Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
மன பயம் போக்கும் மகிழம்பூ
Page 1 of 1 • Share
மன பயம் போக்கும் மகிழம்பூ
சித்த மருத்துவ நிபுணர் அருண் சின்னையா
மென்மையே அன்பின் வெளிப்பாடு; வன்மை என்றும் அன்பாகாது. மென்மை அறிவு தரும்; வன்மை நம்மை அழித்துவிடும். மென்மை போற்றுதலுக்குரியது; வன்மை தூற்றுதலுக்குரியது. மென்மை மேலானது; வன்மை கீழானது. மென்மை சாந்தம் வளர்ப்பது; வன்மை அகங்காரம் வளர்ப்பது. மென்மை நம்மை வளர்ப்பது; ஆனால் வன்மை நம்மைத் தடுப்பது.
அதனால்தான் மென்மையான மலர்களைக் கொண்டு அர்ச்சனை செய்து இறைவனை வழிபடுகிறோம். மலர்களின் மென்மையில்தான் இறைவன் இருக்கிறான். அந்த மலரே- அந்த மலருக்குள் இருக்கும் இறையே நமக்கு இரையாகி, நமக்குள் இருக்கும் இறையைப் போஷிக்கிறது. இது ஒரு காலச்சக்கரம். இதில் நாம் வன்மையடைய ஒன்றுமில்லை.
மென்மைக்கு இலக்கணமான மகிழம்பூவில் வீற்றிருக்கும் எம்பெருமான் சிவனை வணங்கி வேண்டுவோம். நல்ல உடல்நலம் பெற, கோவை சங்கமேஸ்வரர் கோவில் ஸ்தல விருட்சமான மகிழ மரத்தினை நடமாடும் சிவனாய் பாவித்து வேண்டுவோம்.
உஷ்ணம் தணிய...
கோடை வெயிலின் கடுமையைத் தணிப்பதில் மகிழம்பூ முன்னோடியாயத் திகழ்கிறது. நான்கு மகிழம்பூக்களை ஒரு டம்ளர் வெந்நீரிலிட்டு (இரவில்) மூடிவைக்கவும். மறுநாள் காலையில் பூக்களை எடுத்துவிட்டு தண்ணீரை மட்டும் பருகி வரவும். இதனால் உடல் உஷ்ணம் தணியும். சிறுநீர் சார்ந்த நோய்கள் விலகும்.
வியர்க்குருக்கள் மறைய...
புத்தம் புதிய மகிழம்பூக்களை ஒரு கைப்பிடியளவு எடுத்து, அத்துடன் ஒரு கையளவு பாசிப்பயறு, மூன்று வேப்பிலை, சிறிது மஞ்சள் சேர்த்தரைத்து உடம்பெல்லாம் பூசி, அரை மணி நேரம் கழித்து குளிக்க, வியர்க்குருக்கள் மறையும். மேலும் தொடர்ந்து பயன்படுத்திவர அழுக்குத் தேமல் அடியோடு மறையும்.
பாலுணர்வு சக்தி மேம்பட...
மகிழம்பூ மனதை மயக்கி புத்துணர்ச்சி கொள்ளச் செய்யும். நமது மனத்தில் உள்ள எதிர்மறை எண்ணங்களை அறவே களைந்து நேர்மறை எண்ணங்களை அதிகப்படுத்தும். அதனால்தான் தெய்வீகத் திருத்தலங்களில் மகிழமரம் நீங்கா இடம் பெற்றுள்ளது. மகிழ மர நிழலில் ஒரு குட்டித் தூக்கம் போட்டுப் பாருங்கள். அதன் சுகமே அலாதியானது.
குளுகுளு ஏசியைவிட, இயற்கை தரும் அரிய பரிசு மகிழ மரத்தின் கீழ் தூங்குவதுதான். மனம் புத்துணர்ச்சி பெறும். நமது உடம்பை இயக்கும் நாளமில்லா சுரப்பிகளை ஒழுங்காக இயங்கச் செய்யும் வல்லமை மகிழ மரத்திற்கே உண்டு.
நான்கு மகிழம் பூக்களை ஒரு டம்ளர் நீரிலிட்டு நன்கு கொதிக்க வைத்து வடிகட்டிவிடவும். பின்னர் இத்தண்ணீருடன் பால் சேர்த்து கொதிக்க வைத்து சர்க்கரை சேர்த்து அருந்த, நரம்பு மண்டலத்தை முறுக்கேற்றி பாலுணர்வு சக்தியை இருபாலருக்கும் மேம்படுத்தும். முழுமையான பலனைப் பெற இம்முறையை 48 நாட்கள் தொடர்ந்து பயன்படுத்தி வரவேண்டும்.
நல்ல தூக்கம் உண்டாக...
நான்கு மகிழம் பூக்கள், ஒரு தேக்கரண்டி தனியா விதை (கொத்தமல்லி) ஆகியவற்றைச் சேர்த்து, கொதிக்க வைத்து வடிகட்டி தினசரி இரவில் சாப்பிட்டு வாருங்கள். நிம்மதியான தூக்கம் உண்டாகும்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: மன பயம் போக்கும் மகிழம்பூ
மனபயம் விலக...
மகிழம்பூ, ரோஜாப்பூ, தாமரைப்பூ, தண்ணீர்விட்டான் கிழங்கு ஆகியவற்றை வகைக்கு 100 கிராம் எடுத்துக்கொள்ளுங்கள். இத்துடன் சுக்கு, ஏலக்காய் வகைக்கு 10 கிராம் சேர்த்து அனைத்தையும் ஒன்று கலந்து தூள் செய்யுங்கள். இதில் காலை- மாலை இருவேளையும் ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட்டுவர மனபயம், மன அழுத்தம், மன உளைச்சல் போன்றவை தீரும். மன அழுத்த நோயினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து இதனைச் சாப்பிட்டுவர அளப்பரிய பலன்களைப் பெறலாம்.
கற்றாழை நாற்றம் விலக...
மகிழம்பூ, ஆவாரம்பூ, ரோஜாப்பூ, கிச்சிலிக்கிழங்கு, வெந்தயம், பாசிப்பயறு, வெட்டிவேர், நன்னாரி, கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய், சந்தனம், சிவப்புச் சந்தனம் ஆகியவற்றை வகைக்கு 100 கிராம் வாங்கி, அனைத்தையும் ஒன்றாக்கித் தூள் செய்துகொள்ளவும். இதனை உடம்பெல்லாம் பூசி குளித்து வர, உடலில் காணும் கற்றாழை நாற்றம் முற்றிலும் விலகிவிடும்.
தலைமுடி வளர...
மகிழம்பூ, மருதாணிப்பூ, ஆலந்தளிர், அரச இலைத்தளிர் ஆகியவற்றை வகைக்கு ஒரு கையளவு எடுத்து விழுதாய் அரைத்து, தலை முழுவதும் மயிர்க்கால்களில் படும்படி தேய்த்து, அரைமணி நேரம் ஊற வைத்துக் குளித்துவரவும். தொடர்ந்து 21 நாட்கள் இம்முறையைப் பின்பற்றினால் பலன் நிச்சயம். முடி உதிரல், செம்பட்டை முடி, முடி வெடித்தல், இளநரை போன்ற குறைபாடுகள் நீங்கி, முடி அடர்த்தியாய்- கருமையாய்- தாராளமாய் வளரும்.
வெள்ளைப்படுதல் குணமாக...
மகிழம்பூ, பாதாம் பிசின், மஞ்சள் ஆகியவற்றை வகைக்கு 100 கிராம் சேர்த்து தூள் செய்து கொள்ளவும். இதில் காலை- மாலை இருவேளையும் அரை தேக்கரண்டியளவு சாப்பிட, ஏழு தினங்களில் வெள்ளைப்படுதல் குணமாகும். ஆண்- பெண் மர்ம உறுப்புகளில் உண்டாகும் புண் குணமாகும்.
படை, அரிப்பு தீர...
மகிழம்பூ அரை கிலோ, கருஞ்சீரகம் 100 கிராம்- இரண்டையும் சேர்த்தரைத்துக் கொள்ளவும். இதனை அரை தேக்கரண்டி அளவுக்கு உள்ளுக்குச் சாப்பிட்டு, பாதிக்கப்பட்ட இடத்தில் வெளிப்பூச்சும் செய்துவர படை, அரிப்பு தீரும். தொடை இடுக்குகளில் உண்டாகும் படை, அரிப்பு போன்ற தோல் வியாதிகளை முழுமையாகக் குணப்படுத்தும்.
தலைவலி குணமாக...
மகிழம்பூ, சுக்கு, சீரகம், சோம்பு, தனியா, ரோஜாப்பூ, ஏலக்காய், அதிமதுரம், சித்தரத்தை ஆகியவற்றை வகைக்கு 25 கிராம் சேர்த்து தூள் செய்து கொள்ளவும். இதில் காலை- மாலை இருவேளையும் அரை தேக்கரண்டியளவு தேனில் குழைத்துச் சாப்பிட, தலைவலி, நாள்பட்ட தலைவலி, தலைபாரம், ஒற்றைத் தலைவலி போன்ற குறைபாடுகள் தீரும்.
உடல் வலுவடைய...
மகிழம்விதை, நாயுருவி விதை ஆகியவற்றை வகைக்கு 100 கிராம் எடுத்து சேர்த்தரைத்துக் கொள்ளவும். இதில் அரை தேக்கரண்டியளவு காலை- மாலை இருவேளையும் சாப்பிட்டுவர உடல் வலுவடையும். ஆண்மை சக்தி உண்டாகும்.
வெட்டைநோய் தீர...
பட்டமரம் போலாக்கும் வெட்டை மேகத்தை விரட்டுவதில் மகிழம்பூ மிக முக்கிய பங்காற்றுகிறது. வெட்டைச் சூட்டினால் பாதிக்கப்பட்ட தேகம் மெலிந்து- கருத்து- களையிழந்து காணப்படும். முகப்பொலிவிழந்து 20 வயதுடையோர் 60 வயதைப்போல் காட்சியளிப்பர். அவர்களை மீட்டெடுத்து புத்துணர்ச்சி உண்டாக்கும் மகிழம் பூக்களை தலை வணங்கி, அதன் பாதம் பணிவதில் தவறில்லை.
மகிழம்பூ, கடுக்காய் ஆகியவற்றை வகைக்கு 10 கிராம் சேர்த்து, அரை லிட்டர் தண்ணீரிலிட்டு கொதிக்க வைத்து பாதியாகச் சுண்டச் செய்து கொள்ளவும். இதை காலை- மாலை இருவேளையும் சாப்பிட்டு வர வெட்டைச்சூடு விலகும். மேலும் பால்வினை நோய்களும் மறையும்.
மகிழம் வழங்கும் பிற பயன்கள்...
மகிழமரப் பட்டையால் உடல் உஷ்ணம் தீரும். மகிழமரப் பட்டையை மருந்தாகப் பயன்படுத்தி வர முத்துப்போல் குழந்தை பிறக்கும். மகிழம் வேரை கொட்டைப் பாக்களவு உள்ளுக்குச் சாப்பிட, சீழ்பிடித்த புண்கள் ஆறும். மகிழம்பூக்களை கண்களில் கட்டிவர, கண்பார்வை கூர்மையாகும்.
பூத்துக்குலுங்கும் மகிழமரத்தினை இமைகொட்டாது பார்க்கும் வாய்ப்பினை ஒரு முறையாவது கண்டு களியுங்கள். மனதுக்கு இனிமையும் புத்துணர்ச்சியும் உண்டாகும். மகிழம்பூ மரத்திலிருந்து கழன்றுவிழும் அழகை திருத்தக்கத் தேவர் என்னும் புலவர், ஒரு சிலந்திப்பூச்சி கீழ் விழுவதுபோல், அசைந்து, அசைந்து விழுவதாய் உருவகப்படுத்துகிறார். சிவனுக்குரிய மலர்களிலேயே சிறப்பான மலராக மகிழம்பூ பாடல்களில் இடம் பெற்றுள்ளது.
சிவனுறையும் மகிழம்பூ நம் ஜீவனை நம் உடம்பினுள் உறையச் செய்து, நலம்பெறத் துணை செய்யும் என்பது எழுதப்பட்ட நியதி. மகிழம் பூக்களால் அந்த மகேசனை அர்ச்சித்து முழுமை பெறுவோம்!
http://www.nakkheeran.in/users/frmArticles.aspx?A=9183
மகிழம்பூ, ரோஜாப்பூ, தாமரைப்பூ, தண்ணீர்விட்டான் கிழங்கு ஆகியவற்றை வகைக்கு 100 கிராம் எடுத்துக்கொள்ளுங்கள். இத்துடன் சுக்கு, ஏலக்காய் வகைக்கு 10 கிராம் சேர்த்து அனைத்தையும் ஒன்று கலந்து தூள் செய்யுங்கள். இதில் காலை- மாலை இருவேளையும் ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட்டுவர மனபயம், மன அழுத்தம், மன உளைச்சல் போன்றவை தீரும். மன அழுத்த நோயினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து இதனைச் சாப்பிட்டுவர அளப்பரிய பலன்களைப் பெறலாம்.
கற்றாழை நாற்றம் விலக...
மகிழம்பூ, ஆவாரம்பூ, ரோஜாப்பூ, கிச்சிலிக்கிழங்கு, வெந்தயம், பாசிப்பயறு, வெட்டிவேர், நன்னாரி, கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய், சந்தனம், சிவப்புச் சந்தனம் ஆகியவற்றை வகைக்கு 100 கிராம் வாங்கி, அனைத்தையும் ஒன்றாக்கித் தூள் செய்துகொள்ளவும். இதனை உடம்பெல்லாம் பூசி குளித்து வர, உடலில் காணும் கற்றாழை நாற்றம் முற்றிலும் விலகிவிடும்.
தலைமுடி வளர...
மகிழம்பூ, மருதாணிப்பூ, ஆலந்தளிர், அரச இலைத்தளிர் ஆகியவற்றை வகைக்கு ஒரு கையளவு எடுத்து விழுதாய் அரைத்து, தலை முழுவதும் மயிர்க்கால்களில் படும்படி தேய்த்து, அரைமணி நேரம் ஊற வைத்துக் குளித்துவரவும். தொடர்ந்து 21 நாட்கள் இம்முறையைப் பின்பற்றினால் பலன் நிச்சயம். முடி உதிரல், செம்பட்டை முடி, முடி வெடித்தல், இளநரை போன்ற குறைபாடுகள் நீங்கி, முடி அடர்த்தியாய்- கருமையாய்- தாராளமாய் வளரும்.
வெள்ளைப்படுதல் குணமாக...
மகிழம்பூ, பாதாம் பிசின், மஞ்சள் ஆகியவற்றை வகைக்கு 100 கிராம் சேர்த்து தூள் செய்து கொள்ளவும். இதில் காலை- மாலை இருவேளையும் அரை தேக்கரண்டியளவு சாப்பிட, ஏழு தினங்களில் வெள்ளைப்படுதல் குணமாகும். ஆண்- பெண் மர்ம உறுப்புகளில் உண்டாகும் புண் குணமாகும்.
படை, அரிப்பு தீர...
மகிழம்பூ அரை கிலோ, கருஞ்சீரகம் 100 கிராம்- இரண்டையும் சேர்த்தரைத்துக் கொள்ளவும். இதனை அரை தேக்கரண்டி அளவுக்கு உள்ளுக்குச் சாப்பிட்டு, பாதிக்கப்பட்ட இடத்தில் வெளிப்பூச்சும் செய்துவர படை, அரிப்பு தீரும். தொடை இடுக்குகளில் உண்டாகும் படை, அரிப்பு போன்ற தோல் வியாதிகளை முழுமையாகக் குணப்படுத்தும்.
தலைவலி குணமாக...
மகிழம்பூ, சுக்கு, சீரகம், சோம்பு, தனியா, ரோஜாப்பூ, ஏலக்காய், அதிமதுரம், சித்தரத்தை ஆகியவற்றை வகைக்கு 25 கிராம் சேர்த்து தூள் செய்து கொள்ளவும். இதில் காலை- மாலை இருவேளையும் அரை தேக்கரண்டியளவு தேனில் குழைத்துச் சாப்பிட, தலைவலி, நாள்பட்ட தலைவலி, தலைபாரம், ஒற்றைத் தலைவலி போன்ற குறைபாடுகள் தீரும்.
உடல் வலுவடைய...
மகிழம்விதை, நாயுருவி விதை ஆகியவற்றை வகைக்கு 100 கிராம் எடுத்து சேர்த்தரைத்துக் கொள்ளவும். இதில் அரை தேக்கரண்டியளவு காலை- மாலை இருவேளையும் சாப்பிட்டுவர உடல் வலுவடையும். ஆண்மை சக்தி உண்டாகும்.
வெட்டைநோய் தீர...
பட்டமரம் போலாக்கும் வெட்டை மேகத்தை விரட்டுவதில் மகிழம்பூ மிக முக்கிய பங்காற்றுகிறது. வெட்டைச் சூட்டினால் பாதிக்கப்பட்ட தேகம் மெலிந்து- கருத்து- களையிழந்து காணப்படும். முகப்பொலிவிழந்து 20 வயதுடையோர் 60 வயதைப்போல் காட்சியளிப்பர். அவர்களை மீட்டெடுத்து புத்துணர்ச்சி உண்டாக்கும் மகிழம் பூக்களை தலை வணங்கி, அதன் பாதம் பணிவதில் தவறில்லை.
மகிழம்பூ, கடுக்காய் ஆகியவற்றை வகைக்கு 10 கிராம் சேர்த்து, அரை லிட்டர் தண்ணீரிலிட்டு கொதிக்க வைத்து பாதியாகச் சுண்டச் செய்து கொள்ளவும். இதை காலை- மாலை இருவேளையும் சாப்பிட்டு வர வெட்டைச்சூடு விலகும். மேலும் பால்வினை நோய்களும் மறையும்.
மகிழம் வழங்கும் பிற பயன்கள்...
மகிழமரப் பட்டையால் உடல் உஷ்ணம் தீரும். மகிழமரப் பட்டையை மருந்தாகப் பயன்படுத்தி வர முத்துப்போல் குழந்தை பிறக்கும். மகிழம் வேரை கொட்டைப் பாக்களவு உள்ளுக்குச் சாப்பிட, சீழ்பிடித்த புண்கள் ஆறும். மகிழம்பூக்களை கண்களில் கட்டிவர, கண்பார்வை கூர்மையாகும்.
பூத்துக்குலுங்கும் மகிழமரத்தினை இமைகொட்டாது பார்க்கும் வாய்ப்பினை ஒரு முறையாவது கண்டு களியுங்கள். மனதுக்கு இனிமையும் புத்துணர்ச்சியும் உண்டாகும். மகிழம்பூ மரத்திலிருந்து கழன்றுவிழும் அழகை திருத்தக்கத் தேவர் என்னும் புலவர், ஒரு சிலந்திப்பூச்சி கீழ் விழுவதுபோல், அசைந்து, அசைந்து விழுவதாய் உருவகப்படுத்துகிறார். சிவனுக்குரிய மலர்களிலேயே சிறப்பான மலராக மகிழம்பூ பாடல்களில் இடம் பெற்றுள்ளது.
சிவனுறையும் மகிழம்பூ நம் ஜீவனை நம் உடம்பினுள் உறையச் செய்து, நலம்பெறத் துணை செய்யும் என்பது எழுதப்பட்ட நியதி. மகிழம் பூக்களால் அந்த மகேசனை அர்ச்சித்து முழுமை பெறுவோம்!
http://www.nakkheeran.in/users/frmArticles.aspx?A=9183
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|