Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
தயவுசெய்து என்னைத் தனிமையில் விடுங்கள்...
Page 1 of 1 • Share
தயவுசெய்து என்னைத் தனிமையில் விடுங்கள்...
அது ஒரு ஆடை
நனைக்கும் கோடைக்காலம்!
சூரியன் தன்
வீரியம் காட்டி
மேற்கு நோக்கி
மெதுவாய் நகர்ந்த
ஒரு மாலைப் பொழுது!
வெண்ணையாய் உருகும் சென்னையில்
நானொரு நடுத்தர நகரவாசி!
வியர்வை எனும்
மையால் வெப்பம்
என் உடல் முழுதும்
கையொப்பம் இட்டிருந்தது!
புழுக்கம் என்னைப்
புலம்ப வைத்தது!
"சே! வெய்யிலா இது?
கதிரவன் உமிழும்
கந்தக அமிலம்"!
என் தலையில் சுரந்த
வியர்வைத் துளி ஒன்று
என் தாடையில்
இருந்து விழுந்து
தற்கொலை செய்துகொண்டது!
கடற் காற்றுக்கு
உடல் ஏங்கியது!
தொடர்வண்டி பிடித்துத்
தொட்டுவிட்டேன் கடற்கரையை!
மணல்வெளியெங்கும் மனிதத் தலைகள்!
அனேகர் முகத்தில்
மகிழ்ச்சியின் இழைகள்!
கரைமணலைக் கரைத்துவிடும்
வீண்முயற்ச்சியில் அடுத்தடுத்து
அலைகளை அனுப்பிக்கொண்டிருந்தது கடல்!
படகடியில் ஒரு ஜோடி, நான்
பக்கம் வருவதைப் பார்த்து
படக்கென்று விலகி அமர்ந்தது!
உடை கலைந்த பதற்றம்
அவள் முகத்தில்! -அவள்
இடை பிரிந்த ஏக்கம்
அவன் முகத்தில்!
அவர்களுக்கும் எனக்குமான
வேறுபாடு ஒன்றுதான்!
அவர்கள் கடற்கரையில் காதலிப்பவர்கள்!
நான் கடற்கரையைக் காதலிப்பவன்!
"இது கடற்கரையா
அல்லது கவிச்சிக்கடையா"?
விடலைக் கூட்டமொன்று
விமர்சித்தபடி சென்றது!
ஜோடி கிடைக்காத ஏக்கம்
அதைச் சொன்னவன்
வார்த்தையில் சொட்டியது!
நாகரீகம் என்னை
அங்கிருந்து நகர்த்தியது!
தலையில் சுற்றும் பூவிற்கு
தலையே சுற்றுமளவு
விலை சொல்லும் பூக்காரி!
பலூன் ஊதி ஊதி பாதியாய்
இளைத்துப்போன பலூன் வியாபாரி!
என்ன மாறினாலும்
எண்ணையை மாற்றாத
பஜ்ஜி கடைக்காரன்!
பெற்றோரின் சுண்டுவிரல்
பிடித்து நடக்கும் வயதில்
பெற்றோருக்காக சுண்டல்
விற்கும் சிறுவர்கள்!
நைந்துபோன தன்
வாழ்க்கையை நிமிர்த்த
ஐந்தறிவு ஜீவனை
நம்பியிருக்கும் குதிரைக்காரன்!
வட்டமடிக்கும் பருந்தை
பட்டமனுப்பித் தொட்டுவிடத்
துடிக்கும் குறும்புக் கூட்டம்!
கடல் துப்பிய சிப்பிகளை
உடல் குனிந்து
பொறுக்கும் சிறுமிகள்!
அந்த நீண்ட மணற்பரப்பை
நிரந்தரப் பரபரப்பில் வைத்திருக்கும்
கடற்கரைக் கதாபாத்திரங்கள் இவர்கள்!
ஆனால் மறுபுறம்
கடல், தன்னிடம்
கால் நனைக்க வந்தவர்களின்
கால் பிடித்துக் கதறிக்கொண்டிருந்தது!
"தயவுசெய்து என்னைத்
தனிமையில் விடுங்கள்" என்று!
- நிலவை.பார்த்திபன்
நனைக்கும் கோடைக்காலம்!
சூரியன் தன்
வீரியம் காட்டி
மேற்கு நோக்கி
மெதுவாய் நகர்ந்த
ஒரு மாலைப் பொழுது!
வெண்ணையாய் உருகும் சென்னையில்
நானொரு நடுத்தர நகரவாசி!
வியர்வை எனும்
மையால் வெப்பம்
என் உடல் முழுதும்
கையொப்பம் இட்டிருந்தது!
புழுக்கம் என்னைப்
புலம்ப வைத்தது!
"சே! வெய்யிலா இது?
கதிரவன் உமிழும்
கந்தக அமிலம்"!
என் தலையில் சுரந்த
வியர்வைத் துளி ஒன்று
என் தாடையில்
இருந்து விழுந்து
தற்கொலை செய்துகொண்டது!
கடற் காற்றுக்கு
உடல் ஏங்கியது!
தொடர்வண்டி பிடித்துத்
தொட்டுவிட்டேன் கடற்கரையை!
மணல்வெளியெங்கும் மனிதத் தலைகள்!
அனேகர் முகத்தில்
மகிழ்ச்சியின் இழைகள்!
கரைமணலைக் கரைத்துவிடும்
வீண்முயற்ச்சியில் அடுத்தடுத்து
அலைகளை அனுப்பிக்கொண்டிருந்தது கடல்!
படகடியில் ஒரு ஜோடி, நான்
பக்கம் வருவதைப் பார்த்து
படக்கென்று விலகி அமர்ந்தது!
உடை கலைந்த பதற்றம்
அவள் முகத்தில்! -அவள்
இடை பிரிந்த ஏக்கம்
அவன் முகத்தில்!
அவர்களுக்கும் எனக்குமான
வேறுபாடு ஒன்றுதான்!
அவர்கள் கடற்கரையில் காதலிப்பவர்கள்!
நான் கடற்கரையைக் காதலிப்பவன்!
"இது கடற்கரையா
அல்லது கவிச்சிக்கடையா"?
விடலைக் கூட்டமொன்று
விமர்சித்தபடி சென்றது!
ஜோடி கிடைக்காத ஏக்கம்
அதைச் சொன்னவன்
வார்த்தையில் சொட்டியது!
நாகரீகம் என்னை
அங்கிருந்து நகர்த்தியது!
தலையில் சுற்றும் பூவிற்கு
தலையே சுற்றுமளவு
விலை சொல்லும் பூக்காரி!
பலூன் ஊதி ஊதி பாதியாய்
இளைத்துப்போன பலூன் வியாபாரி!
என்ன மாறினாலும்
எண்ணையை மாற்றாத
பஜ்ஜி கடைக்காரன்!
பெற்றோரின் சுண்டுவிரல்
பிடித்து நடக்கும் வயதில்
பெற்றோருக்காக சுண்டல்
விற்கும் சிறுவர்கள்!
நைந்துபோன தன்
வாழ்க்கையை நிமிர்த்த
ஐந்தறிவு ஜீவனை
நம்பியிருக்கும் குதிரைக்காரன்!
வட்டமடிக்கும் பருந்தை
பட்டமனுப்பித் தொட்டுவிடத்
துடிக்கும் குறும்புக் கூட்டம்!
கடல் துப்பிய சிப்பிகளை
உடல் குனிந்து
பொறுக்கும் சிறுமிகள்!
அந்த நீண்ட மணற்பரப்பை
நிரந்தரப் பரபரப்பில் வைத்திருக்கும்
கடற்கரைக் கதாபாத்திரங்கள் இவர்கள்!
ஆனால் மறுபுறம்
கடல், தன்னிடம்
கால் நனைக்க வந்தவர்களின்
கால் பிடித்துக் கதறிக்கொண்டிருந்தது!
"தயவுசெய்து என்னைத்
தனிமையில் விடுங்கள்" என்று!
- நிலவை.பார்த்திபன்
பார்த்திபன்- புதியவர்
- பதிவுகள் : 26
Re: தயவுசெய்து என்னைத் தனிமையில் விடுங்கள்...
கடற்கரை அனுபவம் அருமை
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: தயவுசெய்து என்னைத் தனிமையில் விடுங்கள்...
ஒவ்வொரு வரியும் மிக அருமை பார்த்திபன்
விரும்பினேன் உங்கள் கவிதையை
விரும்பினேன் உங்கள் கவிதையை
Re: தயவுசெய்து என்னைத் தனிமையில் விடுங்கள்...
அசத்தல் கவிதைதான். ஒவ்வொரு வரியும் அருமை
கவிதை பகிர்வுக்கு நன்றி பார்த்திபன்
கவிதை பகிர்வுக்கு நன்றி பார்த்திபன்
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: தயவுசெய்து என்னைத் தனிமையில் விடுங்கள்...
ராணுஜா, முரளி ராஜா, முத்து மற்றும் ஸ்ரீராம் ஆகியோருக்கு என் நன்றிகள்!
பார்த்திபன்- புதியவர்
- பதிவுகள் : 26
Re: தயவுசெய்து என்னைத் தனிமையில் விடுங்கள்...
ஒவ்வொரு வரியும் மிக அருமை பார்த்திபன்!
ரசித்தேன் உங்களின் கவிதைகளை....
தொடருங்கள்.
ரசித்தேன் உங்களின் கவிதைகளை....
தொடருங்கள்.
சரண்- இளைய தளபதி
- பதிவுகள் : 1042
Re: தயவுசெய்து என்னைத் தனிமையில் விடுங்கள்...
பார்த்து விட்டு ,படித்து விட்டு,பத்தோடு பதினொன்றாக கடந்து போக முடியாமல் மிகவும் அருமையாக கட்டிப் போட்ட கவிதை வரிகள்!!!அருமை நண்பரே!வாழ்த்துக்கள்
thamiliniyan- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 504
Re: தயவுசெய்து என்னைத் தனிமையில் விடுங்கள்...
சரண், சுரேந்திரன் மற்றும் தமிழினியன் ஆகியோருக்கு என் அன்பு கலந்த நன்றிகள்!
பார்த்திபன்- புதியவர்
- பதிவுகள் : 26
Similar topics
» தயவுசெய்து சிந்தியுங்கள்..!
» தனிமையில்...
» தயவுசெய்து கடவுளைக் காப்பாற்றுங்கள்!
» தனிமையில் அழுதேன்,,
» தனிமையில் இருக்கிறேன் ....!!!
» தனிமையில்...
» தயவுசெய்து கடவுளைக் காப்பாற்றுங்கள்!
» தனிமையில் அழுதேன்,,
» தனிமையில் இருக்கிறேன் ....!!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|