அறிஞன்
நேசம் மிஞ்சும் போது சிலர் நிறைய சிந்தித்து அறிஞராகிறார்
செல்வம் மிஞ்சும் போது சிலர் நிறைய கொடுத்து வள்ளலாகிறார்
பிறர்க்கு கிடைப்பதை தடுத்து மகிழ்பவர் அற்பர்
தனக்கு கிடைப்பதை கொடுத்து மகிழ்பவர் அறிஞர்
குருடான மனிதருக்கு முகம் பார்க்கும் கண்ணாடியா பரிசு
வறுமையான வயிற்றுக்கு கதை அளக்கும் கவிதையா பரிசு
ஓராயினும் வாக்குறுதியை விட ஒரு பிடி உணவு உதவியாகுமே
பேராயினும் வார்த்தைகளை விட ஒரு கை உதவி உயிராகுமே
யாரிடமும் அன்புமில்லாத மனிதன் உணர்வற்ற சடமே
யாருக்கும் உதவில்லாத மனிதன் உயிரற்ற பினமே
இன்று உண்ணாத உணவு நாளை கெட்டுப் போய் விடும்
இன்று கொடுக்காத உதவி நாளை விட்டுப் போய் விடும்
புதை மணலில் புதைந்தவன் ஒரு பிடிகிடைத்தால் வெளிவருவான்
துயர மனதில் புதைந்தவன் ஒரு கைகிடைத்தால் தப்பிவிடுவான்
-------------------------------------------------------------
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
Posted by DrBALA SUBRA MANIAN
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» உறக்கம் என்பது உடலுக்கு கிடைக்கும் ஓய்வு
» மனதுக்கு அமைதி தரும் புகைப்படங்கள்
» உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும் நறுமணங்கள்!!!
» உடலுக்கு ஆரோக்கியம் தரும் மன ஓய்வு!
» உடலுக்கு நன்மை தரும் பானங்கள்..!
» மனதுக்கு அமைதி தரும் புகைப்படங்கள்
» உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும் நறுமணங்கள்!!!
» உடலுக்கு ஆரோக்கியம் தரும் மன ஓய்வு!
» உடலுக்கு நன்மை தரும் பானங்கள்..!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|