தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


நாம் ஏன் பிறர்க்கு உதவி செய்ய வேண்டும்?!

View previous topic View next topic Go down

நாம் ஏன் பிறர்க்கு உதவி செய்ய வேண்டும்?! Empty நாம் ஏன் பிறர்க்கு உதவி செய்ய வேண்டும்?!

Post by sawmya Tue Sep 24, 2013 5:28 pm

பிறருக்கு நன்மை செய்ய நாம் ஏன் கடமைப்பட்டுள்ளோம். நாம் மட்டும் நன்றாக இருந்தால் போதாதா? என்றே பலரும் நினைக்கின்றனர். நீயும் உருவாகு; பிறரையும் உருவாக்கு என்பது சுவாமி விவேகானந்தரின் மேன்மையான கருத்து. சுவாமிஜி மட்டுமல்ல, பல அறிஞர்கள் இதற்கான தேவையைப் பல தலைமுறைகளாகப் போதித்து வருகின்றனர்.

மாமேதையான ஆல்பர்ட் ஜன்ஸ்டீன் கூறுகிறார். சமுதாயமும் தனி மனிதனும் என்ற தலைப்பிலுள்ள அவரது எண்ணங்களின் சாரம் இது: தனிப்பட்ட நம் வாழ்க்கையை நாம் கூர்ந்து நோக்கினால், நமது பெரும்பாலான எண்ணங்களும் செயல்களும் பிற மனிதர்களின் வாழ்வைச் சார்ந்தே உள்ளதைக் காணலாம். நமது இயல்பே, கூடி வாழும் தன்மை உடையது தான். பிற மனிதர்கள் பயிராக்கிய தானியங்களையே நாம் உட்கொள்கிறோம், பிறர் நெய்த ஆடைகளையே நாம் உடுத்துகிறோம், பிறர் கட்டிய வீடுகளிலேயே நாம் வசிக்கிறோம். நாம் வாழ்வதற்கான அன்றாட அறிவும் தகவல்களும் நமது நம்பிக்கைகளும், பெரும்பாலும் பிற மனிதர்கள் மூலமே நம்முள் வியாபித்துள்ளன. இவை நம்மை வந்தடைந்ததும்கூட பிறர் காலம் காலமாக வளர்த்த மொழியின் மூலமாகத்தான்.


மொழி இல்லாமல் நமது அறிவாற்றல் என்பது மிக அற்பமாக இருந்திருக்கும். மொழியின் வளர்ச்சி இல்லை யென்றால் நாம் சிறிதே முன்னேறிய உயர்வகை விலங்கினமாக மட்டுமே இருந்திருப்போம். பிறப்பிலிருந்தே ஒரு தனிமனிதனைச் சமூகத்திலிருந்து பிரித்துத் தனியாக விட்டுவிட்டால், அவனது முதிர்ச்சியும் பக்குவமும், நாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு மோசமாக இருக்கக் கூடும். தனிமனிதன் என்பவன், அவனது எண்ணங்களும் குணங்களும் சேர்ந்த ஓர் உயிர். அந்த எண்ணம் - குணம் ஆகியவற்றின் சேர்க்கை மட்டுமே அவனைத் தனிச்சிறப்புடையவனாக மாற்றாது. மனித சமுதாயத்தின் ஓர் அங்கமாக அவன் இருப்பதால், பிறப்பு முதல் இறப்பு வரை அந்தச் சமுதாயம் அவன் எண்ணங்களையும் செயல்களையும் இயக்கி, அவனைத் தன் உந்துதலுக்கு உட்படுத்தி, அவனது குணாதிசயங்களைத் தனித்தன்மையுடன் விளங்க வைக்கிறது. இது ஆன்மிக வாழ்க்கைக்கும், ஆன்மிகத் துறை சாராத வாழ்க்கைக்கும் சமமாகப் பொருந்தும். சமுதாயத்தில் ஒரு மனிதனின் மதிப்பு, அவனது உணர்வுகளும் எண்ணங்களும் செயல்களும் எந்த அளவிற்குச் சகமனிதர்களுக்கு நன்மைபயக்கின்றன என்பதைப் பொறுத்தே கணக்கிடப்படும். மேற்கண்ட கருத்துகளைப் பார்க்கும்போது ஒரு மனிதனை நல்லவன் என்றோ தீயவன் என்றோ மதிப்பதற்கான அளவுகோல் அவன் தனது சமுதாயத்தில் பொருந்தி வாழக்கூடிய தன்மையினையே பெரிதும் சார்ந்துள்ளது என்று கூறலாமா?
அப்படிப்பட்ட ஒரு முடிவு முற்றிலும் உண்மையானதாக இருக்காது. ஆன்மிகத் துறையிலும், உலக வாழ்க்கையிலும், பண்பு நெறிகளிலும், இன்று சமுதாயம் கண்டுள்ள அளவற்ற முன்னேற்றங்கள் அனைத்தும் பல தலைமுறைகளில் திறன்மிக்க தனிமனிதர்களால் உருவாக்கப்பட்டவை. யாரோ ஒருவர் நெருப்பின் பயனைக் கண்டறிந்தார், ஒருவர் விவசாயம் செய்யத் தொடங்கினார். ஒருவர் ரயில் என்ஜினை உருவாக்கினார். தனிமனிதனால்தான் சிந்திக்க முடியும். அந்தச் சிந்தனை மூலம் சமுதாயம் முன்னேறுவதற்கான பண்புகளைக் கற்பிக்க முடியும். அந்தச் சமுதாயத்தில் உள்ள மக்கள் கடைப்பிடிக்க நெறிகளை வகுக்க முடியும். சமுதாயம் என்ற சத்தான விளை நிலம் இல்லாமல் எப்படி தனிமனிதனால் வளர்ச்சியடைய முடியாதோ, அதே போன்று, சிந்தனைத் திறன்மிக்க தனிமனிதர்கள் இல்லையென்றால், சமுதாயத்தால் முன்னேற முடியாது. எனவே, தனிமனித சுதந்திரம் இல்லாமல் சமுதாயமும், வளமான சமுதாயமின்றி தனி மனிதனும் வளர்ச்சி காண முடியாது என்பதை நாம் நன்றாக நினைவில் நிறுத்த வேண்டும். ஆகவே கண்டிப்பாக நீங்களும் உருவாக வேண்டும், பிறரையும் உருவாக்க வேண்டும்.


உதவிக்கு ஒரு கதைஒரு நாள் ஒரு எறும்பு ஒரு குளத்தில் தவறி விழுந்து விட்டது. தண்ணீரில் இருந்து கரைக்கு வர முடியாமல் அது தத்தளித்தது. இதை அக் குளக் கரையில் இருந்த மரத்திலிருந்த ஒரு புறா கவனித்தது. அது எறும்புக்கு உதவி செய்ய எண்ணி மரத்திலிருந்து ஒரு இலையைப் பிடுங்கி எறும்பின் அருகில் போட்டது. இலை தண்ணீரில் மிதந்தது. அந்த இலையின் மேல் ஏறி எறும்பும் கரை சேர்ந்து உயிர் பிழைத்தது. தன்னைக் காப்பாற்றிய புறாவிற்கு மனதினுள் நன்றி சொல்லிக் கொண்டது.


பின்னர் ஒரு நாள் அந்தப் புறா மரத்தில் இருக்கும் போது ஒரு வேடன் அதைக் கண்டான். பசியால் உணவு தேடிக் கொண்டிருந்த அவ் வேடன், அதைக் கொல்ல எண்ணி தன் அம்பு-வில்லை எடுத்துக் குறி பார்த்தான். வேடன் குறி பார்ப்பதை அந்தப் புறா கவனிக்க வில்லை. இதை எறும்பு கண்டது. தன்னைத் தண்ணீரிலிருந்து காப்பாற்றிய புறாதான் அது என்பதை அந்த எறும்பு உணர்ந்தது. உடனே வேகமாக ஓடிப் போய் வேடனின் காலில் கடித்தது. வேடன் அலறியபடி காலைக் குனிந்து பார்த்தான். இந்தச் சத்தத்தைக் கேட்டுப் புறா திரும்பிப் பார்த்தது. தன்னைக் கொல்ல முயன்ற வேடனைக் கண்டது. உடனடியாக மரத்தை விட்டுப் பறந்தது. பறக்கும் போது, அவனைக் கடித்த எறும்பைக் கண்டது. தான் முன்னர் காப்பாற்றிய எறும்பு தன்னை இப்போது காப்பாற்றியதை நினைத்து மகிழ்ச்சியால் நெகிழ்ந்தது. ஓரறிவு உள்ள எறும்பு, புறாவுக்கே அடுத்தவருக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும் போது, ஆரறிவு படைத்த மனிதன் அவசியம் அடுத்தவருக்கு உதவி செய்தால் பின்னால் அது திரும்பக் கிடைக்கும்.





 http://www.penmai.com, தின மலர்.com
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

நாம் ஏன் பிறர்க்கு உதவி செய்ய வேண்டும்?! Empty Re: நாம் ஏன் பிறர்க்கு உதவி செய்ய வேண்டும்?!

Post by முரளிராஜா Tue Sep 24, 2013 6:09 pm

நல்லதொரு கட்டுரையை பகிர்ந்தமைக்கு நன்றி
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

நாம் ஏன் பிறர்க்கு உதவி செய்ய வேண்டும்?! Empty Re: நாம் ஏன் பிறர்க்கு உதவி செய்ய வேண்டும்?!

Post by mohaideen Tue Sep 24, 2013 6:30 pm

தர்மம் தலைகாக்கும் என்பது இதுதானோ

கதையுடன் அருமையான விளக்கம்


பதிவிற்கு நன்றி
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

நாம் ஏன் பிறர்க்கு உதவி செய்ய வேண்டும்?! Empty Re: நாம் ஏன் பிறர்க்கு உதவி செய்ய வேண்டும்?!

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Sep 24, 2013 9:07 pm

மொழி இல்லாமல் நமது அறிவாற்றல் என்பது மிக அற்பமாக இருந்திருக்கும். மொழியின் வளர்ச்சி இல்லை யென்றால் நாம் சிறிதே முன்னேறிய உயர்வகை விலங்கினமாக மட்டுமே இருந்திருப்போம்.
ஒரு வேளை அப்படி இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமோ என்று எண்ணத் தோன்றுகிறது இன்றைய நிலையைப் பார்த்தால்....
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

நாம் ஏன் பிறர்க்கு உதவி செய்ய வேண்டும்?! Empty Re: நாம் ஏன் பிறர்க்கு உதவி செய்ய வேண்டும்?!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum