தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


உழைப்பவனுக்கு ஒரு காசு, மேய்ப்பவனுக்கு ஒன்பது காசு

View previous topic View next topic Go down

உழைப்பவனுக்கு ஒரு காசு, மேய்ப்பவனுக்கு ஒன்பது காசு Empty உழைப்பவனுக்கு ஒரு காசு, மேய்ப்பவனுக்கு ஒன்பது காசு

Post by முழுமுதலோன் Wed Aug 21, 2013 10:17 am

உழைப்பவனுக்கு ஒரு காசு, மேய்ப்பவனுக்கு ஒன்பது காசு
திறமைதான் நமது செல்வம்...

‘உழைப்பவனுக்கு ஒரு காசு, மேய்ப்பவனுக்கு ஒன்பது காசு’ என்பார்கள்.

செங்கல் அடுக்கி சிமெண்ட் பூசும் மேஸ்திரிக்கு சம்பளம் நானூறு; ஆனால் அவரை வேலை வாங்கும் பொறியாளர் பெறுவது நான்காயிரம். ஏன் இந்த வேறுபாடு?

முன்னவர் சொன்னதை மட்டும் செய்யக்கூடியர். அதற்கு மேல் ஒரு படிகூட சுயமாக செய்யத் தெரியாது. பின்னவர் எதையும் ஏன் செய்ய வேண்டும், எப்படி, எப்பொழுது செய்ய வேண்டும் என்றெல்லாம் முன் கூட்டியே நன்கு திட்டமிட்டு, அதனை பிறரைக் கொண்டு வெற்றிகரமாக செய்து முடிப்பவர். அதாவது பொறுப்பும், திறமையும் மிக்கவர்.

ஒரு பணக்காரருக்கு இரண்டு வேலைக்காரர்கள். அவர்களில் ஒருவனுக்கு மட்டும் அதிக சம்பளம் கொடுத்து வந்தது பற்றி மற்ற வேலைக்காரன் அவரிடம் பெரிதும் குறைபட்டுக் கொண்டான். பணக்காரர் அவனை அழைத்து வீட்டின் வெளியே சென்று தெருவில் எவராவது இருக்கிறார்களா என்று பார்த்துவிட்டு வா என்றார். அவனும் வேகமாக ஓடிச்சென்று பார்த்துவிட்டு, “ஆம் ஐயா, தெரு முனையில் ஒருவர் நின்று கொண்டிருக்கிறார்” என்றான்.

இப்பொழுது அந்த பணக்காரர் அடுத்தவனை வெளியே அனுப்பினார். வந்தவன் தெரு முனையில் நின்று கொண்டிருப்பவர் ஒரு ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் என்றும், அவர் பெயர் முருகன் என்றும், அவர் அடுத்த தெருவில் முதல் வீட்டில் குடியிருப்பவர் என்றும், அருகில் உள்ள பூங்காவில் விளையாடிக் கொண்டிருக்கும் தனது பேரனை கவனித்துக் கொண்டிருக்கிறார் என்றும் விலாவாரியாக எடுத்துக் கூறினான்.

பணக்காரன் குறைபட்டுக் கொண்டவனைப் பார்த்து இப்பொழுது புரிகிறதா, அவன் அதிகச் சம்பளம் பெறும் காரணம் என்றார் சிரித்தபடி.
சொன்னதை மட்டும் செய்வது என்பது வேலை மட்டும்தான். ஆனால் அதற்கும் மேல் அதிகப்படி சிந்தித்து அழகாக செய்வது என்பது திறமையான வேலை.

ஊரில் எத்தனையோ மருத்துவர்கள்; வழக்கறிஞர்கள்; பொறியாளர்கள்; இருந்தாலும் ஒரு சிலரிடம் மட்டும் எல்லோரும் போய் மொய்த்துக் கொள்கிறார்களே, ஏன்? ஏனெனில் அவர்கள் மக்களின் எதிர்பார்ப்பினை திறம்பட செய்து முடிக்கிறார்கள். விரும்புகின்ற வெற்றியினை பெற்றுத் தருகிறார்கள்.

திறமைசாலிகளுக்கே இவ்வுலகம் வழிவிட்டு நிற்கிறது.

வெட்டி வா என்றால் கட்டிக்கொண்டு வருபவர்கள், எள் என்பதற்கு முன்பே எண்ணெய்யாக நிற்பவர்கள், கோடு ஒன்று போட்டாலே ரோட்டையே போடுபவர்கள் என்று இப்படிப்பட்டவர்களுக்குத் தான் என்றும் எங்கும் மவுசும் மரியாதையும் இருக்கும்.

வெறும் இச்சை மட்டும் இருந்தாலே அது திறமையாகி விடாது. மூச்சடக்கிக் கட்டினால்தான் ‘முனி’ என்று ஏற்றுக்கொள்வார்கள். திறமைசாலி ஒருபோதும் பொருட்களை வீணாக்கமாட்டான். எதையும் விரைந்து செய்து நிறைவாக்குவான்.

மனதை அலைபாயவிடாமல், செய்யும் செயல்களில் ஒருநிலைப்படுத்தி, தன்னைக் கட்டுப்படுத்தி, புறச்சூழல்களின் நெருக்கடிகளையும் மீறி, எதிர்பார்த்த முடிவுகளை தரக்கூடியவன் தான் திறமைசாலி. வெறுமனே ‘மாங்கு மாங்கென்று’, செக்கு மாடுபோல், அரைத்த மாவையே அரைத்துக் கொண்டு இருப்பதில் எந்தப் பயனும் இல்லை.

அதிக நேரம் எடுத்து உழைப்பது என்பது திறமையாகிவிடாது. நேரத்தையும், ஆற்றலையும் வீணாக்காமல், அடைய விரும்பும் முடிவுகளை எட்டிப்பிடிப்பதுதான் திறமையாகும். கடவுள் அருளால் அனைவருக்கும் அருளப்பட்டது தான் திறமை. அதை நாம் விரும்பினாலும் இழக்க முடியாது. அந்த அளவில் அது பணத்தைக் காட்டிலும் மதிப்பு கொண்டது.

இருக்கும் திறமையைச் சரிவர பயன்படுத்தாமல், ‘குடத்தில் இட்ட விளக்காக’ இருக்கின்றோம். நமது தலையெழுத்தையே மாற்றவல்ல ஏதேனும் ஒரு திறமையாவது எவரிடமும் நிச்சயம் இருக்கும். அதனைத் தேடிப்பிடித்து, சரியாகப் பயன்படுத்திக் கொள்வதில்தான் அனைவரின் வெற்றி என்பது ஒளிந்து கொண்டு இருக்கிறது.

சோதனைக் காலங்களில் தான் ஒருவரது திறமை வெளிப்படுகிறது. நமது எதிரிகளே நமது திறமைகளை கூர்மையாக்குகிறார்கள். எதிலும் முழுமையை எதிர்பார்ப்பது, எதையும் தள்ளிப்போட்டுக் கொண்டே போவது போன்றவைகள் திறமைக்கு முட்டுக்கட்டை போடுவன. அலை ஓய்ந்த பின் தலை மூழ்கலாம் என்று காத்திருந்தால் ஒரு போதும் காரியம் நடவாது. திறமையால் தகுதியும், தகுதியால் தக்கதொரு நிலைமையும், நம்மால் நிச்சயம் அடைய முடியும். நேரத்தை முறையாகத் திட்டமிட்டு பயனுள்ள வகையில் செலவழித்தால் நமது திறமை பத்து மடங்கு அதிகரிக்கும்.

ஆற்றல் என்பது செயலுக்குத் தேவைப்படும் ஒரு மூலப்பொருள்தான். அது நம் கையில் உள்ள அருமையான கைத்துப்பாக்கி போன்றது. திறமை என்பது அதை குறி பார்த்து கையாளும் திறன் போன்றது. திறமையற்றவன் கையில் அந்தத் துப்பாக்கி இருப்பதில் என்ன பயன்?

எனவே ஆற்றலை நல்ல முறையில் பயன்படுத்த வேண்டுமெனில், நமக்கு என்று ஒரு குறிக்கோள் இருக்க வேண்டும். சரியான திட்டமிடப் படவேண்டும். பொருத்தமான செயல்முறை வேண்டும். செய்யும் செயல் பற்றிய சிறப்பான அறிவும் அனுபவமும் அவசியம் வேண்டும். மேலும் பொறுமையும், இடையறாத பயிற்சியும், புதுமை நோக்கும், தன்னையும் சூழலையும் கட்டுப்படுத்தும் திறனும் இருப்பின் நம்மால் எத்தனையோ காரியங்களை எளிதாகவும், வெற்றிகரமாகவும் முடித்திட முடியும்

Posted by Sakthivel Balasubramanian
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

உழைப்பவனுக்கு ஒரு காசு, மேய்ப்பவனுக்கு ஒன்பது காசு Empty Re: உழைப்பவனுக்கு ஒரு காசு, மேய்ப்பவனுக்கு ஒன்பது காசு

Post by சரண் Wed Aug 21, 2013 10:39 am

மனதை அலைபாயவிடாமல், செய்யும் செயல்களில் ஒருநிலைப்படுத்தி, தன்னைக் கட்டுப்படுத்தி, புறச்சூழல்களின் நெருக்கடிகளையும் மீறி, எதிர்பார்த்த முடிவுகளை தரக்கூடியவன் தான் திறமைசாலி.
அருமை.
பகிர்வுக்கு நன்றி.
சரண்
சரண்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1042

Back to top Go down

உழைப்பவனுக்கு ஒரு காசு, மேய்ப்பவனுக்கு ஒன்பது காசு Empty Re: உழைப்பவனுக்கு ஒரு காசு, மேய்ப்பவனுக்கு ஒன்பது காசு

Post by மகா பிரபு Wed Aug 21, 2013 12:47 pm

தகவலுக்கு நன்றி அண்ணா/
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

உழைப்பவனுக்கு ஒரு காசு, மேய்ப்பவனுக்கு ஒன்பது காசு Empty Re: உழைப்பவனுக்கு ஒரு காசு, மேய்ப்பவனுக்கு ஒன்பது காசு

Post by செந்தில் Wed Aug 21, 2013 1:32 pm

கைதட்டல் பயனுள்ள பகிர்வுக்கு நன்றி ஐயா கைதட்டல் 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

உழைப்பவனுக்கு ஒரு காசு, மேய்ப்பவனுக்கு ஒன்பது காசு Empty Re: உழைப்பவனுக்கு ஒரு காசு, மேய்ப்பவனுக்கு ஒன்பது காசு

Post by mohaideen Wed Aug 21, 2013 5:47 pm

அருமையான தகவல்கள்சூப்பர்
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

உழைப்பவனுக்கு ஒரு காசு, மேய்ப்பவனுக்கு ஒன்பது காசு Empty Re: உழைப்பவனுக்கு ஒரு காசு, மேய்ப்பவனுக்கு ஒன்பது காசு

Post by Muthumohamed Wed Aug 21, 2013 10:56 pm

அருமையான பகிர்வு

சிந்தித்து பார்த்தால் பல விஷயங்களில் இந்த தலைப்பு ஒத்து போகும் அய்யா
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

உழைப்பவனுக்கு ஒரு காசு, மேய்ப்பவனுக்கு ஒன்பது காசு Empty Re: உழைப்பவனுக்கு ஒரு காசு, மேய்ப்பவனுக்கு ஒன்பது காசு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum