Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
விராலிமலை - சுற்றுலாத்தளம்
Page 1 of 1 • Share
விராலிமலை - சுற்றுலாத்தளம்
புதுக்கோட்டை மாவட்டம், இலூப்பூர் தாலுக்காவில் உள்ள ஒரு சிறிய நகரம் தான் விராலிமலை. இது திருச்சி- மதுரை நான்கு வழிச்சாலையில் திருச்சியிலிருந்து 28 கிமீ தொலைவில் உள்ளது. இங்குள்ள சிறிய மலைக்குன்றின் மேல் "முருகன்" எழுந்தருளியுள்ளார். நல்ல பிரமாண்டமான கோவில் மலைமேல் அமைந்துள்ளது. மொத்தம் 207 படிகள் உள்ளது. இங்கு மயில்கள் அதிகமாக வாழ்கிறது. இது மயில்களின் சரணாலயமாகவும் போற்றப்படுகிறது. இந்த மலையில் கனிசமான அளவு குரங்குகளும் வாழ்கிறது. இங்கு பல பெரிய மற்றும் சிறிய தொழிற்சாலைகளும் காணப்படுகிறது. அனைவரும் வந்து தரிசிக்க வேண்டிய ஆலயம் தான் விராலிமலை.
[You must be registered and logged in to see this image.]
கோயிலுக்கு செல்லும் வழியில் பார்வையாளர்கள் தங்குவதற்கு ஓய்வு அறைகள் என கோவில் நிர்வாகத்தால் நடத்தப்படும் மண்டபங்கள் உள்ளன. இங்கு நடத்தப்படும் பல சடங்குகள் மத்தியில் இறைவன் தண்டாயுதபாணிக்கு சுருட்டு வழங்கும் ஒரு சடங்கு இருக்கிறது இந்த சுருட்டு சந்தன கலவையால் உருவானது.
அது கோவிலின் முக்கிய சடங்குகளில் ஒன்றாகும். இக்கோவில் பழத்தோட்டம் மற்றும் பல குரா மரங்களால் சூழப்பட்டுள்ளது இந்த மரங்கள் விராலிமலை கோயிலின் முருக கடவுளுக்கு ஏறெடுக்கப்படும் பிரார்த்தனையின் போது பண்டைய யோகிகள் மற்றும் முனிவர்களால் பயன்படுத்தப்பட்டன.
நிறைய மயில்களை கோவிலை சுற்றி காண முடிகிறது. கோவில் வளாகத்தில் நாரத முனி மற்றும் ரிஷி காஷ்யபரின் சிலைகள் உள்ளன. கோயில் தூண்களில் ஆறுமுகம் மற்றும் அருணகிரி நாதரின் பல்வேறு உருவங்கள் சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ளன.
மேலும் விரலிமலை பற்றிய சில செய்திகள்,
1.ஊர் பெயர்காரணம்: விரலியர் மலை என்பதே மருவி உள்ளது. விரலியர்- அதாவது இறைவனுக்கு பணி செய்யும் பெண்கள்.
2.விரலிமலை முருகன் தான், அருணகிரி நாதருக்கு ஞானோதயம் அருளியதாக வரலாறு தெரிவிக்கிறது. அருணகிரிநாதர் முடுகு சந்தத்தில் கவி பாடுவதில் வல்லவர் என்பதை அனைவரும் அறிந்ததே!
நன்றி: nativeplanet.com
[You must be registered and logged in to see this image.]
கோயிலுக்கு செல்லும் வழியில் பார்வையாளர்கள் தங்குவதற்கு ஓய்வு அறைகள் என கோவில் நிர்வாகத்தால் நடத்தப்படும் மண்டபங்கள் உள்ளன. இங்கு நடத்தப்படும் பல சடங்குகள் மத்தியில் இறைவன் தண்டாயுதபாணிக்கு சுருட்டு வழங்கும் ஒரு சடங்கு இருக்கிறது இந்த சுருட்டு சந்தன கலவையால் உருவானது.
அது கோவிலின் முக்கிய சடங்குகளில் ஒன்றாகும். இக்கோவில் பழத்தோட்டம் மற்றும் பல குரா மரங்களால் சூழப்பட்டுள்ளது இந்த மரங்கள் விராலிமலை கோயிலின் முருக கடவுளுக்கு ஏறெடுக்கப்படும் பிரார்த்தனையின் போது பண்டைய யோகிகள் மற்றும் முனிவர்களால் பயன்படுத்தப்பட்டன.
நிறைய மயில்களை கோவிலை சுற்றி காண முடிகிறது. கோவில் வளாகத்தில் நாரத முனி மற்றும் ரிஷி காஷ்யபரின் சிலைகள் உள்ளன. கோயில் தூண்களில் ஆறுமுகம் மற்றும் அருணகிரி நாதரின் பல்வேறு உருவங்கள் சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ளன.
மேலும் விரலிமலை பற்றிய சில செய்திகள்,
1.ஊர் பெயர்காரணம்: விரலியர் மலை என்பதே மருவி உள்ளது. விரலியர்- அதாவது இறைவனுக்கு பணி செய்யும் பெண்கள்.
2.விரலிமலை முருகன் தான், அருணகிரி நாதருக்கு ஞானோதயம் அருளியதாக வரலாறு தெரிவிக்கிறது. அருணகிரிநாதர் முடுகு சந்தத்தில் கவி பாடுவதில் வல்லவர் என்பதை அனைவரும் அறிந்ததே!
நன்றி: nativeplanet.com
Re: விராலிமலை - சுற்றுலாத்தளம்
தல வரலாறு
தற்போது கோயில் இருக்குமிடத்தில் குரா மரம் ஒன்றிருந்ததாகவும், வேடன் ஒருவன் துரத்தி வந்த வேங்கை அக்குரா மரத்தினுள் மறைந்து விட்டதாகவும், அவ்விடமே ஆறுமுகனாரின் உறைவிடமாகக் கொண்டு வழிபடத்துவங்கியதாகவும் கூறுவர். முனிவர்களும், சித்தர்களுமே அக்குரா மரவடிவில் தவமியற்றி வந்தனர் என்றும் கூறுவதுண்டு. அருணகிரிநாதரைத் தடுத்தாட்கொண்ட முருகப்பெம்மான், அவருக்கு விராலிமலை இருக்குமிடத்தைக் காட்டவே இவ்வாறு வேடன் வேடம் பூண்டு வேங்கையைத் துரத்தி வந்ததாகவும் கூறுவர்.
தலச்சிறப்புக்கள்
வசிஷ்டரும் அவர்தம் இல்லாள் அருந்ததியும் தமது சாபம் நீங்க இத்தலத்தில் தவமிருந்தனர்.
இம்மலையில்தான் பரகாயப்பிரவேசம் என்னும் சித்தியை அருணகிரிநாதருக்கும் பெம்மான் வழங்கியதாகப் புராணம் உண்டு. இத்தலம் குறித்துத் திருப்புகழில் சுமார் 16 பாடல்கள் உள்ளன.
நோய் மற்றும் துன்பங்கள் நீங்க, கல்வி, செல்வம், மற்றும் ஆயுள் நீடிக்கவும் இங்குள்ள முருகனாரை வேண்டிச் செல்வர்.
இத்தலத்தின் மீது, விராலிக் குறவஞ்சி என்னும் நூலை முத்துப்பழனிக் கவிராயர் இயற்றினார்.
பங்குனி உத்திரம், கந்த சஷ்டி ஆகியவை இத்தலத்தின் சிறப்பான உற்சவங்கள்
முருகனுக்கு சுருட்டுப் படையல்
எந்த ஒரு முருகன் கோயிலிலும் அல்லாத ஒரு விசித்திர வழக்கம், சுருட்டை நிவேதனமாகப் படைக்கும் வழக்கம் ஒன்று இக்கோயிலில் உண்டு. இதற்குப் பின்னால் ஒரு கதையும் உண்டு. சூறாவளிக் காற்றிலும், வெள்ளத்திலும் துன்புற்று வீடு செல்ல இயலாது கருப்பமுத்து என்னும் அடியவர் நிற்கையில், அருகையில் மற்றொருவர் குளிரில் நடுங்கி நிற்பதைக் கண்டு, குளிருக்கு இதமாக இருக்கட்டும் என்று சுருட்டு ஒன்றைக் கொடுத்தாராம். பின்னர் இருவருமாக ஆற்றைக் கடந்து செல்கையில் அவர் காணாமற் போய்விட்டது கண்டு வியப்புற்ற கருப்பமுத்து, கோயிலை அடைந்ததும் அங்கு முருகனாருக்கு முன்னர் சுருட்டு இருப்பதைக் கண்டு, தம்மிடம் சுருட்டு பெற்றவர் எம்பிரானே என உணர்ந்தார் எனவும், அன்று முதல் சுருட்டு படைக்கும் பழக்கம் உருவானதாகவும் கூறுவர். ஒரு முறை, இதற்கு புதுக்கோட்டையை மன்னர் தடையிடவும், பெம்மான் அவர் கனவில் தோன்றி சுருட்டு நிவேதனம் பிறர் துன்பம் கண்டு அன்பை வளர்க்கும் குறியீடுதான் எனவும், புகைப் பழக்கத்தை ஊக்குவிப்பது அல்ல எனவும் கூறியதாகவும், மன்னர் தமது தடையை நீக்கிக் கொண்டதாகவும் கூறுவர்.
நன்றி விக்கிப்பீடியா
[You must be registered and logged in to see this image.]
தற்போது கோயில் இருக்குமிடத்தில் குரா மரம் ஒன்றிருந்ததாகவும், வேடன் ஒருவன் துரத்தி வந்த வேங்கை அக்குரா மரத்தினுள் மறைந்து விட்டதாகவும், அவ்விடமே ஆறுமுகனாரின் உறைவிடமாகக் கொண்டு வழிபடத்துவங்கியதாகவும் கூறுவர். முனிவர்களும், சித்தர்களுமே அக்குரா மரவடிவில் தவமியற்றி வந்தனர் என்றும் கூறுவதுண்டு. அருணகிரிநாதரைத் தடுத்தாட்கொண்ட முருகப்பெம்மான், அவருக்கு விராலிமலை இருக்குமிடத்தைக் காட்டவே இவ்வாறு வேடன் வேடம் பூண்டு வேங்கையைத் துரத்தி வந்ததாகவும் கூறுவர்.
தலச்சிறப்புக்கள்
வசிஷ்டரும் அவர்தம் இல்லாள் அருந்ததியும் தமது சாபம் நீங்க இத்தலத்தில் தவமிருந்தனர்.
இம்மலையில்தான் பரகாயப்பிரவேசம் என்னும் சித்தியை அருணகிரிநாதருக்கும் பெம்மான் வழங்கியதாகப் புராணம் உண்டு. இத்தலம் குறித்துத் திருப்புகழில் சுமார் 16 பாடல்கள் உள்ளன.
நோய் மற்றும் துன்பங்கள் நீங்க, கல்வி, செல்வம், மற்றும் ஆயுள் நீடிக்கவும் இங்குள்ள முருகனாரை வேண்டிச் செல்வர்.
இத்தலத்தின் மீது, விராலிக் குறவஞ்சி என்னும் நூலை முத்துப்பழனிக் கவிராயர் இயற்றினார்.
பங்குனி உத்திரம், கந்த சஷ்டி ஆகியவை இத்தலத்தின் சிறப்பான உற்சவங்கள்
முருகனுக்கு சுருட்டுப் படையல்
எந்த ஒரு முருகன் கோயிலிலும் அல்லாத ஒரு விசித்திர வழக்கம், சுருட்டை நிவேதனமாகப் படைக்கும் வழக்கம் ஒன்று இக்கோயிலில் உண்டு. இதற்குப் பின்னால் ஒரு கதையும் உண்டு. சூறாவளிக் காற்றிலும், வெள்ளத்திலும் துன்புற்று வீடு செல்ல இயலாது கருப்பமுத்து என்னும் அடியவர் நிற்கையில், அருகையில் மற்றொருவர் குளிரில் நடுங்கி நிற்பதைக் கண்டு, குளிருக்கு இதமாக இருக்கட்டும் என்று சுருட்டு ஒன்றைக் கொடுத்தாராம். பின்னர் இருவருமாக ஆற்றைக் கடந்து செல்கையில் அவர் காணாமற் போய்விட்டது கண்டு வியப்புற்ற கருப்பமுத்து, கோயிலை அடைந்ததும் அங்கு முருகனாருக்கு முன்னர் சுருட்டு இருப்பதைக் கண்டு, தம்மிடம் சுருட்டு பெற்றவர் எம்பிரானே என உணர்ந்தார் எனவும், அன்று முதல் சுருட்டு படைக்கும் பழக்கம் உருவானதாகவும் கூறுவர். ஒரு முறை, இதற்கு புதுக்கோட்டையை மன்னர் தடையிடவும், பெம்மான் அவர் கனவில் தோன்றி சுருட்டு நிவேதனம் பிறர் துன்பம் கண்டு அன்பை வளர்க்கும் குறியீடுதான் எனவும், புகைப் பழக்கத்தை ஊக்குவிப்பது அல்ல எனவும் கூறியதாகவும், மன்னர் தமது தடையை நீக்கிக் கொண்டதாகவும் கூறுவர்.
நன்றி விக்கிப்பீடியா
[You must be registered and logged in to see this image.]
Re: விராலிமலை - சுற்றுலாத்தளம்
அறியதந்தமைக்கு நன்றி பிரபு
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|