Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
படித்து ரசித்தது! - கவிஞர் வைரமுத்து அவர்களின், பெய்யென பெய்யும் மழையிலிருந்து.
தகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை
Page 1 of 1 • Share
படித்து ரசித்தது! - கவிஞர் வைரமுத்து அவர்களின், பெய்யென பெய்யும் மழையிலிருந்து.
ஒரு தாவரம் அரும்பிலிருந்து சட்டென்று
கனிக்குத் தாவிடாமல் அரும்பு - மொட்டு -
மலர் - பூ - பிஞ்சு - காய் - கனி என்று
படிப்படியாக பயன்படுவதே பரிணாமத்தின்
வியப்புதான்
உலக கவிதைகளுக்கெல்லாம் பொதுவான
குணம் ஒன்று உண்டு.
மனிதகுலம் சோகப்படும் பொழுது கண்ணீர்
வடிப்பது; தாகப்படும்போது தண்ணீர்
கொடுப்பது.
படைத்தவனைவிடவும் படைப்பு மேம்பட்டது
படைத்தவனின் மேதாவிலாசம்
புரிந்துகொள்ளப்படுவதைவிட படைப்பின்
அனுபவங்கள் பகிர்ந்து கொள்ளப்படுவதையே
ஒரு நல்ல கவிதை வேண்டி நிற்கிறது.
கனிக்குத் தாவிடாமல் அரும்பு - மொட்டு -
மலர் - பூ - பிஞ்சு - காய் - கனி என்று
படிப்படியாக பயன்படுவதே பரிணாமத்தின்
வியப்புதான்
உலக கவிதைகளுக்கெல்லாம் பொதுவான
குணம் ஒன்று உண்டு.
மனிதகுலம் சோகப்படும் பொழுது கண்ணீர்
வடிப்பது; தாகப்படும்போது தண்ணீர்
கொடுப்பது.
படைத்தவனைவிடவும் படைப்பு மேம்பட்டது
படைத்தவனின் மேதாவிலாசம்
புரிந்துகொள்ளப்படுவதைவிட படைப்பின்
அனுபவங்கள் பகிர்ந்து கொள்ளப்படுவதையே
ஒரு நல்ல கவிதை வேண்டி நிற்கிறது.
sawmya- இளைய தளபதி
- பதிவுகள் : 2919
படித்து ரசித்தது! - கவிஞர் வைரமுத்து அவர்களின், பெய்யென பெய்யும் மழையிலிருந்து.
இசை
நாவுக்குச் சிக்காத அமிர்தம் நீ
நாசிக்குச் சிக்காத வாசம் நீ
கண்ணனுக்குச் சிக்காத நிறப்பிரிகை நீ
ஸ்பரிசம் இல்லாத தீண்டல் நீ
விதைச் சோளம்
தெய்வமெல்லாம் கும்பிட்டுத்
தெசயெல்லாம் தெண்டனிட்டு
நீட்டிப் படுக்கையில்
நெத்தியில ஒத்தமழை.
காலந்தோறும் காதல்
காவிய காலம்
பொன்னங் கொடியென்பார் போதலரும் பூவென்பார்
மின்னல் மிடைத்த இடையென்பார் - இன்னும்
சுரும்பிருக்கும் கூந்தல் சுடர்தொடிஉன் சொல்லில்
கரும்பிருக்கும் என்பார் கவி.
நாவுக்குச் சிக்காத அமிர்தம் நீ
நாசிக்குச் சிக்காத வாசம் நீ
கண்ணனுக்குச் சிக்காத நிறப்பிரிகை நீ
ஸ்பரிசம் இல்லாத தீண்டல் நீ
விதைச் சோளம்
தெய்வமெல்லாம் கும்பிட்டுத்
தெசயெல்லாம் தெண்டனிட்டு
நீட்டிப் படுக்கையில்
நெத்தியில ஒத்தமழை.
காலந்தோறும் காதல்
காவிய காலம்
பொன்னங் கொடியென்பார் போதலரும் பூவென்பார்
மின்னல் மிடைத்த இடையென்பார் - இன்னும்
சுரும்பிருக்கும் கூந்தல் சுடர்தொடிஉன் சொல்லில்
கரும்பிருக்கும் என்பார் கவி.
Last edited by sawmya on Thu Sep 19, 2013 6:08 pm; edited 2 times in total (Reason for editing : தவறுதலாக இரண்டு முறை பதிவாகியுள்ளது)
sawmya- இளைய தளபதி
- பதிவுகள் : 2919
Re: படித்து ரசித்தது! - கவிஞர் வைரமுத்து அவர்களின், பெய்யென பெய்யும் மழையிலிருந்து.
மழைக்குருவி
கீச்சுக் கீச்சென்றது - என்னைக்
கிட்ட வாவென்றது
பேச்சு மொழியின்றியே - என்மேல்
பிரியமா என்றது
(இது இன்று அளவில், ட்விட்டர் குருவிக்குச் சால பொருந்தும்)
தீ அணையட்டும்
அந்நிய ரோடு சண்டை கொண்டது
ஆரோ எழோதான் - சொந்த
மண்ணவ ரோடு சண்டை கொண்டது
மணலினும் அதிகம்தான்.
~
முன்னே வள்ளுவன் பின்னே பாரதி
முழங்கினர் ஊருக்கு - அட
இன்னும் நீங்கள் திருந்தா விட்டால்
இலக்கியம் எதுக்கு?
உள்முகம்
கல்வியின் கர்ப்பத்தில்
மீண்டும் கண்வளர்
சிரிப்பு
உதுடுகளின் தொழில் ஆறு
சிரித்தால் முத்தமிடல்
உண்ணல் உறிஞ்சல்
உச்சரித்தல் இசைத்தல்
தருவோன் பெருவோன்
இருவருக்கும் இழப்பில்லாத
அதிசய தானம்தான் சிரிப்பு
சிறுசிறு சொர்க்கம் சிரிப்பு
ஜீவ அடையாளம் சிரிப்பு
மரணத்தைத் தள்ளிப்போடும்
மார்க்கம்தான் சிரிப்பு
எங்கே!
இருண்டுபேர் சந்தித்தால்
தயவுசெய்து மரணத்தை
தள்ளிப் போடுங்களேன்.
கீச்சுக் கீச்சென்றது - என்னைக்
கிட்ட வாவென்றது
பேச்சு மொழியின்றியே - என்மேல்
பிரியமா என்றது
(இது இன்று அளவில், ட்விட்டர் குருவிக்குச் சால பொருந்தும்)
தீ அணையட்டும்
அந்நிய ரோடு சண்டை கொண்டது
ஆரோ எழோதான் - சொந்த
மண்ணவ ரோடு சண்டை கொண்டது
மணலினும் அதிகம்தான்.
~
முன்னே வள்ளுவன் பின்னே பாரதி
முழங்கினர் ஊருக்கு - அட
இன்னும் நீங்கள் திருந்தா விட்டால்
இலக்கியம் எதுக்கு?
உள்முகம்
கல்வியின் கர்ப்பத்தில்
மீண்டும் கண்வளர்
சிரிப்பு
உதுடுகளின் தொழில் ஆறு
சிரித்தால் முத்தமிடல்
உண்ணல் உறிஞ்சல்
உச்சரித்தல் இசைத்தல்
தருவோன் பெருவோன்
இருவருக்கும் இழப்பில்லாத
அதிசய தானம்தான் சிரிப்பு
சிறுசிறு சொர்க்கம் சிரிப்பு
ஜீவ அடையாளம் சிரிப்பு
மரணத்தைத் தள்ளிப்போடும்
மார்க்கம்தான் சிரிப்பு
எங்கே!
இருண்டுபேர் சந்தித்தால்
தயவுசெய்து மரணத்தை
தள்ளிப் போடுங்களேன்.
sawmya- இளைய தளபதி
- பதிவுகள் : 2919
படித்து ரசித்தது! - கவிஞர் வைரமுத்து அவர்களின், பெய்யென பெய்யும் மழையிலிருந்து.
Last edited by sawmya on Thu Sep 19, 2013 6:20 pm; edited 3 times in total (Reason for editing : தவறுதலாக இரண்டு முறை பதிவாகியுள்ளது .)
sawmya- இளைய தளபதி
- பதிவுகள் : 2919
படித்து ரசித்தது! - கவிஞர் வைரமுத்து அவர்களின், பெய்யென பெய்யும் மழையிலிருந்து.
நண்பா உனக்கொரு வெண்பா
(எய்ட்ஸ் பற்றி)
கலவிக்குப் போய்வந்த காமத்து நோயைத்
தலைவிக்கும் ஈவான் தலைவன் - கலங்காதே
காவலனாய் வாய்ந்தவனே கண்ணகிக்கு நோய்தந்தால்
கோவலனை கூசாமல் கொல்!
நதிமூலம்
கோபத்தின் சிகரத்தில்
துக்கத்தின் அடிவாரத்தில்
எப்போது மனது கூடாரமடிக்கிறதோ
அப்போதெல்லாம்
எழுதத்தோன்றும்
மற்றும் சில கேள்விகள்
மொழியாய் முதிர்ந்தது ஒலி
கவியாய் முதிர்ந்தது மொழி
என்னவாய் முதிரும் கவி ?
உண்டாக்கும் அனைத்தையும்
உள்வாங்கும் பூமிக்குத்
தாயெனும் பட்டம் தகுமா?
இதரவை (சில ஒரு வரிகள்)
இப்போது கன்னிகழிக்க
எப்போதோ வாங்கிய புத்தங்கள்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
(எய்ட்ஸ் பற்றி)
கலவிக்குப் போய்வந்த காமத்து நோயைத்
தலைவிக்கும் ஈவான் தலைவன் - கலங்காதே
காவலனாய் வாய்ந்தவனே கண்ணகிக்கு நோய்தந்தால்
கோவலனை கூசாமல் கொல்!
நதிமூலம்
கோபத்தின் சிகரத்தில்
துக்கத்தின் அடிவாரத்தில்
எப்போது மனது கூடாரமடிக்கிறதோ
அப்போதெல்லாம்
எழுதத்தோன்றும்
மற்றும் சில கேள்விகள்
மொழியாய் முதிர்ந்தது ஒலி
கவியாய் முதிர்ந்தது மொழி
என்னவாய் முதிரும் கவி ?
உண்டாக்கும் அனைத்தையும்
உள்வாங்கும் பூமிக்குத்
தாயெனும் பட்டம் தகுமா?
இதரவை (சில ஒரு வரிகள்)
இப்போது கன்னிகழிக்க
எப்போதோ வாங்கிய புத்தங்கள்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
Last edited by sawmya on Thu Sep 19, 2013 6:24 pm; edited 1 time in total (Reason for editing : இரண்டு முறை பதிவு தவிர்க்க...)
sawmya- இளைய தளபதி
- பதிவுகள் : 2919
வைரமுத்து கவிதை வரிகள்...
“உன்னை நான் வணங்காமல் போனால்
என்னில் தமிழ் இணங்காமல் போகும்’
"யமுனையை விட கூவம் தாஜ்மகாலே கொடுத்து வைத்தது…யமுனை வற்றிவிடும்…கூவம் வற்றாது"
"இதுதான் காதலுக்கு சிந்தப்பட்ட உயரமான கண்ணீர்த் துளி"
"கண்மணியை உள்ளே புதைத்துவிட்டு வெள்ளை விழி மட்டும் வெளியே தெரிகிறது"
இது கூட வைரமுத்துவின் வரிகள் தான்.
அருமை அருமை அனைத்தும் அருமை.
என்னில் தமிழ் இணங்காமல் போகும்’
"யமுனையை விட கூவம் தாஜ்மகாலே கொடுத்து வைத்தது…யமுனை வற்றிவிடும்…கூவம் வற்றாது"
"இதுதான் காதலுக்கு சிந்தப்பட்ட உயரமான கண்ணீர்த் துளி"
"கண்மணியை உள்ளே புதைத்துவிட்டு வெள்ளை விழி மட்டும் வெளியே தெரிகிறது"
இது கூட வைரமுத்துவின் வரிகள் தான்.
அருமை அருமை அனைத்தும் அருமை.
Last edited by sawmya on Thu Sep 19, 2013 6:35 pm; edited 1 time in total (Reason for editing : புதிய தகவல்கள்.)
sawmya- இளைய தளபதி
- பதிவுகள் : 2919
இந்தக் கவிதை, கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின், இந்த பூக்கள் விற்பனைக்கல்ல என்னும் அவரது கவிதைத்தொகுப்பில் இடம்பெற்றது!
இந்தக் கவிதை, கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின், இந்த பூக்கள் விற்பனைக்கல்ல என்னும் அவரது கவிதைத்தொகுப்பில் இடம்பெற்றது!
அந்தந்த வயதில்…
இருபதுகளில்…
எழு!
உன் கால்களுக்கு
சுயமாய் நிற்கச் சொல்லிக் கொடு!
ஜன்னல்களைத் திறந்து வை!
படி! எதையும் படி!
வாத்சாயனம் கூடக்
காமமல்ல, கல்விதான்..
படி!
பிறகு
புத்தகங்களை எல்லாம்
உன்
பிருஷ்டங்களுக்குப்
பின்னால் எறிந்துவிட்டு
வாழ்க்கைக்கு வா..
உன் சட்டைப் பொத்தான்,
கடிகாரம்,
காதல்,
சிற்றுண்டி,
சிற்றின்பம்
எல்லாம்
விஞ்ஞானத்தின் மடியில்
விழுந்து விட்டால்,
எந்திர அறிவு கொள்!
ஏவாத ஏவுகணையினும்
அடிக்கப்பட்ட ஆணியே பலம்.
மனித முகங்களை
மனசுக்குள் பதிவு செய்!
சப்தங்கள் படி!
சூழ்ச்சிகள் அறி!
பூமியில் நின்று
வானத்தைப் பார்!
வானத்தில் நின்று
பூமியைப் பார்!
உன் திசையைத் தெரிவு செய்!
நுரைக்க நுரைக்க காதலி!
காதலைச் சுகி!
காதலில் அழு!
இருபதுகளின் இரண்டாம் பாகத்தில்
மணம் புரி!
பூமியில் மனிதன்
இதுவரை துய்த்த இன்பம்
கையளவுதான்..
மிச்சமெல்லாம் உனக்கு!
வாழ்க்கையென்பது
உழைப்பும் துய்ப்புமென்று உணர்!
உன் அஸ்திவாரத்தை ஆழப்படுத்து!
இன்னும்… இன்னும்…
சூரியக் கதிர்கள்
விழமுடியாத ஆழத்தில்…
அந்தந்த வயதில்…
இருபதுகளில்…
எழு!
உன் கால்களுக்கு
சுயமாய் நிற்கச் சொல்லிக் கொடு!
ஜன்னல்களைத் திறந்து வை!
படி! எதையும் படி!
வாத்சாயனம் கூடக்
காமமல்ல, கல்விதான்..
படி!
பிறகு
புத்தகங்களை எல்லாம்
உன்
பிருஷ்டங்களுக்குப்
பின்னால் எறிந்துவிட்டு
வாழ்க்கைக்கு வா..
உன் சட்டைப் பொத்தான்,
கடிகாரம்,
காதல்,
சிற்றுண்டி,
சிற்றின்பம்
எல்லாம்
விஞ்ஞானத்தின் மடியில்
விழுந்து விட்டால்,
எந்திர அறிவு கொள்!
ஏவாத ஏவுகணையினும்
அடிக்கப்பட்ட ஆணியே பலம்.
மனித முகங்களை
மனசுக்குள் பதிவு செய்!
சப்தங்கள் படி!
சூழ்ச்சிகள் அறி!
பூமியில் நின்று
வானத்தைப் பார்!
வானத்தில் நின்று
பூமியைப் பார்!
உன் திசையைத் தெரிவு செய்!
நுரைக்க நுரைக்க காதலி!
காதலைச் சுகி!
காதலில் அழு!
இருபதுகளின் இரண்டாம் பாகத்தில்
மணம் புரி!
பூமியில் மனிதன்
இதுவரை துய்த்த இன்பம்
கையளவுதான்..
மிச்சமெல்லாம் உனக்கு!
வாழ்க்கையென்பது
உழைப்பும் துய்ப்புமென்று உணர்!
உன் அஸ்திவாரத்தை ஆழப்படுத்து!
இன்னும்… இன்னும்…
சூரியக் கதிர்கள்
விழமுடியாத ஆழத்தில்…
Last edited by sawmya on Thu Sep 19, 2013 6:37 pm; edited 1 time in total (Reason for editing : புதிய தகவல்கள்.)
sawmya- இளைய தளபதி
- பதிவுகள் : 2919
இந்தக் கவிதை, கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின், இந்த பூக்கள் விற்பனைக்கல்ல என்னும் அவரது கவிதைத்தொகுப்பில் இடம்பெற்றது!
முப்பதுகளில்…
சுறுசுறுப்பில்
தேனீயாயிரு!
நிதானத்தில்
ஞானியாயிரு!
உறங்குதல் சுருக்கு!
உழை!
நித்தம் கலவி கொள்!
உட்கார முடியாத ஒருவன்
உன் நாற்காலியை
ஒளித்து வைத்திருப்பான்..
கைப்பற்று!
ஆயுதம் தயாரி..
பயன்படுத்தாதே.
எதிரிகளைப் பேசவிடு!
சிறுநீர் கழிக்கையில் சிரி!
வேர்களை,
இடிபிளக்காத
ஆழத்துக்கு அனுப்பு..
கிளைகளை,
சூரியனுக்கு
நிழல் கொடுக்கும்
உயரத்தில் பரப்பு..
நிலை கொள்.
சுறுசுறுப்பில்
தேனீயாயிரு!
நிதானத்தில்
ஞானியாயிரு!
உறங்குதல் சுருக்கு!
உழை!
நித்தம் கலவி கொள்!
உட்கார முடியாத ஒருவன்
உன் நாற்காலியை
ஒளித்து வைத்திருப்பான்..
கைப்பற்று!
ஆயுதம் தயாரி..
பயன்படுத்தாதே.
எதிரிகளைப் பேசவிடு!
சிறுநீர் கழிக்கையில் சிரி!
வேர்களை,
இடிபிளக்காத
ஆழத்துக்கு அனுப்பு..
கிளைகளை,
சூரியனுக்கு
நிழல் கொடுக்கும்
உயரத்தில் பரப்பு..
நிலை கொள்.
Last edited by sawmya on Thu Sep 19, 2013 6:38 pm; edited 1 time in total (Reason for editing : புதிய தகவல்கள்.)
sawmya- இளைய தளபதி
- பதிவுகள் : 2919
இந்தக் கவிதை, கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின், இந்த பூக்கள் விற்பனைக்கல்ல என்னும் அவரது கவிதைத்தொகுப்பில் இடம்பெற்றது!
நாற்பதுகளில்…
இனிமேல்தான்
வாழ்க்கை ஆரம்பம்..
செல்வத்தில் பாதியை
அறிவில் முழுமையை
செலவழி..
எதிரிகளை ஒழி!
ஆயுதங்களை
மண்டையோடுகளில் தீட்டு!
ஒருவனைப் புதைக்க
இன்னொருவனைக்
குழிவெட்டச் சொல்!
அதில்
இருவரையும் புதை!
இருகையால் ஈட்டு..
ஒரு கையாலேனும் கொடு..
பகல் தூக்கம் போடு.
கவனம்!
இன்னொரு காதல் வரும்!
புன்னகைவரை போ..
புடவை தொடாதே.
இதுவரை இலட்சியம் தானே
உனக்கு இலக்கு!
இனிமேல்
இலட்சியத்துக்கு நீதான்
இலக்கு..
இனிமேல்தான்
வாழ்க்கை ஆரம்பம்..
செல்வத்தில் பாதியை
அறிவில் முழுமையை
செலவழி..
எதிரிகளை ஒழி!
ஆயுதங்களை
மண்டையோடுகளில் தீட்டு!
ஒருவனைப் புதைக்க
இன்னொருவனைக்
குழிவெட்டச் சொல்!
அதில்
இருவரையும் புதை!
இருகையால் ஈட்டு..
ஒரு கையாலேனும் கொடு..
பகல் தூக்கம் போடு.
கவனம்!
இன்னொரு காதல் வரும்!
புன்னகைவரை போ..
புடவை தொடாதே.
இதுவரை இலட்சியம் தானே
உனக்கு இலக்கு!
இனிமேல்
இலட்சியத்துக்கு நீதான்
இலக்கு..
Last edited by sawmya on Thu Sep 19, 2013 6:40 pm; edited 1 time in total (Reason for editing : புதிய தகவல்கள்.)
sawmya- இளைய தளபதி
- பதிவுகள் : 2919
இந்தக் கவிதை, கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின், இந்த பூக்கள் விற்பனைக்கல்ல என்னும் அவரது கவிதைத்தொகுப்பில் இடம்பெற்றது!
ஐம்பதுகளில்…
வாழ்க்கை, வழுக்கை
இரண்டையும் ரசி..
கொழுப்பைக் குறை..
முட்டையின் வெண்கரு
காய்கறி கீரைகொள்!
கணக்குப்பார்!
நீ மனிதனா என்று
வாழ்க்கையைக் கேள்..
இலட்சியத்தைத் தொடு
வெற்றியில் மகிழாதே!
விழா எடுக்காதே!
வாழ்க்கை, வழுக்கை
இரண்டையும் ரசி..
கொழுப்பைக் குறை..
முட்டையின் வெண்கரு
காய்கறி கீரைகொள்!
கணக்குப்பார்!
நீ மனிதனா என்று
வாழ்க்கையைக் கேள்..
இலட்சியத்தைத் தொடு
வெற்றியில் மகிழாதே!
விழா எடுக்காதே!
Last edited by sawmya on Thu Sep 19, 2013 6:42 pm; edited 1 time in total (Reason for editing : புதிய தகவல்கள்.)
sawmya- இளைய தளபதி
- பதிவுகள் : 2919
இந்தக் கவிதை, கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின், இந்த பூக்கள் விற்பனைக்கல்ல என்னும் அவரது கவிதைத்தொகுப்பில் இடம்பெற்றது!
அறுபதுகளில்…
இதுவரை
வாழ்க்கைதானே உன்னை வாழ்ந்தது..
இனியேனும்
வாழ்க்கையை நீ வாழ்..
விதிக்கப்பட்ட வாழ்க்கையை
விலக்கிவிடு..
மனிதர்கள் போதும்.
முயல் வளர்த்துப் பார்!
நாயோடு தூங்கு!
கிளியோடு பேசு!
மனைவிக்குப் பேன் பார்!
பழைய டைரி எடு
இப்போதாவது உண்மை எழுது..
இதுவரை
வாழ்க்கைதானே உன்னை வாழ்ந்தது..
இனியேனும்
வாழ்க்கையை நீ வாழ்..
விதிக்கப்பட்ட வாழ்க்கையை
விலக்கிவிடு..
மனிதர்கள் போதும்.
முயல் வளர்த்துப் பார்!
நாயோடு தூங்கு!
கிளியோடு பேசு!
மனைவிக்குப் பேன் பார்!
பழைய டைரி எடு
இப்போதாவது உண்மை எழுது..
Last edited by sawmya on Thu Sep 19, 2013 6:46 pm; edited 1 time in total (Reason for editing : புதிய தகவல்கள்.)
sawmya- இளைய தளபதி
- பதிவுகள் : 2919
இந்தக் கவிதை, கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின், இந்த பூக்கள் விற்பனைக்கல்ல என்னும் அவரது கவிதைத்தொகுப்பில் இடம்பெற்றது!
எழுபதுக்கு மேல்…
இந்தியாவில்
இது உபரி..
சுடுகாடுவரை
நடந்து போகச்
சக்தி இருக்கும்போதே
செத்துப்போ…
ஜன கண மண…
இந்தியாவில்
இது உபரி..
சுடுகாடுவரை
நடந்து போகச்
சக்தி இருக்கும்போதே
செத்துப்போ…
ஜன கண மண…
Last edited by sawmya on Thu Sep 19, 2013 6:43 pm; edited 1 time in total (Reason for editing : புதிய தகவல்கள்.)
sawmya- இளைய தளபதி
- பதிவுகள் : 2919
Re: படித்து ரசித்தது! - கவிஞர் வைரமுத்து அவர்களின், பெய்யென பெய்யும் மழையிலிருந்து.
அனைத்தும் அருமை
உங்கள் பார்வைக்கு :
மழைக்குருவி
தீ அணையட்டும்
உள்முகம்
சிரிப்பு
இந்த தலைப்பில் உள்ள கவிதைகள் தவறுதலாக இரண்டு முறை பதிவாகியுள்ளது .
உங்கள் பார்வைக்கு :
மழைக்குருவி
தீ அணையட்டும்
உள்முகம்
சிரிப்பு
இந்த தலைப்பில் உள்ள கவிதைகள் தவறுதலாக இரண்டு முறை பதிவாகியுள்ளது .
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: படித்து ரசித்தது! - கவிஞர் வைரமுத்து அவர்களின், பெய்யென பெய்யும் மழையிலிருந்து.
தகவலுக்கு நன்றி உடன் திருத்திக்கொள்கின்றேன்!
கருவாச்சி காவியத்தில், கருவாச்சி யாருமற்ற தனிமையில் தனக்குத் தானே பிரசவம் பார்த்துக்கொள்ளும் வரிகளை விட சிறந்ததாய் இனி வைரமுத்துவே எழுதமுடியாது
என்று என் தோழி ஒருவர் தெரிவித்தார்.
கருவாச்சி காவியம் பற்றிய பகிர்வு நமது நண்பர்கள் மூலம் கிட்டுமாயின் மிகவும் மகிழ்ச்சி.
கருவாச்சி காவியத்தில், கருவாச்சி யாருமற்ற தனிமையில் தனக்குத் தானே பிரசவம் பார்த்துக்கொள்ளும் வரிகளை விட சிறந்ததாய் இனி வைரமுத்துவே எழுதமுடியாது
என்று என் தோழி ஒருவர் தெரிவித்தார்.
கருவாச்சி காவியம் பற்றிய பகிர்வு நமது நண்பர்கள் மூலம் கிட்டுமாயின் மிகவும் மகிழ்ச்சி.
sawmya- இளைய தளபதி
- பதிவுகள் : 2919
Similar topics
» அறிவுரைகள் - கவிஞர் வைரமுத்து
» கேள்வி ஞானம் - கவிஞர் வைரமுத்து
» கொச்சைத்தனத்தில் இருந்து தமிழ் திரையுலகை மீட்க வேண்டும்: கவிஞர் வைரமுத்து விருப்பம்
» மழையிலிருந்து காக்கும் மஞ்சள்!
» எப்போது பெய்யும் மழை?
» கேள்வி ஞானம் - கவிஞர் வைரமுத்து
» கொச்சைத்தனத்தில் இருந்து தமிழ் திரையுலகை மீட்க வேண்டும்: கவிஞர் வைரமுத்து விருப்பம்
» மழையிலிருந்து காக்கும் மஞ்சள்!
» எப்போது பெய்யும் மழை?
தகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|