Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
வாழ்க்கையில் உயர்வு பெற…
Page 1 of 1 • Share
வாழ்க்கையில் உயர்வு பெற…
வாழ்க்கையில் உயர்வு பெற…
முன்னாள் அமெரிக்க அதிபர் கிளின்டன் மிகத் திறமையானவர்.
‘நகர்ந்து கொண்டே இருந்தால்தான் நதிக்கு அழகு
வளர்ந்து கொண்டே இருந்தால்தான் வாழ்க்கைக்கு அழகு”
வளர்ந்து கொண்டே இருந்தால்தான் வாழ்க்கைக்கு அழகு”
முன்னாள் அமெரிக்க அதிபர் கிளின்டன் மிகத் திறமையானவர்.
அவரைப்பற்றிய நகைச்சுவை. கிளின்டனும் அவரது மனைவியும் ஒரு பயணத்தின் போது வழியில் ஒரு பெட்ரோல் பங்கில் காரை நிறுத்தி பெட்ரோல் போடுகிறார்கள்.
அப்போது அங்கு பெட்ரோல் நிரப்புகின்ற பணியாளிடம் ஹிலாரி கிளின்டன் தொடர்ந்து பேசிக் கொண்டே இருந்தார்.
நேரம் கடந்து வந்த அவரிடம் “யார் அவன்?” என்றார் கிளின்டன். “என்னோட பால்ய நண்பன். மிகவும் நல்லவன்” என்றார் ஹிவாரி.
கிளிண்டன் சற்று வெறுப்புடன் “நீ அவனை திருமணம் செய்திருந்தால் பெட்ரோல்தான் அடித்துக் கொண்டிருப்பாய்” என்றார் நக்கலாக.
உடனே ஹிலாரி சொன்னார். “ஒருவேளை அவனைத் திருமணம் செய்திருந்தால் அவன் அமெரிக்க அதிபராக ஆயிருப்பான்”.
ஒருவருடைய வளர்ச்சி அவருடன் இணைந்துள்ளவர்களைப் பொருத்து உயர்வடையும். இதையே நிர்வாக மேதை வலியுறுத்தி 8 அம்சங்களை விளக்குகிறார்.
1. நம்பிக்கை வளரும்
ஒரு குழந்தை பிறக்கும் போது பெற்றோரையே சார்ந்திருக்கும்.
அதன் செயல்களை ஊக்குவித்தால் நம்பிக்கையோடு வளரும்.
அதைப்போலவே ஒரு நிர்வாகத்தில் சேர்ந்துள்ள புதியவரை ஊக்குவித்தால் அவருடைய நம்பிக்கை வளரும். மேலும் திறமையுடன் செயல்படுவார்.
அப்படி உக்குவிப்பு கிடைக்காவிடில் அவநம்பிக்கை உண்டாகி திறமையில் பின்தங்கி விடுவார்.
2. சந்தேகம் நீங்கும்
குழந்தையானது நடக்க முயற்சிக்கும் போது சில தடவை தவறி விழும். அப்போ தெல்லாம் அது நடக்க முயற்சிப்பதைப் பாராட்டினால் சுயமாக சீக்கிரமே நடக்கும்.
அதைப்போல ஒரு நிறுவனத்தில் இணைந்தவர், தன்னம்பிக்கையில் தாமாகவே செயல்களைச் செய்யத் தொடங்குவார். அப்போது அவரை குறைகூறி விமர்சித்தால் அவருக்கு தன் திறமையில் சந்தேகம் ஏற்பட்டு செயலில் பின்தங்கி விடுவார்.
3. புதுமையைப் படைக்க முடியும்
குழந்தைகள் வளர வளர புது புதுச் செயல்களை செய்ய முயல்வர். அப்போது பெற்றோர் தூண்டுதலைச் செய்தால் சிறந்த படைப்பாளியாகி விடுவர்.
அதைப்போல பணியில் இருப்பவர் தன்னுடைய செயல்களைச் சிறப்பாக செய்ய முனையும்போது உற்சாகம் செய்தால் உயர்வாகும். அவரை அடக்கி வைத்தால் குற்றவுணர்வு பெற்று சோர்வடைவார்.
அப்போது அங்கு பெட்ரோல் நிரப்புகின்ற பணியாளிடம் ஹிலாரி கிளின்டன் தொடர்ந்து பேசிக் கொண்டே இருந்தார்.
நேரம் கடந்து வந்த அவரிடம் “யார் அவன்?” என்றார் கிளின்டன். “என்னோட பால்ய நண்பன். மிகவும் நல்லவன்” என்றார் ஹிவாரி.
கிளிண்டன் சற்று வெறுப்புடன் “நீ அவனை திருமணம் செய்திருந்தால் பெட்ரோல்தான் அடித்துக் கொண்டிருப்பாய்” என்றார் நக்கலாக.
உடனே ஹிலாரி சொன்னார். “ஒருவேளை அவனைத் திருமணம் செய்திருந்தால் அவன் அமெரிக்க அதிபராக ஆயிருப்பான்”.
ஒருவருடைய வளர்ச்சி அவருடன் இணைந்துள்ளவர்களைப் பொருத்து உயர்வடையும். இதையே நிர்வாக மேதை வலியுறுத்தி 8 அம்சங்களை விளக்குகிறார்.
1. நம்பிக்கை வளரும்
ஒரு குழந்தை பிறக்கும் போது பெற்றோரையே சார்ந்திருக்கும்.
அதன் செயல்களை ஊக்குவித்தால் நம்பிக்கையோடு வளரும்.
அதைப்போலவே ஒரு நிர்வாகத்தில் சேர்ந்துள்ள புதியவரை ஊக்குவித்தால் அவருடைய நம்பிக்கை வளரும். மேலும் திறமையுடன் செயல்படுவார்.
அப்படி உக்குவிப்பு கிடைக்காவிடில் அவநம்பிக்கை உண்டாகி திறமையில் பின்தங்கி விடுவார்.
2. சந்தேகம் நீங்கும்
குழந்தையானது நடக்க முயற்சிக்கும் போது சில தடவை தவறி விழும். அப்போ தெல்லாம் அது நடக்க முயற்சிப்பதைப் பாராட்டினால் சுயமாக சீக்கிரமே நடக்கும்.
அதைப்போல ஒரு நிறுவனத்தில் இணைந்தவர், தன்னம்பிக்கையில் தாமாகவே செயல்களைச் செய்யத் தொடங்குவார். அப்போது அவரை குறைகூறி விமர்சித்தால் அவருக்கு தன் திறமையில் சந்தேகம் ஏற்பட்டு செயலில் பின்தங்கி விடுவார்.
3. புதுமையைப் படைக்க முடியும்
குழந்தைகள் வளர வளர புது புதுச் செயல்களை செய்ய முயல்வர். அப்போது பெற்றோர் தூண்டுதலைச் செய்தால் சிறந்த படைப்பாளியாகி விடுவர்.
அதைப்போல பணியில் இருப்பவர் தன்னுடைய செயல்களைச் சிறப்பாக செய்ய முனையும்போது உற்சாகம் செய்தால் உயர்வாகும். அவரை அடக்கி வைத்தால் குற்றவுணர்வு பெற்று சோர்வடைவார்.
4. தாழ்வு மனப்பான்மை நீங்கும்.
குழந்தையானது புதிய திறமைகளை கற்க ஆரம்பித்தவுடன் எல்லாவற்றையும் கற்று தேர்ந்து விடலாம் என்ற நம்பிக்கை உண்டாகும். அதேபோல் பணியாளர் தன் திறமைகளால் தகுதியை உயர்த்த முயலும்போது வெற்றி அடைந்தால் உயர்ந்த மனநிலையை அடைவார். தோல்வியடைந்தால் தாழ்வு மனப்பான்மை உண்டாகும்.
5. தனித்தன்மை வளரும்
ஒரு குழந்தை மேஜராகும் போது (18 வயது) பிறரைச் சார்ந்து வாழாமல் தனக்கென தனித்தன்மை யுடன் திகழ முயற்சி செய்வார்.
அதைப்போல பணியாளர் நிர்வாகத்தில் தனக்கென தனி முத்திரையைப் பதிக்க முயற்சிக்கும் போது வெற்றி பெற்றால் மிகச் சிறப்பாக உயர்வார். இல்லையேல் சராசரியாகி விடுவார்.
6. தனிமையுணர்வு விலகும்.
வளர்ந்த மனிதன் பிறருடன் நன்கு பழகினால் உறவுகள் வளரும்.
அதைப்போல ஒரு நிர்வாகத்தில் அனைவரி டமும் சுமூக உறவினை வளர்த்துக் கொண்டால் முன்னேற்றம் வளரும். சுமூக உறவில்லாதபோது தனிமை படுத்தப்படுவார்.
7. தொடர்ந்து வளர்தல்
ஒருவர் வளர்ந்தவுடன் மற்றவர்கள் வளர்ச்சிக் காக உதவினால் முன்னேற்றம் வளர்ந்து கொண்டே வரும். இல்லையே தேக்க நிலையாகிவிடும்.
8. வாழ்க்கை உயர்வு
ஒருவர் முதுமையின்போது தன்னுடைய கடந்த காலத்தைப் பார்க்கும்போது சாதனைகளை படைத்திருந்தால் பெருமிதமும் மனநிறைவும் பெறுவார்.
குழந்தையானது புதிய திறமைகளை கற்க ஆரம்பித்தவுடன் எல்லாவற்றையும் கற்று தேர்ந்து விடலாம் என்ற நம்பிக்கை உண்டாகும். அதேபோல் பணியாளர் தன் திறமைகளால் தகுதியை உயர்த்த முயலும்போது வெற்றி அடைந்தால் உயர்ந்த மனநிலையை அடைவார். தோல்வியடைந்தால் தாழ்வு மனப்பான்மை உண்டாகும்.
5. தனித்தன்மை வளரும்
ஒரு குழந்தை மேஜராகும் போது (18 வயது) பிறரைச் சார்ந்து வாழாமல் தனக்கென தனித்தன்மை யுடன் திகழ முயற்சி செய்வார்.
அதைப்போல பணியாளர் நிர்வாகத்தில் தனக்கென தனி முத்திரையைப் பதிக்க முயற்சிக்கும் போது வெற்றி பெற்றால் மிகச் சிறப்பாக உயர்வார். இல்லையேல் சராசரியாகி விடுவார்.
6. தனிமையுணர்வு விலகும்.
வளர்ந்த மனிதன் பிறருடன் நன்கு பழகினால் உறவுகள் வளரும்.
அதைப்போல ஒரு நிர்வாகத்தில் அனைவரி டமும் சுமூக உறவினை வளர்த்துக் கொண்டால் முன்னேற்றம் வளரும். சுமூக உறவில்லாதபோது தனிமை படுத்தப்படுவார்.
7. தொடர்ந்து வளர்தல்
ஒருவர் வளர்ந்தவுடன் மற்றவர்கள் வளர்ச்சிக் காக உதவினால் முன்னேற்றம் வளர்ந்து கொண்டே வரும். இல்லையே தேக்க நிலையாகிவிடும்.
8. வாழ்க்கை உயர்வு
ஒருவர் முதுமையின்போது தன்னுடைய கடந்த காலத்தைப் பார்க்கும்போது சாதனைகளை படைத்திருந்தால் பெருமிதமும் மனநிறைவும் பெறுவார்.
-நன்றி! கலா
sawmya- இளைய தளபதி
- பதிவுகள் : 2919
Re: வாழ்க்கையில் உயர்வு பெற…
கட்டுரை களம் பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது. |
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: வாழ்க்கையில் உயர்வு பெற…
1. பேசும்முன் கேளுங்கள், எழுதும் முன் யோசியுங்கள், செலவழிக்கும் முன் சம்பாதியுங்கள்
2. சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும்.
3. யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர். கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர்.
4. நான் மாறும்போது தானும் மாறியும், நான் தலையசைக்கும் போது தானும் தலையசைக்கும் நண்பன் எனக்குத் தேவையில்லை. அதற்கு என் நிழலே போதும்!
5. நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
6. நான் குறித்த நேரத்திற்குக் கால்மணி நேரம் முன்பே சென்று விடுவது வழக்கம். அதுதான் என்னை மனிதனாக்கியது.
7. நம்மிடம் பெரிய தவறுகள் இல்லை எனக் குறிப்பிடுவதற்கே, சிறிய தவறுகளை ஒப்புக்கொள்கிறோம்!
8. வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை வைத்துக்கொண்டு சரியான முடிவுக்கு வரும் ஒரு கலை.
9. சமையல் சரியாக அமையாவிடில் ஒருநாள் இழப்பு. அறுவடை சிறக்காவிடில் ஒரு ஆண்டு இழப்பு. திருமணம் பொருந்தாவிடில் வாழ்நாளே இழப்பு.
10. முழுமையான மனிதர்கள் இருவர். ஒருவர் இன்னும் பிறக்கவில்லை. மற்றவர் இறந்துவிட்டார்.
11. ஓடுவதில் பயனில்லை. நேரத்தில் புறப்படுங்கள்
12. எல்லோரையும் நேசிப்பது சிரமம். ஆனால் பழகிக்கொள்ளுங்கள்
13. நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
14. காரணமே இல்லாமல் கோபம் தோன்றுவதில்லை. ஆனால் காரணம் நல்லதாய் இருப்பதில்லை
15. இவர்கள் ஏன் இப்படி? என்பதை விட, இவர்கள் இப்படித்தான் என எண்ணிக்கொள்
16. யார் சொல்வது சரி என்பதல்ல, எது சரி என்பதே முக்கியம்
17. ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்
18. பயம்தான் நம்மைப் பயமுறுத்துகிறது. பயத்தை உதறி எறிவோம்
19. நியாயத்தின் பொருட்டு வெளிப்படையாக ஒருவருடன் விவாதிப்பது சிறப்பாகும்
20. உண்மை புறப்பட ஆரம்பிக்கும் முன் பொய் பாதி உலகத்தை வலம் வந்துவிடும்
21. உண்மை தனியாகச் செல்லும். பொய்க்குத்தான் துணை வேண்டும்
22. வாழ்வதும் வாழவிடுவதும் நமது வாழ்க்கைத் தத்துவங்களாக ஆக்கிக்கொள்வோம்.
23. தன்னை ஒருவராலும் ஏமாற்ற முடியாது எனச் செருக்கோடு இருப்பவனே கண்டிப்பாக ஏமாந்து போகிறான்
24. உலகம் ஒரு நாடக மேடை ஒவ்வொருவரும் தம் பங்கை நடிக்கிறார்கள்
25. செய்வதற்கு எப்போதும் வேலை இருக்கவேண்டும் . அப்போது தான் முன்னேற முடியும்
26. அன்பையும் ஆற்றலையும் இடைவிடாது வெளிப்படுத்துகிறவர் ஆர்வத்துடன் பணிபுரிவர்
27. வெற்றி பெற்றபின் தன்னை அடக்கி வைத்துக்கொள்பவன், இரண்டாம் முறையும் வென்ற மனிதனாவான்
28. தோல்வி ஏற்படுவது அடுத்த செயலைக் கவனமாகச் செய் என்பதற்கான எச்சரிக்கை.
29. பிறர் நம்மைச் சமாதானப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்காமல், நாம் பிறரைச் சமாதானப்படுத்த முயற்சிக்க வேண்டும்.
30. கடினமான செயலின் சரியான பெயர்தான் சாதனை. சாதனையின் தவறான விளக்கம் தான் கடினம்
31. ஒன்றைப்பற்றி நிச்சயமாக நம்ப வேண்டுமென்றால் எதையும் சந்தேகத்துடனே துவக்க வேண்டும்
32. சரியானது எது என்று தெரிந்த பிறகும் அதைச் செய்யாமல் இருப்பதற்குப் பெயர்தான் கோழைத்தனம்.
33. ஒரு துளி பேனா மை பத்து இலட்சம் பேரைச் சிந்திக்க வைக்கிறது.
-நன்றி! கலா
sawmya- இளைய தளபதி
- பதிவுகள் : 2919
Re: வாழ்க்கையில் உயர்வு பெற…
மனிதன் மனிதனாக வாழ 18 அம்சங்கள் ...
* மிகவும் மதிக்கப்பட வேண்டியவர்கள் - தாய்,தந்தை
* மிக மிக நல்ல நாள் - இன்று
* மிகப் பெரிய வெகுமதி - மன்னிப்பு
* மிகவும் வேண்டியது - பணிவு
* மிகவும் வேண்டாதது - வெறுப்பு
* மிகப் பெரிய தேவை - நம்பிக்கை
* மிகக் கொடிய நோய் - பேராசை
* மிகவும் சுலபமானது - குற்றம் காணல்
* கீழ்த்தரமான விடயம் - பொறாமை
* நம்பக் கூடாதது - வதந்தி
* ஆபத்தை விளைவிப்பது - அதிக பேச்சு
* செய்யக் கூடாதது - நம்பிக்கைத் துரோகம்
* செய்யக் கூடியது - உதவி
* விலக்க வேண்டியது - சோம்பேறித்தனம்
* உயர்வுக்கு வழி - உழைப்பு
* நழுவ விடக் கூடாதது - வாய்ப்பு
* பிரியக் கூடாதது - நட்பு
* மறக்கக் கூடாதது - நன்றி
இவைகளை மனிதர்கள் பின்பற்றினால் இருப்பதை விட சிறப்பாக வாழலாம்.
- நன்றி! அகிலா
* மிகவும் மதிக்கப்பட வேண்டியவர்கள் - தாய்,தந்தை
* மிக மிக நல்ல நாள் - இன்று
* மிகப் பெரிய வெகுமதி - மன்னிப்பு
* மிகவும் வேண்டியது - பணிவு
* மிகவும் வேண்டாதது - வெறுப்பு
* மிகப் பெரிய தேவை - நம்பிக்கை
* மிகக் கொடிய நோய் - பேராசை
* மிகவும் சுலபமானது - குற்றம் காணல்
* கீழ்த்தரமான விடயம் - பொறாமை
* நம்பக் கூடாதது - வதந்தி
* ஆபத்தை விளைவிப்பது - அதிக பேச்சு
* செய்யக் கூடாதது - நம்பிக்கைத் துரோகம்
* செய்யக் கூடியது - உதவி
* விலக்க வேண்டியது - சோம்பேறித்தனம்
* உயர்வுக்கு வழி - உழைப்பு
* நழுவ விடக் கூடாதது - வாய்ப்பு
* பிரியக் கூடாதது - நட்பு
* மறக்கக் கூடாதது - நன்றி
இவைகளை மனிதர்கள் பின்பற்றினால் இருப்பதை விட சிறப்பாக வாழலாம்.
- நன்றி! அகிலா
sawmya- இளைய தளபதி
- பதிவுகள் : 2919
Similar topics
» உழைப்பின் உயர்வு
» உழைப்பே உயர்வு*
» பெட்ரோல் விலை உயர்வு
» விலைவாசி உயர்வு - ஹைகூ
» பணிவு கொள் -உயர்வு கொள்வாய்
» உழைப்பே உயர்வு*
» பெட்ரோல் விலை உயர்வு
» விலைவாசி உயர்வு - ஹைகூ
» பணிவு கொள் -உயர்வு கொள்வாய்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|