தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சில ஜென் கதைகள்

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

சில ஜென் கதைகள்  Empty சில ஜென் கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Sep 25, 2013 3:25 pm

யாருக்கும் பயப்படவேண்டிய அவசியம் இல்லை..!

ஒரு நள்ளிரவு..!

ஜென் குரு தன் அறையில் அமர்ந்து எழுதிக்கொண்டிருந்தார்.

திடீரென அந்த அறைக் கதவைத்தள்ளிக்கொண்டு திருடன் உள்ளே நுழைந்தான். அவன் கையில் பளபளக்கும் கத்தி இருந்தது. அவன் அதை நீட்டிக்கொண்டே ஜென் குருவை நெருங்கினான்.

நிமிர்ந்து அவனை அமைதி தவழப்பார்த்த ஜென் குரு ”உனக்கு என்ன வேண்டும்? என் உயிரா? அல்லது பணமா?” என்று கேட்டார்.

அதைக்கேட்ட திருடன் திகைத்தான்.

அவரை மிரட்டிப் பணம் பறிக்கலாம் என்பதற்கு வாய்ப்பே இல்லாமல் ‌‌போய்விட்டதை எண்ணி அவன் சற்று வருந்தினான்.

”சரி போகட்டும்! எனக்குப்பணம்தான் வேண்டும்...!” என்றான் திருடன்.

ஜென் குரு சிறிது கூட சஞ்சலப்படாமல் தன்னிடமிருந்த பணத்தை எடுத்து அவனிடம் கொடுத்துவிட்டுத் தொடர்ந்து எழுதத்தொடங்கினார்.

அமைதியான அவரது செயல் திருடனின் மனதை என்னவோ செய்தது.

ஆனாலும் அவன் பணத்துடன் வெளியே போவதையே விரும்பினான்.

அவன் அறையின் வாயிலை நோக்கி நடந்தபோது, ”தம்பி..! நீ வெளியே போகும்போது அறைக் கதவை சாத்திவிட்டுப் போ..!” என்றார் ஜென் குரு.


திருடன் ஒரு கணம் நின்று திரும்பி அவரைப் பார்ததான். பிறகு அறைக்கதவைச் சாத்திவிட்டு வெளியேறினான்.

மிக விரைவிவேயே பலநாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்ற முதுமொழிப்படி அவன் காவலர்களிடம் பிடிப்பட்டான்.

அவன் காவல் அதிகாரிகளிடம், நீண்ட நாள் தன் மனதை அரித்துக்கொண்டிருந்த ஒரு விஷயத்தைச் சொல்லத் தொடங்கினார்.

”ஐயா...! திருடுவதென் தொழில். கத்தியைப் பார்த்த உடனேயே பலரும் பயத்தால் அலறிப்பார்த்திருக்கிறேன். பலர் மிரட்டலுக்குப் பின்னே பணிந்திருக்கிறார்கள்.

”ஆனால் எதற்குமே பயப்படாத ஒரு குருவை என் வாழ்நாளில் ஒரு முறை பார்த்தேன். அந்த பயங்கரமான சூழ்நிலையிலும் அவர் எப்படி அமைதியைக் கடைப்பிடித்தார். எப்படி பயப்படாமல் இருந்தார் என்பதை இப்போதும் ஆச்சரியத்துடன் எண்ணிப்பார்க்கிறேன். “உயிர் வேண்டுமா? பணம் வேண்டுமா..?” என்று அவர் அன்று கேட்டது என் இதயத்தையே அறுத்துக் கூறு போட்டுவிட்டது.”

”நிச்சயம் அவர் ஒரு மகானாகத்தான் இருக்க வேண்டும். நீங்கள் என் உடலுக்குத்தான் தண்டனை தரமுடியும். ஆனால் அவர் என் உள்ளத்துக்கே தண்டனை கொடுத்துவிட்டார் என்னை மனிதனாக்கி விட்டார்.”

”நான் விடுதலை பெற்றதும், அவரிடம்தான் சரணாகதி அடைந்து, வாழ்நாள் முழுவதும் அவருக்குச் வேவை செய்யப்போகிறேன்!” என்றான்.

ஒரு சந்தர்ப்பத்தில் இந்த விஷயத்தை கேள்விப்பட்ட ஜென் குரு மிகவும் மகிந்தாராம்.

அச்சத்தில் இருந்தால்தான் எல்லா தவறுகளும், எல்லா துன்பங்களும் வந்துச்சேர்கிறது. அச்சத்தை தவிர்த்து விடுவோம் பிறகு யாருக்கும் பயப்படவேண்டிய அவசியம் இல்லாமல் போய்விடும்.

ஜென் கதைகள்

நன்றி ;கவிதை வீதி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சில ஜென் கதைகள்  Empty Re: சில ஜென் கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Sep 25, 2013 3:31 pm

ஏன் இந்த கோவம்..?

70 வயதைக் கடந்தஜென்குரு ஒருவர் இருந்தார். அவர் 30 வயது வாலிபனைப்போல் திடகாத்திரமாகவும் ஆரோக்கியமாகவும் இருந்தார். ஒரு நோய் நொடி இல்லை.

எந்த வேலையாக இருந்தாலும் சுறுசுறுப்பாகத் தானே செய்து கொள்வார். இயற்கையிலேயே அவருக்கு ஒரு கால் சற்று ஊனம். அதனால் சிறிது சாய்ந்து நடப்பார். ஆனாலும் அந்த ஊனத்தை எண்ணி அவர் கவலைப்பட்டதே கிடையாது.

ஒரு நாள்...
தனக்குத் தேவையான காய், கறி, பழங்கள் வாங்குவதற்காக ஒரு பையை எடுத்துக்கொண்டு கடைவீதிக்குச் சென்றார்.
அப்போது..
எங்கோ வேடிக்கை பார்த்தபடி வேகமாக வந்த ஒரு வாலிபன் அவர் மீது மோதிவிட்டான்.
தள்ளாடிய ஜென் குரு அப்படியே நின்றுவிட்டார். ஆனால் வாலிபன் நிலைதடுமாறிக் கீழே விழுந்துவிட்டான். அவன் கைகளிலும் முழங்காலிலும் சிறிது அடிப்பட்டுவிட்டது. அந்த வலியின் காரணமாக அவனுக்குக் குருவின் மேல் கோவம் வந்தது.



வேகமாக எழுந்து அவன், ”ஏ கிழவா! அறிவில்லையா உனக்கு..? இப்படித்தான் வேகமாக வந்து என் மீது மோதுவது? கால்தான் சரியில்லையே, பேசாமல் வீட்டில் முடங்கிக்கிடக்க வேண்டியதுதானே. கடை வீதியில் உனக்கென்ன வேலை..?” என்று காட்டுக்கத்தல் போட்டான்.


ஜென் குரு அமைதியாக அவனைப் பார்த்தார்.
“நண்பனே..! எனக்குக் கால் சரியில்லை. அதனால் உன் மீது நான்தான் மோதிவிட்டேன். தவறு என்மீதுதான். ஆகவே உன்னிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்..”
ஒரு வேளை உன்மேல்தான் தவறு என்பதை நீ உணர்ந்தால் அதைப்பற்றி கவலைப்படாதே. தொடர்ந்து அதையே நினைத்து உன்னை வருத்திக் கொள்ளாதே. அது உன் உடலைத்தான் கெடுக்கும். அது பெரிய துன்பத்தில் உன்னைக் கொண்டுபோய்ச் சேர்க்கும்..!” என்றார் ஜென் குரு அமைதியான குரலில்.



அவரது பேச்சு அவனை உலுக்கிவிட.. ”ஐயா..! மகானே..! நீங்கள்தான் என்னை மன்னிக்க வேண்டும்!” என்று சொல்லியபடி அவரது கால்களில் விழுந்தான்..
புன்னகைத்த ஜென் குரு அந்த இடத்தை விட்டு அகன்றார்.

மக்களே கோவமும், ஆத்திரமும் மனிதனை முட்டாளாக்கிவிடுகிறது. உடல்நலம் கெடுவதற்கும் இதுதான் காரணம். கோவத்தை குறைத்துக்கொள்வோம்...! வாழ்க்கை நல்லதாய் இருக்கும்.

நன்றி கவிதை வீதி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சில ஜென் கதைகள்  Empty Re: சில ஜென் கதைகள்

Post by sawmya Wed Sep 25, 2013 3:45 pm

அற்புதமான கதைகள். பகிர்வுக்கு மிக்க நன்றி!புன்முறுவல்
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

சில ஜென் கதைகள்  Empty Re: சில ஜென் கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 18, 2013 3:48 pm

விடுதி
************
மன்னன் ஒருவன்,ஒரு ஜென் குருவை தன அரண்மனைக்கு வந்து தன்னுடன் தங்கும்படி அழைத்தான்.அதற்கு சம்மதித்த குரு மறுநாள் அரசனை சந்தித்தார்.''சில நாட்கள் உன் விடுதியில் தங்கிப்போக வந்துள்ளேன்,''என்றார் அவர்.

மன்னனுக்கோ அதிர்ச்சி.அவன் குருவிடம் வருத்தத்துடன் கேட்டான் ,''குருவே,இது என் அரண்மனை.இதை விடுதி என்று சொல்கிறீர்களே?''குரு கேட்டார்,''மன்னா ,உனக்கு முன்னாள் இந்த அரண்மனையில் யார் இருந்தார்கள்?''மன்னன் தன தந்தையார் என்று சொல்ல,அதற்கு முன் யார் இருந்தார்கள் என்று குரு கேட்டார்.

அரசனும் தன பாட்டனார் என்றான்.குரு,''உன் தந்தை,பாட்டனார் எல்லாம் இப்போது எங்கே இருக்கிறார்கள்?''என்று கேட்டார்.மன்னனும்,''அவர்கள் இறந்து மேலோகம் சென்று விட்டார்கள்,''என்று சொன்னான்.அதன் பின் குரு கேட்டார்,''உனக்குப் பிறகு இந்த அரண்மனையில் யார் இருப்பார்கள்?''அரசன் சொன்னான்,''என் மகன்,அதன் பின் என் பேரன்.''குரு,''ஆக,உன் பாட்டனார் சில காலம் இருந்தார்.

பிறகு போய் விட்டார்.அதன்பின் உன் தந்தையார் இருந்தார்.பிறகு போய் விட்டார்.இப்போது நீ இருக்கிறாய்.நீயும் ஒரு நாள் மேலுலகம் போய் விடுவாய்.உனக்குப் பின் உன் மகன் இங்கு வாசிப்பான்.அவன் போனபின் உன் பேரன் தங்கியிருப்பான்.

யாரும் இங்கே நிரந்தரமாக இருக்கப் போவதில்லை.இப்படி ஒவ்வொருவரும் சில காலம் மட்டும் தங்கிப் போகும் இடத்தை விடுதி என்று சொன்னதில் என்ன தவறு?''என்று கேட்டார்.

நன்றி இருவர் உள்ளம் தளம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சில ஜென் கதைகள்  Empty Re: சில ஜென் கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 18, 2013 3:53 pm

மரணம்
*********
ஜென் ஞானி ஒருவரின் மனைவி இறந்து விட்டார்.துக்கம் விசாரிக்க ஊரே திரண்டு வந்திருந்தது.எல்லோர் முகத்திலும் வருத்தம்,கண்ணீர்.

ஆனால் ஞானியோ கைகளால் தாளம் போட்டபடி பாடிக் கொண்டிருந்தார்,சர்வசாதாரணமாக!வந்தவர்களுக்கு அதிர்ச்சி.ஒருவன் துணிந்து கேட்டான்,''குருவே,நீங்களே இப்படி செய்யலாமா?என்ன இருந்தாலும் இவ்வளவு காலம் உங்களுடன் வாழ்ந்த உங்கள் மனைவி இறந்திருக்கும்போது,நீங்கள் கவலையின்றி பாடிக் கொண்டிருக்கிறீர்களே?''ஞானி சொன்னார்,''பிறப்பில் சிரிக்கவோ.இறப்பில் அழுவதற்கோ என்ன இருக்கிறது?பிறப்பும் இறப்பும் நம் கையில் இல்லை.

என் மனைவிக்கு முன்பு உடலோ,உயிரோ இல்லை.பிறகு உயிரும் உடலும் வந்தன.இப்போது இரண்டும் போய்விட்டன.இடையில் வந்தவை இடையில் போயின.இதில் வருத்தப்படுவதற்கு என்ன இருக்கிறது?''

நன்றி இருவர் உள்ளம் தளம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சில ஜென் கதைகள்  Empty Re: சில ஜென் கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 18, 2013 3:58 pm

பணிவு
***********
அசோகா சக்கரவர்த்தி தன ரதத்தில் பயணம் செய்து கொண்டிருந்தபோது எதிரே ஒரு புத்தத்துறவி வந்து கொண்டிருப்பதைக் கவனித்ததும் ரதத்திலிருந்து இறங்கி வந்து அவர் காலில் விழுந்தார்.அதைக் கவனித்த அவரது தளபதிக்கு மாமன்னர் ஒரு பரதேசியின் காலில் விழுவதா என்று வருத்தம் ஏற்பட்டது.

அதை அரண்மனைக்கு வந்ததும் மன்னரிடமே வெளிப்படுத்தினார்.மன்னரோ அவரது வினாவுக்கு விடையளிக்காமல்,ஒரு ஆட்டுத்தலை,ஒரு புலித்தலை,ஒரு மனிதத்தலை மூன்றும் உடனே வேண்டும் என ஒரு வினோதமான ஆணையிட்டார்.

மூன்று தலைகளும் கொண்டு வரப்பட்டன.மன்னர் மூன்றையும் சந்தையில் விற்றுவரச் சொன்னார்.ஆட்டுத்தலை உடனே விலை போயிற்று.புளித்தலையை வாங்கப் பலரும் யோசித்தனர்.இறுதியில் ஒரு வேட்டைக்காரர் தன வீட்டு சுவற்றில் பாடம் பண்ணி தொங்கவிட வாங்கிச் சென்றார்.

ஆனால் மனிதத் தலையைக் கண்டு எல்லோரும் அஞ்சிப் பின் வாங்கினர்.முகம் சுழித்து ஓடினர்.ஒரு காசுக்குக் கூட யாரும் வாங்க முன்வரவில்லை.விபரங்களை மன்னரிடம் சொன்னபோது மனிதத் தலையையாருக்காவது இலவசமாகக் கொடுத்துவிட சொன்னார்.இலவசமாக வாங்கக் கூட யாரும் தயாராயில்லை.

இப்போது அசோகா மன்னர் சொன்னார்,''தளபதியே,மனிதன் இறந்து விட்டால் அவன் உடல் ஒரு காசு கூடப் பெறாது.இருந்தும் இந்த உடல் உயிர் உள்ளபோது என்ன ஆட்டம் போடுகிறது?இறந்த பிறகு நமக்கு மதிப்பில்லைஎன்பது நமக்கு தெரிகிறது.உடலில் உயிர் இருக்கும்போதே,தம்மிடம் எதுவும் இல்லை என்று உணர்ந்தவர்கள் ஞானிகள்.

அத்தகைய ஞானிகளை பாதத்தில் விழுந்து வணங்குவதில் என்ன தவறு இருக்க முடியும்?''தளபதிக்கு இப்போது புரிந்தது.

நன்றி ;இருவர் உள்ளம் தளம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சில ஜென் கதைகள்  Empty Re: சில ஜென் கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Nov 21, 2013 3:57 pm

மூன்றாம் பதிப்பு
*****************
டெட்சுகன் என்றொரு ஜென் ஞானி இருந்தார்.அவர் ஜென் சூத்திரங்களை எல்லாம் சீன மொழியிலிருந்து ஜப்பான் மொழியில் மொழி பெயர்க்கக் கருதி, அதற்கு ஆகும் செலவை சரிக்கட்ட ஜப்பான் முழுவதும் சென்று பலரிடமு நிதி உதவி கேட்டார்.அனைத்துத் தரப்பினரும் உதவி அளித்தனர்.ஆனால் தேவையான பணம் திரட்ட பத்து ஆண்டுகள் ஆயிற்று.மொழி பெயர்ப்பு வேலையை ஆரம்பிக்க இருந்த தருணத்தில் நதி ஒன்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு ஆயிரக்கணக்கான மக்கள் வீடு வாசல்இழந்துதுன்புற்றனர் .டெட்சுகன் சேர்த்த பணம் முழுவதையும் பாதிக்கப்பட்ட மக்களுக்காக
செலவழித்தார்.

மீண்டும் பல ஆண்டுகள் மொழி பெயர்ப்புக்காக நிதி திரட்டினார்.இரண்டாம் முறை வேலை ஆரம்பிக்கும்போது நாடெங்கும் கொள்ளை நோய் பரவி ஏராளமான மக்கள் துன்புற்றதால் மறுபடியும் சேர்த்த பணம் எல்லாவற்றையும் அந்த மக்களுக்காக செலவழித்தார்.

பின்னரும் அவர் மனம் தளர்வடையாமல் மொழி பெயர்ப்பு வேலைகளுக்காக பணம் திரட்ட ஆரம்பித்தார்.சுமார் இருபது ஆண்டுகள் பணம் திரட்டி தான் நினைத்தபடி அனைத்துஜென் சூத்திரங்களையும் மொழி பெயர்த்து முடித்து விட்டார்.முதல் பிரதியை அவர் ஒரு மடாலயத்தில் மக்களின் பார்வைக்காக வைத்தார்.அதனைப் பார்வையிட்ட ஜென் துறவிகள்,''உண்மையில் இது டெட்சுகன் வெளியிட்ட மூன்றாவது பதிப்பாகும்.இதைவிட நாம் கண்ணால் பார்க்க முடியாத முதல் இரண்டு பதிப்புகளும் மிக அற்புதமானவை,''என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.

நன்றி இருவர் உள்ளம் தளம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சில ஜென் கதைகள்  Empty Re: சில ஜென் கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Nov 21, 2013 4:00 pm

இறைவனுக்கு நன்றி
********************************
ஜென் குரு ஒருவர் தன சீடர்களுடன் ஒரு பாலைவனப் பகுதியில் சென்று கொண்டிருந்தார்.கடும் வெயில்.ஒரு மரம் கூட இல்லை.ஒதுங்குவதற்கு எங்கும் இடமில்லை.நீர்நிலை எதுவும் தென்படவில்லை.

குடிக்க தண்ணீர் கூடக் கிடைக்காததால் சீடர்கள் அனைவரும் சோர்வடைந்தனர்.அதைப் பார்த்த குரு மாலை நேரம் ஆகிவிட்டதால் ஒரு இடத்தில் தங்கலாம் என்று சொன்னார்.உடனே சீடர்கள் அனைவரும் சுருண்டு படுத்து

விட்டனர்.குரு,உறங்கச் செல்லும் முன் தியானம் செய்வது வழக்கம்.அன்றும் அவர் மண்டியிட்டபடியே,''இறைவா,தாங்கள் இன்று எமக்களித்த அனைத்திற்கும் நன்றி.''என்று கூறி வணங்கினார்.பசியில் இருந்த ஒரு சீடனுக்கு உடனே கடுமையான கோபம் வந்தது.எழுந்து உட்கார்ந்த அவன்,

''குருவே இன்று இறைவன் நமக்கு ஒன்றுமே அளிக்கவில்லையே?'' என்றான்.சிரித்துக்கொண்டே குரு சொன்னார்,''யார் அப்படி சொன்னது?இறைவன் இன்று நமக்கு அருமையான பசியைக் கொடுத்தார்.அற்புதமான தாகத்தைக் கொடுத்தார்.அதற்காகத்தான் அவருக்கு நன்றி செலுத்தினேன்.

''இன்பமு துன்பமும் வாழ்க்கை என்னும் நாணயத்தின் இரு பக்கங்கள் என்பதை ஞானிகள் உணர்ந்திருக்கின்றனர்.

நன்றி ;இருவர் உள்லம்தளம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சில ஜென் கதைகள்  Empty Re: சில ஜென் கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Nov 21, 2013 4:04 pm

ஒப்பீடு
**************
ஒரு பேராசிரியர் ஒரு ஜென் ஞானியிடம் சென்று,''நான் ஏன் உங்களைப்போல இல்லை?உங்களைப்போல என்னால் ஏன் அமைதியாய் இருக்க முடியவில்லை?உங்களுக்கு இருக்கும் அறிவு எனக்கு ஏன் இல்லை?''என்று கேட்டார்.ஞானி சொன்னார்,

''இன்று முழுவதும் என்னுடன் இருந்து என்னை கவனித்து வா.எல்லோரும் சென்றவுடன் உன் கேள்விக்கு நான் பதில் சொல்கிறேன்.''அன்று முழுவதும் ஏராளமான மக்கள் ஞானியை வந்து தரிசித்து சென்றனர்.மாலையில் எல்லோரும்போன பின் பேராசிரியர் ஞானியிடம் தன கேள்விக்கு பதில் சொல்ல ஞாபகப் படுத்தினார்.அன்று பௌர்ணமி.முழு நிலவு வானில் அழகுடன் ஜொலித்தது.ஞானி கேட்டார்,''இன்னுமா உனக்கு பதில் கிடைக்கவில்லை?நான் மக்களுக்கு சொன்ன பதில்களைக் கவனித்திருந்தால் உனக்கு பதில் கிடைத்திருக்கும்.

பரவாயில்லை வெளியில் வா.இந்த அமைதியான தோட்டத்தில் முழு நிலவின் அழகினைப் பார்.இந்த நிலவொளியில் இந்த நீண்ட மரமும் அதன் அருகில் உள்ள செடியும் எவ்வளவு அழகாய் இருக்கின்றன?''பேராசிரியர் பொறுமை இழந்து தன கேள்விக்கு பதில் சொல்லுமாறு கேட்டார்.ஞானி சொன்னார்,''உன் கேள்விக்கு பதில் சொல்கிறேன்.

இந்த நீண்ட மரமும் அதன் அருகில் உள்ள செடியும் வெகு நாட்களாக என் தோட்டத்தில் இருக்கின்றன.ஆனால் ஒரு நாளும்.இந்த செடி தான் ஏன் இந்த பெரிய மரம் போல இல்லை என்று மரத்திடம் கேட்டதில்லை.அதேபோல மரமும் அந்த செடியிடம் தான் ஏன் செடிபோல இல்லை என்று கேட்டதில்லை.

மரம்,மரம்தான்.செடி,செடிதான்.மரம் தான் மரமாயிருப்பதிலும்,செடி,தான் செடியாயிருப்பதிலும் மகிழ்ச்சியுடன்தான் இருக்கின்றன.''
ஒப்பீடுதான் மனிதனின் அனைத்து பிரச்சினைகளுக்கும் மூல காரணம்.

நன்றி இருவர் உள்ளம் தளம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சில ஜென் கதைகள்  Empty Re: சில ஜென் கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Nov 21, 2013 4:07 pm

ஆயுட்காலம்
*******************
புத்தர் தன சீடர்களிடம்,''ஒரு மனிதனின் ஆயுட்காலம் எவ்வளவு?''என்று கேட்டார்.ஒரு சீடர் எழுபது என்றார்,இன்னொருவர் அறுபது என்றார்,மற்றொருவர் ஐம்பது என்றார்.அனைத்துமே தவறு என்று புத்தர் சொல்ல,சரியான விடையை அவரே சொல்லும்படி அனைத்து சீடர்களும் வேண்டினர்.புத்தர் புன் முறுவலுடன் சொன்னார்,

''ஒரு மூச்சு விடும் நேரம்,'' சீடர்கள் வியப்படைந்தனர்.''மூச்சு விடும் நேரம் என்பது கணப் பொழுதுதானே?'' என்றனர்.''உண்மை.மூச்சு விடும் நேரம் கணப்பொழுதுதான்.ஆனால் வாழ்வு என்பது மூச்சு விடுவதில்தான் உள்ளது.ஆகவே ஒவ்வொரு கணமாக வாழ வேண்டும்.

அந்தக் கணத்தில் முழுமையாக வாழ வேண்டும்.''என்றார் புத்தர்.
பெரும்பாலானவர்கள் கடந்த கால மகிழ்ச்சியிலே மூழ்கியிருக்கிறார்கள். பலர் எதிர் காலத்தைப் பற்றிய பயத்திலும்,கவலையிலும் வாழ்கிறார்கள். நிகழ காலம் மட்டுமே நம் ஆளுகைக்குட்பட்டது.
அதை முழுமையாக வாழ வேண்டும்.

நன்றி இருவர் உள்ளம் தளம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சில ஜென் கதைகள்  Empty Re: சில ஜென் கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Nov 21, 2013 4:10 pm

தகப்பன்
**************
ஜென் மாஸ்டர் ஹாக்யுன் அவர்களினால் கவரப்பட்ட ஒரு வியாபாரி அவருக்கு அவ்வப்போது நிதிஉதவிகளையும் பரிசுகளையும் கேட்காமலே கொடுத்து வந்தான்.அவனுக்கு ஒரு பெண் இருந்தாள்.அவள் அவ்வீட்டு வேலைக்காரனை குடும்பத்தினருக்குத் தெரியாமல் காதலித்து ஒரு குழந்தையும் பெற்றுவிட்டாள்.

குழந்தையின் தகப்பன் யார் என்று கோபத்துடன் வியாபாரி கேட்டபோது பயந்துபோன அந்தப்பெண் ஹாக்யுனைக் கை காட்டிவிட்டாள்.அதிர்ந்துபோன வியாபாரி,கோபத்துடன் குழந்தையைக் கையில் எடுத்துக் கொண்டு ஹாக்யுனிடம் சென்று அவரை எவ்வளவு தரக்குறைவாகப் பேசமுடியுமோ,அவ்வளவு பேசிவிட்டு,குழந்தையை அவர் மடியில் விட்டுவிட்டு வந்துவிட்டான்.

ஹாக்யுன் எந்தவித எதிர்ப்பும் காட்டவில்லை.பதில் எதுவும் பேசவுமில்லை.அவர் அந்தக் குழந்தையை எடுத்து தன குழந்தைபோலவே கொஞ்சினார்.இதைப் பார்த்த ஊர் மக்களும் ஹாக்யுன் தவறு செய்திருப்பார் என்ற முடிவுக்கு வந்துவிட்டனர்.இப்போது ஊரில் யாரும் அவரை மதிப்பதில்லை ஆனால்அது அவரை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை.

ஒரு நாள் கடுங்குளிரில் குழந்தையைத் தோளில் வைத்துக் கொண்டு ஒவ்வொரு வீடாக சென்று உணவுக்கு பிச்சை எடுத்துக் கொண்டிருந்தார்.அவர் அந்த வியாபாரியின் வீட்டு வழியே சென்று கொண்டிருந்தபோது இக்காட்சியை ஜன்னல் வழியே பார்த்துக் கொண்டிருந்த வியாபாரியின் மகளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.உடனே தன தந்தையிடம் சென்று நடந்த உண்மைகளை அப்படியே சொல்லிவிட்டாள்.

வியாபாரிக்கோ மிகுந்த வருத்தம் ஏற்பட்டது ஒன்றும் அறியாத ஒரு ஞானியை அவதூறுக்கு உள்ளாக்கி விட்டோமே என்று கதறினான்.நேரே அவர் இருக்கும் இடம் சென்று அவர் காலில் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து,குழந்தையை அவர் கையிலிருந்து வாங்கிக் கொண்டான்.ஹாக்யுன் கேட்டார்,''என்ன,குழந்தைக்கு வேறொரு தகப்பன் கிடைத்து விட்டானா?''

நன்றி ;இருவர் உள்ளம் தளம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சில ஜென் கதைகள்  Empty Re: சில ஜென் கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri Nov 22, 2013 9:12 pm

சொர்க்கம் நரகம்
*************************
படைத் தளபதி ஒருவன் ஜென் ஞானி ஒருவரிடம்,''அய்யா,எனக்கு நீண்ட நாட்களாக ஒரு சந்தேகம்.உண்மையில் சொர்க்கம் நரகம் இருக்கிறதா?''என்று கேட்டான். ஞானி அவனை ஏறெடுத்துப் பார்த்து,''நீ யார்?''என்று கேட்க,தான் ஒரு படைத்தளபதி என்று கூறினான்.உடனே ஞானி,''நீ ஒரு முட்டாள்.நீயெல்லாம் படைத் தளபதியாய் இருப்பதற்குத் தகுதி அற்றவன்.''என்று கூறினார்.தளபதிக்கு பயங்கரமான கோபம்.உடனே வாளைஉருவினான்.

ஞானி சிரித்துக்கொண்டே,''இதோ நரகத்தின் வாசல் திறந்து விட்டது,''என்றார்.அதிர்ச்சி அடைந்த தளபதி வாளை உரையிலிட்டவாறே ,''அய்யா,என்னை மன்னிக்க வேண்டும்.''என்றான். ஞானி,''இப்போது சொர்க்கத்தின் வாசல் திறந்து விட்டது.''என்றார்.சந்தேகம் தீர்ந்த தளபதி ஞானியை வணங்கி விடை பெற்றான்.

நன்றி ;இருவர் உள்ளம் தளம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சில ஜென் கதைகள்  Empty Re: சில ஜென் கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri Nov 22, 2013 9:14 pm

களைப்பு
*******************
ஜென் மாஸ்டர் ஹாக்யுன் ஒரு முறை இரண்டு சாதுக்களுடன் பயணம் செய்து கொண்டிருந்தார்.முதலில் ஒரு சாது தான் சுமந்து வந்த சுமையை ஹாக்யுனைக் கொண்டுவருமாறு கேட்டுக் கொண்டார்.

அவரும் எந்த மறுப்பும் சொல்லாமல் அதை தன சுமையுடன் சேர்த்து சுமந்து வந்தார்.ஆனால் அவர் முகத்திலிருந்த மலர்ச்சி கொஞ்சமும் குறையவில்லை.அவர் உல்லாசமாக வருவதைப் பார்த்தஇன்னொரு சாதுவும் தனக்கு உடல் நலம் இல்லாதிருப்பதாகவும் தன்னுடைய சுமையையும் அவர் எடுத்து வர வேண்டும் என்று வேண்டினார்.

இப்போதும் ஹாக்யுன் மறுப்பேதுமின்றி அதைப் பெற்றுக் கொண்டு மகிழ்ச்சியுடன் சுமந்து வந்தார்.மூன்று பெரும் தொடர்ந்து பயணிக்கையில்,வழியில் ஒரு ஆறு குறுக்கிட்டதால் அவர்கள் படகில் செல்ல நேர்ந்தது.

படகில் ஏறியதும் களைப்பு மிகுதியால் அவர் உடனேஆழ்ந்த தூக்கத்தில் ஆழ்ந்து விட்டார். திரும்ப அவர் விழித்தபோதுஉடனடியாக அவருக்கு பயணத்தைப் பற்றிய ஞாபகம் வரவில்லை. ஒரு துர்நாற்றம் வீசுவதை உணர்ந்து,சுற்றிலும் பார்க்கையில்,உடன் வந்த இரு துறவிகளும்,படகோட்டியும்,முழுக்க வாந்தி எடுத்த நிலையில் இருந்தனர்

அவர்கள் இவரை விநோதமாகப் பார்த்துக் கொண்டிருந்தனர்.பின்னர்தான் அவர் நடந்தது என்ன என்பதைத் தெரிந்து கொண்டார்.அவர் தூங்கிய சிறிது நேரத்தில் ஒரு பெரும் புயல் வந்து படகைப் பயங்கரமாக ஆட்டியுள்ளது. அதன் பாதிப்பால் தாங்க முடியாத அளவிற்கு படகோட்டியும் இரு சாதுக்களும் வாந்தி எடுத்து உடல் நலம் பாதிக்கப் பட்டனர்.

ஆனால் ஹாக்யுன் மிகுந்த களைப்பில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்ததால் அவருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை .

நன்றி இருவர் உள்ளம் தளம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சில ஜென் கதைகள்  Empty Re: சில ஜென் கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri Nov 22, 2013 9:18 pm

சமன்- நிலை
*******************
ஒரு அரசன் தன நான்கு முக்கிய அமைச்சர்களைக் கூப்பிட்டு அவர்களில் ஒருவரை முதல் அமைச்சராக நியமிக்கவிருப்பதாகவும் அதற்கு அவர் வைக்கும் தேர்வில் தேற வேண்டும் என்றும் கூறினார்.தேர்வு இதுதான் கணித முறையில் அமைக்கப்பட்ட ஒரு பூட்டை யார் விரைவில் திறக்கிறார்களோ அவரே வெற்றியாளர்.

மூன்று அமைச்சர்கள் அன்று இரவு முழுவதும் கணிதம்பற்றிய பல புத்தகங்களைப் படித்துக் கொண்டிருந்தனர்.ஒருவர் மட்டும் நிம்மதியாகத் தூங்கிவிட்டார்.மறுநாள் காலை அரசவையில் பூட்டு கொண்டு வரப்பட்டது.பூட்டின் அமைப்பு எல்லோருடைய படபடப்பையும் அதிகரித்தது.

ஓலைச்சுவடிகளைக் கொண்டு வந்திருந்த மூன்று அமைச்சர்கள் அவற்றை முன்னும் பின்னும் புரட்டிப் பார்த்தார்கள்.ஆனால் அப்பூட்டைத் திறக்கும் வழி அவர்களுக்குத் தெரியவில்லை.இரவில் நன்கு தூங்கிய அமைச்ச மெதுவாக எழுந்து வந்து பூட்டை நன்கு ஆராய்ந்தார்.கூர்ந்து கவனித்ததில் பூட்டு பூட்டப்படவே இல்லை என்பது அவருக்குப் புலனாயிற்று.

சாவியே இல்லாமல் எந்த கணித சூத்திரமும் இல்லாமல் பூட்டை எளிதாக அவர் திறக்க, மன்னர் அவரையே முதல் அமைச்சர் ஆக்கினார்.
பிரச்சினையைத் தீர்க்க வேண்டுமானால்,முதலில் பிரச்சினை என்னவென்பதை நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.பிரச்சினையைப் புரிந்து கொள்ள, மனம் சமன் நிலையில் இருக்க வேண்டும்.

நன்றி இருவர் உள்ளம் தளம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சில ஜென் கதைகள்  Empty Re: சில ஜென் கதைகள்

Post by ஸ்ரீராம் Sat Nov 23, 2013 10:01 am

அனைத்து கதைகளும் மிகவும் அருமை அண்ணா
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

சில ஜென் கதைகள்  Empty Re: சில ஜென் கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Nov 23, 2013 11:08 am

நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சில ஜென் கதைகள்  Empty Re: சில ஜென் கதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Nov 23, 2013 2:50 pm

படிக்க அவா மேலிடுகிறது...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

சில ஜென் கதைகள்  Empty Re: சில ஜென் கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Nov 23, 2013 8:27 pm

நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சில ஜென் கதைகள்  Empty Re: சில ஜென் கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun Nov 24, 2013 6:47 pm

வரைபடம்
********************
புத்த மத வேதங்களிலுள்ள கருத்துக்களைக் கொண்டு வரையப்பட்டஓவியம் ஒன்றை ஒரு புத்த சந்நியாசி எரித்துக் கொண்டிருந்தார்.அதைப் பார்த்த ஒரு சீடர் அவரிடம் கேட்டார்,'குருவே,என்னே காரியம் செய்கிறீர்கள்?இந்த வேதன்களைத்தானே எப்போதும் எங்களுக்கு பாடமாகச் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தீர்கள்.

அவைதான் வாழ்வைப் பிரதிபலிப்பவை என்று கூறினீர்கள்?இப்பொது மட்டும் ஏன் அதை எரிக்கிறீர்கள்?'குரு சிரித்துக்கொண்டே சொன்னார்,''நான் வீட்டை அடைந்துவிட்டேன்.இனி எனக்கு வரைபடம் தேவையில்லை.''ஞானம் அடைந்தவர்களுக்கு எந்த வேதமும் தேவையில்லை.

நன்றி ;ஜென் கதை கள்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சில ஜென் கதைகள்  Empty Re: சில ஜென் கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun Nov 24, 2013 6:49 pm

கண்ணீர்
*****************
சாஷ்ட்யும் என்ற பெண் ஜென் குருதன இள வயது பேத்தி இறந்தபோது மிகவும் வருத்தப்பட்டு கண்ணீரும் கம்பலையுமாய் நின்றார்.அப்போது அங்கு வந்த ஒரு வயதானவர்,''என்னம்மா நீ,ஹாக்கின் குருவிடம் ஜென் போதனைகளைப் பெற்று விழிப்புணர்வு பெற்ற நீயே இறப்புக்காக இவ்வாறு அழலாமா?கொஞ்சம் அழுகையை அடக்கி அமைதியாக இரு.

''என்று அறிவுரை கூறினார்.அதற்கு அந்த பெண் குரு சொன்னார்,''நீங்கள் சொல்வது சரிதான்.ஆனால் இங்குள்ள ஊதுவத்தி,பூக்கள்,விளக்குகளைக் காட்டிலும் என் கண்ணீர் தான் என் பேத்திக்கு உகந்ததாக இருக்கிறது.நான் என்ன செய்ய முடியும்?''
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சில ஜென் கதைகள்  Empty Re: சில ஜென் கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun Nov 24, 2013 6:51 pm

மலரினும் அழகு
************************
ஹைக்கூ கவிஞர் பாஷோ,ஒரு வசந்த காலத்தில்,மலர்கள் பூத்துக் குலுங்கும் ஒரு மலைப் பிரதேசத்திற்குச் செல்ல நினைத்து,தன பயணத்தைத் துவங்கினார்.செலவுக்குத் தேவையான பணத்தையும் எடுத்தக் கொண்டார்.போகும் வழியில் ஒரு கிராமத்தில்,தன பெற்றோரை பக்தி சிரத்தையுடன் கவனித்துக் கொள்ளும் ஒரு ஏழை விவசாய வீட்டுப் பெண்ணைப்பற்றிக் கேள்விப்பட்டார்..

அவளுடைய நடவடிக்கைகளை நேரில் பார்த்து மிக ஆனந்தம் அடைந்தார்.அந்தப் பெண்ணிடம் தான் கொண்டு வந்த பணம் அவ்வளவையும் கொடுத்துவிட்டார்.மலர்க் காட்சியைக் காணாது ஊருக்குத் திரும்பிய அவர் தன நண்பர்களிடம் சொன்னார்,''இந்த ஆண்டு மலர்களைக் காட்டிலும் இறைவனின் சிறந்த ஒரு படைப்பைக் கண்டேன்.''
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சில ஜென் கதைகள்  Empty Re: சில ஜென் கதைகள்

Post by ஸ்ரீராம் Sun Nov 24, 2013 7:03 pm

அருமை அருமை அண்ணா
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

சில ஜென் கதைகள்  Empty Re: சில ஜென் கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun Nov 24, 2013 7:14 pm

நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சில ஜென் கதைகள்  Empty Re: சில ஜென் கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 27, 2013 5:39 pm

எது கனவு?
******************
ஜென் ஞானி சுவாங் ட்சு ஒரு நாள் காலை எழுந்ததும் தனக்கு ஒரு சந்தேகத்தால் குழப்பம் ஏற்பட்டிருப்பதாகவும் அதைத் தீர்த்து வைக்க உதவுமாறும் தன சீடர்களைக் கேட்டுக் கொண்டார்.சந்தேகங்களுக்கும் குழப்பங்களுக்கும் அப்பாற்பட்ட குருவுக்கே பிரச்சினையா என்று அவர் சொல்லப் போவதை ஆவலுடன் கேட்கத் தயாராயினர்.

குரு சொன்னார்,''சந்தேகம் மிக சிக்கலானது.நேற்று ஒரு கனவு கண்டேன். அதில் நான் ஒரு பட்டாம் பூச்சியாய் மலருக்கு மலர் தாவித் தேன் அருந்திக் கொண்டிருந்தேன்.''சீடர்களுக்கு திகைப்பு.கனவு எல்லோரும் தானே காண்கிறோம்,இதில் என்ன பிரச்சினை?குரு தொடர்ந்தார்,'' பிரச்சினை அதோடு முடியவில்லை.இன்று காலை கண் விழித்ததும் சுவாங் ட்சு ஆக மாறிவிட்டேன்.

விவகாரம் என்னவென்றால்,இப்போது அந்த பட்டாம் பூச்சி தான் சுவாங் ட்சு ஆகக் கனவு காண்கிறதா என்பது தான்.ஒரு மனிதன் பட்டாம் பூச்சியாகக் கனவு காண முடியுமென்றால்,பட்டாம் பூச்சியும் மனிதனாகக் கனவு காண முடியுமல்லவா?இப்போது எனக்கு உண்மை நிலை தெரிந்தாக வேண்டும்.நான் சுவாங் ட்சுவா,இல்லை பட்டாம் பூச்சியா?''

சீடர்கள்,''இதற்கு பதில் சொல்ல எங்களுக்கு சக்தி இல்லை.இதுவரை நாங்கள் தூக்கத்தில் காண்பது கனவென்றும்,விழிப்பில் காண்பது நனவென்றும் தான் கருதி வந்தோம்.இப்போது நீங்கள் எங்களைக் குழப்பி விட்டீர்கள்.''என்றனர்.
குரு சொன்னார்,''நீங்கள் கனவு காணும் போது,பகலில் பார்த்ததை எல்லாம் மறந்து விடுகிறீர்கள்.பகலின் நிகழ்ச்சிகளின்போது கனவை மறந்து விடுகிறீர்கள்.பகலில் கனவில் கண்டது கொஞ்சமாவது நினைவுக்கு வரும். ஆனால்,கனவில்,பகலில் கண்டது எதுவுமே நினைவிற்கு வருவதில்லை.

நினைவு தான் முடிவு எடுக்கும் முக்கிய அம்சம் என்றால் பகலின் கனவுகளை விட இரவின் கனவுகளே மிகவும் உண்மையாக இருக்கின்றன. ஒருவன்எப்போதும் உறங்கிக் கொண்டே இருந்தால்,தான் காணும் கனவு உண்மை அல்ல என்று எப்படி அறிய முடியும்?ஒவ்வொரு கனவும் காணும் போது உண்மையாகத்தான் தெரிகிறது.''

மரணத் தருவாயில்,ஒருவன் தன கடந்த கால வாழ்வைத் திரும்பப் பார்த்தால்.அது கனவைப் போலத்தான் தோன்றும்.வாழ்ந்தோமா.கனவு காண்கிறோமா என்பதை எப்படித் தெரிந்து கொள்வது?
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சில ஜென் கதைகள்  Empty Re: சில ஜென் கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 27, 2013 5:43 pm

ஓவியம்
**************
ஜென் துறவிகளின் மடாலயத்திற்கு புகழ் பெற்ற சித்திரக்காரன் ஒருவன் வந்தான்.தான் வரைந்த பௌத்த சித்திரங்களைக் கடவுள் என்று மக்கள் நம்புகிறார்கள் என்றும்,எனவே, தான் கடவுளை விடவும் உயர்ந்தவன் என்ற மமதையுடனும் இறுமாப்புடனும் பேசினான்.

அவனை வரவேற்ற மடாலயத்தின் மூத்த துறவி,தானும் ஒரு சிற்பி என்றும்,மற்ற சிற்பங்கள் போலன்றி தன சிற்பம் நிமிடத்துக்கு நிமிடம்உரு மாறக் கூடியது என்றும் அது ஓரிடத்தில் நிற்காமல் இயங்கக் கூடியது என்றும் சொல்ல,சித்திரக்காரனால் நம்ப முடியவில்லை.துறவியும் மறுநாள் காலை அவனுக்குக் காட்டுவதாகக் கூறி அவனை அங்கு தங்கச் செய்தார்.

மறுநாள் காலை துறவி அவனை அழைத்து வந்து காட்டினார்.அங்கு ஒரு பெரிய ஐஸ் கட்டி இருந்தது.''இதுதான் நான் உருவாக்கிய சிற்பம்.இது நிமிடத்துக்கு நிமிடம் மாறிக்கொண்டே இருக்கும்.இதைப் போன்ற ஆச்சரியமான சிற்பம் எதையும் நீ பார்த்திருக்க முடியாது.

''என்றார் துறவி. சிறிது நேரத்தில் ஐஸ் உருகித் தண்ணீராய்ஓடியது.துறவி,''பார்த்தாயா?எனது சிற்பம் ஓரிடத்தில் நிற்காமல் ஓடவும் செய்கிறது.''என்றார்.தண்ணீர் சிறிது நேரத்தில் ஆவியாகி விட்டது.''இப்போது என் சிற்பம் பிரபஞ்சத்தில் கலந்து விட்டது.

இதை விடப் பெரிய கலைப் படைப்பு என்ன இருக்கிறது?''என்று கேட்டார்.சித்திரக்காரன் மமதை அழிந்து மடாலயத்தில் சீடனாய்ச் சேர்ந்து விட்டான்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சில ஜென் கதைகள்  Empty Re: சில ஜென் கதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum