Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் -மணப்பாறை
தகவல்.நெட் :: ஆன்மீகப் பகுதி :: இந்து மதம் :: ஆலய தரிசனம்
Page 1 of 1 • Share
அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் -மணப்பாறை
அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் மணப்பாறை
மூலவர் : மாரியம்மன்
உற்சவர் : -
அம்மன்/தாயார் : -
தல விருட்சம் : -
தீர்த்தம் : -
ஆகமம்/பூஜை : -
பழமை : 500 வருடங்களுக்குள்
புராண பெயர் : -
ஊர் : மணப்பாறை
மாவட்டம் : திருச்சி
மாநிலம் : தமிழ்நாடு
பாடியவர்கள்:
-
திருவிழா:
தமிழ் வருடப்பிறப்பன்று திருவிளக்கு பூஜை, சித்திரை 2ம் தேதி பால்குடம். நவராத்திரி.
தல சிறப்பு:
சமயபுரம் மாரியம்மனின் தங்கையாக பாவிக்கப்படும் மணப்பாறை மாரியம்மன் காவிரியின் தெற்கு கரையிலும், சமயபுரம் வடகரையிலும் அமைந்திருப்பது சிறப்பு.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 1 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், மணப்பாறை, திருச்சி மாவட்டம்.
போன்:
+91 4332- 260 998, 98420- 80312
பொது தகவல்:
மாரி என்ற சொல்லுக்கு மழை என்று பொருள். விவசாயம் செழிக்க மழை வேண்டி அருள் மாரியின் புகழ்பாடி பக்தர்கள் முளைப்பாரி எடுக்கின்றனர். குதிரை வாகனத்தில் அன்னை எழுந்தருளும் வேடர்பரி நிகழ்ச்சி நடக்கிறது.
பிரார்த்தனை
திருமணத்தடை உள்ளவர்கள் வேப்பிலை மாரியம்மனுக்கு மஞ்சள் கயிறு வாங்கி அம்மன் சன்னதியின் பின்புறம் உள்ள வேப்பமரத்தில் கட்டுகின்றனர். இதன் மூலம் திருமணத்தடை விலகுவதாக நம்பிக்கை. குழந்தைபேறுக்காக வளையல் மற்றும் வேலை வேப்பமரத்தில் கட்டுகின்றனர்.
நேர்த்திக்கடன்:
பிரார்த்தனை நிறைவேறிய பக்தர்கள் மஞ்சள் கயிறு கட்டியும், வளையல் கட்டியும் நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.
தலபெருமை:
திருமணத்தடை உள்ளவர்கள் வேப்பிலை மாரியம்மனுக்கு மஞ்சள் கயிறு வாங்கி அம்மன் சன்னதியின் பின்புறம் உள்ள வேப்பமரத்தில் கட்டுகின்றனர். இதன் மூலம் திருமணத்தடை விலகுவதாக நம்பிக்கை. குழந்தைபேறுக்காக வளையல் மற்றும் வேலை வேப்பமரத்தில் கட்டுகின்றனர்.
பால்குட விழா: சித்திரை திருவிழாவில் 15ம் நாள் பால்குட பவனி நடக்கிறது. பிறவிப் பெருந்துன்பம் நீங்குதல், நோயிலிருந்து விடுதலை, திருமணத் தடை விலகுதல், குழந்தை பேறு கிடைத்தல், ஏழைகளின் வாழ்க்கையை காத்தல், வணிகர்கள், விவசாயிகள் வாழ்க்கையில் கருணை காட்டுதல், கல்வியும், நீண்ட ஆயுளும், அன்பு மறவாத மனைவியும் கிடைக்க வேண்டி பால் குடம் எடுக்கப்படுகிறது.
தல வரலாறு:
ஒரு காலத்தில், இந்தக் கோயில் இருந்த இடத்தில் மூங்கில் மரங்கள் வான் உயரம் வளர்ந்தோங்கி நின்றன. மூங்கில் காட்டின் நடுவே குறிப்பிட்ட இடத்தில் வேப்பமரங்கள் நின்றன. ஒருசமயம், மூங்கில் மரங்களை அப்பகுதியினர் வெட்டினர். நடுவில் நின்ற ஒரு வேப்பமரத்தை அகற்ற வேண்டிய நிலை ஏற்படடது. அதை வேருடன் சாய்த்தனர். அதன் கீழே கல் ஒன்று புதைந்து கிடந்தது. கல்லைப் பெயர்த்தெடுக்க முயன்ற போது, கடப்பாறை முனை பட்டதும், கல்லுக்குள் இருந்து ரத்தம் பீறிட்டது. அதிர்ந்துபோன தொழிலாளர்கள் அலறியடித்து ஓடி, ஊர் பெரியவர்களை அழைத்து வந்தனர். அப்போது அக் கூட்டத்திலிருந்த இறை நெறியாளர் ஒருவருக்கு அருள்வந்து, தான் மகமாயி என்றும், இந்த வேம்பினடியில் கிடந்த கல்லில் நீண்ட காலமாக குடிகொண்டு உள்ளதாகவும், தனக்கு ஊரார் ஒன்று கூடி கோயில் கட்டி வணங்கினல், இந்நகரைக் காத்து அருள்பாலிப்பதாகவும் சொன்னார். பக்தர்கள் அந்த புனிதக் கல்லை நீண்ட காலமாக கர்ப்பகிரகத்தில் வைத்து வழிபட்டு வந்தனர். காலப் போக்கில் அம்மனுக்கு சிலை வடிக்கப்பட்டது. இருப்பினும் கர்ப்பக்கிரகத்தில் புனிதக்கல் இன்றும் உள்ளது. அதற்கு முதல் பூஜை செய்த பின்னரே அம்மன் விக்ரகத்துக்கு தீபம் காட்டப்படுகிறது. வேப்பமரத்தடியில் புனிதக்கல் கிடைத்ததால், வேப்பிலை மாரியம்மன் என்ற பெயர் சூட்டப் பட்டது. வேப்பிலை மணக்க பாறையில் பிறந்தவள் என்பதால் ஊரின் பெயர் மணப்பாறை ஆகிவிட்டது. புனிதக்கல்லாக அருளும் மாரியம்மனை வணங்குதால் திருமண பாக்கியம் கிடைக்கும் என்பதாலும் மணப்பாறை ஆகியிருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்: சமயபுரம் மாரியம்மனின் தங்கையாக பாவிக்கப்படும் மணப்பாறை மாரியம்மன் காவிரியின் தெற்கு கரையிலும், சமயபுரம் வடகரையிலும் அமைந்திருப்பது சிறப்பு.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» சமயபுரம்-அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில்
» அருள்மிகு கோட்டை மாரியம்மன் திருக்கோயில்- சேலம்
» புன்னைநல்லூர் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், தஞ்சாவூர்
» கொன்னையூர் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், புதுக்கோட்டை
» ராசிபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், நாமக்கல்
» அருள்மிகு கோட்டை மாரியம்மன் திருக்கோயில்- சேலம்
» புன்னைநல்லூர் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், தஞ்சாவூர்
» கொன்னையூர் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், புதுக்கோட்டை
» ராசிபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், நாமக்கல்
தகவல்.நெட் :: ஆன்மீகப் பகுதி :: இந்து மதம் :: ஆலய தரிசனம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|