தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


உங்கள் வீட்டிலும் தோட்டம் வளர்க்கலாம்.

View previous topic View next topic Go down

உங்கள் வீட்டிலும் தோட்டம் வளர்க்கலாம். Empty உங்கள் வீட்டிலும் தோட்டம் வளர்க்கலாம்.

Post by ஸ்ரீராம் Thu Sep 19, 2013 7:41 am

உங்கள் வீட்டிலும் தோட்டம் வளர்க்கலாம். 1235117_607353242648492_1035051651_n

"இயற்கையைப் பாதுகாக்க வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு இருக்கிறது", "தோட்டம் வளர்க்க வேண்டும் என்று எனக்குக் கொள்ளை ஆசை", "பூச்சிக்கொல்லி இல்லாத கீரை, காய்கறிகளை நானே வீட்டில் பயிரிட முடியாதா?":..

இந்தக் கேள்விகளில் ஏதாவது ஒன்று உங்களுக்கும் இருக்கிறதா? ஆனால், எப்படி இதைச் செய்வது? நான் இருப்பது மாடி வீடாயிற்றே, அதிலே எங்கே தோட்டம் வளர்க்க இடம் இருக்கிறது என்று நினைக்கிறீர்களா?

கவலைப்படாதீர்கள், இயற்கையைப் பாதுகாப்பதற்கு சங்கம் அமைத்துக் குரல் கொடுக்கவோ, கொடிபிடித்துக் கூட்டம் சேர்க்கவோ தேவையில்லை. நம் வீட்டையும் சுற்றுப்புறத்தையும் பசுமையாக வைத்துக்கொண்டாலே போதும். அதுவே இயற்கைக்கு நாம் செய்யும் பெரும்பணியாக இருக்கும்.

சரி, அதை எப்படிச் செய்வது?

'தூய்மையான காற்று, தண்ணீர், உணவு இந்த மூன்றும்தான் ஆரோக்கிய வாழ்க்கைக்கு அடிப்படை' என்றும் சொல்லும் ஹோம் எக்ஸ்னோரா அமைப்பின் தலைவர் இந்திரகுமார், வீட்டிலேயே தோட்டம் அமைப்பதற்கு வழிகாட்டுகிறார்.

'மண் தரையைக் காண்பதே அரிதாக இருக்கிற நகரத்து அபார்ட்மெண்ட் வீடுகளில்கூட மரம் வளர்க்கலாம், நல்ல பலனையும் பெறலாம். சின்னச்சின்ன தொட்டிகளில் சுத்தமான மண்ணை நிரப்பி, அதில் தரமான விதைகளில் இருந்து முளைத்த செடிகளைப் பயிரிடலாம். கத்தரி, வெண்டை, தக்காளி, பீர்க்கங்காய், புதினா, மணத்தக்காளி, ஓமவல்லி, ரோஜா, சம்பங்கி, மல்லிகை இப்படி நம் வீட்டுக்குப் பயன்தரும் செடிகளையே திறந்தவெளி மாடிகளில் பயிரிடலாம்.

காய்கறி கழிவுகளைச் சேர்த்து வைத்து, அதன் மூலம் கிடைக்கும் உரத்தை இந்தச் செடிகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்குப் பயன்படுத்தலாம். வீட்டில் மரம் வளர்க்கிறவர்கள் மரத்திலிருந்து உதிரும் இலைகளையும், வீட்டில் சேரும் மட்கக்கூடிய குப்பைகளையும் சேகரித்து, அவற்றின் மூலம் இயற்கை உரத்தையும் தயாரிக்கலாம்.

நோய்கள் நிரம்பிய தற்போதைய உலகில் செயற்கை உரங்களோ, பூச்சிக்கொல்லிகளோ சேர்க்கப்படாத சுத்தமான காய்கறிகளும் பழங்களும் நம் ஆரோக்கியத்துக்கான வாசலை விசாலமாகத் திறந்து வைக்கும். கொஞ்சம் உழைக்கத் தயாராக இருந்தால், வீட்டு மாடியிலேயே மரங்களைக்கூட வளர்க்கலாம்.

இருக்கிற கடுமையான தண்ணீர் பிரச்சினையில் செடி, கொடிகள் வளர்த் தண்ணீருக்கு எங்கே போவது என்ற கேள்வி எழுவது இயல்புதான். வீட்டின் அன்றாட வேலைகளுக்குப் பயன்படும் நீரைச் சரியான முறையில் முறைப்படுத்தி, அந்த நீரைச் செடிகளுக்கு ஊற்றலாம்.

மேலும், பாத்திரங்கள் கழுவிய மற்றும் துணிகள் துவைத்த சோப்பு நீரில் உள்ள அமிலத்தன்மையைக் குறைப்பதன் மூலம் மண் வளம் பாதிக்கப்படாமலும் பாதுகாக்கலாம். கழிவு நீர் வெளியேறும் இடத்தில் சிறுசிறு கூழாங்கற்களைப் பதித்து, அருகில் கல்வாழை, சேம்புச் செடிகளை வளர்த்தால், மண்ணில் அமிலத்தன்மை மட்டுப்படும்' என்று முடிக்கிறார் இந்திரகுமார்.

இயற்கையைப் பாதுகாக்க நம்மால் காடுகளை உருவாக்க முடியவில்லை என்றாலும் பரவாயில்லை, கிடைக்கும் இடத்தில் செடிகொடிகளையாவது வளர்க்கலாமே!

நன்றி தமிழ் இந்து
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum