தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


அறிவார்ந்த தமிழ்ப் பழமொழிகள்

View previous topic View next topic Go down

அறிவார்ந்த தமிழ்ப் பழமொழிகள்  Empty அறிவார்ந்த தமிழ்ப் பழமொழிகள்

Post by முழுமுதலோன் Fri Aug 09, 2013 12:47 pm

அறிவார்ந்த தமிழ்ப் பழமொழிகள் – 

 
உயிரோடு ஒரு முத்தம் தராதவள், செத்தால் உடன்கட்டை ஏறுவாளா?

அய்யாசாமிக்குக் கல்யாணம், அவரவர் வீட்டில் சாப்பாடு.

அவனே இவனே என்பதை விட சிவனே சிவனே என்பது நல்லது.

அன்பான சினேகிதனை ஆபத்தில் அறி.

ஆகிறவன் அரைக்காசிலும் ஆவான். ஆகாதவனுக்கு ஆயிரம் கொடுத்தாலும் விடியாது.

ஆயிரம் உடையான் அமர்ந்திருப்பான், அரைப்பணம் உடையான் ஆடி விழுவான்.

அடிபட்டுக் கிடக்கிறான் செட்டி, அவனை அழைத்து வா, பணம் பாக்கி என்கிறான் பட்டி.

ஆனை மேல் போகிறவனை சுண்ணாம்பு கேட்டால் கிடைக்குமா?

இந்த எலும்பைக் கடிப்பானேன், சொந்தப்பல்லுப் போவானேன்

இந்தக் கூழுக்கா இத்தனை திருநாமம்.

இமைக் குற்றம் கண்ணுக்குத் தெரியாது.

இடுகிறவள் தன்னவள் ஆனால் முதல் பந்தியில் உண்டால் என்ன, கடைப் பந்தியில் உண்டால் என்ன?

உண்டு கொழுத்த நண்டு வளையில் தங்காது.

உதடு மன்றாடப் போய் உள்ளிருந்த பல்லும் போனாற் போல.

உபாயத்தால் ஆகிறது பராக்கிரமத்தால் ஆகுமா?
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

அறிவார்ந்த தமிழ்ப் பழமொழிகள்  Empty Re: அறிவார்ந்த தமிழ்ப் பழமொழிகள்

Post by முழுமுதலோன் Fri Aug 09, 2013 12:47 pm

பசித்தவன் எதையும் தின்பான். பகைத்தவன் எதையும் சொல்வான்.


 ஓட்டைக் கப்பலுக்கு ஒன்பது மாலுமி


கடுங்காற்று மழை கூட்டும். கடும் சினேகம் பகை கூட்டும்.

வீட்டு வாசலில் காவேரி, முழுக மாட்டாளாம் மூதேவி.

குண்டு பட்டு சாகாதவன் வண்டு கடித்துச் செத்தானாம்

பண்ணிய பாவத்தைப் பட்டுத் தான் தொலைக்க வேண்டும்.

காட்டிலே செத்தாலும் வீட்டிலே தான் தீட்டு.

தலைக்குத் தலை அம்பலம். உலைக்கு அரிசி இல்லை.

நீரிலும் நனைய மாட்டான். நெருப்பிலும் வேக மாட்டான்.

அசை போட்டுத் தின்பது மாடு; அசையாமல் தின்பது வீடு.

ஏறச் சொன்னால் எருதுக்குக் கோபம். இறங்கச் சொன்னால் நொண்டிக்குப் கோபம்.

அஞ்சு காசுக்குக் குதிரையும் வேணும். அது ஆற்றைக் கடந்து பாயவும் வேணும்.

அறுவடைக் காலத்தில் எலிக்கு ஐந்து பெண்சாதி.

மேய்த்தால் கழுதை மேய்ப்பேன். இல்லா விட்டால் பரதேசி ஆவேன்.

அன்ன நடை நடக்கப் போய் தன்னடையும் கெட்டுப் போச்சு.

குதிரை செத்ததும் இல்லாமல் குழி தோண்ட மூணு பணம்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

அறிவார்ந்த தமிழ்ப் பழமொழிகள்  Empty Re: அறிவார்ந்த தமிழ்ப் பழமொழிகள்

Post by முழுமுதலோன் Fri Aug 09, 2013 12:47 pm

எண்ணம் எல்லாம் பொய், எமன் ஓலை மெய்.


என் வீட்டுக்கு வந்தால் என்ன கொண்டு வருகிறாய்? உன் வீட்டுக்கு வந்தால் என்ன தருகிறாய்?


கீரைத் தண்டு பிடுங்க ஏலேலப் பாட்டா?


எள் எண்ணெய்க்குக் காய்கிறது. எலிப் புழுக்கை எதற்குக் காய்கிறது?


கோழி களவு போனதற்கு ஆடு வெட்டியா பொங்கல் இடுவார்கள்?


பூனைக்குப் பயந்து புலியிடம் போகலாமா?


சத்திரத்து சோத்துக்கு தாத்தய்யங்கார் உத்தரவு எதற்கு?


வேகாத சோத்துக்கு விருந்தாளி இரண்டு பேர்.


தானாகக் கெடுத்தது பாதி; தம்பிரான் கெடுத்தது பாதி.


தலைவலியும் தரித்திரமும் தனக்கு வந்தால் தெரியும்.


பறக்கப் பறக்க பாடுபட்டாலும் படுக்கப் பாயில்லை.


உடையவன் பாராத வேலை உருப்படாது.


தூங்குகிற மணியக்காரனை எழுப்பினால் பழைய கந்தாயம் கேட்டானாம்.


எடுக்கிறது எருமைச்சாணி, படுக்கிறது பஞ்சு மெத்தை


ஆசை தீர அனுபவித்தவனும் இல்லை, அள்ளிக்கொடுத்து கெட்டவனும் இல்லை.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

அறிவார்ந்த தமிழ்ப் பழமொழிகள்  Empty Re: அறிவார்ந்த தமிழ்ப் பழமொழிகள்

Post by முழுமுதலோன் Fri Aug 09, 2013 12:48 pm

இன்றைக்கு என்பதும், நாளைக்கு என்பதும் இல்லை என்பதற்கு அடையாளம்

அஞ்சினவனைக் குஞ்சும் விரட்டும்.

தாய் அறியாத சூல் இல்லை. மனம் அறியாத பொய் இல்லை.

வைத்தியன் பிள்ளை மருந்தினால் சாகும்.

ஆயிரம் காக்கையை ஓட்ட ஒரு கல் போதும்.

காற்றில்லாமல் தூசு பறக்காது.

காவடிப்பாரம் சுமப்பவனுக்குத் தான் தெரியும்.

எகிறி எகிறி குதித்தாலும் எட்டு பத்தாகாது.

சாட்டை அடியும் சவுக்கடியும் தாங்கலாம்
மூட்டைக் கடியும் முணுமுணுப்பும் ஆகாது.

பனி பெய்து குளம் நிரம்பாது.

பாடுபட்டுக் குத்தினாலும் பதரில் அரிசி இருக்காது.

நாட்டுக்கு நல்ல துரை வந்தாலும் தோட்டி சுமப்பது புல் சுமையே.

பொன்குடத்திற்குப் பொட்டு தேவையில்லை.

இழவுக்கு வந்தவளா தாலி அறுப்பாள்?

மூன்று செவிக்கு எட்டின செய்தி மூடுமந்திரம் ஆகாது.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

அறிவார்ந்த தமிழ்ப் பழமொழிகள்  Empty Re: அறிவார்ந்த தமிழ்ப் பழமொழிகள்

Post by முழுமுதலோன் Fri Aug 09, 2013 12:49 pm


  • காலம் போகும் வார்த்தை நிற்கும். கப்பல் போகும் துறை நிற்கும். (துறை=துறைமுகம்)

  
  * அறிந்தவன் என்று கும்பிட்டால் அடிமை என்று சொல்லுவதா?




  • ஆற்றிலே நின்று அரகரா என்றாலும் சோற்றிலே இருக்கார் சொக்கலிங்கம்.



  • சுடுகாடு போன பிணம் வீடு திரும்பாது.



  • இட்டது எல்லாம் பயிராகாது. பெற்றது எல்லாம் பிள்ளையாகாது.



  • வாய் நல்லதானால் ஊர் நல்லது.



  • கேடு வரும் பின்னே. மதி கெட்டு வரும் முன்னே.



  • காரியம் பெரிதேயன்றி வீரியம் பெரியதல்ல.



  • மயிர் சுட்டுக் கரியாகாது.



  • ஆகாயத்தில் எறிந்த கல் அங்கேயே நிற்காது.



  • விசாரம் முற்றினால் வியாதி. (விசாரம்=கவலை)



  • திரு உண்டானால் திறமையும் உண்டாகும். (திரு=செல்வம்)



  • பல்லக்கு ஏற பாக்கியம் உண்டு; உந்தி ஏற சீவன் இல்லை. (சீவன்=உடல் சக்தி)



  • ஆசை இருக்குது தாசில் பண்ண; அம்சம் இருக்குது கழுதை மேய்க்க.



  • ஞானிக்கு இல்லை நாளும் கிழமையும்.



  • ஆற்று மணலில் கிடந்து புரண்டாலும் ஒட்டுகிறது தான் ஒட்டும்.



  • தலையை சிரைப்பதால் தலையெழுத்து மாறாது.



  • அரண்மனைக் கோழிமுட்டை அம்மியையும் உடைக்கும்.



  • அரசன் அன்று கொல்வான்; தெய்வம் நின்று கொல்லும்.



  • தின்னப் படை உண்டு; வெல்லப் படை இல்லை.



  • எட்டினால் சிண்டைப் பிடி; எட்டாவிட்டால் காலைப் பிடி.



  • வாழைப்பழம் கொண்டு வந்தவள் வாசலிலே. வாய் கொண்டு வந்தவள் வீட்டுக்குள்ளே.

முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

அறிவார்ந்த தமிழ்ப் பழமொழிகள்  Empty Re: அறிவார்ந்த தமிழ்ப் பழமொழிகள்

Post by முழுமுதலோன் Fri Aug 09, 2013 12:49 pm


  • சாமி காட்டுமே தவிர ஊட்டாது.



  • அறப்படித்தவன் அங்காடி போனால் விற்கவும் மாட்டான், வாங்கவும் மாட்டான்.



  • இளமையில் கல்வி, சிலையில் எழுத்து.



  • உலக்கைப் பூசைக்கு அசையாதவள் திருப்பாட்டுக்கு அசைய மாட்டாள்.



  • கொண்டவன் தூற்றினால் கண்டவன் தூற்றுவான்.



  • தெய்வம் பாதி திறமை பாதி.



  • தளுக்கும் மினுக்கும் தாம்பத்தியம் ஆகாது.



  • ஆங்காரத்தினால் அழிந்தவர்கள் ஆயிரம் பேர்.



  • சனப்பலம் இருந்தால் மனப்பலம் வரும்.



  • தாய் இல்லாத போது தகப்பன் தாயாதி.



  • அரசன் குடுமியையும் அம்பட்டன் பிடிப்பான்.



  • மனசாட்சியை விட மறுசாட்சி வேண்டாம்.



  • கடல் வற்றிக் கருவாடு தின்ன ஆசைப்பட்டு குடல் வற்றி செத்ததாம் கொக்கு.



  • கூத்தாடி கிழக்கே பார்ப்பான். கூலிக்காரன் மேற்கே பார்ப்பான்.



  • பாராத உடைமையும் பாழ், கேளாத கல்வியும் பாழ்.



  • குயவனுக்குப் பல நாள் வேலை, தடியனுக்கு ஒரு நிமிட வேலை.



  • பெண்ணின் கோணல் பொன்னில் நிமிரும்.



  • அரைக்காசுக்குப் போன வெட்கம் ஆயிரம் கொடுத்தாலும் திரும்பாது.



  • எழுதிப் பாராதவன் கணக்கு கழுதை மேய்ந்த களம்.



  • அரையிலே புண்ணும் அண்டையிலே கடனும் ஆகாது.



  • முடியுள்ள சீமாட்டி எப்படியும் முடிப்பாள்.



  • கடன் வாங்கிக் கடன் கொடுத்தவனும் கெட்டான். மரம் ஏறிக் கை விட்டவனும் கெட்டான்.



  • அக்காள் இருந்தால் மச்சான் உறவு.



  • முரட்டுத்தனத்துக்கு முதல் தாம்பூலம்.


தொகுப்புஎன்.கணேசன் 
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

அறிவார்ந்த தமிழ்ப் பழமொழிகள்  Empty Re: அறிவார்ந்த தமிழ்ப் பழமொழிகள்

Post by மன்மதன் Fri Aug 09, 2013 10:13 pm

மரம் ஏறி கைவிட்டவன் செத்தான்னு தானே வரனும். மண்டையில் அடி நண்பேன்டா 
மன்மதன்
மன்மதன்
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 80

Back to top Go down

அறிவார்ந்த தமிழ்ப் பழமொழிகள்  Empty Re: அறிவார்ந்த தமிழ்ப் பழமொழிகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum