Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
வாழ்க்கையில் முன்னேற சில வழிகள்
Page 1 of 1 • Share
வாழ்க்கையில் முன்னேற சில வழிகள்
வாழ்க்கையில் முன்னேற சில வழிகள்
Posted by Senduran Ravikumar
http://sendurangrsp.blogspot.in/2012/12/blog-post_27.html
நாம் எல்லோரும் ஒரு காரியத்தில் இறங்கினால் அதில் வெற்றி பெற வேண்டும் என்று தான் நினைக்கின்றோம் . ஆனால், எல்லோருக்கும் வெற்றி கிடைக்கிறதா ? இல்லையே . வெற்றியையும், தோல்வியையும் சமமாக மதிக்கும் பண்பும் வேண்டும் . தோல்வி தான் வெற்றியின் முதல் படி . அப்படி இருக்கும் போது நாம் என்ன செய்தால் , எப்பிடி செய்தால் வெற்றி பெறலாம் என்பதனை நாம் சிந்திக்கின்றோமா ?
ம்ம்ம் நாம் வெற்றி பெற என்ன வழிகள் உண்டு ? எப்பிடி நடந்தால் வெற்றி கிடைக்கும் ? வெற்றி பெறுவதற்க்கு என்ன வழிகள் உண்டு என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் .
நீங்கள் எதைச் செய்கிறீர்களோ அதை வெற்றிகரமாகச் செய்வது என்பதை நோக்கி நகர நகர சாதனை என்பதே சுலபமான வேலையாகி விடுகிறது. நாம் நமது தவறுகளை ஒப்புக்கொள்ளும் தைரியமும் , அதை திருத்திக் கொள்வதற்க்கான பலனும் தான் வெற்றிக்கான வழிகள் ஆகும் .எமக்கு வெற்றியைவிட தோல்விதான் அதிகப் படிப்பினைகளைச் சொல்லிக் கொடுக்கிறது.
காலம் பொன் போன்றது, கடமை கண் போன்றது. காலத்தை வீணாக்காமல் இருக்க வேண்டியதன் அவசியத்தை உணர வேண்டும் . வெற்றிக்கான வழிகளை கண்டறிய வேண்டும் .வெற்றிக்கான வழிகளை விடாமுயற்சி, சோம்பலின்மை, தகவல் தொடர்புத்திறன், அறிவுத்திறன் போன்ற தகுதிகள் பல்வேறு விகிதத்தில் ஒன்று கலந்து வெற்றிக்கான பாதையை அமைத்துக் கொடுக்கின்றன.
புதிய புதிய தகவல்களை தேடி கொண்டு இருக்க வேண்டும் . நாம் வெற்றி பெற்று விட்டோம் என்று இருப்பது பெரிய விடயமல்ல . அதனை எவ்வாறு தக்க வைத்துக்கொள்வது என்பது தான் முக்கியமான விடயம் . அதாவது சிறந்த நடிகர் என்ற பட்டம் மட்டும் ஒரு நடிகருக்கு போதாது . அதனை அவர் காலா , காலமாக தக்க வைத்துக் கொள்ள வேண்டும் .
வெற்றிபெற விரும்புகிறவர்களுக்கு முக்கியமான இன்னொரு பண்பு, புதிய மனிதர்களையும் புதிய சூழல்களையும் தயக்கமில்லாமல் எதிர்கொள்வது. பக்கத்தில் யாராவது புதிதாகக்குடியேற வந்தால் , அவர்களாக வந்து அறிமுகம் செய்துகொள்ளும்வரை காத்திருக்காமல், நீங்களாகச் சென்று அறிமுகம் செய்து கொள்வதில் தொடங்கி, முற்றிலும் அந்நியமான சூழலில் ஏற்படும் வாய்ப்புகளைக் கூச்சமில்லாமல் எதிர்கொண்டு, அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வதுவரை எத்தனையோ நிலைகளுக்கு இது பொருந்தும்.
பிறர் வருந்துமாறு செய்து பெற்றதெல்லாம் பெற்றவன் வருந்துமாறு செய்து போய் விடும். நல்வழியில் வந்தவை தற்காலிகமாக இழக்கப்பட்டாலும் பின்னர் பயன் தரும். இந்த பிரபஞ்ச உண்மையை என்றுமே மறந்து விடாதீர்கள். வெற்றி என்பது எந்த வழியில் வருகிறது என்பது மிக முக்கியம். நேர்மையற்ற வழியில் மற்றவர் வயிறெரிந்து வருவதெல்லாம் நம்மை நிம்மதியாக இருக்க என்றுமே விடாது. இதனை மனதில் கொள்ள வேண்டும் .
வெற்றிக்கான வழிகளாக வள்ளுவர் கூறுகிறார் . எண்ணத்தில் உறுதி, விடாமுயற்சி ,வேண்டிய பொருள், ஏற்ற கருவி, தக்க காலம், மேற்கொண்ட செயலின் தன்மை, உரிய இடம் ஆகிய ஐந்தினையும் குழப்பம் இல்லாமல் சிந்தித்து செயல் புரிய வேண்டும். இந்த ஐந்தில் ஒன்றில் குழப்பம் இருந்தால் கூட அது வெற்றி வாய்ப்பை பாதிக்கும். காலம் நீடித்தல், மறதி, சோம்பல், அளவுக்கு மீறிய தூக்கம் இந்த நான்கும் கெடுகின்ற இயல்புடையவர்கள் விரும்பி ஏறும் மரக்கலம் என்று சொல்கின்றார் .
நீங்கள் வெற்றி பெற இதனையும் கவனத்தில் கொள்ளுங்கள் .
எல்லோரிடனும் அன்பு செலுத்துங்கள். அக்கறை காட்டுங்கள், இவர் இப்படித்தான் என்று யாரையும் பார்த்த மாத்திரத்தில் மதிப்பிடாதீர்கள், நகைச்சுவை, நேர்மை, சமயோசிதம், இன்முகம், விட்டுக் கொடுத்தல் ஆகியவற்றைக் கடைப்பிடியுங்கள், ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவத்துடன் பிறர் குறைகளை அலட்சியப் படுத்துங்கள், ஒவ்வொருவரையும் வெவ்வேறு புதுப்புது வழிகளில் கையாளுங்கள் , ஆர்வத்துடன் அதிகமாக செயல்பட விரும்புங்கள், ஊக்கத்துடன் சுறுசுறுப்பாகச் செயல்படுங்கள், எப்போதும் பேசுவதைக் கேட்டு, பின்விளைவை யோசித்து சரியான சைகை, முகபாவத்துடன் தெளிவாகப் பேசுங்கள், உணர்வுகளை மதிக்கவும், மரியாதை கொடுக்கவும் புகழவும் கற்றுக் கொள்ளுங்கள், இனிய சொற்களை மற்றவர்களுடன் பேசும் போது பேசுங்கள் .
இவை தான் உங்களை வெற்றி பாதைக்கு இட்டு செல்லும் வழிகள் ஆகும் . இவற்றை கடைப்பிடித்து வெற்றி பெறுங்கள் . வாழ்வில் வெற்றி , வாழ்க்கைக்கு வெற்றி , புதிய வசந்தத்தின் வெற்றி என உங்கள் வாழ்வில் என்றுமே வெற்றி தான் இருக்க வேண்டும் .
என்றும் வெற்றி, எப்போதும் வெற்றி , எல்லோருக்கும் வெற்றி தான் கிடைக்க வேண்டும் என நான் வாழ்த்துகின்றேன் .
Posted by Senduran Ravikumar
http://sendurangrsp.blogspot.in/2012/12/blog-post_27.html
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: வாழ்க்கையில் முன்னேற சில வழிகள்
மிக நல்லதொரு கட்டுரை அண்ணா
மிக்க நன்றி
மிக்க நன்றி
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: வாழ்க்கையில் முன்னேற சில வழிகள்
நன்றி!
வெற்றியையும், தோல்வியையும் சமமாக மதிக்கும் பண்பும் வளர்ப்போம் .
எல்லோரிடனும் அன்பு செலுத்துவோம். அக்கறை காட்டுவோம், இவர் இப்படித்தான் என்று யாரையும் பார்த்த மாத்திரத்தில் மதிப்பிடாது, நகைச்சுவை, நேர்மை, சமயோசிதம், இன்முகம், விட்டுக் கொடுத்தல் ஆகியவற்றைக் கடைப்பிடித்து, ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவத்துடன் பிறர் குறைகளை அலட்சியப் படுத்தி, ஒவ்வொருவரையும் வெவ்வேறு புதுப்புது வழிகளில் கையாண்டு , ஆர்வத்துடன் அதிகமாக செயல்பட்டு, ஊக்கத்துடன் சுறுசுறுப்பாகச் செயல்பட்டு, எப்போதும் பேசுவதைக் கேட்டு, பின்விளைவை யோசித்து சரியான சைகை, முகபாவத்துடன் தெளிவாகப் பேசுவோம், உணர்வுகளை மதிக்கவும், மரியாதை கொடுக்கவும் புகழவும் கற்றுக் கொள்ளுவோம், இனிய சொற்களை மற்றவர்களுடன் பேசும் போது பேசுவொம். எல்லோரிடனும் அன்பு செய்வோம்.
sawmya- இளைய தளபதி
- பதிவுகள் : 2919
Similar topics
» வாழ்க்கையில் முன்னேற பத்து வழிகள்
» முன்னேற முத்தான 11 வழிகள்
» வாழ்க்கையில் முன்னேற நாம் பயன்படுத்த தவறிய வழிகள் பத்து
» வாழ்க்கையில் முன்னேற அவசியமானது....
» வாழ்க்கையில் முன்னேற இதுதான் வழியா?
» முன்னேற முத்தான 11 வழிகள்
» வாழ்க்கையில் முன்னேற நாம் பயன்படுத்த தவறிய வழிகள் பத்து
» வாழ்க்கையில் முன்னேற அவசியமானது....
» வாழ்க்கையில் முன்னேற இதுதான் வழியா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|