தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


அருள்மிகு காயாரோகணேஸ்வரர் திருக்கோயில்-காஞ்சிபுரம்

View previous topic View next topic Go down

அருள்மிகு காயாரோகணேஸ்வரர் திருக்கோயில்-காஞ்சிபுரம் Empty "தினம் ஒரு திருக்கோயில்"

Post by முழுமுதலோன் Sat Apr 27, 2013 9:16 am

அருள்மிகு காயாரோகணேஸ்வரர் திருக்கோயில்

மூலவர் : காயாரோகணேஸ்வரர்
உற்சவர் : -
அம்மன்/தாயார் : -
தல விருட்சம் : -
தீர்த்தம் : -
ஆகமம்/பூஜை : -
பழமை : 500 வருடங்களுக்குள்
புராண பெயர் : -
ஊர் : காஞ்சிபுரம்
மாவட்டம் : காஞ்சிபுரம்
மாநிலம் : தமிழ்நாடு


பாடியவர்கள்:

-

திருவிழா:

சிவராத்திரி, பவுர்ணமி, பிரதோஷம்

தல சிறப்பு:

இது ஒரு குரு ஸ்தலம்.

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை மணி 4 முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி:

அருள்மிகு காயாரோகணேஸ்வரர் திருக்கோயில் காஞ்சிபுரம்.

போன்:

+91 99940 56438

பொது தகவல்:

பைரவி என்னும் துறவி இனத்தவர் வழிபட்ட லிங்கபேசம் என்ற லிங்கமும் இங்குள்ளது, துர்க்கை சந்நிதியும் இங்குள்ளது.


பிரார்த்தனை

திருமண யோகம், குழந்தைபாக்கியம் உண்டாக இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.

நேர்த்திக்கடன்:

சுவாமிக்கு அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சார்த்தி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.

தலபெருமை:


கைகூப்பிய குரு: இது ஒரு குரு ஸ்தலம். பிருகஸ்பதியாகிய குரு, இத்தலத்தில் சிவனை வழிபட்டு சகல கலைகளிலும் தேர்ச்சி பெற்றார். தேவகுருவான இவர் காயாரோகணேஸ்வரருக்கு எதிரில் மேற்கு நோக்கி வணங்கிய கோலத்தில் காட்சி தருகிறார். இவரது கைகள் மார்புக்கு நேராக குவிந்த நிலையில் உள்ளது. குருவின் அருள் இருந்தால் தான் ஒருவரின் வாழ்வில் திருமண யோகம், குழந்தைபாக்கியம் உண்டாகும். அவருக்குரிய வியாழக் கிழமையில், இங்கு வழிபட்டால் நன்மை உண்டாகும்.

எமதர்ம ஈஸ்வரர்: காயாரோகண தீர்த்தத்தின் மேற்குக் கரையில் எமதர்மனால் நிறுவப்பட்ட லிங்கம் தனிக் கோயிலாக அமைந்துள்ளது. எமதர்ம ஈஸ்வரர் என இவர் அழைக்கப்படுகிறார். நெய்தீபம் ஏற்றி இவரை வழிபட மரணபயம் நீங்கும்.

பெரியவர் வழிபட்ட சிவன்: காஞ்சிபுரம் சங்கரமடத்தின் 13வது பீடாதிபதியான சத்சித்கனேந்திர சரஸ்வதி சுவாமி கி.பி.272ல் இக்கோயிலில் சிவனோடு ஐக்கியமாகி ஸித்தி பெற்றார். இதன் காரணமாக, காஞ்சிப்பெரியவர் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமி, ஆண்டுதோறும் தவறாமல் இங்கு வழிபடுவதை தன் வழக்கமாக கொண்டிருந்தார்.



தல வரலாறு:

புண்டரீக மகரிஷி, சிவபெருமானை நோக்கி தவத்தில் ஆழ்ந்தார். அவருடைய தவத்தை ஏற்ற சிவன், வேண்டிய வரத்தை தருவதாக வாக்களித்தார். மகரிஷி சிவனிடம், ஐயனே! மனிதனின் உயிர் மட்டுமே முக்தி இன்பம் (பிறவாநிலை) பெறும். உடலோ மண்ணோடு மண்ணாகி விடும். நான் உயிரால் மட்டுமல்ல, உடம்போடும் முக்தி பெற விரும்புகிறேன். தாங்கள் எனக்கு அந்த பாக்கியத்தை அருள வேண்டும், என்று கேட்டார். சிவனும் அவருடைய காயத்தை (உடம்பை) தன்னோடு தழுவி ஏற்றார். இதனால் காயாரோகணேஸ்வரர் என்று பெயர் பெற்றார். காயம்+ஆரோகணம்+ஈஸ்வரர் என்று இந்தச்சொல்லைப் பிரிக்கலாம். காயம் என்றால் உடம்பு. ஆரோகணம் என்றால் தழுவுதல். ஈஸ்வரர் என்றால் சிவன். பக்தனை உடலோடு தழுவிய சிவன் என்பதே சமஸ்கிருதத்தில் காயாரோகணேஸ்வரர் ஆயிற்று. கோயிலுக்கு தெற்கில் காயாரோகணத்தீர்த்தம் உள்ளது. இதற்கு தாயார்குளம் என்றும் பெயருண்டு.

சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்: இது ஒரு குரு ஸ்தலம். அருள்மிகு காயாரோகணேஸ்வரர் திருக்கோயில்-காஞ்சிபுரம் T_500_1746
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

அருள்மிகு காயாரோகணேஸ்வரர் திருக்கோயில்-காஞ்சிபுரம் Empty Re: அருள்மிகு காயாரோகணேஸ்வரர் திருக்கோயில்-காஞ்சிபுரம்

Post by மகா பிரபு Sat Apr 27, 2013 9:23 am

தகவலுக்கு நன்றி அண்ணா
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

அருள்மிகு காயாரோகணேஸ்வரர் திருக்கோயில்-காஞ்சிபுரம் Empty அருள்மிகு காயாரோகணேஸ்வரர் திருக்கோயில்-காஞ்சிபுரம்

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Apr 27, 2013 1:34 pm

கைகூப்பிய குரு: இது ஒரு குரு ஸ்தலம். பிருகஸ்பதியாகிய குரு, இத்தலத்தில் சிவனை வழிபட்டு சகல கலைகளிலும் தேர்ச்சி பெற்றார். தேவகுருவான இவர் காயாரோகணேஸ்வரருக்கு எதிரில் மேற்கு நோக்கி வணங்கிய கோலத்தில் காட்சி தருகிறார். இவரது கைகள் மார்புக்கு நேராக குவிந்த நிலையில் உள்ளது. குருவின் அருள் இருந்தால் தான் ஒருவரின் வாழ்வில் திருமண யோகம், குழந்தைபாக்கியம் உண்டாகும். அவருக்குரிய வியாழக் கிழமையில், இங்கு வழிபட்டால் நன்மை உண்டாகும்.

நாமும் வணங்குவோம்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

அருள்மிகு காயாரோகணேஸ்வரர் திருக்கோயில்-காஞ்சிபுரம் Empty Re: அருள்மிகு காயாரோகணேஸ்வரர் திருக்கோயில்-காஞ்சிபுரம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum