Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
நம்பிக்கையோடு செயல்படு, வாழ்கையில் நிம்மதி சூழ்ந்திருக்கும்.
Page 1 of 1 • Share
நம்பிக்கையோடு செயல்படு, வாழ்கையில் நிம்மதி சூழ்ந்திருக்கும்.
நம்பிக்கையோடு செயல்படு, வாழ்கையில் நிம்மதி சூழ்ந்திருக்கும்..
~ எதன் மீது எனக்குச் சந்தேகம் வந்தாலும் நிம்மதி பாழாகிறது. இது மனைவியாயினும் சரி. யாரயிருந்தாலும் சரி!
~ எது பிடிக்கவில்லையோ அதில் இருந்து ஒதுங்கி நில். ஆனால், தினமும் சந்தேகப்பட்டு உடம்பையும் மனத்தையும் கெடுத்துக் கொள்ளாதே.
~ சாப்பிட்டு முடிந்த பின், எதைச் சாப்பிட்டோமோ என்று நினைத்தால், அடிவயிற்றைக் கலக்கும். சாப்பிடுவதற்கு முன்னாலேயே நன்றாகப் பார்.
~ கல்யாணம் கட்டி சாந்தி முகூர்த்தம் முடிந்த பின் இதையா கட்டிக் கொண்டோம்’ என்று நினைத்தால் நிம்மதி அடியோடு போய்விடும்.
~ முன்னாலே யோசி. யோசித்துச் செய்த முடிவுகளில் நம்பிக்கை வை.
~ திருப்பதிக்குப் போவது என்று முடிவு கட்டினால் திரும்பி வரும்போது பலன் இருக்கும் என்று நம்பு.
~ நம்பிக்கையும் சந்தேகமும் மாறி மாறி ஊடாடினால், அப்போதும் நிம்மதி இருக்காது.
~ மீன் கூடைக்குப் பக்கத்தில் பூக்கூடையை வைத்தால் மீன் வாசமும் தெரியாது; பூ வாசமும் தெரியாது. கலப்படமான ஒரு அருவருப்பே தோன்றும்.
~ நண்பன் தீயவன் என்றால், விலகிவிடு; நல்லவன் என்றால் நம்பிவிடு.
~ விலக்கியவனை நம்பத் தொடங்காதே; நம்பியவனை விலக்கத் தொடங்காதே.
~ இன்றையப் பொழுது நன்றாக இருக்கும்’ என்று நம்பு; நன்றாகவே இருக்கும்.
~ என் மனைவி உத்தமி’ என்று நம்பு; அவள் தவறாகவே நடந்தாலும், உனக்கு நிம்மதி இருக்கும். தன் தவறுகளுக்காக அவள் இந்த ஜென்மத்தில் வெந்து வெந்து சாவாள்.
~ இறங்குகிற தொழிலில் நம்பி இறங்கு; தொழில் திறமையே உனக்கு வந்து விடும்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: நம்பிக்கையோடு செயல்படு, வாழ்கையில் நிம்மதி சூழ்ந்திருக்கும்.
~ தண்ணீரில் விழுந்து விட்டால், நீந்தத் தெரியும்’ என்று நம்பு; நீந்தத் தெரிந்து விடும்.
~ கடன் வந்து விட்டால், கட்ட முடியும்’ என்று நம்பு; கட்டிவிட முடியும்.
~ முடியாது, முடியாது’ என்பவனும், அது இல்லை, இது இல்லை’ என்று வாதிடும் நாத்திகனும் மரக்கட்டைகள்.
~ உண்டு’ என்பவனுக்கே உள்ளம் வேலை செய்கிறது.
~ எதையும் கண்ணால் கண்டால்தான் நம்புவேன், என்கிறவன் முகத்தில் மட்டுமே கண்களைப் பெற்றவன்; அகத்திலே கண்ணில்லாதவன்.
~ ஊனக் கண் ஒரு கட்டத்திலே ஒளியிழந்து போகும்; ஞானக்கண் எப்போதும் பிரகாசிக்கும்.
~ நம்பிக்கையோடு முயன்றால், சாணத்தில் தங்கம் கிடைக்கும்.
~ சந்தேகத்தோடு பார்த்தால், தங்கமும் சாணம் மாதிரித்தான் தெரியும்.
~ கல்யாணமான ஒருத்தி, பாலகிருஷ்ணன் பொம்மையை வைத்துக் கொண்டு, `வாடா கண்ணா! வாடா கண்ணா!’ என்று அழைத்துப் பார்க்கட்டும், மலடி வயிற்றிலும் மகன் பிறப்பான்.
~ திருநீறோ, திருமண்ணோ இடும்போது கடனுக்கு இடாமல் நம்பிக்கையில் இடு. அவை இருக்கும் வரை மூளை பிரகாசிக்கும்.
~ நம்பியவர் கெட்டாரா? நம்பாதவர் வாழ்ந்தாரா?
~ ஒரு தாயின் தெய்வ நம்பிக்கையால், புத்தியில்லாது இருந்த நானும் ஓரளவு புத்தியுள்ளவனானேன். என்னுடைய தெய்வ நம்பிக்கையால் நான் எதிர்பாராத அளவுக்குச் சூழ்நிலைகள் வாய்த்துள்ளன.
~ முப்பத்து மூன்று வருஷங்களுக்கு முன்னால், பத்திரிகையில் வேலைக்குச் சேர்ந்தபோது, ப்ரூப் படிக்கத் தெரியுமா?’ என்றார்கள்; தெரியும்’ என்றேன். பழக முடியும் என்று நம்பினேன். பழகிக் கொண்டேன். கவிதை எழுதத் தெரியுமா?’ என்றார்கள்; நம்பினேன். எழுதினேன்.
~ முடியும்’ என்றால் முடிகிறது; தயங்கினால் சரிகிறது.
கூந்தலை முடிக்கக் கை இல்லாதவர்களுக்குத்தானே, அது சரிந்து விழுகிறது.
~ நாளைக்குத் திருச்சி போய்ச் சேருகிறோம்’ என்று ராக்போர்ட் எக்ஸ்பிரஸில் ஏறு; அது திருச்சி போய்ச் சேர்ந்துவிடும்.
~ இதுவா? போகுமா?’ என்று சந்தேகப்படு; அது புறப்படவே புறப்படாது.
~ விழுந்த பின் எழுவதற்கு உன் கைகள் தாம் பயன்படுகின்றன என்றால், அந்தக் கைகள் இறைவனுடைய கைகள் என்று அர்த்தம்.
~ அங்கே போனால் அது கிடைக்காது; இங்கே போனால் இது கிடைக்காது என்று சந்தேகப்பட்டால், நீ எங்கேயும் போக மாட்டாய்; எதிலும் முன்னேற மாட்டாய். இருந்த இடத்தில் இருந்தே சாவாய்.
Posted by Sakthivel Balasubramanian
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: நம்பிக்கையோடு செயல்படு, வாழ்கையில் நிம்மதி சூழ்ந்திருக்கும்.
அங்கே போனால் அது கிடைக்காது; இங்கே போனால் இது கிடைக்காது என்று சந்தேகப்பட்டால், நீ எங்கேயும் போக மாட்டாய்; எதிலும் முன்னேற மாட்டாய். இருந்த இடத்தில் இருந்தே சாவாய்.
சரண்- இளைய தளபதி
- பதிவுகள் : 1042
Re: நம்பிக்கையோடு செயல்படு, வாழ்கையில் நிம்மதி சூழ்ந்திருக்கும்.
பயனுள்ள கட்டுரைக்கு நன்றி அண்ணா
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» எங்கே நிம்மதி?
» சுண்டைக்காய் வாழ்கையில் நல்ல விசயமாக இருக்கு ...
» மன நிம்மதி பெறுவது எப்படி?
» வாழ்கையில் உள்ள பிரச்சனைகளுக்கு முடிவு தற்கொலை அல்ல!
» உனக்குள்ளே நிம்மதி
» சுண்டைக்காய் வாழ்கையில் நல்ல விசயமாக இருக்கு ...
» மன நிம்மதி பெறுவது எப்படி?
» வாழ்கையில் உள்ள பிரச்சனைகளுக்கு முடிவு தற்கொலை அல்ல!
» உனக்குள்ளே நிம்மதி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|