தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்,காங்கேயநல்லூர்,வேலூர்

View previous topic View next topic Go down

அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்,காங்கேயநல்லூர்,வேலூர் Empty அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்,காங்கேயநல்லூர்,வேலூர்

Post by முழுமுதலோன் Wed Sep 25, 2013 7:48 am

அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்,காங்கேயநல்லூர்,வேலூர்

அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்,காங்கேயநல்லூர்,வேலூர் T_500_176

மூலவர் : சுப்பிரமணியர்
உற்சவர் : சண்முகர்
அம்மன்/தாயார் : -
தல விருட்சம் : -
தீர்த்தம் : சரவணப்பொய்கை
ஆகமம்/பூஜை : சிவாகமம்
பழமை : 500-1000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : -
ஊர் : காங்கேயநல்லூர்
மாவட்டம் : வேலூர்
மாநிலம் : தமிழ்நாடு

பாடியவர்கள்:

அருணகிரியார்

திருவிழா:

மாசியில் பிரம்மோற்ஸவம், வைகாசி விசாகம், தைப்பூசம்.

தல சிறப்பு:

அருணகிரியாரால் திருப்புகழ் பாடப்பெற்ற தலம் இது.

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி:

அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், காங்கேயநல்லூர் - 632 516. வேலூர் மாவட்டம்.

போன்:

+91- 416 - 221 2761, 94869 39198, 94438 00039.

பொது தகவல்:


இங்குள்ள மூலவரின் மறு பெயர் காங்கேயன். மூலஸ்தானத்தில் முருகன் வள்ளி, தெய்வானையுடன் திருமணக் கோலத்தில் காட்சி தருகிறார். சன்னதி முன் மண்டபத்தில் அருணகிரியார் இருக்கிறார். இவருக்கு தனி வாசலும், துவாரபாலகர்களும் இருப்பது வித்தியாசமான அமைப்பு. இங்கு வருபவர்கள் முதலில் அருணகிரியாரை தரிசித்து விட்டு அதன்பின்பே, முருகனை தரிசிக்கிறார்கள். இங்குள்ள விநாயகர் சுந்தர விநாயகர் எனப்படுகிறார். இங்குள்ள கோபுரம் 5 நிலைகளைக் கொண்டது. பிரகாரத்தில் விநாயகர், காசி விஸ்வநாதர், விசாலாட்சி, சூரியன், நவவீரர்கள், நால்வர், சரஸ்வதி, லட்சுமி, வீரபத்திரர், நாகர், பைரவர் என பரிவார தெய்வங்கள் இருக்கின்றன. முருகனுக்கான ஸ்மித்ர சண்டிகேஸ்வரருக்கும் சன்னதி இருக்கிறது. காங்கேயனாகிய முருகன் அருளும் தலம் என்பதால் இவ்வூர், "காங்கேய நல்லூர்' என்றழைக்கப்படுகிறது.


முருக பக்தரான வாரியாரின் தந்தை மலையதாசர், இக்கோயிலுக்கு கோபுரம் கட்ட விரும்பினார். திருவண்ணாமலை சென்ற அவர், திருப்புகழ் சுவாமி என்றழைக்கப்பட்ட லோகநாதரைச் சந்தித்தார். கோபுரம் கட்ட உதவும்படி கேட்டார். அவர் அடுத்த வருடம் வரும்படி சொல்லி விட்டார். மறு வருடமும் அவரை சந்திக்கச் சென்றார் மலையதாசர். அப்போது திருப்புகழ் சுவாமி விபூதியும், ஒரு ரூபாயும் கொடுத்து திருப்பணியை துவங்கும்படி கூறினார். மலையதாசர் திருப்பணியை துவங்க, கோபுரம் விரைவில் கட்டப்பட்டது. இக்கோயிலுக்கு எதிரில் வாரியார் அதிஷ்டானம் இருக்கிறது.





பிரார்த்தனை

செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் செவ்வாய்க் கிழமைகளில், முருகனுக்கு செவ்வரளி மாலை அணிவித்து, தயிர்சாத நிவேதனம் படைத்து வேண்டிக்கொள்கிறார்கள்.

நேர்த்திக்கடன்:

வேண்டுதல் நிறைவேறிட முருகனுக்கு விசேஷ அபிஷேகம் செய்து, வஸ்திரம் அணிவித்து நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர்.

தலபெருமை:

சித்திரை பிறப்பின்போது, முருகன் வடக்கு கோபுரத்தின் கீழ் எழுந்தருளி காட்சி தருகிறார். வடக்கு, குபேர திசை என்பதால் அன்று வடதிசை நோக்கிய முருகனைத் தரிசித்தால் வருடம் முழுதும் ஐஸ்வர்யம் நிலைத்திருக்கும் என்பதன் அடிப்படையில் இவ்வாறு எழுந்தருளுகிறார். ஐப்பசியில் கந்த சஷ்டி விழா எட்டு நாட்கள் நடக்கிறது. சூரசம்ஹாரத்திற்கு மறுநாள் முருகன், தெய்வானை திருக்கல்யாணம், அடுத்த நாள் முருகன், வள்ளி திருமணம் நடக்கிறது. ஆருத்ரா தரிசனத்தின்போது இங்குள்ள சண்முகருக்கு, விசேஷ அபிஷேகம் செய்யப்பட்டு புறப்பாடாகிறார்.

அருணகிரியார் இத்தலம் வந்தபோது, சுவாமிக்கு தயிர் சாத நிவேதனம் படைத்து பூஜை செய்து வழிபட்டார். அப்போது ஆறு அடியார்கள் அங்கு வந்தனர். அருணகிரியார், முருகனுக்கு படைத்த தயிர் சாதத்தை, அவர்களுக்கு படைத்தார். முருகனே இவ்வாறு ஆறு அடியார்களாக வந்ததாக ஐதீகம். இதன் அடிப்படையில் தற்போதும் இத்தலத்தில், முருகனுக்கு உச்சிக்கால பூஜை முடிந்ததும் ஆறு அடியவர்களுக்கு அன்னதானம் செய்யப்படுகிறது.

தல வரலாறு:

தேவர்களுக்கு அசுரர்களால் துன்பம் உண்டாகவே, தங்களைக் காத்தருளும்படி சிவனிடம் வேண்டினர். சிவன் தன் நெற்றிக்கண்ணிலிருந்து ஆறு பொறிகளை உண்டாக்கினார். அதனை வாயு, அக்னி இருவரும் கங்கையில் சேர்த்தனர். அதிலிருந்து ஆறு குழந்தைகள் உருவாகி, கங்கையிலிருந்த தாமரை மலர்களில் தவழ்ந்தனர். அக்குழந்தைகளை கார்த்திகைப் பெண்கள் வளர்த்தனர். பின்பு பார்வதி, ஆறு குழந்தைகளையும் ஒன்றாக்கினாள். முருகன் ஆறு முகங்களுடன் காட்சி தந்தார். கங்கையில் குழந்தையாக தவழ்ந்ததால் முருகனுக்கு, "காங்கேயன்' என்ற பெயர் ஏற்பட்டது. இப்பெயரிலேயே இத்தலத்தில் முருகன் அருளுகிறார்.

சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்: அருணகிரியாரால் திருப்புகழ் பாடப்பெற்ற தலம் இது.

தினமலர்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்,காங்கேயநல்லூர்,வேலூர் Empty Re: அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்,காங்கேயநல்லூர்,வேலூர்

Post by kanmani singh Wed Sep 25, 2013 12:16 pm

என் பிரியமான கடவுள் முருகப்பெருமான்! அவர் குடியிருக்கும் எல்லா ஆலயமும் அழகுதான், அருள்கோட்டைதான்!


கண்மணி சிங்
avatar
kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4190

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
» திருவல்லம் அருள்மிகு வில்வநாதேஸ்வரர் திருக்கோயில், வேலூர்
» வாழைப்பந்தல் அருள்மிகு பச்சையம்மன் திருக்கோயில், வேலூர்
» கீழ்ப்புதுப்பேட்டை அருள்மிகு தன்வந்திரி பகவான் திருக்கோயில், வேலூர்
» கீழ்ப்புதுப்பேட்டை அருள்மிகு தன்வந்திரி பகவான் திருக்கோயில், வேலூர்
» கீழ்ப்புதுப்பேட்டை அருள்மிகு தன்வந்திரி பகவான் திருக்கோயில், வேலூர்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum